Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியிலும் ஆவா

Featured Replies

ஜேர்மனியிலும் ஆவா
 

- எஸ்.நிதர்ஷன்

ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜேர்மனியிலும்-ஆவா/71-202406

  • தொடங்கியவர்

யாழில் வாள்வெட்டுச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர் ஜேர்­ம­னியில்.? சி.வி.விக்­னேஸ்­வரன்

 

 

cv_wigneswaran.jpg

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்­டுக்கள் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கி அவர்­க­ளோடு இக்குற்றச் செயல்­களில் தொடர்­பு­பட்ட நப­ரொ­ருவர் ஜேர்­ம­னியில் இருப்­பது தொடர்­பான தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக வடக்­கு­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

நேற்று செவ்­வாய்­கி­ழமை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் தனது அலு­வ­ல­கத்தில் யாழ்.குடா­நாட்டின் நில­மைகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக பொலி­ஸா­ருடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இச் சந்­திப்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்­னான்டோ, யாழ்.பிராந்­திய சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஸ்ரேணிஸ்லஸ், காங்­கே­சன்­துறை சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் மாசிங்க, உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் மற்றும் யாழி­லுள்ள பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரிகள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

பொலி­ஸா­ருடன் முத­ல­மைச்சர் மேற்­கொண்ட  இந்த இரண்­டா­வது சந்­திப்­பா­னது காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மாகி முற்­பகல் 11மணி­வரை இடம்­பெற்­றது.   சந்­திப்பின் போது பல்­வேறு விட­யங்கள் தொடர்­பா­கவும் கடந்த மாதம் 14ஆம் திகதி இடம்­பெற்ற பொலி­ஸா­ருடன் சந்­திப்பில் ஆரா­யப்­பட்ட விட­யங்­களின் நட­முறை முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.    இச் சந்­திப்­பினை தொடர்ந்து  பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யத்தை  தெரி­வித்தார். 

 அவர் மேலும் தெரிவி க்கையில்,

கடந்த மாதங்­களில் இளைஞர் குழுக்­களால் மேற்­கொள்­ளப்பட் சமூக விரோத குற்றச் செயல்கள் தொடர்­பாக இக் சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக கடந்த ஒரு மாத காலத்தில் இவ்­வா­றான குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சட்ட நட­வ­டிக்­கை­களை அடுத்து ஆவா குழு­வினை சேர்ந்த பலர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வு­களின் அடிப்­ப­டையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வ­ரு­கின்­றது. 

  கடந்த முறை பொலி­ஸா­ருடன் மேற்­கொண்ட சந்­திப்பில் குற்றச் செயல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என கூறப்­பட்­டி­ருந்த நிலையில் அந் நட­வ­டிக்­கையில் தற்­போது முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது   

கேள்வி  பொலி­ஸா­ருடன் கடந்த மாதம் மேற்­கொண்ட சந்­திப்பில் குற்றச் செயல்­களில் ஈடு­படும் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டால் அவர்­களின் பின்­புலம், அவர்­க­ளுக்கு பணம் கிடைக்கும் வழிகள் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்­பிக்­கு­மாறு கூறி­யி­ருந்­தீர்கள் அது தொடர்­பான தக­வல்கள் தற்­போது கிடைத்­துள்­ளதா ?   

பதில்  குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மற்றும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கு நிதி வழங்­கு­கின்ற நபர் ஒருவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது.  இது தொடர்பாக சர்வதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்திருந்தனர்.  அத்துடன் குறித்த நபரை கைது செய்வது மற்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டியவை நடவடிக்கைகள் தொடர் பில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்  என்றார்.  

http://www.virakesari.lk/article/23194

  • தொடங்கியவர்

“ஆவா” குழுவின் முக்கியஸ்த்தர் சன்னா என்ற பிரசன்னா புலம்பெயர் நாடு ஒன்றில் – இன்றபோலின் உதவியை நாடவுள்ளது இலங்கைப் பொலிஸ்?

interpol-1024x1024.jpeg

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கியஸ்த்தர் சன்னா என்ற பிரசன்னாவைக் கைதுசெய்ய, இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், ஏற்கனவே இந்தியாவில் திருச்சியில் கடவுச் சீட்டு இன்றி கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவின் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் செயற்பாடுகள் குறித்து பொலிஸ் அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளார். அதன்போது இடம்பெற்ற உரையாடலில் ஆவா குழுவின் செயற்பாடுகள் வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்புபடுவதாகவும், இன்றபோலின் உதவியை கோருவது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் அண்மைய காலமாக தொடரும் வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்னணியில் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை சுமார் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

http://globaltamilnews.net/archives/36896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.