Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்; நடந்தது என்ன?

Featured Replies

யாழில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்; நடந்தது என்ன?

 
 
59a3b0f4ccc22-IBCTAMIL.jpg
59a3b0f4f0f61-IBCTAMIL.jpg

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தினை மக்கள் கண்ணுற்றுள்ளனர். இதனால் பெரும் அச்சத்துக்குள்ளான மக்கள் வனவள பாதுகாப்புப் பிரிவினர்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் யானைகளை விரட்டும் நோக்கில் நெருப்பு மூட்டி அதிகாலை வரை காவல் காத்துள்ளனர். அதிகாலை வேளையில் குறிப்பிட்ட யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இதனால் இரவு முழுவதும் அச்சத்துடன் கழித்ததாகவும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கின் தெற்கு எல்லையில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமை தெரிந்ததே. அதற்கு அண்மைய கிராமங்களே வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை என்பனவாகும். இந்தப் பிரதேசங்கள் வன்னிப் பெருங்காட்டுடன் இணையும் கண்டல் காடுகளை உள்ளடக்கிய பிரதேசங்களாகும்.

யானைகளின் நடமாட்டம் இந்தப்பிரதேசங்களில் இருப்பது மிக அரிதான ஒரு சம்பவமாக இருந்தாலும் அண்மைய காலங்களில் இலங்கையின் பெருங்காடுகளிலிருந்து கரையோரப்பகுதிகளுக்கு யானைகள் நகர்ந்துவருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/elephant-in-jaffna-vadamaradsi

  • தொடங்கியவர்

வடமராட்சிக்குள் புகுந்தது காட்டு யானை – தாக்குதலில் ஒருவர் மாயம்!!

 

வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஒருவர் படுகாயமடைந்தார்.

காணாமல்போனவரின் கைத்தொலைபேசி தொடர்ந்து இயங்குகின்றபோதும் அழைப்பு பதிலில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/23559.html

  • தொடங்கியவர்

மருதங்கேணியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

 


மருதங்கேணியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
 

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்குதலுக்கு இலக்கான மேலும் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில் நேற்று (27) மாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அறிவுறுத்தல்களை பின்பற்றாது மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் காட்டுப் பகுதிக்குள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் யானையால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

மற்றுமொருவர் தப்பிச் சென்றதாகவும், 50 வயதான ஒருவர் காணாமற்போயிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காணாமற்போனவரின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தி அதனூடாக சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதிக்குள் சென்ற யானை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/08/மருதங்கேணியில்-காட்டு-யா/

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஊருக்குள் இல்லை என்பது 
யானைக்கு கூட தெரிஞ்சுட்டுது 

  • தொடங்கியவர்

வடமராட்சி கிழக்கில் திடீரெனப் புகுந்த யானை தாக்கி குடும்பத்தலைவர் பரிதாப உயிரிழப்பு

 
 
 

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் திடீ­ரென ஊருக்­குள் புகுந்த யானை­யின் கோரத் தாக்­கு­த­லில் சிக்­குண்டு ஒரு­வர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார். இரு­வர் காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற இந்த யானைத் தாக்­கு­த­லால் அந்­தப் பகுதி மக்­கள் பெரும் பயப் பீதிக்கு உள்­ளா­கி­னர். நிம்­ம­தி­யி­ழந்த நிலை­யில் – இரவு முழு­வ­தும் கண்­வி­ழித்­தி­ருந்­த­தாக மக்­கள் தெரி­வித்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தேச செய­லர் பிரி­வின் உடுத்­துறை, ஆழி­ய­வ­ளைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு யானை­யின் நட­மாட்­டத்தை மக்­கள் அவ­தா­னித்­துள்­ள­னர்.

திடீ­ரென அந்­தப் பகு­தி­யில் யானை வந்­த­மை­யால் மக்­கள் பதற்­ற­ம­டைந்­துள்­ள­னர். நெருப்பை எரித்து தம்மை தற்­காத்­துக் கொண்­ட­னர். யானை அங்­கி­ருந்து மரு­தங்­கேணி சந்­திப் பகு­தியை நோக்கி வந்­துள்­ளது.

நேற்­றுக் காலை மரு­தங்­கே­ணிச் சந்­திப் பகு­தி­யி­லி­ருந்து உடுத்­துறை நோக்­கிச் செல்­லும் வீதி­யில் யானை நட­மா­டித் திரிந்­துள்­ளது. அந்­தப் பகு­திக்­குச் சென்ற ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லி­ருந்து சிறிய காயங்­க­ளு­டன் நூலி­ழை­யில் தப்பி வந்­துள்­ளார்.

இதன் பின்­னர் ஊர­வர்­கள் 4 பேர் அந்­தப் பகு­தியை நோக்­கிச் சென்­றுள்­ள­னர். யானை திடீ­ரென வந்­த­தும் அங்­கி­ருந்து தப்பி ஓட அவர்­கள் முயற்­சித்­துள்­ள­னர். ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளார்.

ஏனை­யோர் ஓடி­யுள்­ள­னர். தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வ­ரைக் காண­வில்லை என்று திரும்­பிச் சென்­ற­போது, இரு­வர் யானை­யின் தாக்­கு­த­லால் காய­ம­டைந்­துள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் காலை 10 மணிக்கு நடை­பெற்­றுள்­ளது.

யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி காணா­மற்­போன நப­ரது அலை­பே­சிக்கு அழைப்பு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அலை­பேசி ஒலித்த போதும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

அந்­தப் பகு­தி­யில் யானை தொடர்ந்­தும் நட­மா­டிக் கொண்­டி­ருந்­த­மை­யால் அவரை மீட்­கச் செல்ல முடி­யா­மல் உற­வி­னர்­கள் திண­றி­னர். மதி­யம் ஒரு மணி­ய­ள­வி­லேயே அந்­தப் பகு­திக்­குச் சென்று அவ­ரது சட­லத்தை மீட்­டுள்­ள­னர்.

4 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான சிற்­றம்­ப­லம் சத்­தி­ய­சீ­லன் (வயது-54) என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்டு கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். முரு­க­தாஸ் (வயது-32) மற்­றும் ஞான­கு­மார் (வயது-30) இரு­வ­ருமே காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யானையை விரட்­டும்
முயற்சி தோல்வி

யானையை விரட்­டும் முயற்சி நேற்று மாலை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனா­லும் யானை அந்­தப் பகு­தியை விட்டு அக­ல­வில்லை. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் இந்த முயற்­சி­யில் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.

இதே­வேளை, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் காட்­டுப் பகு­தி­யி­லி­ருந்து நீர் நிலை­கள் வற்­றி­யுள்­ள­மை­யால் கரை­யோ­ரப் பகு­தி­யூ­டாக வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­திக்கு இந்த யானை வந்து சேர்ந்­தி­ருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/23729.html

  • தொடங்கியவர்

ஊரை மிரட்டும் யானை! – இயல்பு நிலை வெகுவாகப் பாதிப்பு!!

 
ஊரை மிரட்டும் யானை! – இயல்பு நிலை வெகுவாகப் பாதிப்பு!!
 

யானை ஊருக்­குள் புகுந்­த­மை­யி­னால் வட­ம­ராட்சி கிழக்­கில் நேற்று இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­கள் பயத்­து­ட­னேயே இர­வுப் பொழுதைக் கழித்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. யானைத் தாக்­கு­தல் அச்­சத்­தால் சில குடும்­பங்­கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி அயல் பகு­தி­யில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளன.

வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வின் உடுத்­துறை, ஆழி­ய­வளை பிர­தே­சங்­க­ளில் யானை நட­மாட்­டம் நேற்று முன்­தி­னம் இரவு அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி மக்­கள் நெருப்பு எரித்து யானையை விரட்ட முயற்­சித்­துள்­ள­னர். ஆனால் யானை அந்­தப் பகு­திக்­குள்­ளேயே சுற்­றித் திரிந்­துள்ளது.

யானை ஊருக்­குள் வந்த விட­யம் நேற்­றுக் காலை தீயா­கப் பர­வி­யது. மக்­கள் பெரும்­பா­லும் வீடு­க­ளுக்­குள் முடங்­கி­னர். யானை நடமாடுவதாகத் தெரிவிக்கப்பட்ட மருதங்கேணிச் சந்தியிலிருந்து உடுத்துறை நோக்கிச் செல்லும் வீதி மூடப்பட்டது. வீதியில் மரக்குற்றிகள் போடப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். கடைகள் பூட்டப்பட்டு இயல்பு நிலை முடங்கியிருந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமராட்சி கிழக்கிற்குச் சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்தார்.

http://newuthayan.com/story/23737.html

70 ஆண்டுகள் இல்லாத யானை இப்போது எப்படி?

 
 
 
 

“எமது பிர­தே­சத்­தில் இது­வரை கால­மும் யானை இருந்­த­தில்லை. எமக்­குத் தெரிந்து 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக இங்கு யானை வந்­த­தா­கக் கூடக் கேள்­விப்­பட்­ட­தில்லை. திடீ­ரென யானை ஊருக்­குள் புகுந்­தமை எங்­க­ளுக்கு பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

யானை திட்­ட­மிட்டு கொண்டு வந்து இறக்கி விட்­டார்­கள் என்றே நாம் கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது”இவ்­வாறு வட­ம­ராட்சி கிழக்கு மக்­கள் நேற்­றுத் தெரி­வித்­த­னர்.

 

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை யானை புகுந்துள்ளது. அதனை விரட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி நேற்றுக் காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பயத்தையும் – பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான சம்பவம் எங்களுக்குத் தெரிஞ்சு ஒரு 70 வருசத்துக்கு மேலாக நடக்கவில்லை. அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கின்றது. நேற்று (நேற்றுமுன்தினமே) யானை ஊருக்குள் வந்தவுடன் அதைக் கலைத்திருந்தால் – வன உயிரினங்கள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று (நேற்று) உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

பறவைகள் சரணலாயம் என்ற பெயரில் ஏற்கனவே எமது காணிகளை அரசு கபளீகரம் செய்துள்ளது. இப்போது யானை இங்கு திட்டமிட்டு இறக்கி எஞ்சிய பகுதிகளையும் அவ்வாறு கபளீகரம் செய்வதற்குத்தான் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.

யானையைக் கலைக்க வந்தவர்கள் இரவு 7 மணியுடன் போய்விட்டார்கள். இரவு யானை வந்தால் நாம் என்ன செய்வது” என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

http://newuthayan.com/story/23735.html

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

நாங்கள் ஊருக்குள் இல்லை என்பது 
யானைக்கு கூட தெரிஞ்சுட்டுது 

யாழ்கள புத்திஜீவிகள் வந்து கேள்வி கேட்கபோயினம்....நீங்கள் எல்லாம் புலம்பெயரலாம் யானை புலம் பெயர்ந்தால் தப்போ? யானைக்கு ஒரு சட்டம் உங்களுக்கு ஒரு சட்டமோ ....:10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டுயானை வடமராட்சிவரைக்கும் வந்திட்டுதெண்டால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2017 at 0:15 AM, நவீனன் said:

வடமராட்சி கிழக்கில் திடீரெனப் புகுந்த யானை தாக்கி குடும்பத்தலைவர் பரிதாப உயிரிழப்பு

 
 
 

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் திடீ­ரென ஊருக்­குள் புகுந்த யானை­யின் கோரத் தாக்­கு­த­லில் சிக்­குண்டு ஒரு­வர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார். இரு­வர் காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற இந்த யானைத் தாக்­கு­த­லால் அந்­தப் பகுதி மக்­கள் பெரும் பயப் பீதிக்கு உள்­ளா­கி­னர். நிம்­ம­தி­யி­ழந்த நிலை­யில் – இரவு முழு­வ­தும் கண்­வி­ழித்­தி­ருந்­த­தாக மக்­கள் தெரி­வித்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தேச செய­லர் பிரி­வின் உடுத்­துறை, ஆழி­ய­வ­ளைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு யானை­யின் நட­மாட்­டத்தை மக்­கள் அவ­தா­னித்­துள்­ள­னர்.

திடீ­ரென அந்­தப் பகு­தி­யில் யானை வந்­த­மை­யால் மக்­கள் பதற்­ற­ம­டைந்­துள்­ள­னர். நெருப்பை எரித்து தம்மை தற்­காத்­துக் கொண்­ட­னர். யானை அங்­கி­ருந்து மரு­தங்­கேணி சந்­திப் பகு­தியை நோக்கி வந்­துள்­ளது.

நேற்­றுக் காலை மரு­தங்­கே­ணிச் சந்­திப் பகு­தி­யி­லி­ருந்து உடுத்­துறை நோக்­கிச் செல்­லும் வீதி­யில் யானை நட­மா­டித் திரிந்­துள்­ளது. அந்­தப் பகு­திக்­குச் சென்ற ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லி­ருந்து சிறிய காயங்­க­ளு­டன் நூலி­ழை­யில் தப்பி வந்­துள்­ளார்.

இதன் பின்­னர் ஊர­வர்­கள் 4 பேர் அந்­தப் பகு­தியை நோக்­கிச் சென்­றுள்­ள­னர். யானை திடீ­ரென வந்­த­தும் அங்­கி­ருந்து தப்பி ஓட அவர்­கள் முயற்­சித்­துள்­ள­னர். ஒரு­வர் யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளார்.

ஏனை­யோர் ஓடி­யுள்­ள­னர். தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வ­ரைக் காண­வில்லை என்று திரும்­பிச் சென்­ற­போது, இரு­வர் யானை­யின் தாக்­கு­த­லால் காய­ம­டைந்­துள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் காலை 10 மணிக்கு நடை­பெற்­றுள்­ளது.

யானை­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி காணா­மற்­போன நப­ரது அலை­பே­சிக்கு அழைப்பு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அலை­பேசி ஒலித்த போதும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

அந்­தப் பகு­தி­யில் யானை தொடர்ந்­தும் நட­மா­டிக் கொண்­டி­ருந்­த­மை­யால் அவரை மீட்­கச் செல்ல முடி­யா­மல் உற­வி­னர்­கள் திண­றி­னர். மதி­யம் ஒரு மணி­ய­ள­வி­லேயே அந்­தப் பகு­திக்­குச் சென்று அவ­ரது சட­லத்தை மீட்­டுள்­ள­னர்.

4 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான சிற்­றம்­ப­லம் சத்­தி­ய­சீ­லன் (வயது-54) என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்டு கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். முரு­க­தாஸ் (வயது-32) மற்­றும் ஞான­கு­மார் (வயது-30) இரு­வ­ருமே காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யானையை விரட்­டும்
முயற்சி தோல்வி

யானையை விரட்­டும் முயற்சி நேற்று மாலை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனா­லும் யானை அந்­தப் பகு­தியை விட்டு அக­ல­வில்லை. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரும் இந்த முயற்­சி­யில் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.

இதே­வேளை, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் காட்­டுப் பகு­தி­யி­லி­ருந்து நீர் நிலை­கள் வற்­றி­யுள்­ள­மை­யால் கரை­யோ­ரப் பகு­தி­யூ­டாக வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­திக்கு இந்த யானை வந்து சேர்ந்­தி­ருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/23729.html

இணைத்ததுக்கு நன்றி !

இறந்தவர் எனது உறவினர்தான் 
உங்கள் இணைப்பில்தான் பெயரை பார்த்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.