Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தம்பதி மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற்றது கனடிய நீதிமன்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது.  2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது.  2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.

   
தம்பதியருக்கு எதிரான ஆதாரங்களை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர், 57 வயதான சிவகுமார் குமாரவேலு மற்றும் 54 வயதான நகுலேஸ்வரி சிவகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மீளப்பெற்று கொள்வதாக Crown நீதிமன்ற அரச வழக்கறிஞர் Matthew Bloch தெரிவித்துள்ளார். மொழி ஒரு தடையாக இருந்ததுடன், என்ன நடக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தார்களா, என்பது குறித்து உண்மையில் வருத்தமாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் ஆரம்பத்தில் தண்டனைக்குரிய நியாயமான காரணங்கள் இருந்த போதிலும், Crown நீதிமன்ற மீளாய்வின் பின்னர் அவ்வாறான ஒன்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . 2015ஆம் ஆண்டு Scarborough பகுதியில் உள்ள Warden மற்றும் Sheppard Aves என்ற இடத்திற்கு அருகில் உள்ள அடமான தரகர் அலுவலகம் ஒன்றிற்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சென்றுள்ளனர்.

சொத்து ஒன்றினை இரண்டாவது முறையாக அடகு வைத்து 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்காகவே இருவரும் சென்றுள்ளனர். இதன் போதே குறித்த இருவரும் Toronto பொலிஸாரிடம் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பின்னர் இந்த தம்பதி, தரகர் மற்றும் இலங்கை மொழிக்காக மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் வழக்கறிஞர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த சொத்தின் மீதான இரண்டாவது அடமானத்தில் 200,000 டொலர் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மாதங்கள் கழித்து, உண்மையான வீட்டு உரிமையாளர், தான் வீட்டை அடமானம் செய்யவில்லை எனவும், அவ்வாறு அறிவிக்கவில்லை எனவும் கூறி நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பின்னர் இந்த அடமான மோசடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“எனது கட்சிகாரர்கள் அப்பாவியானவர், தற்போது அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறித்த தம்பதியின் வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வேறு இரண்டு நபர்கள் எனது கட்சிகாரர்களின் அடையாளத்தை அவர்களின் சம்மந்தம் இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது கட்சிகாரர்கள் இரு முறை பாதிக்கப்பட்டவர்களாகும். ஒரு முறை குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர், இரண்டாவது முறை ஊடகங்களினால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். செய்யாத குற்றத்திற்காக அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் உடல் குறைபாடுடையவர் மற்றும் மனைவி வேலையற்றவர். எனினும் அவர்கள் இதனை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாலச்சந்திரனின் அறிக்கைக்கு Crown நீதிமன்றம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

44 வயதான Collett Comrie மற்றும் 40 வயதான Khurt Comrie ஆகிய இருவரும் பலரது பணத்தினை மோசடி செய்தவர்கள் Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=189630&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழரசு said:

அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

44 வயதான Collett Comrie மற்றும் 40 வயதான Khurt Comrie ஆகிய இருவரும் பலரது பணத்தினை மோசடி செய்தவர்கள் Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=189630&category=TamilNews&language=tamil

இவ்வளவு தமிழ் ஆக்கள் இருக்கும் போது, ஏன் ஜமைக்கர்களிடம் சென்றார்கள் இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

இவ்வளவு தமிழ் ஆக்கள் இருக்கும் போது, ஏன் ஜமைக்கர்களிடம் சென்றார்கள் இவர்கள்?

 

1 hour ago, தமிழரசு said:

-----“எனது கட்சிகாரர்கள் அப்பாவியானவர், தற்போது அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறித்த தம்பதியின் வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வேறு இரண்டு நபர்கள் எனது கட்சிகாரர்களின் அடையாளத்தை அவர்களின் சம்மந்தம் இன்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது கட்சிகாரர்கள் இரு முறை பாதிக்கப்பட்டவர்களாகும். ஒரு முறை குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர், இரண்டாவது முறை ஊடகங்களினால் குற்றம் சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். செய்யாத குற்றத்திற்காக அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அக்னி பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் உடல் குறைபாடுடையவர் மற்றும் மனைவி வேலையற்றவர். எனினும் அவர்கள் இதனை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாலச்சந்திரனின் அறிக்கைக்கு Crown நீதிமன்றம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. அந்த தரகர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் Collett Comrie என்ற பெண் தரகர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அவரும் அவரது கணவரும் Keystone என்ற நிதி சேவை நிறுவனத்தை மூடிவிட்டு 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவில் இருந்து, ஜமைக்காவுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள்  "ஜமைக்கர்களிடம்" உதவி கேட்டுப் போகவில்லை.
"ஜமைக்காவுக்கு" தப்பிப்  போயிருக்கலாம். பின் அங்கு சூழ் நிலை சரி இல்லை என்றவுடன் திரும்பி வந்திருப்பார்கள்.
இவர்களின் சட்டத்தரணி...   அக்னி பாலசந்திரன் திறமையானவர் போலுள்ளது. ஆட்களை சேதாரமில்லாமல், காப்பாற்றி விட்டார்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.