Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை

 

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colomboநாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரிகளான தாமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜெயதிலக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச,

“பிரிவினைவாதிகள் தீவிரவாதத்தின் ஊடாக  அடைய முடியாததை, புதிய அரசியலமைப்பு வழங்கும்.  இதனை தோற்கடிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், ஒரு பகுதி வெளிநாட்டு சக்திகளை திருப்திப்படுத்தவே இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போருக்குப் பிந்திய சிறிலங்காவை இனரீதியாகப் பிரிக்கவே, தற்புாதைய கூட்டு அரசாங்கம் வழிதேடுகிறது. பிரிவினைவாத ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை மக்கள் எதிர்க்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எலிய அமைப்பு அனுமதியாது.

நாட்டின் ஒன்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் வழி நடத்த வேண்டியது முக்கியம்.

அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் போது,  அமைதியாக இருக்க முடியாது.

இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளை பாதுகாக்க முற்பட்ட நாடுகளே இந்த அரசியலமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கின்றன.

புதிய அரசியலமைப்பை எலிய எதிர்க்கும். தீவிரவாதத்தை தோற்கடித்து பெற்றதை பாதுகாக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இராணுவத்தினர் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். நாட்டின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் எந்த முயற்சிகளுக்கும், எந்த விலைகொடுத்தாவது எதிர்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/09/07/news/25808

சர்­வ­தேச தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது

02-b3af28c2ce4f1f8e6dd1ae59ef911f0fe1fd0847.jpg

 

முறி­ய­டிக்­கவே "எளிய" அமைப்பு உதயம்; கோத்­த­பாய கூறு­கின்றார்
(ஆர்.யசி)

புலி­க­ளுக்கு உயிர் கொடுத்த, நாட்­டினை துண்­டாட நினைத்­த­வர்­களின் தேவைக்­கா­கவும், பிரி­வி­னை­வா­தத்தின்  மூல­மாக நாட்டை துண்­டாட நினைக்கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் தேவைக்­கா­கவும் சர்­வ­தேச நோக்­கங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வுமே புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார் .  

சர்­வ­தேச தேவை­களை முறி­ய­டிக்­கவும் இரா­ணு­வத்தை காப்­பற்­றோ­வுமே "எளிய "அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் தலை­மையில் "எளிய" அமைப்பு நேற்று பொர­லஸ்­க­முவை கோல்டன் ரோஸ் அரங்கில் உத­ய­மா­கி­யது. புதிய அர­சியல் அமைப்பின் சூழ்ச்சி என்ற கார­ணியை அடிப்­ப­டை­யாக வைத்து இவர்­களின் ஆரம்ப நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டன. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ, மற்றும் பொது எதி­ரணி உறுப்­பி­னர்கள், கலா­நிதி தயான் ஜய­தி­லக்க, முன்னாள் கடற்­படை தள­பதி சரத் வீர­சே­கர, முன்னாள் மத்­தி­ய­வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மாநா­யக தேரர்கள், வெளி­நாட்டு பிர­தி­நி­தகள் கலந்­து­கொண்­டனர். இந்த நிகழ்வில் சிறப்­புரை நிகழ்த்­தி­ய­போதே கோத்­தா­பய ராஜபக் ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

புதிய அர­சியல் அமைப்பு ஒன்று கொண்­டு­வ­ரு­வ­தற்கு நாம் எதிர்ப்பை தெரி­விப்­பது ஏன் என்றால் இந்த அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரு­வது யார், யாருக்­காக, எதற்­காக என்ற கார­ணி­களை கவ­னத்தில் கொள்­ளும்­போது பாரிய சந்­தே­கங்கள் எழு­கின்­றது. அன்று விடு­தலைப் புலி­க­ளுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த, நிதி சேக­ரித்துக் கொடுத்த, ஆயு­தங்­களை சேக­ரித்­து­கொ­டுத்து ஆயு­தங்­களின் மூல­மாக செய்­ய­வி­ருந்த நகர்­வு­களை இன்று அர­சியல் அமைப்பின் மூல­மாக செய்ய முயற்­சிக்­கின்­றனர். அதேபோல் அன்று முன்­னெ­டுத்த யுத்த நகர்­வு­களை தடுக்க அழுத்தம் கொடுத்த சர்­வ­தேச அமைப்­புகள், நாடு­களின் தேவைக்­காக இப்­போது புதிய அர­சியல் அமைப்பு ஒன்று கொண்­டு­வர முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் இந்த நாட்டில் பிரி­வி­னை­யினை உரு­வாக்கும் தமிழ் அர­சியல் வாதி­களின் தேவைக்­காக புதிய அரியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது.

மூன்று தசாப்த கால யுத்­தத்தில் புலி­க­ளுடன் இணைந்து இந்த நாட்டின் அப்­பாவி மக்­களை கொன்று குவித்து இன்று சர்­வ­தேச நடு­நிலை வாதிகள் என கூறிக்­கொண்டும், மனித உரி­மைகள் காப்­பா­ளர்கள் என கூறிக்­கொண்­டுள்ள, இந்த நாட்டை காப்­பாற்­றிய இரா­ணுவம் உள்­ளிட்ட தலை­வர்­களை யுத்த குற்றம் என்ற பெயரில் நீதி­மன்­றத்தில் நிறுத்த முயற்­சிக்கும் நபர்­க­ளுக்கே இன்று புதிய அர­சியல் அமைப்பு ஒன்று அவ­சி­யப்­ப­டு­கின்­றது. ஆகவே இவர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக நாம் புதிய அர­சியல் அமைப்பை வேண்டாம் என கூறு­கின்றோம். இதன் கார­ண­மாக தான் புதிய அமைப்பு ஒன்றை உரு­வாக்கி மக்கள் மத்­தியில் இந்தக் கருத்­துக்­களை கொண்டு சென்று எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த ஒன்­றரை ஆண்டில் பல்­வேறு அமைப்­பு­களை இணைத்து பல்­வேறு சிறு அமைப்­பு­களை உரு­வாக்கி எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்­கின்றோம்.

அதேபோல் இந்த அர­சாங்கம் மீது எமக்கு எந்த நம்­பிக்­கையும் இல்லை. கடந்த சில ஆண்­டு­களில் காணாமல் போனோ­ருக்­கான காரி­யா­லயம் உரு­வாக்­கப்­ப­டாது எனவும் இரா­ணு­வத்தை இதன் மூல­மாக தண்­டிக்க அனு­ம­திக்கப் போவ­தில்லை என கூறி­னார்கள். ஆனால் இறு­தியில் அது தான் நடந்­துள்­ளது. அண்­மை­யிலும் உள்­ளூ­ராட்சி தேர்தல் சட்­ட­மூலம் எவரு நிறை­வேற்­றப்­பட்­டது என்­ப­தையும் நாம் கவ­னித்தோம். இரா­ணு­வத்­திற்கு எந்த பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்த மாட்டோம் என கூறி­னார்கள். ஆனால் புல­னாய்வு துறை­யுடன் தொடர்­பு­பட்ட பலர் இன்று கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். ஆகவே இவர்­களின் மூல­மாக கொண்­டு­வரும் புதிய அர­சியல் அமைப்பும் நாட்­டுக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லான ஒன்­றா­கவே அமையும்.

நாம் இன்று புதிய அமைப்பு ஒன்றை உரு­வாக்­கி­யுள்ளோம். இதன் மூல­மாக மக்கள் மத்­தியில் சென்று மக்­களை எமது அணியில் இணைத்­துக்­கொண்டு போரா­டவே நாம் முயற்­சிக்­கின்றோம். அதேபோல் மீண்டும் எமக்கென்று நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். எமது சமூகம், எமது இராணுவம் எந்தவித சிக்கல்களும் இல்லாது செயற்பட வேண்டும். ஐக்கியமான இலங்கைக்குள் அனைவரும் வாழ வேண்டும். இந்த நாட்டை பிரிவில் இருந்து தடுக்க மீண்டும் ஒரு தலைமத்துவதைன் கீழ் நாம் செயற்பட வேண்டும். அதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியையே இன்று நாம் உருவாக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-07

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமக்கு மேலே தொங்கும், யுத்தக்குற்ற விசாரணை கத்தியை மழுங்க வைக்க இந்த கூப்பாடு போடுகின்றனர்.

ஆனாலும் புலிகள் இல்லாத நிலையில், யுத்தவாதிகள் போடும் அரசியல் போர்வை எடுபடாது.

இருப்பினும் தமிழர்களைப் பொறுத்த வரை இவர்கள் பதவிக்கு வருவது, அரசியல் ரீதியில் மிக மிக சிறப்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசபயங்கரவாதியும் இனப்படுகொலைப் பங்காளனுமான கோத்தா போரின் இறுதிக்காலங்களில் கொடுத்த பேட்டியொன்றில் தமிழிளைஞரது குருதியைக்கடலிலும் பெண்களை படைகளுக்கும் என்ற பொருள்படக் கூறியதை மறந்திருக்கமாட்டார். அதனால் யாராவது முறையாக மாட்டுப்பட்டால் தனக்கும் அது ஆப்பாகிவிடும் என்ற பயத்தின் கரணியமாக சிங்கள இனவாதத்தைத் (இனவாதம் ஒன்றும் அழிந்துவிடவில்லை)தூண்டவும் கூர்மைப்படுத்திக் காலம்கடத்தவும்  அமைப்பினை உருவாக்குகின்றார். உசுப்பேந்துகின்றார். இதில்வேறு வெளிநாட்டுப்பிரதிநிதிகளும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.