Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது"

Featured Replies

"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது"

 

 
 

யுத்­தத்தில் உயிர்­நீத்த  மக்­களை நினைவுகூரும்  தூபி அநு­ரா­த­பு­ரத்தில் அமைப்­பதே பொருத்­த­மா­ன­தாகும். வடக்கு கிழக்கு மக்கள் இல­கு­வாக வரு­கை­தரும் வகையில் அமை­ய­வேண்டும் என கரு­து­வ­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

Ruwan-Wijewardene.jpg

உயிர் நீத்த மக்­களை நினை­வு­கூர மே மாதம் மூன்­றா­வது வாரத்தில் ஒரு தினத்தை  தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோ­சனை தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தனி­நபர் பிரே­ரணை நேரத்தின் போது யுத்­தத்தின் போது உயிர்­நீத்த மக்­களை நினை­வு­கூர்­வ­தற்­கா­ன நினை­வுத்­தூ­பி­யொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூரு­வ­தற்­கான பொதுத் திக­தி­யொன்றை தெரி­வு­செய்தல் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா முன்­வைத்த  பிரே­ர­ணை  மீதான  விவா­தத்தின் போது கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறி­ய­தா­வது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் இந்த பிரே­ர­ணையை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கின்றேன். மூன்று தசாப்­த­கால யுத்­தத்தில் உயிர் நீத்த சகல மக்­க­ளையும் நினைவு கூர வேண்­டி­யது அனை­வ­ரதும் கட­மை­யாகும். 

பாதிக்­கப்­பட்ட மக்கள் இதனை முன்­னெ­டுப்­பது தவ­றான ஒன்­றல்ல. ஆகவே இவ்­வா­றான ஒரு பிரே­ர­ணை­யினை நாம் மறுக்­க­வில்லை. எனினும் ஒரு­ சில கார­ணி­களை நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். குறிப்­பாக மூன்று தசாப்த யுத்­தத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் மக்கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

அவர்­களே அதி­க­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். ஆகவே அவர்கள் அனை­வ­ரதும் உற­வுகள் அவர்­களை நினைவு கூரு­வ­தற்­கான பொருத்­த­மான இடம் ஒன்றை நாம் தெரி­வு­செய்ய வேண்டும். மக்கள் சிரமம் இல்­லாது வரக்­கூ­டிய    வகையில் அமைய வேண்டும். ஆகவே அநு­ரா­த­புரம் இந்த செயற்­பாட்­டிற்கு பொருத்­த­மான பிர­தே­ச­மாக அமையும் என நாம் கருத்­து­கின்றோம். அநு­ரா­த­பு­ரத்தில் நினைவுத் தூபி­யினை அமைத்தால்  பாதிக்­கப்­பட்ட மற்றும் உயிர் நீத்த மக்­களின் உற­வுகள் இல­கு­வாக வரக்­கூ­டி­ய­தாக அமையும். 

மேலும் உயிர் நீத்த மக்­களை நினைவு கூரு­வ­தற்­கான பொருத்­த­மான தினம் ஒன்றை தீர்­மா­னிக்க வேண்டும் என்ற கார­ணியும் முக்­கி­ய­மா­னது. குறிப்­பாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்ய முடியும். வேறு எந்­த­வொரு தினமும் வராத வகையில் ஒரு­நாளை நாம் தீர்­மா­னிக்க முடியும். 

அத்­துடன் இந்த நினைவுத் தூபியை பாது­காக்க வேண்டும். ஆகவே ஏதேனும் பொது அமைப்­பொன்றின் கீழ் இதனை ஒப்­ப­டைக்க முடியும். அரச கட்­டுப்­பாட்டின் கீழ் வரக்­கூ­டிய ஏதேனும் ஒரு அமைப்பின் மூல­மாக இதன் பரா­ம­ரிப்பை முன்­னெ­டுக்க முடியும். ஆகவே இந்த விட­யங்கள் குறித்து நாம் பொது­வாக கலந்­து­ரை­யாடி தீர்­மானம் ஒன்­றிற்கு வர முடியும். எவ்­வா­றி­ருப்­பினும் இந்த முன்­மொ­ழி­வினை  நாம் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இதே­வேளை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­னவின் கருத்­துக்கு நன்றி தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுமாயின் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும்  குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/24185

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவம் எந்த யுத்த குற்றமும் இழைக்கவில்லை 
மக்கள் எப்படி இறந்தார்கள் என்று சிலை வைக்க முன்பு கண்டு பிடித்தால் 
பின்பு எங்கு வைக்கலாம் என்றும் தெரிவு செய்யலாம் 

  • தொடங்கியவர்

நாம் கேட்பது எமக்கென்று ஒரு நினைவிடமே!

 

போரில் உயி­ரி­ழந்­த­வர்­கள் அனை­வ­ருக்­கு­மாக ஒரு பொது நினை­வுத் தூபியை அனு­ரா­த­பு­ரத்­தில் அமைக்­க­லாம் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜே­வர்த்­தன யோசனை வைத்­துள்­ளார். முன்­னாள் அமைச்­ச­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா முன்­வைத்த பிரே­ர­ணை­யின் மீது உரை­யாற்­றும் போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

போரில் உயி­ரி­ழந்த மக்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­கான நினை­வுத் தூபி ஒன்றை அமைத்­தல் மற்­றும் நினை­வு­கூ­ரு­வ­தற்­கான பொதுத் திகதி ஒன்­றைக் குறிப்­பி­டு­தல் என்ற தனி­ந­பர் பிரே­ர­ணையை டக்­ளஸ் முன்­வைத்­தி­ருந்­தார்.

போரில் உயி­ரி­ழந்­த­வர்­கள் நினை­வு­கூ­ரப்­ப­ட­வேண்­டும் என்­ப­தில் எவருக்­கும் மாற்­றுக் கருத்து இருக்க முடி­யாது. அப்­படி உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் பொறுப்பை அரசு ஏற்­றுக்­கொண்­டால் அது பொது இடத்­தி­லும் ஒரே திக­தி­யி­லும் இடம்­பெ­று­வ­தை­யும்­கூட ஏற்­றுக்­கொள்­ள­லாம். ருவான் விஜே­வர்த்­த­ன­வின் யோசனை அதன் அடிப்­ப­டை­யி­லா­னதே.

ஆனால், இந்த விட­யத்­தில் தமி­ழர்­க­ளின் கோரிக்கை போரில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வது மட்­டு­மல்ல. இறு­திப் போரின்­போது நிகழ்த்­தப்­பட்ட மனி­தப் படு­கொ­லை­க­ளை­யும், மனித உரிமை மீறல்­க­ளை­யும், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளை­யும் உல­குக்கும் அடுத்த சந்­த­திக்­கும் உரத்­துச் சொல்­வதே தமிழ் மக்­க­ளின் தேவை.

அத்­த­கைய கொடூ­ரங்­க­ளும் குரு­திச் சக­தி­யும் மீண்­டும் உரு­வா­கக்­கூ­டாது என்­கிற எண்­ணத்­தை­யும் விழிப்­பு­ணர்­வை­யும் இனி­வ­ரும் சந்­த­தி­யி­ன­ருக்கு எடுத்­துச் சொல்­வ­தும், அவர்­க­ளின் மூத்­த­வர்­கள் உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கப் பட்ட துன்­பங்­களை விட்­டுச் செல்­வ­தற்­கு­மா­கவே நினை­வுத் தூபி­யும் நினைவு நிகழ்­வும் வேண்­டும் என்று கேட்­கி­றார்­கள்.

தமிழ் மக்­க­ளின் இந்­தத் தேவை, நோக்­கம், போரில் உயி­ரி­ழந்த அனைத்து மக்­க­ளுக்­கு­மான நினை­வுத் தூபி­யின் ஊடாக நிறை­வே­றி­வி­டாது. அது­வும், பொதுமை என்ற அடிப்­ப­டை­யில் அது அனு­ரா­த­பு­ரத்­தில் அமை­வ­தன் ஊடாக ஒரு­போ­தும் நிறை­வே­றாது.

அப்­படி அமை­யப்­ப­டக்­கூ­டிய ஒரு தூபி­யும் பொது நினைவு நாளும் அனைத்து மக்­க­ளுக்­கும் போரின் கொடூ­ரத்தை நினை­வு­றுத்தி விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தாக இருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. ஆனால், அது தமி­ழர்­க­ளுக்கு இந்த நாட்­டில் இழைக்­கப்­பட்ட கொடூ­ரங்­க­ளை­யும் துன்­பங்­க­ளை­யும், இனப்­ப­டு­கொ­லை­க­ளை­யும் மனி­தப் படு­கொ­லை­க­ளை­யும் பிர­தி­நி­தித்­துவப்­ப­டுத்­து­வ­தாக ஒரு­போ­தும் இருக்­க­மு­டி­யாது.

அப்­ப­டி­யான பொதுத் தூபி­யை­யும், பொது நினைவு நாளை­யும் அரசு கட்­டட்­டும்; அறி­விக்­கட்­டும். பெரு­மெ­டுப்­பில் நினைவு நிகழ்­வு­க­ளை­யும் நடத்­தட்­டும். அதற்கு எவரும் எதிர்ப்­புச் சொல்­லப்­போ­வ­தில்லை. ஏனெ­னில் போர் என்ற பெய­ரில் இலங்­கை­யில் பல தரப்­பு­க­ளா­லும் மக்­கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்­கள். அவர்­கள் எல்­லோ­ரும் நினை­வு­ கூ­ரப்­ப­ட­வேண்­டி­ய­வர்­களே.

அதே­நே­ரத்­தில் போரில் தமிழ் மக்­கள் பட்ட அள­வுக்கு இழப்­புக்­க­ளை­யும் துய­ரங்­க­ளை­யும் வேறு இன மக்­கள் எதிர்­கொண்­டார்­கள் என்று சொல்­ல­மு­டி­யாது. போரின் இழப்பு எல்­லோ­ருக்­கும் சம­மா­னது என்று பொது­மைப்­ப­டுத்­தப்­பட்­டா­லும், ஒப்­பீட்­ட­ள­வில் அது தமி­ழர்­க­ளையே பெரி­தும் பாதித்­தது. அதி­லும் குறிப்­பாக, அரச பயங்­க­ர­வா­தத்­தால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தமி­ழர்­களே என்­ப­தை­யும் எல்­லோ­ரும் ஏற்­றுத்­தான் ஆக­வேண்­டும்.

எனவே, அனு­ரா­த­பு­ரத்­தில் அமைக்­கப்­ப­டக்­கூ­டிய பொதுத் தூபி­யும், அரசு அறி­விக்­கும் பொதுத் தின­மும் தமிழ் மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க முடி­யாது.

இந்த விட­யத்­தில் தாம் என்ன செய்­ய­வேண்­டும் என்று தமிழ் மக்­கள் விரும்­பு­கி­றார்­களோ, அத­னைச் செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு உள்ள உரி­மையை அங்­கீ­க­ரிக்­க­வேண்­டும், அனு­ம­திக்க வேண்­டும். அது­தான் அர­சி­டம் இருந்து எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

http://newuthayan.com/story/27504.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சிங்கள மக்கள் வந்து போக வசதியாக வடக்குக் கிழக்கில் இருக்கும் சிங்கள இராணுவ வெறிச் சின்னங்களை.. அகற்றி.. தென்னிலங்கையில் வைப்பது பற்றியும் ஆலோசிக்கவும். அது தான் நல்லது. காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது கண்டியளோ. வெற்றித் திமிர் கதைச்சுக் கொண்டிருக்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு இன மத முறுகலுக்கான களத்தை அனுராதபுரத்தில் திறக்கும் முயற்சி!

  • தொடங்கியவர்

தமிழ் மக்­களை புலி­க­ளாக தென்­னி­லங்கை கரு­த­வில்லை

 

பிர­தான கட்­சிகள் தெரி­விப்பு; புலி­களை நினை­வு­கூ­ர­வேண்டாம் என்றும் கோரிக்கை 
(ஆர்.யசி)

தமிழ் மக்­க­ளையோ, அர­சியல்வாதி­க­ளையோ புலிகள் என நாம் ஒரு­போதும் கரு­த­வில்லை. கடந்­த­கால சம்­ப­வங்­களை தடுக்­கவும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வுமே முயற்­சிக்­கின்றோம் என்று தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் தெரி­வித்­துள்­ளன. யுத்­தத்தில் இறந்­த­வர்­களை நினைவு கூரு­வது  தவ­றில்லை, புலி­களை நினை­வு­ப­டுத்த வேண்டாம் என்­பதை தொடர்ந்தும் வடக்­கி­ன­ரிடம் கேட்­டுக்­கொள்­கின்றோம் எனவும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யது.   

வடக்கு முதல்வர் மாநா­யக்க தேரர்­களின் சந்­திப்பின் போதும் அதன் பின்­ன­ரான ஊடக சந்­திப்­பிலும் தன்­னையும், வடக்கு மக்­க­ளையும் புலிகள் என்ற எண்­ணத்தில் சித்­த­ரித்தே தெற்கில் அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறி­யுள்ள நிலையில் இந்த கருத்து தொடர்பில் தேசிய அர­சாங்­கத்­தினர் கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்­டனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கூறு­கையில்,

வடக்கு கிழக்கில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் பாரிய இழப்­புகள் ஏற்­பட்­ட­மையும் அதனால் நாடே பாதிக்­கப்­பட்­ட­மையும் மறக்க முடி­யா­த­தாகும். இந்த யுத்­தத்தில் பயங்­க­ர­வா­தி­களை விடவும் பொது­மக்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டனர். சர்­வ­தே­சத்தின் தேவை­களை பூர்த்தி செய்­து­கொள்ள முன்­னெ­டுக்­கப்­பட்ட உள்­நாட்டு குழப்­பத்தில் எமது சகோ­தர இனத்தை அழிக்­க­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.

ஆயுதம் தரித்த புலி­களும் இலங்­கையின் மக்­க­ளே­யாவர். ஆகவே அவர்­களை அழித்து நாட்டை மீட்­டெ­டுக்­கவே இந்த போராட்டம் நடந்­தது. மாறாக தமிழ் மக்­களை இலக்கு வைக்­க­வில்லை. எனினும் இப்­போது யுத்­தத்தை வைத்த அர­சியல் நகர்­வு­களே இரு தரப்­பி­ன­ராலும் முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றன. தமிழ் மக்­களை நாம் புலிகள் என கூற­வில்லை.

இன்று வடக்கு கிழக்கின் நிலை­மைகள் முழு­மை­யாக மாற்றம் கண்­டுள்­ளன. ஜன­நா­யக ரீதியில் அங்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இரா­ணு­வத்தின் தாக்கம் உள்­ள­தாக கூறப்­பட்டு வரு­கின்­றது. இது சாத­ரான ஒரு விட­ய­மாகும். வடக்கில் இரா­ணுவம் உள்­ள­தைப்­போ­லவே நாட்டில் சகல பகு­தி­யிலும் இரா­ணுவம் உள்­ளது. யுத்­தத்­திற்கு மட்டும் அல்­லாமல் நாட்டின் அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் இரா­ணு­வத்தின் பங்­க­ளிப்பு அதி­க­மாவே உள்­ளது. ஆகவே இதனை தவ­றாக கரு­தக்­கூ­டாது. எவ்­வாறு இருப்­பினும் தமிழ் மக்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னை­களும் வராத வகையில் அவர்­களின் உரி­மை­களை பாது­காக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­படும் என்றார்.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­விக்­கையில்,

வடக்கில் இரா­ணுவ குறைப்பை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அங்கு தேவைக்­கேற்ற அளவில் இரா­ணுவம் உள்­ளது. இவர்கள் பொது­மக்­களின் செயற்­பா­டு­களில் தலை­யி­ட­வில்லை. அதேபோல் வடக்கு மக்­களை ஒரு­போதும் நாம் புலிகள் என முத்­திரை குத்­தவும் இல்லை. முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் தமது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக புலி­களை வைத்து அர­சியல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தனர். ஆனால் இன்று அவ்­வாறு அல்ல. வடக்கின் அர­சியல் தலை­மை­களும் எம்­முடன் இணைந்து தமது மக்­க­ளுக்­கான கோரிக்­கை­களை வென்று கொடுக்க போராடி வரு­கின்­றனர். ஆகவே நாம் அவர்­களின் உரி­மை­களை மதிக்­கின்றோம்.

இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்­க­ளுக்கு நினைவுத் தூபி அமைப்­பது குறித்து பார­ளு­மன்­றத்தில் தமிழ் தலை­மைகள் வலி­யு­றுத்­தினர். இதனை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. அவர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற அர­சாங்கம் நிச்­ச­ய­மாக நட­வ­டிக்­கை­களை எடுக்கும். ஆனால் புலி­களை நினை­வு­கூர வேண்டாம். அவர்கள் இந்த நாட்டில் தடை­செய்­யப்­பட்­ட­வர்கள். அவர்களை நினைவுகூர நினைவுத்தூபி அமைப்பது எமது இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடாகும். இன்று நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அமைதியாகவும் ஒன்றுமையாகவும் வாழ்கின்றனர் என்றால் அதில் எமது இராணுவத்தின் பங்களிப்பே அதிகமாகும். அவ்வாறு இருக்கையில் வடக்கு மக்களுக்கு இதனை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.