Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல்

Featured Replies

"செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல்

 

(ஆர்.யசி)

இலங்கை விவகாரத்தில் தலையிட  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட்  அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம்  உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for விமல் வீரவன்ச virakesari

தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே  அவர் இதனை குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/24449

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்க இம்முறை அரங்க முடியாது ஏதாவது கொடுத்தே ஆகணும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

தொடங்கிட்டாங்க இம்முறை அரங்க முடியாது ஏதாவது கொடுத்தே ஆகணும் .

இந்த விசயமா கத்துற ஆக்கள் எல்லாம் பெயிலில் வெளியில நிக்கிற கோஸ்டிகள்...

கம்மன்பில, விமலசேன.... :rolleyes:

சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் இன்னும் சில காலம் ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறுவழியில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படிப்பறிவில்லா இனவாதிகளுக்கு ஆப்பு இறுக்கத்தான், சம்பந்தன், சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்.

அதுதான் நடக்கப் போகின்றது.

சிங்களம் இவர்கள் பேச்சைக் கேட்டு நிராகரித்தால், தமிழர்களுக்கு சுஜ நிர்ணைய உரிமை தேர்தல் கிடைக்கும் வழி பிறக்கும்.

அதன் பின் இந்த முட்டாள்களை சிங்களம் துரத்தி கல் வீசும். அந்த நிலையில் எல்லாமே ஒருவழிப் பாதையில் போய் கொண்டிருக்கும் என்பதால் மீள முடியாது.

இலங்கையில் தம்மை, தமது ஆடசியினை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த பிரித்தானிய பேரரசே, மூடடை கட்டிக் கிளம்பு வேண்டிய காலம் ஒன்றும் வந்தது.

சிங்களவர்களுக்கு 69 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த சுதந்திரம், தமிழர்களுக்கு சற்று தாமதமாக கிடைக்கும். 

அவ்வளவு தான்...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

சர்வதேச நாடுகளின் சட்டத்திற்கு அமைய தமிழீழம் உருவாகின்றது

Vimal55-288e864f10b3cab1b2c50affe0f4b667c173cfc6.jpg

 

அல் ஹுசைன் இராஜதந்திர விபசாரி என்கிறார் விமல்

(ஆர்.யசி)

இலங்கை விவ­கா­ரத்தில் தலை­யிட ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா ளர் செயிட் அல் ஹுசை­னுக்கு எந்த உரி­மையும் இல்லை. அமெ­ரிக்­காவை திருப்­திப்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் சபையில் அமர்த்­தப்­பட்­டுள்ள  இரா­ஜ­தந்­திர விபச்­சா­ரியே அவராவார் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.  

காணமால் ஆக்­கப்­பட்டோர் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­வதும், புதிய அர­சியல் அமைப்பும் தமிழ் ஈழத்­துக்­கான முயற்­சிகளாகும். சர்­வ­தேச நாடு­களின் சட்­டங்­க­ளுக்கு அமைய தமி­ழீழம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­ற­போதே அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

20ஆம் திருத்த சட்டம் எதிர்­வரும் 20 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த 20 ஆம் திருத்­தத்தின் மூல­மாக அனைத்து மாகா­ண­ச­பை­க­ளையும் ஒரே தினத்தில் நடத்­து­வது என்ற கற்­ப­னைக்­க­தையை கூறியே நிறை­வேற்ற முயற்­சித்து வரு­கின்­றனர்.

இதன் மூல­மாக தற்­போது நடத்­தப்­பட வேண்­டிய மூன்று மாகா­ணங்­களின் தேர்­தலை பிற்­போ­டவே அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதற்­கான முயற்­சியே இப்­போது அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மக்கள் ஆணைக்கு அமைய தேர்­தலை பிற்­போட முடி­யாது. எனினும் இந்த அர­சாங்கம் பொய்­யான கருத்­துக்­களை முன்­வைத்து தேர்­தல்­களை பிற்­போ­டவே முயற்­சித்து வரு­கின்­றது. இந்­நி­லையில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்­சியை கொண்­டு­வ­ருதல் மற்றும் இலங்கையை மத சார்­பற்ற நாடாக மாற்ற அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்தால் 20 ஆம் திருத்த சட்­டத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரிக்கும் என அண்­மையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் சுமந்­திரன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் 21 ஆம் திகதி முக்­கிய கார­ணி­களை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ர­வுள்­ளனர். காணாமால் போனோர் சட்­ட­மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­துடன், பிர­தமர் மூல­மாக அர­சியல் அமைப்பின் இடைக்­கால அறிக்கை 21 ஆம் திகதி அர­சியல் அமைப்பு சபையில் சமர்ப்­பிக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வலிந்து காணாமால் ஆக்­கப்­ப­டு­தலில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை பிர­தான நாடு­களே தவிர்த்து வரும் நிலையில் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர யாருக்கும் தெரி­யாது இந்த உடன்­ப­டிக்­கையை ஏற்­று­கொண்டார். இந்த சட்­டத்தை தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மாக்க இந்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. இதில் 11 ஆம் அத்­தி­யாயம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாகும். காணமால் ஆக்­கப்­பட்டோர் என்­பது சர்­வ­தேச சட்­டத்­துக்கு அமைய யுத்த குற்­ற­மாகும், அதற்­க­மைய சர்­வ­தேச நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­படும் நிலையில் அத­னுடன் தொடர்­புள்ள சந்­தேக நபரை இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச தரப்­பிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்­பதை தெளி­வாக கூறி­யுள்­ளது. ஜகத் ஜய­சூ­ரிய மீது இன்றும் சர்­வ­தேச வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. இப்­போது இந்த சட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­படும் நிலையில் அவரை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்க வேண்­டி­வரும். இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட போதிலும் இந்த சட்­டத்தை மாற்­றிக்­கொள்ள முடி­யாது.

அதேபோல் சரத் பொன்­சேகா தற்­போது யுத்த குற்­றங்கள் குறித்து கருத்து தெரி­வித்து வரு­கின்றார். ஜகத் ஜய­சூ­ரிய ஒரு யுத்த குற்­ற­வாளி என்­பதை அவர் வெளிப்­ப­டி­யாக தெரி­வித்து வரு­கின்றார். இந்த கருத்­துக்­களை வைத்தே ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு தீர்ப்பு வழங்­கு­கின்றார். ஏனைய நாடு­களின் விவ­கா­ரத்தில் தலை­யிட செயிட் அல் ஹுசை­னுக்கு எந்த உரி­மையும் இல்லை. அமெ­ரிக்­காவை திருப்­திப்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் சபையில் அமர்த்­தப்­பட்­டுள்ள இரா­ஜ­தந்­திர விபச்­சா­ரியே அவராவார். எந்த நாட்­டையும் அடி­ப­ணிய வைக்க அவ­ருக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை, இப்­போது இவர்­களின் விளை­யாட்டில் இலங்­கையை சிக்­க­வைத்­துள்­ளனர். அதேபோல் இந்த அர­சாங்கம் அவர்­களின் தாளத்­திற்கு ஆடும் என்­பது அவர்­க­ளுக்கு தெரியும். இந்த அர­சாங்கம் நாட்டின் மீது அக்­க­றை­யில்­லாது மேற்கு நாடு­க­ளுக்கு அமைய செயற்­படும் என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

20 ஆம் திகதி 20 ஆம் திருத்தம் கொண்­ட­வ­ரப்­ப­ட­வுள்­ளது, 21 ஆம் திகதி காணமால் ஆக்­க­பட்டோர் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது. இவை இரண்­டுமே நாட்டை மோச­மாக பாதிக்கும் செயற்­பா­டாகும். வெளி­நாட்­டிலும் உள்­நாட்­டிலும் நீதி­மன்­றங்­களை அமைத்து குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க இந்த தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. இது கடந்த காலத்தை பாதிக்­காது என மங்­கள சம­ர­வீர தெரி­வித்த போதிலும் லத்தின் அமெ­ரிக்க நாடு­களின் மூலம் இப்­போது தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­குகள் கடந்­த­கால சம்­ப­வங்கள் தானே? அவற்றை அடிப்­ப­டை­யாக வைத்தே குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது. சட்­ட­மூ­லத்தில் எந்த இடத்­திலும் இதனை குறிப்­பி­ட­வில்லை. ஆகவே இந்த அர­சாங்கம் மிகப்­பெ­ரிய தேசத்­து­ரோகம் செய்­கின்­றது, தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கும், சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கும் அடி­ப­ணிந்து இந்த அர­சாங்கம் நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காவு­கொ­டுக்க முயற்­சித்து வரு­கின்­றது.

அதேபோல் 21 ஆம் திகதி அர­சியல் அமைப்புக்கான இடைக்­கால அறிக்கை அர­சியல் அமைப்பு சபைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. அதன் பின்னர் அமைச்­ச­ர­வையில் நிறை­வேற்றி பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மாக்க முயற்­சிக்­கின்­றனர். இதில் ஐக்­கியம் என்­பது இல்லை, மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் பல­ம­டை­கின்­றது, வடக்கு கிழக்கு இணைக்கும் திட்­டமே இர­க­சி­ய­மாக கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. இதையே சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார். அவ­ரது கருத்­துக்­களின் மூல­மாக உண்­மைகள் வெளி­வந்­துள்­ளது. இரா­ணு­வத்தை தண்­டிக்க, நாட்டை பிரிக்க இவர்கள் எடுக்கும் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. பெய­ருக்கு மட்­டுமே ஐக்­கி­ய­மாக வைத்­து­கொண்டு நாட்டை சமஷ்­டி­யாக்க இவர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

தமிழ் அர­சியல் தலை­மை­க­ளுக்கும், மேற்கு நாடு­க­ளுக்கும், புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கும் ஏற்ற வகையில் இவர்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவை தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள், ஆயுதம் மூலமாக அல்ல, சர்வதேச நாடுகளின் அவர்களின் சட்டங்களுக்கு அமைய இந்த ஈழம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இப்போது அரசாங்கத்தில் இருந்து பலர் எம்முடன் இணையவுள்ளனர். ஆனால் 20 ஆம் திருத்தத்திற்கு கை உயர்த்திவிட்டு எம்முடன் இணைய வேண்டாம். அவ்வாறு வருபவர்களை ஒருபோதும் இணைத்துக்கொள்ள முடியாது. அந்த தேசத்துரோகிகளை இணைத்துக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை. எதிர்ப்பை தெரிவித்துவிட்டு தைரியமாக எம்முடன் எதிரணியில் இணையுங்கள். நாம் அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.