Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’

Featured Replies

‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’
 

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.  

“கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

“கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு, முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமறிக்க கூடாது” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைரின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை, மட்டக்களப்பு ஏறாவூர் பதீயுதீன் மஹ்மூத் வித்தியாலயத்துக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது.

 இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இனிவரும் காலங்களில் மாகாண சபைத் தேர்தல், தொகுதிவாரி அடிப்படையில் நடைபெறவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். அவற்றையும் தொகுதிவாரி அடிப்படையில் மாற்ற வேண்டும்.  

 நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் ஒவ்வொரு தொகுதியாக மாற்றுங்கள். இதனால், இனப்பிரச்சினை தொகுதிப் பிரச்சினைகள் எற்படாதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைத்துள்ளோம் அது சிறந்த ஆலோசனை என ஏற்றுள்ளார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன தற்போது 11 உறுப்பினர்கள் உள்ளார்கள் மூன்று உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டி வரும்.  

 மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் முரண்படாமல் பிளவுகள் ஏற்படாமல் தங்களுடைய பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவது என்பது பற்றி சிந்திக்கவேண்டும்.  

கிழக்கு மாகாணத்தில், தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். ஹாபிஸ் நஸீர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். விமல வீர திஸாநயக்க முதலமைசராக நாளை வரக்கூடும். 

இவ்வாறு, மூவின மக்களும் ஒற்றுமையாக நிர்வாகம் செய்யக்கூடிய ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம்தான்.  

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைத்து கிழக்கை அநாதரவாக்கி மீண்டும் இந்த மண்ணிலே இரத்த ஆற்றை ஓடவைத்து, யுத்த சூழலை உருவாக்குவதற்கு, நாங்கள்; இடமளிக்க மாட்டோம்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அல்லது ஏனைய கட்சிகளுடைய பிரதிநிதிகளினால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான சில ஆலோசனைகள் முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடைக்கால அறிக்கையை பிரதமர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.  

யுத்தம் மாத்திரம் முடிவடைந்துள்ளது. இன்னும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

 இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இந்த அரசாங்கம் கொடுக்க தவறுமாகவிருந்தால் பெரும் நெருக்கடி நிலைமையே ஏற்படும்.  

அதிகாரங்கள் நிறைந்த தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே செய்யக்கூடிய வளமான மாகாணசபைகள் உருவாக்கப்பட வேண்டும் வடக்கு மற்றும் கிழக்கு என தனியான மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.  

வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி இன்று யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது சாத்தியப்படாத விடயமாகும்.

 அரசாங்கத்தின் பலம் எதிர்க்கட்சிகளின் பலம் ஆகிய சூழ்நிலைகளை சாத்தியமான முறையில் பயன்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களுடைய நிலைப்பாட்டை வெளியிலும் பேசவில்லை நாடாளுமன்றத்திலம் பேசவில்லை எழுத்து மூலமாகவும் கொடுக்க வில்லை.  

வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்று மிகத் தெளிவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேசவேண்டும். எதிர்காலத்தில் இதுதான் எங்களுடைய பிரச்சினையாகும்” என்றார்.  

 

http://www.tamilmirror.lk/அம்பாறை/வடக்கு-கிழக்கு-இணைப்பை-சம்மதிக்க-மாட்டோம்/74-204057

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கும் ஹிஸ்புல்லாஹ்

 

வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்ற விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான  நிலைப்பாட்டை எடுத்தால் அதற்கு தனது பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லையென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் எதிரணியில் இருப்பவர்களை விமர்சித்து எதிர்ப்பதன் மூலம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப்  எதிர்பார்ப்பாகும்.

அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது தமிழ் சகோதரர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

கிழக்கு மாகாணம் பிரிந்திருக்கும் போது எமக்கான சகல அதிகாரங்களும் கிடைக்கும்.

இதனால் மூன்று இனமும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளோம்.

வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

கிழக்கு மாகாணம் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம்.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதையிட்டு மிகவும் கவலையடைகின்றோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதுவரை தெளிவான முடிவினையோ – நிலைப்பாட்டினையோ அறிவிக்கவில்லை.

எனினும் தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கும் ஹிஸ்புல்லாஹ்

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியமையாலேயே முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ்  தலைமைத்துவம் இது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அவ்வாறான கருத்துக்களை புறக்கணித்து “வடக்கு கிழக்கு இணைய இடமளிக்க மாட்டோம்” என தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/politics/North-East-I-will-never-be-allowed

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாணத்தில், தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். ஹாபிஸ் நஸீர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். விமல வீர திஸாநயக்க முதலமைசராக நாளை வரக்கூடும். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்னுமே புடுங்கத் தேவையில்லை.

கிழக்கை, இஸ்லாம் மாகாணமாக நாமும் அனுமதிக்க மாட்டோம்.

இதற்காக கிழக்கு சிங்களவர்களுடன் இணைந்து போராடுவோம்.

  • தொடங்கியவர்
‘கிழக்கை யார் ஆள்வது என்பதை மக்களே தீர்மானிப்பர்’
 

-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக் 

கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வட-கிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரைமறைவில்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கெதிராக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் என்ற ரீதியில் நான் மாத்திரமே பகிரங்கமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றேன். இதனால் எனக்கெதிராக  திட்டமிட்ட வகையில் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

“அந்தவகையில், ‘கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சம உரிமையுடன் சகல அதிகாரங்களையும் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் அந்நிலை இல்லாது போகும். அத்துடன், கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், தற்போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக உள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர முடியும்’ என்ற ரீதியில், நான் நேற்று முன்தினம் (18) ஏறாவூரில் தெரிவித்த கருத்தை, சிலர் திரிவுபடுத்தி ‘கிழக்கில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும்’ என்று, நான் வலியுறுத்தியதாக, சில ஊடகங்கள் மூலம் அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

“கிழக்கு மாகாணத்தை யார் ஆள வேண்டும் என்பதை கிழக்கு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். அதனை வெளிச்சக்திகள் தீர்மானிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் ஒற்றுமையோடு சம உரிமைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் முஸ்லிம்கள் சார்பில் நானும், உதுமாலெப்பையும் அமைச்சர்களாக இருந்தோம். வீமலவீர திஸாநாயக்க மற்றும் நவரட்ன ராஜா ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தனர்.  ஆனால், எமக்கிடையில் எந்தவித பிரச்சினைகளுமின்றி சிறப்பானதொரு நிர்வாகத்தை நாங்கள்  மேற்கொண்டிருந்தோம். 

“ஆனால், தற்போது அந்நிலை மாறியுள்ளது. கிழக்கில் இனவாத அரசியலை மேற்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என சில சக்திகள் நினைத்துக்கொண்டுள்ளன. இந்நிலை, கிழக்கின் ஒற்றுமைக்கே பாதிப்பாக அமையும். 

“நான் எந்த இடத்திலும் ‘சிங்களவர் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும்’ என வலியுறுத்தவில்லை. அப்படி சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டிய தேவையோ, எண்ணமோ எமக்கில்லை. நான் வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை விமர்சித்து பேசும் போது, ஒரு கட்டத்தில் கிழக்கில் மூவினத்துக்கும் அதிகாரம் உள்ளன. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக இருந்தார். தற்போது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நஸீர் அஹமட் முதலமைச்சராக உள்ளார். எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியும். இந்நிலை, வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டால் இல்லாது போகும் என்றே குறிப்பிட்டேன். 

“ஆனால், இதனை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி நான் ‘சிங்களர் ஒருவர் கிழக்கின் முதல்வராக வர வேண்டும்’ என்று வலியுறுத்தியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்ட செய்தியாகும். தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் சேறு பூசுகின்ற சதித்திட்டங்களை சில சக்திகள் மேற்கொண்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்” என்றார். 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கிழக்கை-யார்-ஆள்வது-என்பதை-மக்களே-தீர்மானிப்பர்/175-204178

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.