Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம்

Featured Replies

இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம்

கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர்

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தான் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

ராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் ராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய ராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் ராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன் அந்த அமைப்புக்கு இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆதரவு கிடைத்து வருவதாக அப்போது ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri-lanka-41357095?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

இராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் :  ஞானசார தேரர்

Published by Priyatharshan on 2017-09-23 12:29:34

 

கடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்திரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

 

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24835

  • தொடங்கியவர்

++

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 இதென்ன புதிசே, அண்டைக்கு இராணுவ சீருடையில் செய்ததை இண்டைக்கு காவிஉடையில் செய்யிறீர். புத்தர் இல்லறத்திலிருந்து துறவறத்துக்கு மாறினது மாதிரி. 

1 minute ago, satan said:

 இதென்ன புதிசே, அண்டைக்கு இராணுவ சீருடையில் செய்ததை இண்டைக்கு காவிஉடையில் செய்யிறீர். புத்தர் இல்லறத்திலிருந்து துறவறத்துக்கு மாறினது மாதிரி. 

இவர் இப்ப சொல்லி போட்டார் பிரபாகரனுக்கு சிலை வைக்கலாம் என்று!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/23/2017 at 8:40 PM, Dash said:

இவர் இப்ப சொல்லி போட்டார் பிரபாகரனுக்கு சிலை வைக்கலாம் என்று!!!

 இவற்ற குடுமி சும்மா ஆடாது. தீனி போட்டு வளத்தவர் மாட்டப்  போறார் எண்டு   சுருதியை மாத்திப் போடுறார். அல்லது இன்னும் பத்தடி பாயப்போறார். 

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் சுயரூபத்தை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் இவரைப் பார்த்தாவது விளங்கிக்கொள்ள வேண்டும்.

ரணில், மைத்திரி உட்பட ஏனைய 99.99999% ஆன சிங்கள-பௌத்தர்களுக்கும்  ஞானசார தேரருக்கும் எந்த வித்தியாசமும் உண்மையில் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.