Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தர் ஐயாவுக்கு ஓர் ஆற்றுகைக் கடிதம்

Featured Replies

15417.jpg

மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது.
 
உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான்.
 
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு.
 
என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
 
எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் இனம் சார்ந்தது.
 
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என் பதை நீங்கள் உண்மையிலேயே உணரவில் லையா? அல்லது உணர்ந்தும் உங்கள் நலனுக்காக அதை மறைப்புச் செய்கிறீர்களா? அல்லது உங்களுடன் இருப்பவர்கள் தவறாக வழிப்படுத்துகின்றனரா? என்பதை எங்களால் அறிய முடியவில்லை.
 
ஆனால் உண்மையை தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டியது உங்கள் தார்மீகக் கடமை. வன்னிப் போரில் பேரிழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்த தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் நீங்களோ அன்றி உங்களோடு இருப்பவர்களோ நடந்திருக்கக்கூடாது.
 
அவ்வாறு நடந்து கொள்வதென்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ­ நடத்திய வன்னிப் போரை விடக் கொடுமையானது.
 
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் தராது என்பது நிறுதிட்டமான உண்மை.
 
இலங்கை அரசாங்கம் எங்களுக்கு எதுவும் தரவில்லை என்பதற்காக உங்களைக் கடிந்து கொள்வது நியாயமன்று.
 
இருந்தும் உங்கள் நடைமுறைகள் உங்களின் அரசியல் போக்குகள் தமிழ் மக்களை ஆத்திரமூட்டியுள்ளன என்பது சத்தியவாக்கு.
 
இதற்குக் காரணம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அருமந்த சந்தர்ப்பங்களை நீங்களும் உங்கள் பக்கத்தவர்களும் விற்றுத் தள்ளி விட்டதுதான்.
 
ஆம், விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இல்லாமல் போனபோது வெறுங்கையாயினர்.
 
இருந்தும் இலங்கை அரசாங்கம் நடத்திய கொடூர யுத்தம், தமிழின அழிப்பு, போர்க்குற்றம் என்பன சர்வதேச சமூகத்தை தமிழ் மக்கள் பக்கம் திருப்பியது.
 
ஐ.நா சபை வரை எங்கள் பிரச்சினை எடுத் துச் செல்லப்பட்டது. புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்கள் உழைப்பையும் கைவிட்டு கால் நடையாக ஐரோப்பிய வீதிகளில் நடந்து பேரணி நடத்தி சர்வதேச சமூகமே! ஈழத் தமிழினத் தைப் பார் என்று கதறினர்.
 
இவற்றின் காரணமாகவும் சர்வதேச கள நிலைமை தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்தது.
 
ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தவில்லை. மாறாக அற்பசொற்ப சலுகைக்காக இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்தீர்கள்.
 
சர்வதேசத்தின் உதவியை உதறித் தட்டினீர்கள். இன்று ஒன்றுமில்லாத ஒன்று வந்திருக்கிறது.
 
அதிலும் ஒரேநாடு, ஒற்றையாட்சி என்பதைக் கூறுவதால் நீங்கள் பாராளுமன்றத்தில் காட்டிய வார்த்தை வடிவங்களை நினைக்க எங்களுக்கே கவலையாக உள்ளது.
 
ஐயா! அவர்கள் ஒன்றும் தரமாட்டார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆறுதலடையுங்கள்.

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15417&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பா அந்தாளுக்கு கண்ணும் தெரியாது.. காதும் கேளாது.. இதில கடிதம் எழுதின மிணக்கடுறியள். ஏதோ குருட்டான் போக்கில.. போக்கிட்டு இருக்குது.. விடுவியளா. எதிர்கட்சி தலைவர் என்ற அடைமொழியோடு.. சொந்த வீட்டுக்குள்.. ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்கு போவதையும் செய்தியாப்போட்டு ஆள் இன்னும் உயிரோட தான் இருக்கென்று காட்டிக்கிட்டிருக்காங்க. நீங்க என்னாடான்னா.. கடிதம்.. மடல்.. என்று கொண்டு நிற்கிறியள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ஏப்பா அந்தாளுக்கு கண்ணும் தெரியாது.. காதும் கேளாது.. இதில கடிதம் எழுதின மிணக்கடுறியள். ஏதோ குருட்டான் போக்கில.. போக்கிட்டு இருக்குது.. விடுவியளா. எதிர்கட்சி தலைவர் என்ற அடைமொழியோடு.. சொந்த வீட்டுக்குள்.. ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்கு போவதையும் செய்தியாப்போட்டு ஆள் இன்னும் உயிரோட தான் இருக்கென்று காட்டிக்கிட்டிருக்காங்க. நீங்க என்னாடான்னா.. கடிதம்.. மடல்.. என்று கொண்டு நிற்கிறியள். :rolleyes:

அதென்ன எங்கன்ட தமிழகத்தலைவரும்  சிறிலங்காவின்வட்கிழக்கு தலைவரும் ஒரே நிலையில் இருக்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அதென்ன எங்கன்ட தமிழகத்தலைவரும்  சிறிலங்காவின்வட்கிழக்கு தலைவரும் ஒரே நிலையில் இருக்கினம்....

இரண்டும் அடிமைகளாக.. அடிமைகளாக்கி.. ஆடி அடங்கிற கட்டத்தில இருக்குதுங்க. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கடிதம் எழுதி ஏன் கொஞ்ச மையை வேஸ்ட் பண்ணுவான்  எல்லாம் நிலமை நமக்கு நாம் மண்ணை அள்ளி கண்ணுக்குள் போட்டுவிட்டு ஊதி விடுங்கோ என்றோ அடுத்தவனிடம் சொல்வது போல் இருக்கு :10_wink:

  • தொடங்கியவர்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் கருத்துக்கள் என்ன?

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்பு வணக்கம். அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பில் தமிழ் மக்கள் பலவாறு பேசிக்கொள்கின்றனர். அதில் தமிழ் அரசியல் தலைமை தமிழர்களை விற்றுவிட்டது என்பதும் ஒன்று.
 
இதுபற்றி நீங்கள் அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை. இருந்தும் அதனைத் தெரிவிப்பது ஓர் ஊடகத்தின் கடமை என்ற வகையில் உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
 
எதுஎவ்வாறாக இருப்பினும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு வெளி வந்திருக்கக்கூடிய இக்காலசூழ்நிலை மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் மறுதலிக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம்.
 
இடைக்கால வரைபு தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதம் என்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் கூறுகின்றார்.
 
பரவாயில்லை அவர் கூறுவது போல வரப் பிரசாதமாக இருந்தால் அதனை இருகரம் நீட்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
ஆனால் இடைக்கால வரைபில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏதேனும் இருப்பதாக தெரியவில்லை என்பது தமிழ்ப் புத்திஜீவிகளின் கருத்துக்களாக இருக்கிறது. எனினும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதுதான் நியாயமானது.
 
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் வரைபு ஒன்று வெளியாகி இருக்கும் போது அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதக பாதகங்களை ஆய்ந்தறிந்து தர்க்கரீதியில் கருத்துக்களை முன்வைப்பதே பொருத்துடையது என்பதால்,
 
அதனைச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய உங்களுக்கும் உரியது என்பதை நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள்.
 
இடைக்கால வரைபு தொடர்பில் உங்கள் கட்சித் தலைமைகள் கொண்டிருக்கக்கூடிய அபிப்பிராயங்களும் நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களும் வேறுபட்டதாக இருக்கலாம்.
 
கருத்துக்களைக் கூறி கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று நீங்கள் கருதி மெளனமாக இருந்தால், அது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் பாவச் செயலாகும்.
 
ஆகையால், கெளரவத்துக்குரிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே! வெளியாகி இருக்கும் இடைக்கால வரைபு தமிழ் மக்க ளுக்கு உரிமை தருமா? எங்கள் மக்கள் பட்ட துன்பங்களுக்கு முடிவு கட்டப்படுமா?
 
எங்கள் வருங்காலச் சந்ததியினர் இந்த நாட்டில் நிம் மதியாக வாழ்வதற்கு அரசியலமைப்புச் சீர் திருத்தத்தின் இடைக்கால வரைபு உறுதி செய் யுமா? என்பது பற்றிய உங்களின் கருத்துக் களை மக்களிடம் முன்வையுங்கள்.
 
யார் எதைக் கூறினாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் இழப்புக்களை அறிந்தவர் கள் நீங்கள்.
 
ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு அமைவாக உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15421&ctype=news

 

தமிழில் தரமான பத்திரிகை என்று எதுவும் தற்போது இல்லை.

சம்பந்தர் வலம்புரியை விட பல மடங்கு மோசமான பத்திரிகையான வீரகேசரியையே வாசிப்பவர்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.