Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது

Featured Replies

சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது

பொது­பல சேனா சூளுரை

 
சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இது சிங்­கள நாடு. சிங்­க­ள­வர்­களே நாட்டை ஆள வேண்­டும். வேறு எவ­ரும் எமது நாட்­டில் தலை­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இப்­போ­துள்ள நிலை­யில் சிங்­க­ள­வர்­கள் ஆயு­தம் ஏந்­தும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. விரை­வில் நாட்­டில் சிங்­க­ளப் புரட்சி உரு­வாக வாய்ப்­புள்­ளது.
இவ்­வாறு சூளு­ரைத்­துள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் பொது­ப­ல­சேனா அமைப்பு நேற்று பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நடத்­தி­யது. அந்த அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கின் அர­சி­யல்­வா­தி­கள் கூட்­டாட்சி, தனி நாடு குறித்­துப் பேசு­கின்­ற­னர். தமிழ் மக்­க­ளுக்கு இது அவ­சி­யம் இல்லை. தெற்கு கூட்­டாட்சி கேட்­க­வில்லை.
ஒரு­சி­லர் மகிந்­த­வா­தி­க­ளா­க­வும், சிலர் மைத்­தி­ரி­வா­தி­க­ளா­க­வும், சிலர் ரணில்­வா­தி­க­ளா­க­வும் இருந்து வரு­கின்­ற­னர். ஆனால் மக்­கள் நடு வீதி­யில் உள்­ள­னர்.

மத­வா­தம் நாட்­டில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. நாடு துண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இப்­போ­துள்ள நிலை­யில் சிங்­க­ள­வர்­கள் ஆயு­தம் ஏந்­தும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம் தரப்­பி­ன­ரும் எந்த நேர­மும் ஆயு­தம் ஏந்­தும் மன­நி­லை­யில் உள்­ள­னர்.
வடக்கு மக்­க­ளுக்­காக சம்­பந்­தன் குரல் கொடுக்­கின்­றார். முஸ்­லிம் மக்­க­ளின் உரி­மைக்­காக அனை­வ­ரும் குரல் கொடுக்­கின்­ற­னர்.

ஆனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு குரல் கொடுக்க எவ­ரும் இல்லை. அனை­வ­ரும் சிறு­பான்மை மக்­களை பாது­காக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் இருந்து குரல் கொடுக்­கின்­ற­னர்.
நாம்­தான் இன்று அடி­ப­ணிந்த இன­மாக உள்­ளோம். விரை­வில் நாட்­டில் சிங்­க­ளப் புரட்சி உரு­வாக வாய்ப்­புள்­ளது.

சிங்­கள, தமிழ், முஸ்­லிம்­கள் அனை­வ­ரும் இணைந்து புதிய மாற்­றத்தை உரு­வாக்­கு­வோம். அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­றாக இணை­வோம். அன்­பா­கப் பேசி பிரச்­சி­னை­க­ ளைத் தீர்ப்­போம். புதிய சிந்­த­னை­க­ளைக் கொண்டு நாட்­டைச் சரி­யாக மாற்­றி­ய­மைப்­போம். மகிந்த, ரணில், மைத்­தி­ரியை நிரா­க­ரிப்­போம். மகா­நா­யக்க தேரர்­க­ளில் ஒரு­வரை தலை­மைக்குக் கொண்­டு­வ­ரு­வோம்.

இது சிங்­கள நாடு. சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டை ஆள வேண்­டும். வேறு எவ­ரும் எமது நாட்­டில் தலை­யி­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. இன்று நாட்டை யாரா­வது ஒரு சரி­யான தலை­மை­யின் கீழ் கொண்­டு­வர வேண்­டும். சிறு­பான்மை இனத்­த­வ­ராக இருந்­தா­லும் பர­வா­யில்லை.

இன்று நாட்­டைப் பிரிக்­கும் செயற்­பா­டு­கள் அனைத்­தை­யும் தடுக்க மகா­நா­யக்க தேரர்­கள் கள­மி­றங்­கி­னால் எமது உயிரைக் கொடுத்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­வோம் -– என்­றார்.

http://newuthayan.com/story/32373.html

  • தொடங்கியவர்

மஹிந்த ரணில் மைத்திரி மூவரையும் நிராகரித்து மாநாயக்கர்களை அதிகாரத்தில் இருத்த வேண்டும்

19074749343-fc12ec05e4f2b19b7566171a010569d00c57269e.jpg

 

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கூறுகின்றார்
(ஆர்.யசி )

மஹிந்த, ரணில், மைத்திரி மூவரையும் நிராகரித்து மாநாயக்க தேரர்களை அதியுச்ச அதிகாரத்தில் அமர்த்தி அனைத்து தரப்பும் இணைந்து செயற்  படும் புதிய அரசியலை உருவாக்க வேண்டும். மாநாயக்க தேரர் களமிறங் கினால் உயிரைக்கொடுத்து செயற்படவும் தயாராகவுள்ளோம் 

 என்று பொதுபல சேனா தெரிவித்தது.

புதிய அரசியல் அமைப்பு வேண்டாம். இதன் மூலமாக சிங்களவர்கள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவாகும் எனவும் அவ்வமைப்பு எச்சரித்தது.

பொதுபல சேனா அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று அந்த அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஜானசார தேரர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு குறிந்து இன்று பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசியல் அமைப்பு குறித்து பேசும் இவர்கள் யார்? இவர்களின் கொள்கைகள் என்ன? கடந்த காலத்தில் இந்த நாட்டினை அழிக்க முன்னணியின் இருந்த நபர்களே இவர்களாவர். இவர்கள் முன்வைக்கும் தீர்வை எவ்வாறு எம்மால் ஏற்றுகொள்ள முடியும். எவ்வாறு இவர்களை நம்ப முடியும். வடக்கின் அரசியல் வாதிகள் சமஷ்டி, தனி நாடு என்பன குறித்து பேசுகின்றனர்.

ஆனால் தமிழ் மக்களுக்கு இது அவசியம் இல்லை. தெற்கிலும் மக்கள் சமஷ்டி கேட்கவில்லை. ஆனால் ஒருசிலரது தேவைக்காக மாத்திரம் அரசியல் அமைப்பு, அதிகார பகிர்வு என்பன கோரப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் போராட்டத்தில் மக்கள் அழிந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையில் இருந்து அரசியல் செய்து வருகின்றனர். ஒருசிலர் மஹிந்த வாதிகளாகவும், சிலர் மைத்திரி வாதிகளாகும், சிலர் ரணில் வாதிகளாவும் இருந்து வருகின்றனர். ஆனால் மக்கள் நடு வீதியில் உள்ளனர்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமான வகையில் செல்கின்றது. மதவாதம், அடிப்படைவாதம் நாட்டில் பரப்பப்பட்டு வருகின்றது. நாடு துண்டாடப்பட்டு வருகின்றது. இப்போதுள்ள நிலையில் சிங்களவர்க்கள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பினரும் எந்த நேரமும் ஆயுதம் ஏந்தும் மனநிலையில் உள்ளனர்.

நாட்டின் பிரச்சினை இன்று இனரீதியில், மத ரீதியில் தூண்டிவிடப்படுகின்றது. இதனை தடுக்க வேண்டும். அரசியல் அமைப்பு ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.ஆகவே நாம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். சிங்கள நாடு எனக் கூறுவதை சிலர் விரும்பவில்லை.

வடக்கு மக்களுக்காக சம்பந்தன் குரல் கொடுக்கின்றார், முஸ்லிம் மக்களின் உரிமைக்காக அனைவரும் குரல் கொடுக்கின்றனர். ஆனால் சிங்களவர்களுக்கு குரல் கொடுக்க எவரும் இல்லை. அனைவரும் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் நாம் தான் இன்று அடிபணிந்த இனமாக செயற்பட்டு வருகின்றோம். ஆகவே விரைவில் நாட்டில் சிங்கள புரட்சி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. இந்த நாட்டின் மாநாயக்க தலைவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். ஆகாவே மாநாயக்க தேரர்களை இணைத்துக்கொண்டு புதிய ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து புதிய மற்றம் ஒன்றை உருவாக்குவோம். அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைவோம். அன்பாக பேசி பிரச்சினைகளை தீர்ப்போம். புதிய சிந்தனைகளை கொண்டு நாட்டினை சரியாக மாற்றியமைப்போம். மஹிந்த, ரணில், மைத்திரியை நிராகரிப்போம். பெளத்த மாநாயக தேரர்களில் ஒருவரை தலைமைக்கு கொண்டுவருவோம்.

அரசியல் இல்லாத அரசியல் வாதிகளுக்கு அப்பால் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கி அனைவரையும் வழிநடத்த முன்வருவோம். அரசியல் கொள்கைகள் மறந்து செயற்படுவோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் அமைப்புகள் அனைத்தையும் இணைத்து சிங்கள புலம்பெயர் அமைப்புகளின் உதவிகளையும் பெற்று தேசிய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம். தீய சக்திகள் இன்று நாட்டில் பரவிவிட்டன. அவற்றை அழிக்க வேண்டும். அதற்காகவே நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இது சிங்கள நாடு, சிங்களவர்களே இந்த நாட்டினை ஆழ வேண்டும். வேறு எவரும் எமது நாட்டில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. ஆனால் இன்று நாட்டை யாராவது ஒருவரின் சரியான தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும். சிறுபான்மை இனத்தவாராக இருந்தாலும் பரவாயில்லை.

இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய ஒருவராக இருந்தால் அவருக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம். அவரை தலைமைக்கு கொண்டுவருவதிலும் தவறில்லை. இப்போது நடக்கும் பிரச்சினைகள் மூலமாக நாட்டில் எப்போதும் இனவாத தீ பரவும் நிலைமை உள்ளது. ஒரு காலத்தில் சம்பிக்க, கம்மன்பில போன்றவர்கள் இதனை உணர்ந்து செயற்பட்டனர். இன்று இவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர்.

ஆகவே இன்று நாட்டினை பிரிக்கும் செயற்பாடுகள் அனைத்தையும் தடுக்க பெளத்த மாநாயக தேரர்கள் களமிறங்கினால் எமது உயிரை கொடுத்து செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-27#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மகாநாயக்கர்கள் ..உலகத் தலைவர்களைச் சந்தித்துப் 'பிரித்' ஓதலாம்!

உலக சமாதானம் தானாகவே உதிக்கும் எனும் நம்பிக்கை இப்போது வலுப்பெறுகின்றது!

முதலாவதாக...மகாநாயக்கர் ஒருவரை.....வட கொரியாவுக்கு அனுப்பிப் பார்ப்போம்!

அவரின் ராஜதந்திர நகர்வைப் பார்த்த பின்னர்....சிங்களத்தின் ஜனதிபதியாக்குவோம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் இவரை இயக்குபவர்களுக்கும்  இப்ப ஒரு இனக்கலவரம் தேவைபடுகுது. அடித்து விரட்டிப்போட்டு அள்ளின ருசி விடுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

 

 
சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இது சிங்­கள நாடு. சிங்­க­ள­வர்­களே நாட்டை ஆள வேண்­டும். வேறு எவ­ரும் எமது நாட்­டில் தலை­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இப்­போ­துள்ள நிலை­யில் சிங்­க­ள­வர்­கள் ஆயு­தம் ஏந்­தும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. விரை­வில் நாட்­டில் சிங்­க­ளப் புரட்சி உரு­வாக வாய்ப்­புள்­ளது.
இவ்­வாறு சூளு­ரைத்­துள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு.

என்னதிது, சூடா ஜலம் வந்துண்ட்ருக்கு...

ஐய்யயோ மாப்ள புள்ளையாண்டான் மூத்ரம் போயிட்டன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது

பொது­பல சேனா சூளுரை

 
சிங்­க­ள­வர் ஆயு­தம் ஏந்­தும் சூழல் உரு­வா­கி­விட்­டது

 

இவங்களுக்கு பிரச்சனையே இல்லாததுதான் பெரிய பிரச்சனை. :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.