Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

Featured Replies

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

 

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.

aalunar_10377.jpg

 

விரைவில் விரிவான செய்தி

http://www.vikatan.com/news/tamilnadu/103694-new-governor-announced-for-tamilnadu-state.html

  • தொடங்கியவர்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

 

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.

aalunar_10377.jpg

 

தமிழகம் உட்பட ஐந்து மாநிலத்துக்கு ஆளுநர்களை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல் இருந்துவந்தார். கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, வித்தியாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்துவந்தார், எதிர்க்கட்சிகள் தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து பல கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்தன. 

இந்நிலையில், தற்போது  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். இவர், 3 முறை லோக்சபா எம்.பி-யாக இருந்தவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர் தனிக்கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

மேகாலயாவில், தஞ்சையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சண்முகநாதன், பெண்கள் விவகாரத்தில் சிக்கிப் பதவி இழந்த நேரத்தில் புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 77. 

பி.டி.மிஷ்ரா அருணாச்சலப் பிரதேச ஆளுநராகவும், சத்தியபால் மாலிக் பீகார் ஆளுநராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜகதிஷ் முகி அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தமான் ஆளுநராக இருந்த இவர் தற்போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிக்கோபாருக்கு தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103694-new-governor-announced-for-tamilnadu-state.html

  • தொடங்கியவர்

புதிய ஆளுநர்குறித்து என்ன சொல்கிறார்கள் தமிழக அரசியல் தலைவர்கள்!

 

TN_New_Governor_Banwarilal_Purohit__1152

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓய்வுபெற்றார். இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக அரசியலில் பல அதிரடி பரபரப்பு ஏற்பட்டதோடு, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வில் அதிகாரப்போட்டி நிலவியது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமனம், முதல்வராக சசிகலா பதவியேற்க முயன்ற தருணம், பின்னர் சசிகலா சிறை சென்றது, முதல்வராக பழனிசாமி பதவியேற்றது, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக அரசியல் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஓராண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த இவர், தற்போது தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது நியமனம்குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "தமிழக மக்கள் நலன் கருதி சுதந்திரமாக, நடுநிலையுடன் புதிய ஆளுநர் செயல்படுவார் என நம்பிக்கையுள்ளது. அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்பு, கடமையை உணர்ந்து, ஆளுநர் செயல்படுவார். புதிய ஆளுநருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "தமிழக அரசியல் சூழ்நிலையையும் புதிய ஆளுநர் நியமனத்தையும் இணைத்துப் பார்க்கக்கூடாது" என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், "தமிழக ஆளுங்கட்சியின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் பன்வாரிலால் செயல்படக்கூடாது.  புதிய ஆளுநருக்கு ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. புதிய ஆளுநர் எவ்வாறு செயல்படுவார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தி.மு.க எம்.பி, கனிமொழி கூறுகையில், "புதிய ஆளுநர் பன்வாரிலால் ஜனநாயகத்தைக் காப்பார் என நம்பிக்கை உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், "தமிழக அரசியல் சூழ்நிலையில், புதிய ஆளுநரின் பொறுப்பு முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/103700-tamilnadu-politicians-on-the-new-tn-governor.html

  • தொடங்கியவர்

மாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்..! யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..? #NewTNGovernor

 
 

பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பு ஆளுநர் தலைமையின் கீழ்தான் தமிழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், முழுநேர ஆளுநர் இல்லாமலேயே தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல அரசியல் மாறுதல்கள் அரங்கேறிவிட்ட போதிலும்,  நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராக தற்போது அஸ்ஸாம் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார், யார் இந்த பன்வாரிலால் புரோஹித்? அவரின் பின்னணி என்ன?

 

பன்வாரிலால் புரோஹித், 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி விதர்பா பகுதியில் பிறந்தவர். மூன்றுமுறை நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை பி.ஜே.பி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முதலில் அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்வாரிலால் புரோஹித், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். நாக்பூர் கிழக்கு பகுதியில் 1978-ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பின் 1980 தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பி.ஜே.பி-யின் முயற்சியில் நாட்டம் கொண்டு, 1991-ம் ஆண்டில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் பன்வாரிலால். 1996-ல் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஜே.பி. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மஹாஜனுடன் 1999-ல் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாக, பி.ஜே.பி-யில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

2003-ல் விதார்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 2009-ல் மீண்டும் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அஸ்ஸாம் மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் ஆளுநராக இவர் இருந்தபோதுதான், சீனாவுடன் போர் புரியும் எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

தற்போது தமிழக அரசியலில் நிலவும் சூழலை பன்வாரிலால் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது, அவர் முன் உள்ள மிகப்பெரிய சவால். ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குப் போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும், எனவே இந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில், பன்வாரிலால் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

மேலும், அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க ஒருங்கிணைந்த எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி. தினகரன தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த அணியினரை ஆளுநர் எப்படி கையாளப் போகிறார் என்பது அவர் முன் உள்ள மற்றொரு சவாலாகும்.

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலாதும், வித்யாசகர் ராவ் போன்று ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், அவரைப்போன்றே செயல்படக்கூடும் என்ற பிம்பமும் அவர் மீது வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவோம் என்று பி.ஜே.பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பன்வாரிலால் புரோஹித் எவ்வாறு கணித்து, முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது. பன்வாரிலாலில் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்!

http://www.vikatan.com/news/coverstory/103706-after-one-year-of-interim-governor-central-appoints-banwarilal-purohit-as-a-full-time-tn-governor.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை போட்டுத்தள்ளிவிட்டு பிஜேபி ன் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடக்குது உண்மையில் ஆட்சியை கலைத்துவிட்டு திரும்பவும் தேர்தலை வைக்கும்படி கூறுவதுக்கு திமுகவோ அல்லது உதிரி கட்சிகளோ வாய் திறக்கமுடியாத அளவுக்கு ரெய்டு பயம் ஆட்டிபடைக்குது வாயை திறந்த கமல் போன்றவர்களும் பிஜேபி கூப்பிட்டால் யோசிக்லாம் என்றுவிட்டு ஆள் நடிக்க கிளம்பிவிட்டுது போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.