Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி

Featured Replies

அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி

 

 

பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

02__3_.jpg

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

09__1_.JPG

பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

04__1_.jpg

தனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

03__3_.jpg

சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் போது நீதித்துறை சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

70 வருட பாராளுமன்ற வரலாற்றில் சிறப்பான பணியில் ஈடுபட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் ஜனாதிபதி கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபையில் உரையாற்றினர். 

சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபா நாயகர்கள், பிரதி சபா நாயகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்கள்.

http://www.virakesari.lk/article/25267

  • கருத்துக்கள உறவுகள்

100 நாட்களில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்தாக சொன்னவரால் இன்னமும் முடியவில்லை.

  • தொடங்கியவர்

ஒருமித்த நாட்டுக்குள் சகலருக்கும் சம உரிமை

ஒருமித்த நாட்டுக்குள் சகலருக்கும்  சம உரிமை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டில் ஒற்­றை­யாட்­சிக்­குள் (ஏக்­கிய ராஜ்­ஜிய) அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கும் சம உரிமை வழங்­கும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும். புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாடா­ளு­மன்­றத்­தின் அதி­கா­ரம் மேலும் பலப்­ப­டுத்­தப்­ப­டும். புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் தங்­க­ளது ஆத­ரவை வழங்­க­வேண்­டும்”
இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றம் உரு­வாக்­கப்­பட்டு 70ஆண்­டு­கள் நிறைவு நிகழ்வை முன்­னிட்டு நடை­பெற்ற சிறப்பு அமர்­வி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

1978ஆம் ஆண்டு அர­ச­மைப்பு அரச தலை­வ­ருக்கு அதி­யுச்ச அதி­கா­ரத்தை வழங்­கி­யது. நாடா­ளு­மன்­றத்­தின் அதி­கா­ரம் வெட்­டிக் குறைக்­கப்­பட்­டது. அர­ச­மைப்­பின் 18ஆவது திருத்­தச் சட்­டத்­தின் ஊடாக அரச தலை­வ­ரின் அதி­கா­ரம் மேலும் அதி­க­ரிக்­கப்­பட்­டது.
2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி அரச தலை­வர் தேர்­த­லின் பின்­னர் கூட்டு அரசு உரு­வாக்­கப்­பட்டு அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச்­சட்­டம் பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட்­டது. நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் அதி­க­ள­வில் பல­மா­னது.

புதிய அர­ச­மைப்பு

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அனை­வ­ரும் எதிர்­பார்ப்­பு­டன் காத்­தி­ருக்­கின்­ற­னர். பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டுக்­குள் ஒற்­றை­யாட்சி முறை­மை­யின் கீழ் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கும் சம உரிமை வழங்­கும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும். புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாடா­ளு­மன்­றத்­தின் அதி­ர­கா­ரத்தை நாம் மேலும் பலப்­ப­டுத்த வேண்­டும். அர­ச­மைப்பை நிறை­வேற்ற அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். நாடா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­தும் புதிய அர­ச­மைப்பு அனை­வ­ரி­ன­தும் ஆத­ரவு கிடைக்­கும் என்று நான் நம்­பு­கின்­றேன்.

நாடா­ளு­மன்ற சன­நா­ய­கம் மேலும் வலுப்­பெற வேண்­டும். சுயா­தீ­ன­மாக நிறு­வ­ன­மாக மாற்­றப்­பட வேண்­டும். நிறை­வேற்று அதி­கா­ரத்­தின் மூல­மாக அடிப்­படை உரிமை, மனித உரிமை உறு­திப்­ப­டுத்த வேண்­டும். சட்­ட­வாட்­சியை பலப்­ப­டுத்த வேண்­டும். நீதித்­துறை சுயா­தீன நீதித்­து­றையை ஒப்­பு­விக்க வேண்­டும்.

எதிர்­கா­லத்­தின் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு சிறந்த நாட்டை வழங்­கு­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்­தில் அனை­வ­ரும் கூட்டு பொறுப்­பு­டன் செயற்­ப­ட­வேண்­டும். தனி நப­ரின் அதி­கா­ரத்தை பார்க்­கி­லும் அர­சி­யல் அதி­கா­ரத்தை கூட்டு பொறுப்­புக்­குள் உள்­ள­டக்க வேண்­டும். கூட்­டுப் பொறுப்­பின் மீது அதிக கவ­னம் செலுத்த வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/34190.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.