Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!  smiley

Fatma---Gade.jpg

 

சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில், ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. smiley

மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாதிமா பிரின்சி(42), அவரது மகள் காதா பிரின்சி(21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பிரசவ சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்ற மருத்துவர்கள், இதுவொரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதிமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ராசவன்னியன் said:

ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!  smiley

Fatma---Gade.jpg

 

அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

நல்ல காலம்,  தாய்... மகளை விட சில வினாடிகள் பிந்தி பிள்ளை பெற்றிருந்தால்....
மகளின்  பிள்ளை... தன்னை விட பிந்திப் பிறந்த...  தாயின் பிள்ளையை பார்த்து....
மாமா... என்று, கூப்பிட  கூச்சப்   பட்டிருக்கும்.  சில விடயங்களில்  கடவுளும் உதவி செய்து விடுவார் என்பது உண்மை.

இனியென்ன... மாமனும், மருமகனும்..... ஒரே விளையாட்டு சாமான்களை விளையாடி,  
ஒரே பள்ளிக்கூடத்துக்கு... ஒன்றாக போகலாம்.:)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்,  தாய்... மகளை விட சில வினாடிகள் பிந்தி பிள்ளை பெற்றிருந்தால்....
மகளின்  பிள்ளை... தன்னை விட பிந்திப் பிறந்த...  தாயின் பிள்ளையை பார்த்து....
மாமா... என்று, கூப்பிட  கூச்சப்   பட்டிருக்கும்.  சில விடயங்களில்  கடவுளும் உதவி செய்து விடுவார் என்பது உண்மை.

இனியென்ன... மாமனும், மருமகனும்..... ஒரே விளையாட்டு சாமான்களை விளையாடி,  
ஒரே பள்ளிக்கூடத்துக்கு... ஒன்றாக போகலாம்.:)

vil-bah.gif அட,  நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? 

மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை..

வெட்கக்கேடு..!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

vil-bah.gif அட,  நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? 

மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை..

வெட்கக்கேடு..!

இஸ்லாமிய முறைப்படி... கடவுள் தாற பிள்ளையை, வேண்டாம்  என்று கருவை கலைப்பது, பெரிய குற்றம்.
அப்படி செய்பவர்களை...  உறவினர்களே, வெறுத்து ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இங்கு என்னுடன் வேலை செய்த துருக்கியர் ஒருவருக்கு... 32 வயது இருக்கும் போது....
அவருக்கு ஒரு, தம்பி பாப்பா  பிறந்து விட்டது என்று சொல்லி கோப்பி வாங்கித் தந்தார்.

இன்னொருவரின் மனைவிக்கு  கரு உருவாகிய  சமயம்,
வைத்தியரிடம் சென்று காட்டிய போது.... ஐந்து குழந்தைகள் உருவாகி  இருப்பதாகவும்...
அதில் மூன்று மட்டுமே... ஆரோக்கியமாக உள்ளதால், இரண்டை கலைத்து  விட வேண்டும் என்று கூறிய போது...
சம்பந்தப் பட் ட  குடும்பத்தினர் அதனை ஓரளவு  ஏற்றுக் கொண்டாலும்... மதத் தலைவரும், உறவினர்களும்  மறுத்து விட்டார்கள்.

பின் பல ஜேர்மன் சமூக ஆர்வலர்கள்.. பல சுற்று பேச்சு வார்த்தையின் பின் தான் அவர்களை சம்மதிக்க வைக்க முடிந்தது.

மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது...  அப்பாவியான  இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

... மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது...  அப்பாவியான  இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...

அப்பாவிகளா..?

படிப்பறிவும், நாகரீகமும் மேம்பட்டுவரும் தற்போதைய உலகில், கொஞ்சமும் மூளையை பயன்படுத்தி சிந்திக்காமல், அறுபது எழுபது வயதுகளில் குழந்தைகளை இப்படி பெற்றுத் தள்ளினால் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்..?

தாம்பத்தியம் ஆரோக்கியமன இயல்பே, ஆனால் அதை இப்படி அப்பட்ட உருவமாக வெளியேற்றித் தள்ளுவது சமூக பொறுப்பற்ற செயல், கண்டிக்கபட வேண்டியது..

வெட்கம் கெட்ட செயல்!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தினமணி சிரியாவை எட்டிப்பார்க்குது பக்கத்து நாட்டிலை உள்ள கிராமப்புற சிங்கள குடும்பம் 50 வருடத்துக்கு முதல் இதைவெண்ட விளயாட்டு எல்லாம் நடந்தது இப்ப அவை அடங்கிட்டினம்(பொருளாதார காரனம்கள் ) இப்பவும் முஸ்லிம்கள் உம்மாவும் மகளும் பக்கத்து பக்கத்து கட்டிலில் பிள்ளை பெறுவதுக்கு வெயிட் பண்றது சாதரான நிகழ்வு .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.