Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்­ட­லோ­னியா தனி­நாடு குறித்து 5 நாட்­களில் முடி­வெ­டுக்கக் கெடு

Featured Replies

கட்­ட­லோ­னியா தனி­நாடு குறித்து 5 நாட்­களில் முடி­வெ­டுக்கக் கெடு

 

 

ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தனி­நாடு கோரிக்கை தொடர்­பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவ­காசம் அளிப்­ப­தாக ஸ்பெய்ன் அறி­வித்­துள்­ளது.

ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தொடர்ந்து தனி­நாடு கோரிக்­கையை முன்­வைத்­து­வந்­தது. ஸ்பெய்ன் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்­ட­லோ­னியா பகு­தி­யி­லி­ருந்து கிடைக்­கி­றது. ஸ்பெய்ன் அர­சாங்கம், இவர்­க­ளது கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வந்­தது. இந்­நி­லையில், கட்­ட­லோ­னிய மாநில அரசு, தனி­நா­டு ­கு­றித்து  ஸ்பெய்னின் தடை­யையும் மீறி பொது வாக்­கெ­டுப்பு நடத்­தி­யது. ஆனால், இந்த வாக்­கெ­டுப்பில், ஸ்பெய்னின் அரசு காவல்­துறை மூலம் முடக்க, வாக்­க­ளிக்க வந்­த­வர்­கள்­ மீது தாக்­குதல் நடத்­தி­யது. வாக்­கெ­டுப்பில், 90 சத­வி­கித கட்­ட­லோ­னிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்­கைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ள­தாக அந்த மாநில அரசு தெரி­வித்து, தனி­நாடு வாக்­கெ­டுப்பில் வெற்­றி­பெற்­றுள்­ள­தா­கவும் அறி­வித்­தது.

இந்­நி­லையில், ஸ்பெய்ன் பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற கூட்­டத்தில் பேசிய அந்­நாட்டு பிர­தமர் மரி­யானோ ரஜாய், கட்­ட­லோ­னியா தனி நாடாகப் பிரி­வ­து­கு­றித்த முடிவை இன்னும் ஐந்து நாட்­களில் உறு­தி­யாகத் தெரி­யப்­ப­டுத்த வேண்டும். எதிர்­வரும் 19ஆம் திகதி காலை 10 மணிக்குள் கட்­ட­லோ­னியா தனது முடிவை ஸ்பெய்ன் மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும் எனக் கூறினார். ஸ்பெய்ன் நாட்டின் ஒற்­று­மைக்­காகப் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் அமைதிப் பேரணி நடத்­தி­வ­ரு­கின்­றனர். அதேவேளையில் கட்­ட­லோ­னியா மக்கள், தனி­நாடு கோரிக்­கை­யுடன் போராட்டம் நடத்­தி­வ­ரு­கின்­றனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/25701

  • தொடங்கியவர்

தனிநாட்டுக்காக முழங்கும் கட்டலோனியா.. விட்டுத்தருமா ஸ்பெயின்?

 
 

catalonia, கட்டலோனியா

“நம் மொழி வேறு, நம் கலாசாரம் வேறு", என்பது அவர்களுக்குப் புரிகிறது. "சுயாட்சியை நாம் கைக்கொள்ளவேண்டும், ஏனெனில் நம்முடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றது", என்பதனை அவர்கள் உணர்கின்றார்கள்; அந்த உணர்வுதான் இன்று கட்டலோனியா மக்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கச் சொல்லி இருக்கிறது.

 

ஐரோப்பாவின் வரலாறு என்பது எப்பொழுதும் சீராக இருந்தது கிடையாது. மிகநீண்ட போர்களையும், கைமாறிச்சென்ற மகுடங்களையும் ஒன்றுசேர்ந்துதான் ஐரோப்பாவும் கட்டமைக்கப்படுள்ளது. கட்டலோனியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பிரதேசம் பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் இடையில் மாறி வந்துள்ளது. ஓர் உடன்படிக்கைத் திருமணத்தின் மூலமாக நாடுகள் இணைவது அங்கும் அரங்கேறியது. அரகான் மண்டலத்துடன் இணைந்த கேடலோனியா 19-ம் நூற்றாண்டில் போர்களால் பாதிப்படைந்தது. இரண்டாம் ஸ்பானியக் குடியரசு கட்டலோனியாவிற்குச் சில தன்னிச்சையான அதிகாரங்கள் அளித்துத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. கட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரம் அதனிடமிருந்து கைவிட்டுப் போவதும், வருவதுமாக இருந்தது.

catalonia, கட்டலோனியா

1936 – 1939 வரை நடந்த ஸ்பெயினின் உள்நாட்டுப்போர் பிரான்சிஸ்கோ பிராங்கோவைச் சர்வாதிகாரியாக நிலைநாட்டியது. மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்று அனைத்திற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்தார். அனைத்திலும் தலையிட்ட இவர், பொதுவெளியில் விவாதத்தை மட்டும் அனுமதிப்பாரா என்ன? கட்டலோனியா பற்றிய புத்தகங்கள், இயக்கங்கள் என்று அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதித்தார்.

1975இல் இவரது மரணத்திற்குப் பிறகு, 1978இல் கட்டலோனியா ஸ்பெயினின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அரசியல் மற்றும் கலாசார தன்னாட்சி உரிமை பெற்றது. கட்டலோனியாவில்தான் காளைச்சண்டைக்குப் பெயர்போன பார்சிலோனா உள்ளது. தொழில்வளர்ச்சியும், வளமும் பொருந்திய மாகாணமாக இது திகழ்கின்றது. ஆனால், கட்டலோனியாவிற்குத் தனி நாடாக வேண்டும் என்ற விருப்பத்தை ஸ்பெய்ன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை.

2014-ம் ஆண்டில் இருந்து இரண்டு முறை இங்கு தனிநாடு உரிமை வேண்டுமா, என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 சதவிகிதம் மக்கள் தனிநாடு உரிமைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் வெறும் 42.3% ஆக மட்டுமே பதிவானதற்கு முக்கிய காரணம், அந்நாட்டின் அரசாங்கம். வாக்கெடுப்பு நடப்பதைத் தவிர்க்க, அவர்களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாக்குச்சாவடிகள் மூடப்பட்டன. தேர்தல் தொடர்பான வலைப்பக்கங்கள் இணையதளத்தில் முடக்கப்பட்டன. இந்த நெருக்கடிநிலை பொருளாதாரத்தையும் பாதித்தது.

திடீரென்று பங்குச்சந்தையில் வீழ்ச்சியைப் பார்த்த பொதுமக்களுக்கு, அந்நாட்டு வங்கிகள் அவர்களின் வைப்புநிதி பாதுகாக்கப்படுவதாக உறுதி அளித்தன. காவலர்களைக் கொண்டுவந்து தேர்தலை நிறுத்தப்பார்த்தார்கள். ஆனால், வாக்களிப்பதில் கவனமாக இருந்த மக்கள், வாக்குச்சாவடிகளாக இருந்த கல்லூரிகளையும், பள்ளிகளையும் தத்தம் பிள்ளைகளோடுச் சென்று இரண்டு நாள்களுக்கு முன்பே நிரப்பினார்கள்! விளைவு, வாக்களித்த பாதிக்கும் குறைவான மக்களில் தொண்ணூறு சதவிதம் மக்கள் கட்டலோனியா தன்னாட்சியை மட்டும் கைக்கொள்ளாது, தனி நாடாகவும் திகழவேண்டும் என்று வாக்களித்தார்கள்.

ஆனால் அரசாங்கமோ, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு, அரசியலமைப்புச் சட்டத்தின்படிச் செல்லாது என்று அறிவித்தது. அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜோய், “இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து” என்று விமர்சித்தார். அரசாங்கத்திற்கும் கட்டலோனியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஐரோப்பிய யூனியனின் திட்டமும் சரிவராமல் போனது. ஆனால், கட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூக்தேமொன், ”கட்டலோனியா மக்கள் தனி குடியரசுக்கான உரிமையை வென்றுள்ளார்கள்” என்று கூறினார். கட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூக்தெமோன், மேட்ரிடுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

catalonia, கட்டலோனியா

ஆனால், அவர் சுதந்திரப்பிரகடனத்தைத் தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளார். கட்டலோனியா ஒருவேளை சுதந்திரப் பிரகடனம் செய்தால் அதனை அங்கீகரிக்க மாட்டோம் என்று பிரான்ஸ் நாட்டின் சார்பாக அந்நாட்டின் அமைச்சர் நத்தாலி லுவாசோ அறிவித்தார். அதுமட்டுமன்றி, ஸ்பெயின் நாட்டிடம் சுமார் 52 இல்லைன் யூரோக்கள் கட்டலோனியாவிற்குக் கடன் உள்ளது. ஸ்பெய்ன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 155ஆம் பிரிவின்படி அவர்கள் நேரடியாக அவர்களுடைய அதிகாரத்தை கட்டலோனியாவின்மீது கொண்டுவரும் வாய்ப்பும் உள்ளது.

வங்கிகளின் சட்டப்பூர்வமான தலைமையிடங்களும் கட்டலோனியாவிலிருந்து வெளியேறும் சூழ்நிலை உருவானதால் அவர் இத்தகைய முடிவினைக் கையாண்டுள்ளார் என்று தெரிகின்றது. ஆதலால், அவர் மீண்டும் ஸ்பெய்ன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளார். முழுமையான சுதந்திரப்பிரகடனமா அல்லது அரசியல் ரீதியாகச் மேலும் சில பிரிவுகளில் தன்னாட்சி உரிமை அளிக்கும் ஒப்பந்தம் நிறைவேறுமா என்று தற்போது அரசியல் வல்லுனர்கள் விவாதித்து வருகின்றார்கள்.

 

மக்களின் உரிமையை நிலைநாட்டுவதே அரசின் முக்கியக் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று கூறுவார் அறிஞர் ரூசோ. பல புரட்சிகளையும் மறுமலர்ச்சி இயக்கங்களையும் கண்ட ஐரோப்பிய மண், இவ்விரு பகுதிகளும் இணைந்து இருக்கின்றதா, அல்லது தனித்தனியாகப் பிரிந்து இருக்கபோகின்றதா என்பதனைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/world/105029-what-happens-now-in-catalonia.html

  • தொடங்கியவர்

 

கேட்டலோனியா தனிநாடா தன்னாட்சி இழப்பா?

ஸ்பெய்ன் மற்றும் அதன் பிராந்தியமான கேட்டலோனியா அரசுகள் நேரடி மோதலில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. ஸ்பெய்ன் அரசியல் சாசனப்பிரிவு நூற்று ஐம்பத்தி ஐந்தை பயன்படுத்தி கேட்டலோனிய பிராந்திய சுயாட்சியை இடைநிறுத்தி, தன் நேரடி ஆட்சியை அங்கே நிறுவப்போவதாக ஸ்பெய்ன் அரசு அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2017 at 6:57 AM, நவீனன் said:

தனிநாட்டுக்காக முழங்கும் கட்டலோனியா.. விட்டுத்தருமா ஸ்பெயின்?

 

பிரிவதற்கு சாத்தியக்கூறுகள் எதுவுமேயில்லையென்று எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
 

  • தொடங்கியவர்

கட்டலோனியாவின் சுயாட்சி அதிகாரங்களை ரத்து செய்ய ஸ்பெய்ன் தீர்மானம்

Catalonia-2-1.jpg


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்டலோனியாவின் சுயாட்சி அதிகாரங்களை ரத்து செய்வதற்கு ஸ்பெய்ன் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஸ்பெய்ன், கட்டலோனியாவின் சுயாட்சி அதிகாரங்களை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளது. கட்டலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்துள்ள நிலையில் ஸ்பெய்ன் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அரசியல் சாசனத்தின் 155ம் சரத்தினை அமுல்படுத்தி, சுயாட்சி அதிகாரங்களை வாபஸ் பெற்றுக் கொள்வது குறித்து, அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை ஸ்பெய்ன் அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை பிரயோகித்தால், கட்டலோனியா பாராளுமன்றில் சுதந்திரப் பிரகடனம் செய்யப்படும் என கட்டலோனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Catalonia-4.jpg

http://globaltamilnews.net/archives/46047

  • கருத்துக்கள உறவுகள்

கட்டலோனியாவின் புலம் பெயர்ந்தவர்களின் கோரிக்கையாக இது இருக்கும்....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தல அடங்கிட்டுது.

ஐரோப்பிய ஒன்றியம் மிரட்டி இருக்கும்...

பார்சிலோனாவை விட்டுக்கொடுக்க ஏலுமோ..??! :rolleyes:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.