Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்காம் கட்ட ஈழப்போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்: கேணல் பானு

Featured Replies

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

"நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார்.

எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர்

வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி கேணல் பானு, குட்டிசிறீ மோட்டார் படையணி சிறப்புத்தளபதி கோபால், தமிழீழ வைப்பக ஆளுகைப் பணிப்பாளர் வீரத்தேவன், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் புகழ், முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மணன் ஆகியோர் அணிவித்தனர்.

வீரவணக்க உரைகளை தளபதி கேணல் பானு, சிறப்பு மருத்துவப்போராளி சோபிதா, சிறப்பு மருத்துவ தொண்டர் உமாறஞ்சனி, துணுக்காய் கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் சு.பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தளபதி கேணல் பானு மேலும் தெரிவித்துள்ளதாவது:

"விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு போராடுகின்ற ஒவ்வொரு போராளியும் மக்கள் படுகின்ற அவலங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாவற்றையும் விரைவில் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற இலக்கோடு தமது பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த இலக்கை இலட்சியத்தைக் கொண்ட போராளியான மேஜர் வினோதரனை நாம் இழுந்திருக்கின்றோம்.

விடுதலை என்பது சுதந்திரம் என்பது எந்த ஒரு நாட்டிலும் சும்மா கிடைக்கவில்லை. குருதி சிந்தி பல விலைகள் கொடுக்கப்பட்டு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில்தான் சுதந்திரத்தை மக்கள் பெற்றிருக்கின்றனர்.

எல்லோருக்கும் விடுதலைப் போராட்டத்துக்கான பங்களிப்பு இருக்கின்றது. இன்று வகை தொகையின்றி தமிழ் மக்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கொன்று ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அவலங்கள் எல்லாவற்றையும் நீக்கவேண்டும் எனில் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும். எதிரியைப் பொறுத்தவரை தொடர்ந்து போரின் மூலம் எங்களுடைய வலிமைகளை மழுங்கடிக்கலாம் என்று நினைக்கின்றான். இன்று எல்லோருடைய மனங்களிலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும்.

கடந்த கால வரலாற்றை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் மாங்குளம் வரையான பகுதிகளை எதிரி பிடித்து வைத்திருந்தான். இத்தனை காலம் பிடித்து வைத்திருந்த நிலங்களை நாம் பத்து நாட்களுக்குள் மீட்டு விட்டோம். சிங்கள ஆட்சிப்பீடத்துக்கும் இராணுவ தலைமைப் பீடத்துக்கும் மாறி, மாறி ஆட்கள் வரலாம். எங்களிடம் ஒரே தலைமைதான் இருக்கின்றது. அந்த தலைமை தன் இலட்சியம், குறிக்கோள் என்பவற்றில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் உறுதியுடன் இருக்கின்றது.

சமாதான காலம் என்பது எமக்கு எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஓன்றல்ல. ஆனால் எம்முடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளி உலகுக்கு காட்ட வேண்டிய தேவை எமக்கு இருந்தது. இன்று அனைத்துலகம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அனைத்துலகத்துக்கு இது புரிகின்றது. அனைத்துலகத்தை எதிர்த்துக்கொண்டு சிங்கள அரசால் நிற்க இயலாது.

அமைதிக் காலத்துக்கு முன் எம்மை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அனைத்துலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் சமாதான காலம் எங்களை, எமது விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தை, நேர்மைத்தன்மையை, மக்கள் படுகின்ற அவலங்களை எம் மக்கள் ஒடுக்கப்படுகின்ற முறைமைகளை அனைத்துலக சமூகம் பார்த்திருக்கின்றது. அந்த ரீதியில் அனைத்துலகம் இதனை உணர்ந்திருக்கின்றது. அப்படி உணர்ந்த காலங்களாக, உணர்த்திய காலங்களாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

நாங்கள் விரைவில் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கின்ற எதிரிகளை விரட்டியடிக்க வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும். எதிரிகளை விரட்டியடித்து எமது நிலத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலை வரும் போது கண்டிப்பாக அனைத்துலகம் எங்களை அங்கீகரிக்கும். பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு எங்களை அங்கீகரிக்கும். எமது தனிநாட்டை அங்கீரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு மேலான போராட்ட காலம் பல நெருக்கடிகளைக் கொண்ட காலமாக இருக்கின்றது. அடுத்த கட்டமாக இருப்பது 4 ஆம் கட்ட ஈழப்போர். இந்தப் போரை நாம் வெல்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமக்கு வெற்றி நிச்சயம்.

பெரும் வெற்றிகளை பெற்றுத்தந்த எமது தேசியத் தலைவர் அவர்களின் கீழ்தான் நாம் இருக்கின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் காலத்தில் நாம் விடுதலையைப் பெறுவோம். அதற்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு உழைப்போம்" என்றார் அவர்.

நன்றி : புதினம்

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

...

அமைதிக் காலத்துக்கு முன் எம்மை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அனைத்துலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் சமாதான காலம் எங்களை, எமது விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தை, நேர்மைத்தன்மையை, மக்கள் படுகின்ற அவலங்களை எம் மக்கள் ஒடுக்கப்படுகின்ற முறைமைகளை அனைத்துலக சமூகம் பார்த்திருக்கின்றது. அந்த ரீதியில் அனைத்துலகம் இதனை உணர்ந்திருக்கின்றது. அப்படி உணர்ந்த காலங்களாக, உணர்த்திய காலங்களாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

நாங்கள் விரைவில் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கின்ற எதிரிகளை விரட்டியடிக்க வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும். எதிரிகளை விரட்டியடித்து எமது நிலத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலை வரும் போது கண்டிப்பாக அனைத்துலகம் எங்களை அங்கீகரிக்கும். பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு எங்களை அங்கீகரிக்கும். எமது தனிநாட்டை அங்கீரிக்கும்.

...

நன்றி : புதினம்

குழம்பிப்போய் இருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் கருத்து.

Edited by lisa01

இந்தக் கூற்றுக்கள் உண்மையாகவேண்டும். இதற்காகவேதான் தலைவரின் பொறுமைகாத்தலும்

தமிழரின் அவலங்களும் விடுதலைக்கு விடை சொல்வதாக அமைய வேண்டும். நான்காம் ஈழப்போர்

ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல திருப்பத்தைத் தருமென நம்பி எல்லோரும் ஒன்று சேர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கூற்றுக்கள் உண்மையாகவேண்டும். இதற்காகவேதான் தலைவரின் பொறுமைகாத்தலும்

தமிழரின் அவலங்களும் விடுதலைக்கு விடை சொல்வதாக அமைய வேண்டும். நான்காம் ஈழப்போர்

ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல திருப்பத்தைத் தருமென நம்பி எல்லோரும் ஒன்று சேர்வோம்.

!!!!!! :blink:

வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது.

Edited by mathuka

  • தொடங்கியவர்

சகோதரி மதுகா நீங்களா இப்படி நீங்ளே நம்பிக்கை இழப்பது போல எழுதினால் எப்படி? உங்கள் வானோலி அருமை. ஈழகானங்களை ஒலிபரப்பிக் கொண்டு இப்படி அதைரியப் பட்ட எழுதுவது நியாயமா?

ஈழத்திலிருந்த

ஜானா

உண்மையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தற்போது கொஞ்சம் மனம் தளர்ந்து விட்டார்கள் என்பது உண்மை. இதற்கு வேண்டுமென்று விசமிகளினால் பரப்பப்படும் வதந்திகளே முக்கியமான காரணிகளாகும்.

இதை விட பல ஆய்வாளர்கள் மாசி22 அன்று ஏதோ பெரிய சண்டை ஏற்பட்டு வெற்றிகள் கிடைக்கப்போவதாய் மாயைகள் காட்டியதும் ஒரு காரணமாகும்.

எனவே இவ்வாறு வதந்திகள் பரப்பும் விசமிகள் பற்றி நாம் விழிப்பாக இருப்பதோடு மற்றையவர்களையும் விழிப்படையச் செய்வோமாக!

:ph34r: :ph34r: :ph34r: :ph34r: :ph34r:

வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது.

யார் தான் நம்பினார்கள்? நடந்தது என்ன? நந்தர்களின் சரித்திரம் முடிந்தது அதுதான் வரலாறு.

நந்தர்கள் விருந்துக்கு அழைத்து அமமான படுத்தி துரத்தியபோது நந்த வம்சத்தை அழிக்காமல் அவிழ்ந்த கூந்தலை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் சபதம் செய்தபோது யார் தான் நம்பியிருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? ஆடு மேய்பவனால் வளர்க்கபட்ட சிறுவனான சந்திர குப்தனை பயிற்று வித்து நந்தர்களுடன் போரிட்டு மவுரிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்தவில்லையா?

இத்தனைக்கும் சணக்கியனும் சந்திரகுப்தனும் நந்தர்களிடன் போரிட்ட முதல் போரில் தோர்தோடி, தோல்வியில்யிருந்தும் பாடம் கற்று பாடலிபுத்திரத்தை கைபற்றி நந்தர்களின் சாம்ராஜ்யத்தை அழித்து மவுரிய சம்ராஜ்யத்தை ஏற்படுதினார்கள் அது தான் வரலாறு.

அந்த சாணக்கியனின் அர்த்த சாத்திரம் சொல்வது என்ன.

1) அழிக்கபடாமல் துரத்தியடிக்கப்படும் படை ஆபத்தானது.

2) இராணுவதின் அதிகாரிகள் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

3) இராணுவ அதிகாரிகள் உரிய முறையில் கவுரவ படுத்தபட்டிருக்க வேண்டும்.

4) எதிரிகள் போரிடும் முன் அழைகழிக்கப்பட வேண்டும்.

5) தகுந்த சந்தர்ப்பமும், இடமும் வாய்க்கும் வரையில் போரில் ஈடுபடக்கூடாது.

6) பலமான படையை எதிரி மீது பயன்படுத்தும் முன், பலமில்லாத படையை கொண்டு எதிரியை பிளந்து

பின் எதிரியை பலமான படையை கொண்டு தாக்க வேண்டும்.

7) எதிரிஎதிர்பார்த இடத்திலும், காலத்திலும் போரிடுவதை தவிர்த்துஎதிர்பாராத இடத்தில்

தாக்கியளிக்க வேண்டும்.

இப்ப நம்ம விசயத்திற்க்கு வருவோம்.

குழரி, குழரி அழும் சிருவர்களை முன்னரங்கிற்க்கு வலுகட்டாயமாக இழுத்து செல்லுதல், விலகி ஓடியவர்களை திரும்ம அழைத்து போரில் ஈடுபடுத்துவது என்று ஒருபக்கமும். இன்னொறு பக்கத்தில் நிதானத்துடன் எதிரியை அழைகழித்து, தம் படைகளை அழிக்கபடாமல் பின்னுக்க்கு எடுத்து தகுந்த சமயத்திருக்காக காத்திருக்கும் உணர்வும், விசுவாசமும் உள்ள படை ஒரு பக்கமும் நின்று போரிடும் போது வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடைபெருகிறேன்.

நன்றி.

Edited by PSIVARAJAKSM

சிவராஜா அவர்களே நீங்கள் கூறியது 100% உண்மை.

நன்றி.

யார் தான் நம்பினார்கள்? நடந்தது என்ன? நந்தர்களின் சரித்திரம் முடிந்தது அதுதான் வரலாறு.

நந்தர்கள் விருந்துக்கு அழைத்து அமமான படுத்தி துரத்தியபோது நந்த வம்சத்தை அழிக்காமல் அவிழ்ந்த கூந்தலை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் சபதம் செய்தபோது யார் தான் நம்பியிருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? ஆடு மேய்பவனால் வளர்க்கபட்ட சிறுவனான சந்திர குப்தனை பயிற்று வித்து நந்தர்களுடன் போரிட்டு மவுரிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்தவில்லையா?

இத்தனைக்கும் சணக்கியனும் சந்திரகுப்தனும் நந்தர்களிடன் போரிட்ட முதல் போரில் தோர்தோடி, தோல்வியில்யிருந்தும் பாடம் கற்று பாடலிபுத்திரத்தை கைபற்றி நந்தர்களின் சாம்ராஜ்யத்தை அழித்து மவுரிய சம்ராஜ்யத்தை ஏற்படுதினார்கள் அது தான் வரலாறு.

அந்த சாணக்கியனின் அர்த்த சாத்திரம் சொல்வது என்ன.

1) அழிக்கபடாமல் துரத்தியடிக்கப்படும் படை ஆபத்தானது.

2) இராணுவதின் அதிகாரிகள் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

3) இராணுவ அதிகாரிகள் உரிய முறையில் கவுரவ படுத்தபட்டிருக்க வேண்டும்.

4) எதிரிகள் போரிடும் முன் அழைகழிக்கப்பட வேண்டும்.

5) தகுந்த சந்தர்ப்பமும், இடமும் வாய்க்கும் வரையில் போரில் ஈடுபடக்கூடாது.

6) பலமான படையை எதிரி மீது பயன்படுத்தும் முன், பலமில்லாத படையை கொண்டு எதிரியை பிளந்து

பின் எதிரியை பலமான படையை கொண்டு தாக்க வேண்டும்.

7) எதிரிஎதிர்பார்த இடத்திலும், காலத்திலும் போரிடுவதை தவிர்த்துஎதிர்பாராத இடத்தில்

தாக்கியளிக்க வேண்டும்.

இப்ப நம்ம விசயத்திற்க்கு வருவோம்.

குழரி, குழரி அழும் சிருவர்களை முன்னரங்கிற்க்கு வலுகட்டாயமாக இழுத்து செல்லுதல், விலகி ஓடியவர்களை திரும்ம அழைத்து போரில் ஈடுபடுத்துவது என்று ஒருபக்கமும். இன்னொறு பக்கத்தில் நிதானத்துடன் எதிரியை அழைகழித்து, தம் படைகளை அழிக்கபடாமல் பின்னுக்க்கு எடுத்து தகுந்த சமயத்திருக்காக காத்திருக்கும் உணர்வும், விசுவாசமும் உள்ள படை ஒரு பக்கமும் நின்று போரிடும் போது வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடைபெருகிறேன்.

நன்றி.

அருமையான கருத்து :blink:

அட இங்க பழைய வரலாறு வேறு சிவராஜனால் உதாரணமாகக் காட்டப்படுகின்றதா? சாணக்கியன், சாணக்கியன் என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துவிட்டு நான் நம்மட சாணக்கியனுக்கு சிவராஜன் ஞான போதனை ஏதோ நடத்துறாராக்கும் என்று நினைத்தன்!

  • தொடங்கியவர்

சிவராஜா அவர்களே உங்கள் உவமான உவமேயங்கள் உங்கள் கருத்தக்கள் சோர்ந்து போயிருக்கும் எம் உறவுகளுக்கு உற்சாகமளிக்கும். நன்றி. வரலாறுகளை நாம் மறக்கலாகாது. அதிலிருந்து பாடம் கற்பவனே வெல்வான்.

ஈழத்திலிருந்து

ஜானா

....நந்த வம்சத்தை அழிக்காமல் அவிழ்ந்த கூந்தலை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் சபதம் செய்தபோது யார் தான் நம்பியிருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? ஆடு மேய்பவனால் வளர்க்கபட்ட சிறுவனான சந்திர குப்தனை பயிற்று வித்து நந்தர்களுடன் போரிட்டு மவுரிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்தவில்லையா?

இத்தனைக்கும் சணக்கியனும் சந்திரகுப்தனும் நந்தர்களிடன் போரிட்ட முதல் போரில் தோர்தோடி, தோல்வியில்யிருந்தும் பாடம் கற்று பாடலிபுத்திரத்தை கைபற்றி நந்தர்களின் சாம்ராஜ்யத்தை அழித்து மவுரிய சம்ராஜ்யத்தை ஏற்படுதினார்கள் அது தான் வரலாறு.

அந்த சாணக்கியனின் அர்த்த சாத்திரம் சொல்வது என்ன......

சாணக்கியனின் பெருமையை யாழ் களம் அறிய எடுத்துரைத்த சிவராஜாவுக்கு நன்றி!!! :rolleyes:

எனது கூந்தலின் பெருமை, நான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் சில வரிகள் என எனக்கே புல்லரிக்கப் பண்ணிவிட்டீர்கள். :)

அது சரி அந்த அர்த்த சாஸ்திரம் எங்கே கிடைக்கும்?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியனின் பெருமையை யாழ் களம் அறிய எடுத்துரைத்த சிவராஜாவுக்கு நன்றி!!! :rolleyes:

எனது கூந்தலின் பெருமை, நான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் சில வரிகள் என எனக்கே புல்லரிக்கப் பண்ணிவிட்டீர்கள். :)

அது சரி அந்த அர்த்த சாஸ்திரம் எங்கே கிடைக்கும்?

நான் நினைக்கிறேன் கடையில் கிடைக்குமென்று. :):lol::lol: :P :P :P

நான் நினைக்கிறேன் கடையில் கிடைக்குமென்று. :rolleyes::):lol: :P :P :P

வந்திட்டார்யா மகா புத்திசாலி :angry: :angry: :angry:

சாணக்கியனின் பெருமையை யாழ் களம் அறிய எடுத்துரைத்த சிவராஜாவுக்கு நன்றி!!! :rolleyes:

உங்கள் பெருமையை உணராமல், நீங்கள் ஏதோ மாற்றுக்கருத்தாளர் வகையறா என்று நினைத்துவிட்டேன். மன்னியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.