Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு வேறு உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது; எந்தெந்த பொருட்கள் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி  வாழ்கிறார்கள்.
 
1509016186-7833.jpg
 
 
 
இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில்  உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. 
 
எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான  நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.
 
பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில்  தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.
 
திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.
 
நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால்  அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.
 
தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள்  உண்டாகக் கூடும்.
 
முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
 
எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
 
மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை  உண்டாக்கிவிடும்.
 
இறைச்சி மற்றும் விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்லாது வயிறு  சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.

http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/do-not-eat-two-different-food-items-together-what-items-do-you-know-117102600048_1.html

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சியையும், மரவள்ளிக் கிழங்கையும்... இதில் குறிப்பிட மறந்து விட்டார்கள்.
துருக்கியில்.... மீன்  சாப்பிட்ட   அன்று பால் குடிக்கக் கூடாது என்று சொல்வார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இஞ்சியையும், மரவள்ளிக் கிழங்கையும்... இதில் குறிப்பிட மறந்து விட்டார்கள்.
துருக்கியில்.... மீன்  சாப்பிட்ட   அன்று பால் குடிக்கக் கூடாது என்று சொல்வார்களாம்.

 

உண்மைதான் சொந்தமாகவே அனுபவபட்டுள்ளேன் ..
அதற்கு முன்பு யாரும் எனக்கு சொல்லியிருக்கவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நாங்கள் தண்ணிக்கு பதிலாய் பியரோடை குளிசையை மிண்டி விழுங்கிற காலத்திலை இருக்கிறம்......ஊரிலை பிள்ளைத்தாச்சியள் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது எண்டு சொல்லுவினம்......ஆனால் இஞ்சை??????? வெள்ளைச்சுருட்டும் அந்தமாதிரி உள்ளுக்கை இழுத்து விடுவினம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

உண்மைதான் சொந்தமாகவே அனுபவபட்டுள்ளேன் ..
அதற்கு முன்பு யாரும் எனக்கு சொல்லியிருக்கவில்லை 

ஆள் தப்பினதே....ஆச்சரியம் தான்!

நல்ல வேளை....உங்கள் அதிஸ்டம்...மரவள்ளிக் கிழங்கில்...நீலக் கோடுகள் இல்லாமல் இருந்தது!

அப்படியான கிழங்கில் ...சயனையிட் உருவாகும் சாத்தியங்கள் அதிகம்! 'இஞ்சி' ஒரு ஊக்கியாகச் செயல் படும்!

அப்பாடா...எங்களுக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் தெரியும்...எண்டு காட்டியாச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இஞ்சியையும், மரவள்ளிக் கிழங்கையும்... இதில் குறிப்பிட மறந்து விட்டார்கள்.
துருக்கியில்.... மீன்  சாப்பிட்ட   அன்று பால் குடிக்கக் கூடாது என்று சொல்வார்களாம்.

மேலதிக விபரம் தேவை, சிறியர்!

துருக்கியில்...ஆடுகள் தான் அதிகம்...!

அதனால் தான் கேட்டேன்!

0.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

உண்மைதான் சொந்தமாகவே அனுபவபட்டுள்ளேன் ..
அதற்கு முன்பு யாரும் எனக்கு சொல்லியிருக்கவில்லை 

ஊரில்... எல்லா வீடுகளிலும், மரவள்ளிக்கிழங்கு சமைத்த அன்று.... 
இஞ்சியை வேறு ஒரு கறிகளுக்கும்  போடாமல் மிக அவதானமாக இருப்பார்கள்.
மருதங்கேணிக்கு... இந்த விடயம் தெரியாமல்  போனது, ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

மேலதிக விபரம் தேவை, சிறியர்!

துருக்கியில்...ஆடுகள் தான் அதிகம்...!

அதனால் தான் கேட்டேன்!

0.jpg

சரியான காரணம் தெரியாது  புங்கையூரான்.
பல துருக்கியரும் மீன் சாப்பிட் ட அன்று, பால்  குடிக்கக் கூடாது என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்.
அப்படி பால் குடித்தால்,  தொடர்ந்து...  சத்தி வரும் என்பார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உணவில்... இதை சேர்க்கும் போது உஷார்... மரணம் உண்டாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.