Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! 
[Friday 2017-11-10 19:00]
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.   

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார். 'பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது. இந்தநிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

உதாரணமாக மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என பணி ப்பாளர் மேலும் கேட்டுள்ளார்http://seithy.com/breifNews.php?newsID=193593&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நுளம்புக்கு, இரசாயன  மருந்து அடிப்பதை விட....
இயற்கை சம சூழலைப் பேணும், இந்த சிறிய வகை மீன்கள் மூலமே,
பல நோய்களை கட்டுப் படுத்த முடியும்.

வைத்திய கலாநிதி நந்தகுமார்.... அரசாங்கம்  செய்ய முன் வர மாட்டாது, என்று  தெரிந்து,
பொது மக்களின் உதவியை.... மனம் விட்டு கேட்டமை,  பாராட்டுக்குரிய விடயம். 

நேற்று டெங்கு நுளம்பு அழிப்பிற்கு மீன் வளர்ப்பு பற்றி விகடனில் வந்த செய்தி

-----------

’ரூ.50-க்கு ஆயிரம் மீன்கள்’ - டெங்குக் கொசு ஒழிக்கும் கம்பூசியா மீன்களை மானிய விலையில் கொடுக்கும் சேலம் மனிதர்! வீ கே.ரமேஷ்

சேலத்தில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் அதிகமாக இருப்பதால் டெங்குக் காய்ச்சலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஏ.டி.எஸ்., கொசுக்களை உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களை சமூக அக்கறையோடு ஒவ்வொரு மாநகராட்சிகளுக்கும் மிகக் குறைந்த விலையில் கொடுத்துவருகிறார் சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன்.

c1_17317.jpg

 
 

இதுபற்றி ரங்கநாதனிடம் பேசியபோது, 'நாங்க ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை காவிரிக் கரை ஓரமாக சிரகோ மீன் பண்ணை வைத்திருக்கிறோம். சாப்பிடக் கூடிய மீன் வகைகளையும், அலங்கார வகை மீன்களையும் வளர்த்துவருகிறோம். இத்தோடு டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ.டி.எஸ்., கொசுக்களையும், மற்ற வகை கொசுக்களையும் உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களையும் வளர்த்துவருகிறோம். இந்த கம்பூசியா மீன்களை மஸ்கிட்டோ ஃபிஸ் என்றும் அழைப்பர்.

2(2)_17383.jpg

கம்பூசியா மீன்களைத் தனி நபர் கேட்கும்போது ஒரு மீன் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம். அரசுக்கு 1,000 மீன்கள் வெறும் 50 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். சமீபகாலமாக டெங்கு அதிகரித்துள்ளதால் கம்பூசியா மீன்களை அதிக அளவு கேட்கிறார்கள். சேலம் மாநகராட்சிக்கு மட்டும் 70,000-க்கும் மேற்பட்ட மீன்களும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீன்களையும் கொடுத்திருக்கிறோம்.

http://www.vikatan.com/news/tamilnadu/107349-salem-aquarium-gives-gambusia-fish-alies-mosquito-fish-to-government-organisation-in-minimum-price.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து... கஞ்சா, காஞ்சிபுரம்  சீலை போன்றவற்றை....  கடத்துபவர்கள்,
இந்த... கம்பூசியா  மீனையும், கொண்டு வந்தால்,  நல்லது.

50  இந்திய ரூபாய்க்கு  1000  கம்பூசியா மீன்கள், மிக மலிவான சேவை.
மிகுதியாக...  மிஞ்சி இருக்கும், அந்த மக்களை, நோய் நொடி வராமல் காப்பாற்ற முடியும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவிலிருந்து... கஞ்சா, காஞ்சிபுரம்  சீலை போன்றவற்றை....  கடத்துபவர்கள்,
இந்த... கம்பூசியா  மீனையும், கொண்டு வந்தால்,  நல்லது.

50  இந்திய ரூபாய்க்கு  1000  கம்பூசியா மீன்கள், மிக மலிவான சேவை.
மிகுதியாக...  மிஞ்சி இருக்கும், அந்த மக்களை, நோய் நொடி வராமல் காப்பாற்ற முடியும்.

கஞ்சாவை விட்டு காஞ்சிபுரம் சீலை மட்டும் கடத்தினால் அடுத்தநாளே போலிஸ் வீட்டு வாசலில் நிற்குமாம் தமிழனை அழிக்கும் முடமாக்கும் எல்லாத்துக்கும் வெல்கம் சொல்லுதாம் அங்குள்ள போலிஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.