Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

Featured Replies

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

 

 
 

யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

24337439_1009812402503462_1671207298_n.j

யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

24550177_1009812362503466_2033485274_n.j

தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

24550177_1009812362503466_2033485274_n.j

இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளது.

24581196_1009812389170130_1195752757_n.j

 

http://www.virakesari.lk/article/27830

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் ஆட்சியில்தான் நீதி மன்றங்கள் இருந்தன. மக்களாட்சியில் சட்ட மன்றங்கள்தானே உள்ளன.....???? :unsure::rolleyes:

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்களுக்கு இந்துக்கள் மட்டுமா வருவினம்? நீதிமன்றங்கள் மதங்களுக்கு அப்பால்பட்டு செயல்படவேண்டும் என்று குறைந்த பட்ச எண்ணம் கூட இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதவாதி வந்தால்  தனி அலகு கேட்கும்...யாழையே இணைக்க் விடமாட்டோம் என்பர்.....மற்ற மதவாதி வந்தால் ...இவ்விடத்தில் அரசமரம் நின்ற்து....இதில் புத்த கோவில்தான் கட்டமுடியும் என்பர்...

11 minutes ago, நிழலி said:

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்களுக்கு இந்துக்கள் மட்டுமா வருவினம்? நீதிமன்றங்கள் மதங்களுக்கு அப்பால்பட்டு செயல்படவேண்டும் என்று குறைந்த பட்ச எண்ணம் கூட இல்லையா?

 

  • தொடங்கியவர்

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

242 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று(04) காலை நட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசானந்தன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்த அபிமன்னசிங்கம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி இல்லாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படுகிறது.அதில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டது.

கட்டடத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒப்பத்தின் அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை நிறுவனத்தால் (CECB)   கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/foundation-new-building-complex-in-Jaffna-Court

46 minutes ago, நிழலி said:

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்களுக்கு இந்துக்கள் மட்டுமா வருவினம்? நீதிமன்றங்கள் மதங்களுக்கு அப்பால்பட்டு செயல்படவேண்டும் என்று குறைந்த பட்ச எண்ணம் கூட இல்லையா?

 

கடைசி படம் உங்கள் சந்தேகத்தை  தீர்க்கும் என்று நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
இரண்டு வருடங்களில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு
 

image_6b38c86f62.jpgயாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

யாழ்-உயர்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக  சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் இன்று(4) தெரிவித்துள்ளார்.

யாழ் மேல்நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று(4) கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 குறித்த கட்டடத்திற்காக நீதியமைச்சினால் 242 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்-உயர்நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்படாத 107 வழக்குகள் காணப்படுவதாகவும், இதில் 50 வழக்குகள் மிகவும் முக்கியமான வழக்குகள் என்பதால் அதற்கான முக்கியதுவம் சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இரண்டு-வருடங்களில்-50-வழக்குகளுக்கு-தீர்ப்பு/71-208404

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.