Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

Featured Replies

EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

 

uk-pm.jpg
ஐரோப்பிய  ஒன்றியத்தில் இருந்து  பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோ வரையில் வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இது குறித்து , அந்த அமைப்புடன் பிரித்தானியா  பிரிவினை உடன்படிக்கை  ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக பிரித்தானியா இருந்த நிலையில், அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, டேவிட் கமரூன் பிரதமராக இருந்த போது பேச்சுக்கள் எழுந்தன.

இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம்  திகதி  இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில்  சுமார் 52 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியானது.

இதற்காக  முதற் கட்டமாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில்    பிரக்சிற்றின் முதல் நடவடிக்கையாக ஐரோப்பிய  ஒன்றிய  உடன்படிக்கை பிரிவு 50-ஐ கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி பிரித்தானியா பிரகடனம் செய்தது.

இதன்படி 2 ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரித்தானியா வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையை பிரி்தானிய பிரதமர் தெரசா மே ஆரம்பித்தனைத் தொடர்ந்து அயர்லாந்துடனான எல்லை விவகாரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக தெரசா மே, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செனறு அங்கு அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன்  பேச்சுவார்தை நடத்தினார். இதனையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய  ஒன்றியம் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரச்சினையில், அயர்லாந்து எல்லை உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோவை வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய  ஒன்றிய தலைவர் ஜோன் கிளவுட் ஜங்கருடன் பிரசல்ஸ் நகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ‘அயர்லாந்துடனான எல்லையில் கடினமான நிலை (சிக்கல்) இருக்காது என்பதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்தாலும், அங்கு வாழும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொடர்ந்து அங்கு வசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரக்சிற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை எதிர்வரும் 14, 15ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/53999

  • தொடங்கியவர்

18 மாதங்களாக நீடித்த இழுபறிக்கு பிறகு ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரிட்டிஷ் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கூட்டாக அறிவிப்பு

09CHSKOBREXIT

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கரை பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்துப் பேசினார்.   -  படம்: ராய்ட்டர்ஸ்

சுமார் 18 மாதங்களாக நீடித்த இழுபறிக்குப் பிறகு பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கடந்த 2016 ஜூனில் அந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல்வேறு விவகாரங்களால் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் விசா இன்றி எந்த நாட்டுக்கும் சென்று குடியேறலாம். அதன்படி பிரிட்டனில் சுமார் 30 லட்சம் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும், இதர ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சம் பிரிட்டிஷ் குடிமக்களும் வசித்து வருகின்றனர். ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய பிறகு இவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டிஷ் அரசுக்கு இடையே 18 மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் பிரிட்டனின் ஒரு பகுதியான வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான அயர்லாந்து இடையேயான கடல் பகுதியை இரு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு குறிப்பிட்ட கடல் பகுதியை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என்பதால் அதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த ஐனநாயக ஐக்கிய கட்சிக்கும் பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஐனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருவதால் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாட்டை எட்டினர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் சென்றார். அங்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கேயே வாழலாம் என்றும், வடக்கு அயர்லாந்து- அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் கடுமையான எல்லை கோட்பாடுகளை பின்பற்ற மாட்டோம் என்றும் பிரதமர் தெரசா மே உறுதியளித்தார்.

இதன்பின் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பல்வேறு விவகாரங்களில் விட்டுக் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/world/article21378504.ece

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நவீனன் said:

அப்போது, பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கேயே வாழலாம் என்றும், வடக்கு அயர்லாந்து- அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் கடுமையான எல்லை கோட்பாடுகளை பின்பற்ற மாட்டோம் என்றும் பிரதமர் தெரசா மே உறுதியளித்தார்.

கிழவி எண்ணத்தை பூடகமா சொல்றாவோ தெரியலை நடைமுறைக்கு வரும்போதுதான் தெரியும் ஆனாலும் பவுன்ஸ் விலை விழவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

கிழவி எண்ணத்தை பூடகமா சொல்றாவோ தெரியலை நடைமுறைக்கு வரும்போதுதான் தெரியும் ஆனாலும் பவுன்ஸ் விலை விழவில்லை .

நாங்கள் ஐரோப்பிய யூனியனிலை இருந்து விலகின மாதிரி இருப்பம்/நடிப்பம். கூட்டம் கூத்துகளுக்கு வரமாட்டம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

ஐரோப்பிய யூனியனை எதிர்க்க யாரும்(ரொனால்ட் ரம்பை தவிர  not usa ) தயாரில்லை போல் தெரிகின்றது.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.