Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நிமிடக் கதைகள்

Featured Replies

சாமர்த்தியம்

 

 

‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி  கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான்.

பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’

29.jpg

‘‘இல்லடி... இது அவருக்கான அளவு. இந்த அளவுப்படி சமைச்சா சாப்பாட்டை வாயில வைக்க முடியாது!’’ ‘‘அடிப்பாவி... என்னடி சொல்றே..?’’ ‘‘ஆமாடீ... இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்... என்னைத் தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும் கண்டுக்க மாட்டார். வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும். அதான் இப்படிச் சொன்னேன்! இப்போ பாரேன், ஊர்லே இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே இருப்பார்!’’ அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.      

 

 

பிராயச்சித்தம்

 

ஆர்.கே இண்டஸ்ட்ரீஸின் சூப்பர்வைசர் ராஜதுரை ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்! வேலையை முடித்தபிறகுதான் தொழிலாளர்களை சாப்பிடவே அனுமதிப்பார். லஞ்ச் டைம் என்ற கணக்கெல்லாம் அவரிடம் செல்லாது. அவர் சொன்ன வேலையை முடிக்காதவர்கள், மதிய உணவை மறந்துவிட வேண்டியதுதான். பசி நேரத்தில் சாப்பிடக் கூட விடாமல் தங்களைக் கசக்கிப் பிழியும் ராஜதுரையை தொழிலாளர்கள் வசை பாடினார்கள். முதலாளியிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. ஆண்டுகள் நகர்ந்தன. ராஜதுரை பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. ேஹாட்டலொன்று ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றார் ராஜதுரை.ஒரு நாள் ராஜதுரையைப் பார்க்க, அவருடைய பால்ய நண்பர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்தார்.

20.jpg

‘‘என்னப்பா இது! உனக்கு பணத்தாசை இன்னுமா போகல? நல்ல நிலைமையில இருந்துதானே ரிட்டயர் ஆகியிருக்கே? பிள்ளைகளும் நல்லா சம்பாதிக்கிறாங்க. வீட்ல நிம்மதியா ஓய்வெடுக்காம, இந்த ேஹாட்டல் வியாபாரம் உனக்குத் தேவையா?’’ என்றார் நண்பர். ராஜதுரை கனத்த குரலில் பேச ஆரம்பித்தார்...

‘‘தொழிலாளர்களைப் பட்டினி போட்டு நிறைய பாவம் சம்பாதிச்சிட்டேன். அதுக்கு பிராயச்சித்தமாதான் ேஹாட்டல் ஆரம்பிச்சிருக்கேன். குறைஞ்ச விலையில தரமான சாப்பாடு போடறேன். சாப்பிடறவங்க என்னை மனசார வாழ்த்திட்டுப் போறாங்க. என்னுடைய கல்லா நிறையல. ஆனால் மனசு நிறைஞ்சிருக்கு!’’ ‘‘என்னை மன்னிச்சிடுப்பா!’’ என்றார் நண்பர்.                  

 

 

கொட்டாவி

 

என்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத் தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு ேசாட்டா பீம் கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான். குழந்தை ‘உம்... உம்...’ என்று கண்களை விரித்து ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரியவில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக் கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும் கண் அசரவில்லை.

19.jpg

‘‘என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறா! அவங்க அப்படி என்ன கதையைத்தான் சொல்வாங்க?’’ கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில் அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது...

‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து என்ன? அடுத்து என்ன?’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக் குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி வந்துடும். அழுத்திக் கேட்டா, ‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும். நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே சொல்லுப்பா!’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின் கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின் கண்களும்!  

  

 

 

நியாயமா?

 

மாதம் பிறக்கிறதோ இல்லையோ, தவறாமல் அண்ணன் வீட்டில் ஆஜராகி விடுவாள் சுமதி. கண்ணைக் கசக்கி, அழுது புலம்பி, அண்ணனிடம் வேண்டியதை அவள் வாங்கிக்கொண்டு போவதை அண்ணி பூங்கொடி எரிச்சலுடன் பார்ப்பாள். அன்று வீட்டுக்கு வந்த  சுமதியை கோபத்துடன் கேட்டே விட்டாள் பூங்கொடி.

10.jpg

‘‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் இப்படி அடிக்கடி வந்து, அது வேணும் இது வேணும்னு கேட்டு உன் அண்ணனைத் தொந்தரவு பண்றியே, இது உனக்கு தப்பா தெரியலையா சுமதி?’’ சுமதி விரக்தியுடன் சிரித்தாள்.

‘‘அண்ணி! உங்களுக்கு வசதியான ஒரு நல்ல மாப்பிள்ளை அமையணும்னு உங்க அண்ணனும் அண்ணியும் அக்கறையா தேடித் தேடி என் அண்ணனை உங்களுக்குக் கட்டி வச்சாங்க, இல்லையா? அந்த மாதிரி என் அண்ணியான நீங்களும், என் அண்ணனும் அக்கறையா தேடித் தேடி எனக்கு ஒரு நல்ல, வசதியான மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வச்சிருந்தா, நான் ஏன் இங்கே வர்றேன்? வீட்டை விட்டு போனா போதும்னு வசதி இல்லாத இடத்தில்தானே நீங்க என்னைத் தள்ளி விட்டிருக்கீங்க? தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என் மேல  கோபப்படறது நியாயமா அண்ணி?’’ அண்ணி பூங்கொடி வாயடைத்து நின்றாள்.     
 

 

http://kungumam.co.in

  • கருத்துக்கள உறவுகள்

சாமர்த்தியம்

கவிதாவுடன் சேர்ந்து வசந்தியும் பன்றியுடன் சேர்ந்த கன்று மாதிரி.......!

பிராயச்சித்தம்

கண் கெட்டபின் சன் நமஸ்காரம்.......!

கொட்டாவி

அம்மம்மா எல்லாம் சரியான கில்லாடிங்கள் போல, எங்களை வச்சு செஞ்சிருக்கிறாங்கள்.....!

நியாயமா?

வேலில போற ஓணானை பிடிச்சு மடில கட்டினால் உப்படித்தான்.....!  

tw_blush:  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.