Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு!

Featured Replies

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு!

 

 

 
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு!

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் அறிமுகவுரையை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான கி.துரைராசசிங்கம் ஆற்றவுள்ளதுடன், நினைவுப் பேருரையை 'இலங்கைத் தமிழர் அரசியலில் நழுவிய வாய்ப்புக்களும், நடப்பியல் அரசியலும்' எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நிகழ்த்தவுள்ளனர்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/12th-Memorial-of-Joseph-Pararajasingham

  • தொடங்கியவர்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பன்னிரு ஆண்டுகள்!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

josep-002.jpg?resize=750%2C594

இன்றைய நாள் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டு பன்னிரு ஆண்டுகளை கடக்கும் பொழுதுகளாகும். வலிமை வாய்ந்த தமிழ் தேசிய குரலாக கருதப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் ஈழத் தமிழர்களின் மனித உரிமைக்கான குரலாக மதிக்கப்படுகின்றது.
 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஜோசப் பரராஜசிங்கத்தை அன்றைய அரசு பலியெடுத்தது. தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாக, தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, தெற்கிற்கும் உலகிற்கும் கூர்மையாக எடுத்துரைத்த பலர் அழிக்கப்பட்டனர். அப்படியான குரல்களில் ஒன்றே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் குரல்.
 
ஒரு பத்திரிகையாளராக ஜோசப் பரராஜசிங்கம் செயற்பட்டவர். இலங்கை அரசுகளின் கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பு நெருக்கடிகளையும் மட்டகளப்பின் வாழ்வையும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் ஜோசப் வெளிப்படுத்தினார்.  தன்னுடைய மனைவியின் பெயரில், சுகுணம் ஜோசப் என்ற பெயரில் எழுதினார். மட்டக்களப்பில் ஊடக அமைப்பு ஒன்றை உருவாக்க முன் நின்றவர். அத்துடன் அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.
 
அறுபதுகளில் அரசியலுக்குள் நுழைந்த இவர் இருமுறை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த ஜோசப், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் அங்கம் வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
josep-05.jpg?resize=750%2C567
 
2005 மார்கழி 25 அன்று  மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் கிறிஸ்மஸ் திருப்பலிப் பூசையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் வந்த இலங்கை அரசின் துணைப்படையை  சேர்ந்தவர்களால் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் பலி கொள்ளப்பட்டார்.
 
தமிழ் மக்களின் விடுதலைக்காக  அயராது குரல் கொடுத்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் தமிழ் தேசத்தின் உயரிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையுடன் தொடர்புடைய நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மக்கள் பிரதிநிதி ஒருவர், மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்தமைக்காக அநியாயமாக பலிகொள்ளப்பட்டுள்ளார். இந்தக் கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை என்ன செய்வார்கள்? இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் நீதியை வழங்கவா? அல்லது சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கவா என்பதை காலம் நிரூபிக்கும்.
 
மனித வாழ்வின் விடுதலைக்காக யேசுபிரான் பிறந்த நாளில் எமது விடுதலைக்காக குரல் கொடுத்த ஒரு பிரதிநிதி, வழிபாட்டுத் தளமொன்றில் ஆயுததாரிகளால் அழிக்கப்பட்டார் என்பது, இந்த தேசத்தில், ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் எத்தகைய இடம் உண்டு என எடுத்துரைக்கிறது.
josep-03.jpg?resize=750%2C418
 
 

http://globaltamilnews.net/2017/57173/

நினைவஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் பர­ரா­ஜ­சிங்கத்தின் 12 ஆவது நினைவு நிகழ்வு

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில்  நடைபெற்றது.

Batticaloa__-__3_.JPG

இதன்போது,  ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Batticaloa__-__14_.JPG

ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம்  2005 ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்­தன்று மட்­டக்­க­ளப்பு புனித மரியாள் பேரா­ல­யத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது துப்பாக்கிச் சூட்டில்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Batticaloa__-__10_.JPG

 

http://www.virakesari.lk/article/28604

  • தொடங்கியவர்
 
ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தினம்
 
 

ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தினம்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ் காங்கிஸ் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, ஜோசப் பரராஜசிங்கம் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு,ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 2005ஆம் ஆண்டு துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

20171225_115320.jpg

20171225_115450-1.jpg

20171225_115925.jpg

http://newuthayan.com/story/57579.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.