Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமர்சனம்

Featured Replies

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமர்சனம்

 

 
azhagiri


சென்னை: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது.

ஸ்டாலின் உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார். திமுகவினரை விலை போனதாகக் கூறலாமா? என்று கேள்வி எழுப்பினார் அழகிரி.

தினகரன் வெற்றி பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றுள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனின் சின்னம் வாக்குப்பெட்டியில் 33வது எண்ணில் இருக்கும் குக்கர். ஆனால், மக்களுக்கு மிகவும் பரிச்சயமான உதய சூரியன், இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி 33வது இடத்தில் இருக்கும் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இதற்கு காரணம், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

வெறுமனே வேனில் ஏறி பிரசாரத்துக்கு போய்விட்டால் வெற்றி கிடைக்காது. களப்பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பணப்பட்டுவாடா நடக்கும் போதெல்லாம் திருமங்கலம் ஃபார்முலா என்பது வழக்கமாகிவிட்டதே என்ற கேள்விக்கு, பணம் மட்டும் இருந்தால் வேட்பாளர் ஜெயிக்க முடியாது. தோல்வி அடைந்த உடன், பண நாயகம், ஜனநாயகம் தோல்வி என்று கூறுவது வழக்கமாகவிட்டது. தொகுதிக்காக உழைப்பு வேண்டும். திருமங்கலத்தில் திமுக சார்பில் எப்படி களப்பணி செய்தோம் என்று வந்து பார்த்திருந்தால்தான் தெரியும் என்றார் அழகிரி.

திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அழகிரியிடம் கேட்டதற்கு, புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும், துரோகம் செய்தவர்களையும், கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்பு கொடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்போதுதான் திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பதிலளித்தார்.

http://www.dinamani.com/tamilnadu/2017/dec/27/ஸ்டாலின்-செயல்-தலைவராக-இருக்கும்-வரை-திமுக-வெற்றி-பெறாது-முக-அழகிரி-கடும்-விமரிசனம்-2833931.html

  • தொடங்கியவர்
தி.மு.க.,வுக்கு,இனி,வெற்றியே,இல்லை,என,அழகிரி,சாபம் !

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு
எதிரான சலசலப்புகள் அதிகரித்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பின், மவுனம் கலைத்த,
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திடீர் சாபம் விட்டுள்ளார். அழகிரியின் ஆவேச கருத்து, சென்னையில், நாளை நடக்கவுள்ள, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில், சர்ச்சையை கிளப்பும் என, தெரிகிறது.

 

தி.மு.க.,வுக்கு,இனி,வெற்றியே,இல்லை,என,அழகிரி,சாபம் !


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன் வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' கூட பெற முடியாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தோல்விக்கான காரணங்களை அறிய, ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழு, நேற்று முதல் கட்ட விசாரணையை முடித்து உள்ளது.


இந்நிலையில், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டு உள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகனுமான அழகிரி, நேற்று அளித்த பேட்டியில், ''ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறாது...''தொண்டர்கள், பணத்திற்கு விலை போய் விட்டனர் எனக் கூறிய, முன்னாள் அமைச்சர், துரைமுருகனுக்கு, கறுப்புக் கொடி காட்ட வேண்டும்,'' என்றார்.

 

வியூகம் காரணம்:

அழகிரியின் அதிரடி பேட்டி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர்,

பழனிமாணிக்கம் கூறுகையில், ''அழகிரிக்கு, தி.மு.க.,வை பற்றி பேச தகுதி கிடையாது. 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, ஸ்டாலின் அமைத்த வியூகமே காரணம்,'' என்றார். சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறுகையில், ''அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். மன்னிப்பு கேட்டால், அவரை கட்சியில் சேர்ப்பதாக, அவரிடம் யாரும்கூறவில்லை. தன் இருப்பை வெளிக்காட்டவே, அவர் இப்படி பேசுகிறார்,'' என்றார்.


இந்நிலையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு, நாளை, சென்னை அறிவாலயத்தில் பரப்பரப்பாக கூடுகிறது. அதில், இடைத்தேர்தல் தோல்வி, அழகிரியின் எதிர்ப்பு குறித்து, முக்கியமாக விவாதிக்கப் பட உள்ளது. அழகிரி கருத்துக்கு, யாராவது ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில், இக்கூட்டத்தில் புயல் வீசும் வாய்ப்பு உள்ளது.


இது குறித்து, மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:கட்சியின் கொள்கை முடிவு, வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி வியூகம் தொடர்பான விவகாரங்களில், கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களிடம், கருணாநிதி கருத்து கேட்பார். அவர்கள் வாயிலாக, தொண்டர்களின் உணர்வை அறிந்து, பின் முடிவெடுப்பார். அதனால், அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

 

முக்கியத்துவம்



ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.,விலிருந்து வந்த பிரமுகர்கள், சமூக வலைதள குழுவினரின் ஆலோசனைகளுக்கும், அவர் முக்கியத்துவம் தருகிறார். தொண்டர்களுடன் தொடர்புள்ள

 

நிர்வாகிகளின் கருத்துக்களையும், ஸ்டாலின் கேட்க வேண்டும்.மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள், பொதுக்குழு போன்ற கூட்டங்களில், சுதந்திரமாக கருத்துக்களை எடுத்து வைப்பர்.


அவற்றை உள்வாங்கிக் கொண்டு, கருணாநிதி செயல்படுவார். அதேபோல், ஸ்டாலினும், மூத்த நிர்வாகிகளை பேச அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

'ஸ்டாலினால் தண்டால் தான் எடுக்க முடியும்!'



''கட்சியைப் பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று, ஸ்டாலின் தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார்,'' என, அழகிரி கிண்டலடித்தார்.'டிவி' சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி:கட்சியின் நலனுக்காக, நான் கேள்விகள் கேட்டேன். அதனால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நியாயத்திற்கு, அங்கு மரியாதை இல்லை. ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறாது; மாற்றம் தேவை. வேனில் செல்லாமல், கருணாநிதியை போல, வீதியில் இறங்கி களப் பணியாற்ற வேண்டும்.


எந்த கட்சியும், தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை. வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், தி.மு.க.,வில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல், தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு, களப்பணி செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்தும், தே.மு.தி.க.,விலிருந்தும் விலகி வந்தவர்களை வைத்து, எப்படி கட்சியை வழி நடத்த முடியும்? கட்சியைப் பலப்படுத்துவதாக கூறி விட்டு, ஸ்டாலின், 'ஜிம்'முக்கு சென்று, தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார். இதைத் தான் அவரால் செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1927494

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மண்டையைப் போடும்போது ஸ்ராலினுடன் எத்தனை பேர் இருப்பார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

கருணாநிதி மண்டையைப் போடும்போது ஸ்ராலினுடன் எத்தனை பேர் இருப்பார்களோ தெரியாது.

கருணாநிதி இப்போது மண்டையைப் போடக்கூடாது. அவரது கட்சி உடைந்து, குடும்பம் குலைந்து, உறவுகளும் வெறுத்து உலகத்தில் எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாத துன்பமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துப் போதுமடா சாமி என்று மனம்வருந்தி மண்டையைப் போடவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.