Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டீ.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

Featured Replies

ஈ.பி.டீ.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

ஈ.பி.டீ.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

 

 
 
வடகிழக்கில் 40 சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடவுள்ளதுடன், 36 வீதம் பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) வெளியிடப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தினை வெளியிட்டு வைத்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 3 விடயங்களைப் பிரதானமாக முன்வைத்து தமது தேர்தல் விஞ்ஞாபத்தினை மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் மாற்றுத் தலைமையுடன் பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்கில் 40 சபைகளில் போட்டியிடுவதுடன், 36 வீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி, அரசியலுரிமை அனைத்திற்குமான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இணைந்த வடகிழக்கு நமது தாயகம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் அந்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

கிராம அபிவிருத்திச் சங்கங்களை மேலும் மேம்படுத்தி, சுய தொழில்வாய்ப்புகளுக்கு உதவுதல், ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொழில்வாய்ப்புகளிலும் பங்கெடுக்க வழி செய்தல். விளையாட்டுக் கழகங்களை வலுப்படுத்தியும், உடற்பயிற்சி நடைபாதைகளை அமைத்தும் உடல், உள ஆரோக்கியம் பேணல்! ஊழலற்ற உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களை விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுத்தல், உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்த, விசேட திட்டங்களை உருவாக்குதல்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுசுட்டான், மடு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று (வாழைச்சேனை) ஆகிய புதிய பிரதேச சபைகளை உருவாக்குதல். மானிப்பாய், சங்கானை, நெல்லியடி, சுண்ணாகம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா பிரதேச சபைகளை நகர சபைகளாகவும், வவுனியா, திருகோணமலை நகர சபைகளை மகா நகர சபைகளாகவும் தரமுயர்த்தல்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களுக்கு புதிய நகர சபைகளை உருவாக்குதல்! இத்தகைய ஏற்பாடுகளின் மூலமாகவும், தற்போது நிலவும் வேலைவாய்ப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, வழங்குதல்! உள்ளுர் விவசாய செய்கையினை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தல், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதிக்க ஏற்பாடுகள் செய்தல்! விவசாய உள்ளீடுகள் அனைத்தும் இலகுவாகக் கிடைக்க வழி செய்தல், அரச மானியங்களை, நிவாரணங்களை உடன் பெற்றுக் கொடுத்தல்.

நெடுந்தீவின் எமது வரலாற்று அடையாளமான குதிரைகளைப் பாதுகாத்து, பராமரித்தல். உள்ளுர் தரைவழி மற்றும் கடல் வழி படகுப் போக்குவரத்துச் சேவைகளை அதிகரித்து, தரமுயர்த்தி, உறுதி செய்தல்! சுற்றுலாத்துறையை விரிவாக்கி, தரமுயர்த்தி, எமது மக்களது பொருளாதாரத்தை அதிகரித்தல். சட்டவிரோத காடழிப்புகளைத் தடுத்து, மரங்களை நட்டு, பராமரித்து, சூழல் மாசுறுவதைத் தடுத்தல்! காட்டுவிலங்குகளில் இருந்து பாதுகாப்பையும், காட்டுவிலங்குகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல்.

சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுத்து, நியாயமான மணல் விநியோகத்தை சீரமைத்து, கட்டுமானத் தொழிலுக்கான தடைகளை அகற்றல்! விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து, போதையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல், மாணவர்களின் பாடசாலை இடை விலகல்களை தடுத்தல், முன்பள்ளிகளை வலுப்படுத்தி, முன்னோடி சமூகத்தை உருவாக்குதல், ஆசியர் ஊதியத்தை அதிகரித்தல், மாணவர்களுக்கு போசாக்கு உணவளித்தல், சேமிப்புத் திட்டமொன்றை உருவாக்கல்.

செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீள செயற்படுத்துதல், வளங்களைப் பயன்படுத்தி, தொழிற்துறை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குதல். கிராமியப் பெண்களை வலுப்படுத்த, கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குதல். மாதர் சங்கங்களை வலுப்படுத்தி, இலகு கடன் முறைமைகளை அறிமுகப்படுத்தி, மாதர் சங்கங்கள் ஊடாக செயற்படுத்தல். நுண்கடன் தொல்லைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் மேலும் பல்வேறு கடன் மற்றும் நிதித் திட்டங்களை சமூக அமைப்புகளின் ஊடாக செயற்படுத்தல், குடும்பத் தலைமைகளை ஏற்றுள்ள பெண்களின் வறுமை போக்க வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சமூகப் பாதுகாப்பு, வழிகாட்டல்களை வழங்குதல்.

முன்னாள் இயக்கப் போராளிகளுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்துதல்! பனை சார் தொழிலுக்கான வரிகளை நீக்கி, நவீன தொழிற்துறையாக மாற்றி, ´ப்ளாஸ்ரிக்" - ´பொலித்தீன்" உற்பத்திகளுக்கான மாற்றுத் தொழில் முயற்சிகளை உருவாக்குதல்! கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுதல்.

வடக்கில் வாழும் மலையக மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள். எல்லைதாண்டும், அத்துமீறும் கடற்றொழில்களுக்கு முடிவுகட்டுதல். அத்துமீறிய குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தல். சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகள் பட்டியலை மீளப் பரிசீலித்து, தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துதல்! யுத்தம் காரணமாக மாற்றுத் திறனாளிகளானவர்களுக்கு விஷேட திட்டங்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கு இலகு சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள். கிராமங்கள் தோறும் ´குறை தீர்க்கும் குழுக்கள் அமைத்து, மக்கள் குறைகளறிந்து, அவற்றைத் தீர்த்தல்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக, பரிகாரங்கள் காணப்படுவதற்காக, எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவிப்பதற்காக, முகாம்களிலுள்ள எமது மக்களை விரைந்து மீள்குடியேற்றம் செய்வதற்காக, யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற பொது நினைவுதூபி அமைத்திட, அதற்கென ஒரு தினத்தை ஒதுக்குதல் இந்தியாவுடனும், தமிழகத்திடமும் உறவுகளை தொடர்ந்து பேணி எமது மக்களுக்கான உதவிகளையும், மலிவான விலையில் தரமான பொருட்களையும் நேரடியாக வடக்கிற்கு இறக்குமதி செய்வதற்காக, வன்முறையற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளுக்காகவும் செயற்படுத்த முனைதல் உள்ளிட்ட பல ம்சங்களை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98751

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்காகான தேர்தல் விஞ்ஞாபனம் போலல்லவா உள்ளது. மறந்துவிட்டாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் மத்திய அரசில் அமைச்சராக இருந்து கிழித்தது போக மீதியை உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்று கிழிக்க எண்ணுகிறார்.

  • தொடங்கியவர்

தமிழ்க்கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளது

 

 
 

தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்தாலும் தேர்தல் களில் தமது வழி தனி வழி என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர பல தலைவர்கள் செயற்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரும் இதய சுத்தியோடு செயற்பட்டிருக்கவில்லை. அதனால் தான் இன்னமும் தமிழ் மக்கள் ஒன்றையும் பெற முடியவில்லை. சேர். பொன். இராமநாதன் முதல் தந்தை செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜி பொன்னம்பலம் வரை அவ்வாறான தலைவர்களே எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

fssfss.jpg

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஈ.பி.டி.பியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்கும் , பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாம் ஆரம்ப காலம் தொடக்கமே எமது கொள்கையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கிற்குள் தீர்வு என்பதையே கூறிவருகின்றோம். நாம் எமது கொள்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயற்பட்டாலும், உள்ளூர் தேர்தல்களில் நாம் இணைந்து செயற்படுகின்ற தேசிய கட்சியின் கொள்கைகள் தாக்கம் செலுத்துவதில்லை. எமது கட்சிக்கென தனியான தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைந்து மக்கள் முன்பு அதனை கொண்டு சென்று அந்த விஞ்ஞாபனத்திற்கே வாக்களிக்குமாறு கோருகின்றோம். அவ்வாறு நாம் வெற்றி பெறுகின்ற போதும் அம்மக்கள் எதனை எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அதனை செய்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு தான் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலிலுக்காகவும் எமது கட்சி ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அதில் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள், மற்றும் அரசியல் தீர்வு, நீண்டகால அரசியல் பிரச்சனைகள் என்பவற்றை எவ்வாறு எமது கட்சி அணுகிக் கொண்டுள்ளது அல்லது அவை தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன என்பவற்றை தெளிவாக கூறியுள்ளோம்.

நாம் இம்முறை வடகிழக்கில் உள்ள 40 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றோம். இந்த தேர்தலுக்காக எமது கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களில் 36 வீதமான இடம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் 50 வீதமாக உயர்த்தப்படும். எமது கட்சியின் கொள்கைகளை சிலர் கடந்த காலங்களில் விமர்சித்து வந்திருந்தனர்.

ஆனால் பல நாட் கள்வர் ஒருநாள் பிடிபடுவான் என்பது போல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளது. கூட்டமைப்பினர் மக்களுடைய நலன்கள் பற்றி சிந்திக்காமல் தங்களுடைய பதவிகளை எவ்வாறு தக்க வைப்பது என்பது பற்றியே செயற்பாட்டுக் கொண்டுள்ளனர். நாம் உள்ளூராட்சி தேர்தலில் சபைகளை கைப்பற்றினால், நாம் ஆட்சி அமைக்கும் சபைகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை விசாரணைக்குட்படுத்துவோம்.

இது தவிர எம்மால் நியமிக்கப்பட்டுள்ள வட்டார குழுக்கள் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசோடு இணைந்து செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வை காணவில்லை. குறிப்பாக அண்மையில் மக்கள் நடமாட்டம் கொண்ட இடத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போ, வடக்கு மாகாண சபையின் தலைமையோ நடவடிக்கை சரியான முறையில் ஒன்றும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவரின் உடல் தகனம் செய்வதற்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் குறித்த தகனம் எமது மக்களுடைய மனங்களை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நிரந்த தீர்வை பெற்று தர பல தலைவர்கள் செயற்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருவரும் இதய சுத்தியோடு செயற்பட்டிருக்கவில்லை. அதனால் தான் இன்னமும் தமிழ் மக்கள் ஒன்றையும் பெற முடியவில்லை. சேர் பொன் இராமநாதன் முதல் தந்தை செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜி பொன்னம்பலம் வரை அனைவரது முயற்சிகளும் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன.

எனக்கு ஆயுத போட்டத்திலும், ஜனநாயக நீரோட்டத்திலும் நீண்டகால அனுபவம் உண்டு. அதன் அடிப்படையில் தான் நான் இவற்றை கூறுகின்றேன். இந்த தலைவர்களது கோசங்கள் தேர்தல் கோசங்காளாக இருந்தவையே மாத்திரமன்றி, மக்களுக்கானதாக இருந்திருக்கவில்லை. தங்களுடைய கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

இன்றைய அரசியல் தலைமைகள் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக இல்லை அதனால் தான் ஆட்சி மாறிய பின்னரும் கூட மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியவில்லை. எனினும் எமக்குள் அரசியல் ரீதியாக பல பிளவுகள் இருந்தாலும் மக்களுடைய பொதுப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

இறுதியாக ஒரு சிலருடைய கொலைகள் நாங்கள் செய்தோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள விசாரணைகள் அந்த கொலைகளை யார் புரிந்தனர் என்று வெளிக்காட்டி கொண்டுள்ளன. இதே போல் ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் செயற்பாட்டளர்களுடைய கொலைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட்ட வேண்டும்.

குறிப்பாக இவ்விசாரனைகள் கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற காணமல் போனமை கொலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றார்.

http://www.virakesari.lk/article/28680

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.