Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களை விடுத்து நியா­ய­மான தீர்­வுக்கு ஒத்­து­ழைக்­க­வேண்டும்

Featured Replies

விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களை விடுத்து நியா­ய­மான தீர்­வுக்கு ஒத்­து­ழைக்­க­வேண்டும்

 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலும் தற்­போ­தைய அர­சியல் நெருக்­கடி நிலை குறித்தும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனின் வகி­பாகம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்­களும் கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஒரு­வி­த­மான விமர்­ச­னங்­களை முன்­வைக்­கையில் வடக்கு, கிழக்­கைச் ­சேர்ந்த தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மற்­றொரு கோணத்தில் அவர்­மீ­தான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் விட்­டுக்­கொ­டுப்பு போக்­குடன் தனது வகி­பா­கத்தை மேற்­கொண்டு வரு­கின்றார். கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக இடம்­பெற்ற கொடூர யுத்­தத்தில் தமிழ் மக்கள் பேரி­ழப்­புக்­களை சந்­தித்­தி­ருந்­தனர். இந்த இழப்­புக்­க­ளுக்கு ஏற்­ற­ வகையில் அவர்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் வகை யில் அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

இவ்­வா­றான தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்­வுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றாரா என்ற கேள்வி சிங்­கள மற்றும் தமிழ் தலை­வர்­க­ளினால் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் மந்­த­க­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு அர­சியல் தீர்வு தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. அதி­கா­ரத்தை பகிரும் யோச­னை­களை உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்டு அது­கு­றித்து விவா­தமும் இடம்­பெற்றது.

இந்த இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள அர­சியல் தீர்வு தொடர்­பி­லான யோச­னைகள் தொடர்பில் தற்­போது சர்ச்சை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த யோச­னை­களில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய விட­யங்கள் இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் உட்­பட பல தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­களின் சுயாட்­சியை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான சமஷ்டி தீர்வை உள்­ள­டக்­கிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வலி­யு­றுத்தல் தமிழ் தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. ஆனாலும் தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி குறித்து குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் இடைக்­கால அறிக்­கையில் சமஷ்­டியை ஒத்த அதி­காரப் பகிர்­வுக்­கான விட­யங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் உட்­பட கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் எடுத்­துக்­கூறி வரு­கின்­றனர்.

கடந்­த­வாரம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் இந்த விடயம் குறித்து எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார். சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் இறை­மையின் இலக்­க­ணத்­திற்கு அமைய அர­சியல் தீர்வு வரு­மாக இருந்தால் அதுதான் சமஷ்­டிக்­கான அடிப்­ப­டை­யாகும். இதுதான் சமஷ்டி ஆட்சி முறை­யுள்ள நாடு­களில் காணப்­படும் பண்­பாகும். எந்­த­வொரு தரு­ணத்­திலும் வரும் சந்­தர்ப்­பங்­களை நாம் தவ­ற­வி­டக்­கூ­டாது என்று சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

நாம் வர­லாற்றில் பல சந்­தர்ப்­பங்­களை இழந்­தி­ருக்­கின்றோம். அந்­த­நிலை தொடர்ந்தும் இடம்­பெ­றக்­கூ­டாது. சந்­தர்ப்­பங்­களை உணர்ந்து சாணக்­கி­யத்­துடன் கையா­ள­வேண்டும். இதனை தந்தை செல்வா அடிக்­கடி என்­னிடம் கூறுவார். தற்­பொ­ழுது நாட்டில் சில அர­சியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி புதிய அர­சியல் சாச­னத்தின் ஊடாக தீர்­வு­காண முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். நீண்­ட­கா­ல­மாக தமிழ்­மக்கள் சம உரி­மை­யு­டனும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் இறை­மையின் அடிப்­ப­டையில் உள்­ளக, வெளி­யக சுய­நிர்­ணய உரி­மையைப் பெற்று நாளாந்த கரு­மங்­களை தாங்­களே ஆற்­றக்­கூ­டிய வகையில் அதி­கா­ரத்தை நாடு சுதந்­திரம் பெற்ற காலத்­தி­லி­ருந்து கோரி­ வந்­தி­ருக்­கின்­றனர். தந்தை செல்வா தலை­மையில் இதற்­காக போரா­டினோம் என்றும் சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்­தியா, கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பெல்­ஜியம் போன்ற நாடு­களில் இருப்­பதைப் போன்று எமக்கும் ஒரு­மித்த நாட்­டுக்குள் நாடு பிள­வு­ப­டாமல் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அது எமது இறை­மையின் அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சுகா­தாரம், கல்வி, விவ­சாயம் எனும் எமது உள்­ளார்ந்த செயல்­மு­றை­களை எமது மாவட்­டங்­களில் நாம் தெரி­வு­செய்யும் பிர­தி­நி­திகள் ஊடாக எங்­களால் உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­சபை, பிராந்­திய சபை ஊடாக அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி எங்கள் தமிழ் மக்கள் அமை­தி­யா­கவும் கௌர­வத்­து­டனும் தமது சுய­ம­ரி­யா­தையை பாது­காத்து வாழ­வேண்டும் என்­ப­தற்­காக எம்மால் கடும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தேச சமூகம் எங்கள் நிலைப்­பாட்டின் நியா­யங்­களை உணர்ந்­துள்­ளது. அதன் அங்­கீ­கா­ரமும் ஒத்­து­ழைப்பும் எமக்­கி­ருக்­கி­றது. ஆதலால் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் இந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்­டு ­விடக்­கூ­டாது என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தன­து­ரை­யின்­போது நீண்ட விளக்­கத்தை அளித்­துள்ளார்.

உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி அமைத்து மூன்று வரு­டங்கள் ஆகப்­போ­கின்­றது. இந்தக் கால எல்­லைக்குள் அர­சியல் தீர்வு என்­பது காணப்­பட்­டி­ருக்­க­வேண்டும். ஆனால், அந்த விட­யத்­திலும் இழுத்­த­டிப்­புக்­களும் கால­தா­ம­தங்­களும் நீடித்து வரு­கின்­றன. தற்­போது கூட அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் இறுதி அறிக்கை எப்­போது சமர்ப்­பிக்­கப்­படும் என்ற வினா­விற்கு விடை தேட முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண தம்­மா­லான முயற்­சி­யினை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மேற்­கொண்டு வரு­கின்றார். ஆனால், அர­சாங்கத் தரப்பில் அதற்­கான ஒத்­து­ழைப்பு போது­மா­ன­தாக இல்லை. இவ்­வா­றான நிலையில் அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மாயின் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் அணி­யி­லேயே இருக்­க­வேண்டும். இதனை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் உணர்ந்து கொள்வார் என்று நம்­பு­கின்றோம் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­மு­கரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தெற்கில் மிகவும் நவீன கருத்­துக்­களைக் கொண்ட கட்­சி­யாக தன்னை அடை­யாளம் காட்­டி­வ­ரு­கின்­றது. இது­ தொ­டர்பில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். ஆனால் தெற்கில் இவ்­வாறு மித­வாத கட்­சி­யாக தன்னை அடை­யாளம் காட்டும் கூட்­ட­மைப்பு வடக்கில் இன­வாத ரீதியில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. தெற்கில் தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சி­யினர் என்ன செய்­கின்­ற­னரோ, அத­னையே வடக்கில் கூட்­ட­மைப்­பினர் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே, இத்­த­கைய நிலையை மாற்றி ஜனா­தி­ப­தியின் அணியில் கூட்­ட­மைப்­பினர் இடம்­பெ­ற­வேண்டும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அமைச்­சரின் இந்­தக்­கூற்­றா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உரிய வகையில் ஒத்­து­ழைக்­க­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. ஆனால், அர­சியல் தீர்­வுக்­காக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் வடக்கு, கிழக்கில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை பெறுவதற்கு கூட்டமைப்பின் தலைமை முயலவில்லை என்றும் அரைகுறை தீர்வைத் திணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மீது நேரடியான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, இதனை உணர்ந்தாவது தென்பகுதி அரசியல் தலைமை கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை விமர்சிப்பதையோ, குற்றம் சாட்டுவதையோ நிறுத்தி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.v

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-22#page-4

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

னப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் விட்­டுக்­கொ­டுப்பு போக்­குடன் தனது வகி­பா­கத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்

சப்பா ...............................தாங்க முடியலை .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

சப்பா ...............................தாங்க முடியலை .

தாறதை வாங்கிக்கொள்வதற்கு

இவ்வளளளளளளளவுவுவுவுவுவுவுவுவுவுவுவுவு

தேவையா???

அது தானே  உங்க  குளப்பம்

எனக்கும் தான்

ஏன்  மக்களுக்கும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் விட்­டுக்­கொ­டுப்பு போக்­குடன் தனது வகி­பா­கத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.

இது எப்ப தொடக்கம் நடக்குது?????  சொல்லவேயில்லை!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.