Jump to content

வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா?


Recommended Posts

வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா?
 
 

பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம்.

அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். 

தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 

அத்துடன், தமது பலம் மற்றும் பலவீனம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மேலும், புதிதாக அரசியல் மேடைக்கு வரும் இளம் அரசியல்வாதிகளுக்கு பிள்ளையார் சுழிபோடும் களமாகவும் இது அமைகின்றது. 

இனி விடயத்துக்கு வருவோம். இதனை, வடக்கு, கிழக்கு அரசியல் நிலைவரம் அதற்கு வெளியே உள்ள அரசியல் நிலைவரம் என இரண்டு வகுதிகளாகப் பார்க்கலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது ஆளுகைக்குள் வரும் சபைகளில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சில சபைகளைத் தவிர அனைத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இருந்தாலும், அவர்களால் அங்கு தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகள் அரிதாகவே உள்ளது. அதாவது, அறுதிப் பெரும்பான்மையை அவர்களால் அனைத்துச் சபைகளிலும் ஈட்ட முடியவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றுள்ளனர். 

அதேபோலவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ள இடங்களிலும், அவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையே நிலவுகின்றது.

இதனை வெறுமனே, கூட்டமைப்பு வெற்றி பெற்றதாக ஒரே வரியில் கூறிவிட முடியாது. 
ஏனெனில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆறு ஆசனங்களையும் (2779 வாக்குகள்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களையும் (2481 வாக்குகள்) பெற்றுள்ள அதேவேளை, பருத்தித்துறை நகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் கூட்டமைப்பு முறையே ஆறு மற்றும் ஐந்து ஆசனங்களையும் (2199, 1880) வாக்குகளையும் பெற்றுள்ளது. 

யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக பதினாறு (16) ஆசனங்களையும் 14,424 வாக்குகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதின்மூன்று (13) ஆசனங்களையும் 12,020 வாக்குகளையும் பெற்று, சமன் செய்யும் நிலையை நெருங்கி உள்ளனர். 

ஏனைய பகுதிகளிலும் கனிசமான ஆசனங்களைக் கைப்பற்றி சிறப்பான அரசியல் அறுவடையை செய்துமுடித்து உள்ளனர்.

தமிழ்த் தேசிய முன்னணியினரின் கடந்தகால தேர்தல் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில், அவர்களின் வளர்ச்சிப் போக்கு முன்னேற்றகரமானதாக உள்ளது. 

மறுவளமாக, கூட்டமைப்பு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒருவித சந்தேக உணர்வே அவர்களைத் தமிழ் தேசிய முன்னணி நோக்கிய நகர்வுக்கு வழி வகுத்தது எனலாம். 

கூட்டமைப்பின் தோற்றத்துக்குப் பின்னர், அதன் வீட்டுச் சின்னத்துக்கு தொடர்ச்சியாக வாக்களித்தவர்களில் கனிசமானோர், இம்முறை சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர். 
உதாரணமாக, இறுதி நேரத்தில் சாவகச்சேரி பிரதேசத்துக்கான வேட்பு மனுத்தாக்கல் விடயத்தில் நடைபெற்ற விடயங்கள், மக்களை முகம் சுழிக்க வைத்தது. 

வீட்டுச்சின்னத்தில் தும்புத்தடியை நிறுத்தினாலும் எம்மக்கள் வாக்களிப்பர் என்ற கூட்டமைப்பினரின் கருத்துக் கூட, சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது எனலாம். ஆகவே, இவ்வாறாகக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் கண்ட சிறிய வெறுப்பே, தமிழ்த் தேசிய முன்னணியின் பால் விருப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், நடந்து முடிந்த தேர்தலில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் வேட்பாளர்களை நிறுத்துகையில் கூட்டமைப்பின் பிரதேசப் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களது தனிப்பட்ட திறமை, மக்களோடு அவர்கள் கொண்டுள்ள உறவு, தமிழ்த் தேசியப்பற்று ஆகியவற்றைக் கருதாமல் குறித்த வட்டாரத்தின் உள்ளேயும் வெளியிலும் தங்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்பவர்களைப் போட்டியிட நிறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும், மக்களிடம் குடிகொண்டுள்ளது. 

அத்துடன், கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடு, தமிழ் மக்களுக்கு முற்றிலும் முரண்பாடான அம்சமாக அமைந்தது. தங்களது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என, நன்கு அறிமுகவானவர்களைப் புறமொதுக்கி, தேசியப்பற்று காரணமாக கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய முன்னணிக்கும் வாக்களித்த மக்கள் நிறையவே உள்ளனர். 

அடுத்து, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் சிறப்பாக சித்தியடைந்துள்ளது எனக் கூறலாம். தீவகத்தில் இரண்டு சபைகளில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளது. அத்துடன், வடக்கில் பரவலாகப் பல இடங்களிலும் ஆசனங்களைப் பெற்றுள்ளது. தற்போதைய முடிவுகளின் பிரகாரம், வடக்கு, கிழக்கில் தமிழர்களது சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய வலுவுடன், கூட்டமைப்பு இல்லை. ஆகவே, கூட்டாட்சிக்கு ஒன்றுகூட வேண்டிய நிலை, கூடி வந்துள்ளது. 

அதனைக் கரம் பிடித்து, அதனுடாக தமிழ் மக்களுக்கு கரம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் தமிழ்க் கட்சிகள் உள்ளன. இன்னும் வீணான விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் பேசும் தருணம் அல்ல. தம் மக்களது அரசியல் விடிவுக்காக ஒன்றுகூடும் தருணம் என இனியாவது தமிழ்க் கட்சிகள் உண்மையாக உணர வேண்டும். இதுவே தமிழ் மக்களதும் அவா.

மேலும், நடப்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம் காணும் நிலை அண்மித்து விட்டது. அசுர பலத்துடன் மீண்டும் மஹிந்த புதிதாக புதுத்தெம்புடன் களமிறங்கி விட்டார். அதிரடியான முற்றிலும் எதிர்பார்க்காத விடயங்களை நாடு காண (நேர்ந்துள்ளது) உள்ளது. மீண்டும் மஹிந்த உள்ளூர் வெளியூர் ஊடகங்களை அலங்கரித்தார். உள்ளே ஒன்றும் இல்லாத அரசியலமைப்பு, தெற்கில் மஹிந்த அணி வாக்குகளை அள்ள வழி வகுத்தது. ஏனெனில், நல்லாட்சி அரசு தமிழீழம் வழங்க உள்ளதாகவே, மஹிந்தவின் பரப்புரை செய்தி பரப்பியது. 

ஆனால், அவ்வாறான அரசியலமைப்பே தமிழ்க் கூட்டமைப்பின் பரப்புரையிலும் வெளியே பெயர் இல்லாவிட்டாலும் உள்ளே திருப்தியாக தீர்வு இருக்கின்றது என தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறப் பேசும் பெரும் பொருள் ஆனது. 

எது எவ்வாறாக அமைந்தாலும், இனி தமிழ்க் கூட்டமைப்பு அரசியலமைப்பு வரும், அது தீர்வுவைக் கொண்டு வருமெனப் பேச முடியாது. ஆகவே, கடந்த அண்மைக் காலங்களில், தம் கட்சி தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ ஆற்றிய தவறுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். 

தமிழ் மக்களது அரசியல் விடிவுக்காகப் புறப்பட்டவர்கள், பல கூறுகளாகப் பிரிந்து இது வரை தமிழ் மக்களுக்கெனச் சாாதித்தது எதுவுமே இல்லாத சூழலில், இன்னமும் இக்கேவலமான வேற்றுமை நீடிக்க வேண்டுமா? 

தமிழ் மக்கள், இவர்களது ஒற்றுமைக்காக பல முயற்சிகளை எடுத்தும் அரசியல் தலைவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அது கானல் நீராகவே தொடர்கின்றது. இந்த அவல நிலை தொடரக் கூடாது. தொடர அனுமதிக்கக் கூடாது. ஒரு பொதுவான தமிழ்க் கூட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். எனெனில், தெற்கில் மஹிந்த தலைமையில் புதிய அரசியல் தலைமை எற்படின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் மஹிந்தவுடன் இணைய முயற்சிக்கலாம். 

இவை இவ்வாறு நிற்க, மஹிந்த மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட விரும்புவதை சில வேளைகளில் சில மேற்குலக நாடுகள் தமது நலன் கருதி விருப்பம் காட்டாது விடலாம். அதற்காக சில இராஜதந்திர நகர்வுகளைச் செய்ய முயற்சிக்கலாம். அதற்காக, தமிழ் மக்களை மீண்டும் அணுகலாம். 

ஆகவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு தலைவன் வழியில் பேச வேண்டும். அதனூடாக, சாதகமான அணுகுமுறைகளை அறுவடை செய்ய வேண்டும். அது தமிழ் மக்களது முடிவில்லாப் பிரச்சினைக்கு விடிவு தர வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது விடுதலைக்கு அப்பால், அரசியல் தீர்வுக்கு அப்பால், தம் தலைவர்களின் ஒற்றுமை என்பதில் குறியாக உள்ளனர். எழுபது வருடப் பிரச்சினை இன்னும் தள்ளிப்போகலாம்.

ஆனால், ஒற்றுமை எனும் பெரிய பலம் இனியும் தள்ளிப் போகக் கூடாது. இந்தத் தேர்தலை அடுத்து பல தேர்தல்கள் தொடர்ந்து வரவுள்ளன. அவற்றில், தமிழ்க்கட்சி என வடக்கு, கிழக்கில் ஒரு கட்சியே போட்டியிட வேண்டும். அனைத்து ஆசனங்களையும் அள்ளி அணைக்க வேண்டும். அவை தமிழ் மக்களுக்கு விரைவாக தீர்வை வழங்குமாறு சர்வதேசத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும்.

ஒரே அணியில் ஒரே குரலில் ஒரே தீர்வில் குறியாக இருந்தாலே, மஹிந்த என்ற அரசியல் புயலை எதிர்காலத்தில் எதிர்கொள்ள முடியும். இல்லையேல், தூக்கி வீசப்படுவார்கள் சிங்கள ஆட்சியாளர்களால் மட்டுமல்ல தமிழ் மக்களாலும் கூட. 

ஆகவே, விரைவாக அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான சந்திப்புகள் ஆரம்பிக்கட்டும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வாக்குச்சீட்டால்-தலைவிதியை-வெல்ல-முடியுமா/91-211481

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.