Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது.  

 

வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை | Katunayake Airport Problem India Explanation

இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

 

இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என கூறுவது முற்றிலும் பொய்யானது.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும்.

இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது .

 

Gallery

https://tamilwin.com/article/katunayake-airport-problem-india-explanation-1714655948

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் கணினிகளை சரியாக செயற்படுத்த முடியாமையினால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை | Tense Situation In Katunayake Today Visa Issue

நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து பயணிகள் கடும் கோபமாக அதிகாரிகளுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். 

https://tamilwin.com/article/tense-situation-in-katunayake-today-visa-issue-1714634812?itm_source=article

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

 

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

 

Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை. 
பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய் ஆடும் போய் விட்ட கதைதான்................

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதையும்  வித்தாச்சா??

 

$50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். 

கொள்ளைதான் வேறு என்ன.

இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது.

ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும்.

தொடர்பான திரி

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது

அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார்.

எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர்.

1 hour ago, விசுகு said:

அதையும்  வித்தாச்சா??

நீங்கள் ஆச்சரியப்பட்டது தான்

எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இன்னும் இன்னும் வரும்.

மயங்கி விழுந்துடாதேங்கோ.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 

 

அந்த சிங்களவர் அகோரமாய் கத்துகிறார் நமக்கு images-7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை - அரசாங்கம்

02 MAY, 2024 | 09:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

விசா விநியோகிக்கும் பணிகளுக்கு  உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா விநியோகத்தில் ஏற்பட்ட தாமத நிலைமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது(உள் வருகையின் போது விசா)  முறைமை ஊடாக விசா விநியோகிக்கும் செயற்பாடு வி.எப்.எஸ்.குளோபல்  நிறுவனத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டது.

2023.09.11 ஆம் திகதி  நாட்டுக்குள் உள் வரும் போது  விசா விநியோகிக்கும் செயற்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்ட  வெளியாள் நிறுவனத்துக்கு  வழங்கும் பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய முறையான விலைமனுகோரலுக்கு அமைய விண்ணப்பம் கோரப்பட்டு,கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களில் இந்த நிறுவனம் மிகச் சிறந்ததாக கருதப்பட்டது.

வெளிநாட்டவர்கள்  நாட்டுக்குள் வருகை தரும் போது விசா விநியோகித்தல் மற்றும் நிகழ்நிலை முறைமை ஊடாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தல் என்பனவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த நிறுவனம் நவீன தொழில்னுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்துள்ளது. 3388 மத்திய நிலையங்கள் ஊடாக 151 நாடுகளுக்கு விசா விநியோகிக்கும் வகையில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ளது.

இருப்பினும் கடந்த நாட்களில் இந்நிறுவனத்தின் சேவையில் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

விசா விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக  உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடும் அல்லது செயற்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182525

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா  விசா வழங்குகிறார்.

 இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? 

மோடி ஜீ வாழ்க…. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நிர்வாக சேவை வழமையாகவே சோம்பேறித்தனம். தங்கள் சோம்பேறித்தனத்திற்கு அரச கருமங்களை வெளியாரிடம் கையளிக்கின்றார்களோ?

இவ்வளவு காலமும் வீசா வழங்கினார்கள் தானே. அதி தொழில்நுட்பம் எனக்கூறி சோம்பேறித்தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றார்களோ?

இலங்கை நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இதுபற்றிய விடயம் அறிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா?

இத்தனை லட்சங்கள் படித்த பட்டதாரிகள் உள்ள நாட்டில் சொந்தமாக வீசா வழங்கல் செய்வதற்கு வசதி கிடையாதா?

யாரோ இதன் பின்னால் நின்று நல்ல காசு பார்க்கின்றார்கள் போல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
CEO and Founder of VFS Global
 
 
Born: 1968 (age 56 years)
Nationality: Indian

 

https://en.wikipedia.org/wiki/VFS_Global

 

இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html)

பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான்  🤣

இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄

Edited by நன்னிச் சோழன்
பிற்சேர்க்கை
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம்

Courtesy: Sivaa Mayuri

 

மூன்றாம் தரப்புக்கு(outsourcing) கையளிக்கப்பட்ட இணைய வீசா விண்ணப்ப செயல்முறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் பதிலளித்துள்ளது.

இது குறித்து முறையான ஆய்வு மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் உலகம் முழுவதும் 146 மையங்களைக் கொண்ட VFS குளோபல் நிறுவனத்திற்கு அந்த செயல்முறை வழங்கப்பட்டது என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

ஆவண செயலாக்கம்

மேலும், வீசா ஒப்புதல் எப்போதுமே  இலங்கை குடிவரவு நிறுவனத்தால் தக்கவைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திணைக்களம்,  VFS குளோபல் நிறுவனம், வேறு நாடுகளில் செயற்படுவதை போன்று ஆவண செயலாக்கத்தில் மாத்திரமே ஈடுபடுகிறது என்றும்  தெரிவித்துள்ளது.

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் | Internet Visa Procedure Issue

இலங்கையர்களான நாங்கள், வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்கும்போது VFS குளோபலுக்குச் செல்கிறோம்.

எனவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் இலங்கைக்கு செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கும் வசதியையும் குறித்த நிறுவனம் வழங்குகிறது.இது சுற்றுலாவை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் | Internet Visa Procedure Issue

அத்துடன், விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொடர்புடைய வீசாக் கட்டணங்கள் அரச திறைசேரிக்கானது என்றும், வீசாவிற்கான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான, சேவைக் கட்டணங்களை மாத்திரமே நிறுவனம் பெறும் என்றும் அரசாங்கம் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://tamilwin.com/article/internet-visa-procedure-issue-1714672589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இலங்கையில் நிர்வாக சேவை வழமையாகவே சோம்பேறித்தனம். தங்கள் சோம்பேறித்தனத்திற்கு அரச கருமங்களை வெளியாரிடம் கையளிக்கின்றார்களோ?

இவ்வளவு காலமும் வீசா வழங்கினார்கள் தானே. அதி தொழில்நுட்பம் எனக்கூறி சோம்பேறித்தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றார்களோ?

இலங்கை நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இதுபற்றிய விடயம் அறிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா?

இத்தனை லட்சங்கள் படித்த பட்டதாரிகள் உள்ள நாட்டில் சொந்தமாக வீசா வழங்கல் செய்வதற்கு வசதி கிடையாதா?

யாரோ இதன் பின்னால் நின்று நல்ல காசு பார்க்கின்றார்கள் போல?

இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். 

இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார்.

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

நிச்சயமாக இது கொள்ளைதான்.

இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர்.

இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25.

நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும்.

1 hour ago, MEERA said:

இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா  விசா வழங்குகிறார்.

 இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? 

மோடி ஜீ வாழ்க…. 

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு.

 
1000218649.jpg
பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு !
.......................................
 
பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
 
கல்முனை எம்.பி ஹரீஸ் இல்லாமலேயே மோடியின் இலங்கை தூதுவருடன் ஹக்கீம் நேற்று ஒலுவில் துறைமுகத்திற்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
 
இதேவேளை, மோடியின் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் இந்திய தூதுவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

புதிய கம்பனி அவைக்கு இவைக்கு கமிசன் கொடுத்து கடைசியில் 5-10 தான் தேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். 

இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார்.

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்.

நிச்சயமாக இது கொள்ளைதான்.

இப்போ நான் போனபோது மொத்த வீசா செலவு ஐம்பது டாலர்.

இனிமேல் வீசா கட்டணம் 75 அத்துடன் மேலதிகமாக VFS க்கு 25.

நாட்டிடம்/ பயணிகளிடம் கொள்ளை அடித்து - இந்திய தனியார் கம்பெனிக்கு கொடுக்கிறார்கள். சுளையாக கொமிசன் வரும்.

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

 

என்னதான் சொல்வது. ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நாட்டை சூரையாடுகின்றார்கள். பணத்தை சுருட்டுவதற்கு பதவி தேவைப்படுகின்றது. பதவியை பிடிப்பதற்கு அரசியல் அவசியமாகின்றது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

புதிய கம்பனி அவைக்கு இவைக்கு கமிசன் கொடுத்து கடைசியில் 5-10 தான் தேறும்.

அதே

46 minutes ago, நியாயம் said:

என்னதான் சொல்வது. ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நாட்டை சூரையாடுகின்றார்கள். பணத்தை சுருட்டுவதற்கு பதவி தேவைப்படுகின்றது. பதவியை பிடிப்பதற்கு அரசியல் அவசியமாகின்றது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆவணங்களை சரிபார்த்து ஏற்றுக்கொள்வது மட்டும்தான் செய்கின்றார்கள். யூ.கே இற்கும் இவர்கள்தான் கடந்த 20 வருடங்களாக செய்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுக்கு தான் முட்டு கொடுக்கிறது..

IMG-2121.gif

இரு நாட்டு அரசுகளும் மாறி மாறி அறிக்கை விடுவதிலேயே தெரிகிறது வண்டவாளம். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் VFS Global விசா நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என அறிவித்திருந்தது.

அதை இங்கு யாழில் எதிர்க்கவும் இல்லை அல்லது U.K. இந்தியன் விசா என்று உதாரணம் கொடுக்கவும் இல்லை.

ஆனால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலர் குறிப்பாக சிங்களவர்களே கேள்விக்கு உட்படுத்தி உள்ள நிலையில் “சிறீலங்கா முட்டுக் கொடுப்போர் சங்கம்” மட்டும் தனது முட்டுக் கொடுப்புகளை நிறுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

முன்னர் போல ETA விசா இல்லையா?

3 hours ago, MEERA said:

சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கம் VFS Global விசா நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என அறிவித்திருந்தது

 

Link to comment
Share on other sites

Posted (edited)

இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது.

முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும்.

18 hours ago, பெருமாள் said:

 

 
பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
 

சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும்.

21 hours ago, goshan_che said:

 

இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது.

 

இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்)

இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)

Edited by நிழலி
இந்திய என்ற சொல் விடுபட்டு விட்டது
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அதை இங்கு யாழில் எதிர்க்கவும் இல்லை அல்லது U.K. இந்தியன் விசா என்று உதாரணம் கொடுக்கவும் இல்லை.

 

யாழில் இதை எதிர்க்க யாழ் என்ன இலங்கை பாராளுமன்றமா🤣.

ஏன் இந்தியன், யூகே உதாரணம் கொடுக்கவில்லை? ஏன் என்றால் அப்போ இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போ செய்தியாகியபடியால் விபரங்கள் அலசப்படுகிறது.

4 hours ago, MEERA said:

ஆனால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலர் குறிப்பாக சிங்களவர்களே கேள்விக்கு உட்படுத்தி உள்ள நிலையில் “சிறீலங்கா முட்டுக் கொடுப்போர் சங்கம்” மட்டும் தனது முட்டுக் கொடுப்புகளை நிறுத்தவில்லை.

மேலே திரியில் யாருமே சிறிலங்காவுக்குகோ, VFS ஐ உள்ளே கொண்டு வந்தமைக்கோ முட்டு கொடுக்கவில்லை. 

மாறாக எல்லாருமே முன்னர் இருந்த முறை சீராகவே இயங்கியது, அரசியல்வாதிகள் கொமிசனுக்காக VFS ஐ கொண்டு வந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றே எழுதியுள்ளார்கள்.

நீங்களா முட்டு கொடுப்பதாக கற்பனை செய்து காற்றில் கம்பு சுத்துகிறீர்கள் சகோ.

18 hours ago, goshan_che said:

புலிகளை தோற்கடித்த பின், இலங்கையில் இந்தியா தனது வகிபாகத்தை இழந்து விட்டது. 

இலங்கையில் இந்தியா ஒரு செல்லாக்காசு. 

இப்படி எல்லாம் யாழில் எழுதியவர்கள் இந்தியாவை குறை மதிப்பீடு செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?

இன்னும் இந்த கேள்விக்கு பதில் வரவில்லை @MEERA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்)

இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)

தகவலுக்கு நன்றி. இவர்களை பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் ஆரம்பத்தில் இதை இந்தியர் ஒருவர் தொடக்கி இருந்தாலும் 2021 அமெரிக்க கம்பெனியான Blackstone Inc இதன் 75% பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

Kuoni எனும் லக்சறி சுற்றுலா முகவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதில் சீஈஓ சாக இருந்த இந்தியர் ஒரு side project ஆக ஆரம்பித்த விடயம், இன்று சுமார் 2 பில்லியன் டாலர் நிறுவனம்.

 

https://en.m.wikipedia.org/wiki/VFS_Global#:~:text=In October 2021%2C Blackstone acquired a majority stake in VFS Global.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்கும் இராணுவத்தினை இப்பணிகளில் அமர்த்தலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அறிவு அதிகரிக்க அதிகரிக்க அமைதியையும் இழந்து கொண்டு போகின்றோம். 😢
    • கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்   போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். -இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:- திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம்  கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக! கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள். உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்
    • ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்! 17 MAY, 2024 | 10:08 AM   கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183749
    • அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301842
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.