Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்- குரோஷியா பயிற்சியாளர் சவால்

 

 

 அ-அ+

பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் ஆகியோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என குரோஷியா பயிற்சியாளர் சவால் விடுத்துள்ளார். #FIFA2018 #Croatia #France

 
 
 
 
பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்- குரோஷியா பயிற்சியாளர் சவால்
 
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை (இரவு 8.30 மணி) மாஸ்கோவில் மோத உள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.

பிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.

இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார். #FIFA2018 #Croatia #France

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/14110141/1176431/we-can-stop-Mbappe-amp-Griezmann-says-Zlatko-Dalic.vpf

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

உலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்

 
அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் #WorldCup2018 #BELENG #ENGBEL

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இடது பக்கம் கார்னருக்கு சற்று முன்பகுதியில் இருந்து கொடுத்த பாஸை சிறப்பான முறையில் மியுனியர் கோலாக்கினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றது.

இடைவேளை முடிந்து 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்தை கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் டிபென்டர்ஸ்கள் பார்த்துக் கொண்ட போதிலும் ஹசார்டு, ப்ரூயின் ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

201807142125181749_1_thomas-12s._L_styvpf.jpg

82-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி ப்ரூயின் பந்தை கடத்தில் ஹசார்டிடம் கொடுத்தார். ஹசார்டு இரண்டு இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இதில் கோல் விழாததால் பெல்ஜியம் 2-0 என வெற்றி பெற்றது

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/14212518/1176593/World-Cup-2018-third-place-Belgium-beats-England-two.vpf

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன. #WorldCupFinal #FRACRO

 
 
 
 
உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்
 
மாஸ்கோ:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.
 
இந்த நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் யுத்தத்தில் இறங்குகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
 
201807150850316159_1_KD._L_styvpf.jpg
1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. கிரிஸ்மான் (3 கோல்), ‘இளம் புயல்’ கைலியன் பாப்பே (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட், ரபெல் வரானே உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள், களத்தில் இறங்கி விட்டால் புயல்போல் சுழன்று எதிரணியை உலுக்கி விடும் திறமை படைத்தவர்கள். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்சுக்கே இப்போது வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
 
201807150850316159_2_KDd._L_styvpf.jpg
அரைஇறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத பிரான்ஸ் அணியினர், அதன் பிறகு முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இது மந்தமான யுக்தி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்சும் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.
 
இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது. மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
 
201807150850316159_3_NE._L_styvpf.jpg
தங்கப்பந்து விருது வெல்லும் வாய்ப்பில் உள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் உலகின் தலைச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இவான் பெரிசிச், மரியோ மான்ட்ஜூகிச், வர்சல்ஜ்கோ ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். முதல்முறையாக இறுதி சுற்றை அடைந்துள்ள குரோஷியா, உலக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கும்.
 
இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் விளங்குவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் முதல் கோல் போடும் அணியின் கை எளிதில் ஓங்கிவிடும். இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
 
201807150850316159_4_Untitled-1s._L_styvpf.jpg

கடைசியாக நடந்த மூன்று உலக கோப்பை இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட்-அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2-வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
 
இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-
 
201807150850316159_5_ks._L_styvpf.jpg
பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் கீப்பர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் கீப்பர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #WorldCup #WorldCupFinal #WorldCup2018 #FrancevsCroatia #FRACRO

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/15085031/1176642/France-v-Croatia-in-World-Cup-final.vpf

Link to comment
Share on other sites

சூடுபிடிக்கும் இறுதிப்போட்டி : முதல் பாதியில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது எப்படி?

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: முதல் பாதியின் முடிவில் குரோஷியா பிரான்ஸ் அணியை விட ஒரு கோல் பின் தங்கியுள்ளது. பிரான்ஸ் அணி இரண்டு கோல்களை முதல் பாதியில் அடித்தது

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டிபடத்தின் காப்புரிமைCATHERINE IVILL

உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ் அணி அரை இறுதியில் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்துவரும் இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.

பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் ம்பாப்பி ஆட்டத்தின் தொடக்க சிலநிமிடங்களில் பந்தை தவறவிட்டுக்கொண்டிருந்தார்.

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி:படத்தின் காப்புரிமைVI-IMAGES

சொந்த அணிக்கு எதிராக கோல் போட்ட மரியோ மண்ட்ஜூகிக்.

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின் கையில் தஞ்சம் அடையாமல் குரேஷியாவின் வலையில் விழுந்தது .

இதையடுத்து உலககோப்பை இறுதி போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் விளையாடத்துவங்கியது பிரான்ஸ்.

ஆனால் விரைவிலேயே குரோஷியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச் இடது காலால் ஒரு கோல் அடித்தார்.

குரோஷியா வீரர் பெரிசிச்படத்தின் காப்புரிமைSHAUN BOTTERILL

குரோஷிய வீரர்கள் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து ஆட்டத்தில் பின்தங்குவதும் பின்னர் மீண்டு வந்து வெற்றி பெறுவதுமாக இருந்தனர். டென்மார்க் அணிக்கு எதிராக ரவுண்ட் ஆஃப் 16, ரஷ்ய அணிக்கு எதிராக காலிறுதி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதி போட்டிகளில் முதல் கோல் எதிரணி அடித்திருந்தாலும் மீண்டும் வந்து வென்றது குரேஷியா.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரீஜ்மன் ஒரு கோல் அடித்தார். பத்தே நிமிட இடைவெளியில் மீண்டும் முன்னிலை பெற்றது பிரான்ஸ் அணி.

 

 

உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-44840364

பிரான்ஸ் 4  குரோசியா 2

 

 

 

மப்பே, போக்பா ஆட்டத்தால் பிரான்ஸ் 65-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலை

 
அ-அ+

போக்பா மற்றும் மப்பே கோலால் பிரான்ஸ் 59-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. #WorldCup2018 #Pogba

 
 
 
 
மப்பே, போக்பா ஆட்டத்தால் பிரான்ஸ் 65-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலை
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

201807152158400562_1_mbappe003-s._L_styvpf.jpg

59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது. மப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார். அவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/15215840/1176755/World-Cup-2018-POGBA-goald-france-4-croatia-1.vpf

பிரான்ஸ் 4  குரோசியா 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய நாடுகள் வெளியேறிய பின் யார் வென்றால் என்ன யார் தோற்றால் என்ன.??

Link to comment
Share on other sites

உலகக் கோப்பையில் பங்குபெற்ற ஒவ்வொரு அணிக்கும் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு? 

 

 
fifa1xx

 

2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இரண்டாம் இடம்பெற்ற குரோஷியா அணிக்கு ரூ. 192 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இது உங்களுக்குத் தெரிந்த தகவல்தான். எனில், போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு என்பது உங்களுடைய கேள்வியாக இருந்திருந்தால் அதற்கான விடை இதோ:

இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடியைச் செலவழித்துள்ளது சர்வதேச கால்பந்துச் சங்கமான ஃபிஃபா.

மூன்றாம் இடம் பெற்ற பெல்ஜியம் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை - ரூ. 164 கோடி; நான்காம் இடம் பெற்ற இங்கிலாந்து அணிக்கு - ரூ. 151 கோடி.

இதுதவிர 5 முதல் 8 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகளுக்குத் தலா ரூ. 110 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 440 கோடி செலவாகியுள்ளது. 

9 முதல் 16 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை விளையாடிய அணிகளுக்குத் தலா ரூ. 82 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 656 கோடி செலவாகியுள்ளது.

17 முதல் 32 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது முதல் சுற்றிலேயே வெளியேறிய 16 அணிகளுக்குத் தலா ரூ. 55 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 880 கோடி செலவாகியுள்ளது.

ஆக மொத்தம், போட்டியில் பங்கேற்ற 32 அணிகளுக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 

பரிசுத்தொகை பட்டியல்

 ரூ. 260 கோடி - பிரான்ஸ்
 ரூ. 192 கோடி - குரோஷியா
ரூ. 164 கோடி - பெல்ஜியம்
ரூ. 151 கோடி - இங்கிலாந்து
ரூ. 110 கோடி - உருகுவே, பிரேஸில், ரஷியா, ஸ்வீடன் (காலிறுதி)
ரூ. 82 கோடி - போர்ச்சுகல், ஆர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஜப்பான், ஸ்பெயின், டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா (காலிறுதிக்கு முந்தைய சுற்று)
ரூ. 55 கோடி - சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, துனிசியா, பனாமா, செனகல், போலந்து (முதல் சுற்றில் வெளியேறிய நாடுகள்)

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/16/prize-money-revealed-for-each-2018-world-cup-nation-2961274.html

Link to comment
Share on other sites

சிறிய நாடு என்றாலும் பெரிய  கனவு காணலாம்:  குரோஷியா பயிற்சியாளர் ஸ்லாட்கோ டலிக் உருக்கம்

 

 
DALICjpg

88 வருட  ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் வெறும் 4.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குரோஷியா நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் வியக்கவைத்தது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த சிறிய நாடு ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதன்முறையாக நுழைந்து சாதனை படைத்த போதிலும் அந்த அணியால் கோப்பையை வென்று வரலாற்றில் முத்திரை பதிக்க முடியாமல் போனது. இறுதிப் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் வீழ்ந்ததால் முதன்முறையாக மகுடம் சூடும் வாய்ப்பை இழந்தது குரோஷியா.

அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டலிக் கூறும்போது, “நாங்கள் பயணம் செய்யும் பேருந்தில் இடம் பெற்ற வாசகம், ‘பெரிய கனவை கொண்டுள்ள சிறிய நாடு நாங்கள்’ என்பதுதான். இது எல்லோருக்கும் சிறந்த செய்திதான். நீங்கள் கடினமாக உழைத்தால், உங்களால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும், அதன் மூலம் சிறந்த முடிவுகளை பெற முடியும். இது சாத்தியமாகும் என்று நீங்கள் நம்ப வேண்டும். சிலநேரங்களில் இந்த எண்ணங்கள் கீழே சரியலாம். ஆனால் கனவு மற்றும் லட்சியங்களைக் கொண்டு அதனை பின்தொடர வேண்டும். அதன் பின்னர் ஒருவேளை கால்பந்திலோ அல்லது பொது வாழ்விலோ கனவுகள் மெய்ப்படும்.

 

ஒருபோதும் நீங்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது, அதேபோன்று ஒருபோதும் நம்பிக்கை கொள்வதையும் நிறுத்திவிடக் கூடாது. இறுதிப் போட்டியில் 4-1 என நாங்கள் பின்தங்கியிருந்த போதும், நான் நம்பிக்கை கொள்வதை நிறுத்தவில்லை. இதுதான் வாழ்க்கை. ஒட்டுமொத்தமாக குரோஷியா, பெரிய தொடரில் சிறப்பாக விளையாடியதாகவே கருதுகிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது அணி வீரர்களையும், நாட்டையும் நினைத்து பெருமை அடைகிறேன்” என்றார்.

அர்ஜென்டினா ரெப்ரீ நெஸ்டர் பிட்டானா, பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வழங்கியது விவாதப் பொருளாகி உள்ளது குறித்து ஸ்லாட்கோ டலிக் கூறுகையில், பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் குறித்து நான் பேசுவதில்லை. இந்த விஷயத்தில் எனது கருத்து என்னவென்றால், உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக் கொடுக்கக்கூடாது என்பதுதான்.

உலகக் கோப்பையில் விளையாடிய சிறந்த விளையாட்டுக்காக எனது அணி வீரர்களை வாழ்த்தியாக வேண்டும். இறுதிப் போட்டியில் நாங்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்தினோம், ஆனால் பிரான்ஸைப் போன்ற வலுவான அணிக்கு எதிராக நீங்கள் தவறுகளைச் செய்ய முடியாது. நாங்கள் சற்று சோகமாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் செய்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24439969.ece

Link to comment
Share on other sites

ரஷ்ய உலகக் கோப்பையில் நல்லதும் கெட்டதும்

 

 
fifajpg

19 வயதான கிளியான் பாப்பேவின் அற்புதமான ஆட்டம், பிரேசிலின் நெய்மர் நாடகமாடியதாக எழுந்த குற்றச்சாட்டு, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய ஜெர்மனி லீக் சுற்றிலேயே மூட்டை கட்டியது, நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், ஸ்பெயின் வெளியேற பிரேசில் கால் இறுதிவரை தாக்குப்பிடித்தது, டிகோ மரடோனாவின் கிண்டல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலேயே ரஷ்யாவில் சுமார் ஒரு மாத காலம் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவடைந்தது. இளம் வீரர்களை உள்ளடக்கிய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் முதல்முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் குரோஷியாவின் கனவை கலைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக மகுடம் சூடியது. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் நடைபெற்ற நல்ல விஷயங்களும், சில விரும்பத்தகாத விஷயங்களும் குறித்த ஓர் அலசல்...

புதியவர்கள்  அறிமுக அணியாக களமிறங்கிய ஐஸ்லாந்து, பனாமா ஆகிய அணிகள்  லீக் சுற்றை தாண்டவில்லை. எனினும் அந்த அணிக்கு ரசிகர்கள் வழங்கிய ஆதரவு அளப்பரியது. ஐஸ்லாந்து போட்டிகளை காண அந்நாட்டு மக்கள் பெரும் கூட்டமாக படையெடுத்தனர். அதேபோல் உலகக் கோப்பையில் முதன்முறையாக பனாமா நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தொலைக்காட்சி வர்ணணையாளராக இருந்த பனாமாவை சேர்ந்தவர் ஆனந்த கண்ணீர் சிந்தியது என்றும் மறக்க முடியாதது.

 

விருப்பமான மைதானங்கள் 12 நகரங்களில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டாலும் ரசிகர்கள் அதிகம் விரும்பி வந்து பார்த்த மைதானங்கள் லுஸ்னிக்கி மற்றும் சோச்சி தான். இங்கு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 

உணர்ச்சிகரமான நிமிடங்கள் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் 19 கோல்கள் அடிக்கப்பட்டது. 5 ஆட்டங்கள் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. 4 ஆட்டங்களின் முடிவுகள் பெனால்டி ஷூட் அவுட் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இவை அனைத்தும் ரசிகர்கள் தங்களது விரல் நகங்களை கடித்தபடி ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்வதில் இன்பமான பதற்றத்தை தொற்றிக்கொள்ள வைத்தது.

ஃபேர் பிளே ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்களில் 4 சிவப்பு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டது. விஏஆர் தொழில்நுட்ப உதவியால் மைதானத்தின் அனைத்து பகுதியிலும் நடைபெற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டதால் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது என் பதில் வீரர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். நாக் அவுட் சுற்றில் காயம் அடைந்த உருகுவே வீரர் எடி சன் கவானியை, கைத்தாங்கலாக கிறிஸ்டியா னோ ரொனால்டோ அழைத்துச் சென்று ரசிகர்களின் மனதை வென்றார்.

ரசிகர்களை ஈர்த்தவர்கள் பிரான்ஸின் கிளி யான் பாப்பே, இங்கிலாந்தின் ஹாரிகேன், குரோஷியாவின் லுகா மோட்ரிச், இவான் ராக்கிடிக், பெல்ஜியத்தின் ரோமுலு லூகாகு ஆகியோர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

அதிர்ச்சி வைத்தியம் பங்கேற்ற 32 அணிகளில் தரவரிசையில் 70-வது இடத்தில் இருந்த ரஷ்யா நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட்டில் வீழ்த்தி வெளியேற்றியது. யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடி வந்த ரஷ்ய அணியின் பயணம் கால் இறுதியுடன் முடிவுக்கு வந்தது.

விஏஆர் இந்த தொழில்நுட்பத்தின் அறிமுகம் குறித்து ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அது, சில குறைபாடுகள் கொண்ட ஒரு பயனுள்ள மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்தது.

இனவெறி ஜெர்மனி அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் அந்த அணி வீரரான மெசட் ஓஸில் இனவெறிக்கு ஆளானார். மெசட் ஓஸில் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர், மேலும் அவர், துருக்கி பிரத மர் டயிப் எர்டோகனுடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதேபோன்று துருக்கி பாரம்பரியத்தைக் கொண்ட சுவீடன் வீரர் ஜிம்மி துர்மாஸ், இணையதளங்களில் இனவெறி சர்ச்சைக்கு உள்ளானார். ஜெர்மனி அணிக்கு எதிரான ஆட்டத்தில் துர்மாஸ் செய்த ஃபவுல் காரண மாக வெற்றியை இழந்திருந்தது. ஆனால் அவரது சக அணி வீரர்களும், கால்பந்து சங்கமும் அவருக்கு ஆதரவாக இருந்தன. 

அர்த்தமற்றவைகள் செர்பியா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோல்வியடைந்த ஆட்டத்தில் ரெப்ரீயாக செயல்பட்ட ஜெர்மனியின் பெலிக்ஸ் பிரைச்சை, போர் குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என செர்பியா கால்பந்து அணியின் பயிற்சியாளர் லேடன் கிரஸ்டஜிக் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஃபிபா அமைப்பு அவருக்கு அபராதம் விதித்தது.

ஜெர்மனி சுவீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி, மெக்சிகோ மற்றும் தென் கொரியாவிடம் தோல்வியடைந்ததால் லீக் சுற்றுடன் வெளியேறியது. 80 வருட கால் பந்து வரலாற்றில் ஜெர்மனி அணி முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவது இதுவே முதன்முறையாக அமைந்தது. பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டாலும் அணியை அவரால் இனிமேல் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் மற்றும் ஜெர்மனி கால்பந்து சங்கம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடருமா என்பது சந்தேகம்தான்.

மரடோனா அர்ஜென்டினா கால்பந்து அணி யின் ஜாம்பவானான டிகோ மரடோனா, மைதானத்தில் புகை பிடித்தது, மற்றும் ரசிகர்களை நோக்கி நடுவிரலை உயர்த்தி அநாகரீகமாக நடந்து கொண்டது சர்ச்சை களை ஏற்படுத்தியது.

மரண களம்: கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் தான் புகழ்பெற்ற ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா அணி கள் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறின. கூட்டாக 11 பட்டங்களை வென்ற இந்த அணிகளில் ஒன்று கூட அரை இறுதியை எட்டிப்பார்க்க முடியாமல் போனது.

ரகசிய இடம் அனைத்து அணிகளும் பொதுமக்கள் பார்வையில் ஒருமுறையாவது பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திர வீரர்களை பயிற்சிகளின் போது அரிதாகவே காண முடிந்தது. அதிலும் ஸ்பெயின் அணி பயிற்சியில் ஈடுபட்டதை அந்நாட்டு ரசிகர்கள் பார்க்க முடியாமலேயே போனது. காரணம் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் இருந்து வெகுதொலைவில் உள்ள கிரஸ் நோடார் பகுதியில் ஸ்பெயின் அணி பயிற்சியில் ஈடுபட்டது.

மிரட்டல்கள் லீக் சுற்றின் போது ஜப் பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற கார்லோஸ் சான்செஸூக்கு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கொலம்பியா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இது 1994-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஓன் கோல் அடித்த கொலம்பியா வீரர் அன்ட்ரஸ் எஸ்கோபார், நாடு திரும்பிய சில நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை இது கண்முன் கொண்டு வந்தது.

ஆப்பிரிக்க நாடுகள் 1982-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாடு கூட லீக் சுற்றை கடக்காதது இதுவே முதன்முறை. நைஜீரியா, செனகல், துனீசியா, எகிப்து, மொராக்கோ ஆகிய 5 அணிகளும் கூட்டாக பெற்ற வெற்றிகள் மூன்று மட்டுமே. இதில் ஹெச் பிரிவில், ஃபேர் பிளே பாயின்டால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஜப்பான் அணியிடம் செனகல் இழந்தது அந்த அணி நாட்டு ரசிகர்களின் மனதை நொறுங்கச் செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சாலா காயத்தால் அவதிப்பட்டது எகிப்து அணியையும் முடக்கியது.

இரு கழுகுகள் செர்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்ததும் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டான் ஷகிரி மற்றும் கிரானிட் ஸாகா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் செய்கைகள் செய்தவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது அல்பேனியா நாட்டு கொடியில் உள்ள இரு கழுகுகளை குறிப்பது தெரியவந்ததையடுத்து இரு வீரர்களுக்கும் ஃபிபா அபராதம் விதித்தது.

ஹெர்டான் ஷகிரியும், கிரானிட் ஸாகாவும் கோசோவோ மாகாணத்தை மையமாக கொண்டவர்கள். இந்த பகுதி முன்பு செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1998-1999ம் ஆண்டு செர்பிய படைகள் மற்றும் இனவாத அல்பேனியா கொரில்லாக்கள் இடையே நடந்த மோதல்களில் கோசோவோ நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதை மனதில் வைத்தே ஹெர்டான் ஷகிரியும், கிரானிட் ஸாகாவும் நடந்து கொண்டது தெரியவந்தது.

நெய்மரின் பல்டிகள்

பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் உலகக் கோப்பை தொடரில் இரு கோல்கள் மட்டுமே அடித்தார்.   நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது   நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் அவரது தலைமுடி அலங்காரமும், சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஸ்பெயின் நாளிதழ் ஒன்று, நெய்மால் மால் (மோசம்) என கேலி செய்திருந்தது.

சகாப்தம் முடிகிறதா?

31 வயதான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, 33 வயதான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இம்முறையும் தங்களது அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பி உள்ளனர். அதிலும் இந்த இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது சோகம்தான். ரொனால்டோ, ஸ்பெயின் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் கோல் அடித்து தொடரை சிறப்பாக தொடங்கிய போதும் அந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்லத் தவறினார். மாறாக லயோனல் மெஸ்ஸி தனது அணியை லீக் சுற்றுடன் வெளியேறுவதில் இருந்து மட்டுமே காப்பாற்ற முடிந்தது. கோல் மழை பொழிந்த பிரான்ஸ் அணிக்கு எதிராக மெஸ்ஸியின் மந்திரம் எடுபடவில்லை. இவற்றை கருத்தில் கொண்டால் கடந்த 10 வருடங்களாக ஃபிபாவின் சிறந்த வீரர் விருதை தலா 5 முறை கைப்பற்றியுள்ள மெஸ்ஸியின் ஆதிக்கமும், ரொனால்டோவின் ஆதிக்கமும் முடிவுக்கும் வரும் கட்டத்தில் இருப்பதாகவே கருதத்தோன்றுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24450201.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த கோல் அறிவிப்பு!

 
 

லகக் கோப்பைத் தொடரில் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் பெஞ்சமின் பாவெட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த கோல் அடித்த பாவெட்

அர்ஜென்டினாவுக்கு எதிரான நாக்- அவுட் ஆட்டத்தில் 57-வது நிமிடத்தில் பிரான்ஸின் இடதுபுற விங்கர் லூகாஸ் ஹெர்னான்டஸ் பந்தை கிராஸ் செய்தார். வலது புறத்தில் பெனால்டி ஏரியாவுக்கு வெளியே இருந்து பாவெட் அடித்த 'வாலி' அர்ஜென்டினா கோல் கம்பத்தின் டாப் கார்னருக்குள் நுழைந்தது. இதனால், ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் அடைந்தது. முடிவில் பிரான்ஸ் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

 

 

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 64 ஆட்டங்களில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. அதில், சிறந்த கோலாக பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் 22 வயது பெஞ்சமின் பாவெட்டின் 'வாலி 'அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஜப்பான் அணிக்கு எதிராக கொலம்பிய வீரர் ஜூவான் குயின்ட்ரோ அடித்த கோலும் மூன்றாவதாக முதல் சுற்று ஆட்டத்தில்  அர்ஜென்டினா அணிக்கு எதிராக லூகா மாட்ரிச் அடித்த கோலும் தேர்வு செய்யப்பட்டது. 

 

 

ஃபிஃபா. காமில் ரசிகர்களே ஆன்லைன் வாக்கெடுப்பு வழியாக சிறந்த கோல்களைத் தேர்வு செய்தனர். 1930-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை வரலாற்றில் இந்த விருதைப் பெறும் முதல் ஐரோப்பிய வீரர் பெஞ்சமின் பாவெட்தான். 

https://www.vikatan.com/news/sports/132090-pavard-wins-fifa-best-goal-award.html

Link to comment
Share on other sites

 

லகக் கோப்பைத் தொடரில் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் பெஞ்சமின் பாவெட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • 1 month later...

2018 உலகக் கிண்ணத்தின் கதைகள்

covers-696x464.jpg
 

குரோஷியாவுடனான பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சூடிக்கொள்ள, 21 ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் முடிவுக்கு வந்தது.

உலகின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி புதிய நட்சத்திரங்களின் பிறப்பு, அற்புதமான கதைகள் மற்றும் தமது திறமைகளால் உலகளவில் பிரபலமடையும் வீரர்களை கொண்டதாக அமைவது வழக்கம். இவ்வாறு 2018 ரஷ்யாவில் கவர்ந்திழுத்த சில கதைகளை பார்ப்போம்,

ஐஸ்லாந்தின் எழுச்சி

செர்கியோ அகுவேரா பெனால்டி எல்லைக்குள் விழ, நடுவர் பெனால்டி கிக் சமிக்ஞை செய்கிறார். சந்தேகமின்றி உலகின் மிகச் சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி அந்த பெனால்டி வாய்ப்பை உதைக்க தயாரானார். மெஸ்ஸி இடது பக்கமாக உதைத்தார், கோல்காப்பாளர் ஹான்ஸ் ஹல்டேரசன் வலது பக்கம் என கணித்து பாய, மெஸ்ஸியின் உதை தடுக்கப்பட, அது ஆர்ஜன்டீனாவின் முன்னேற்றத்தையும் தடுத்தது.

 

2016 ஆம் ஆண்டிலேயே உலகின் மிகச்சிறிய நாடாகா ஐரோப்பாவில் இருந்து ஐஸ்லாந்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. அப்போது குரோஷியா, உக்ரைன் மற்றும் துருக்கி அணியுடனான போட்டியை சமநிலை செய்தே ரஷ்யா வரை செல்ல அது தன்னை தகுதியாக்கிக் கொண்டது.  

2016 ஐரோப்பிய கிண்ணத்தில் காலிறுதிவரை முன்னேறிய அந்த அணி மேலும் நம்பிக்கை தருவதாகவே உலகக் கிண்ணம் வரை முன்னேறியது.

Iceland-Goalkeeper-Hannes-Halldorsson.jp Image Courtesy – Getty Images

வெறுமனே 330,000 மக்கள் தொகை கொண்ட அந்த நாடு, 2016 ஐரோப்பிய கிண்ணத்தில் சம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் அணிக்கு அந்த தொடரில் சவால் கொடுத்ததோடு, இங்கிலாந்தையும் அந்தத் தொடரில் வெளியேற்றி உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது.  

உலகக் கிண்ண குழுநிலையில் தனது குழுவில் கடைசி இடத்தை பெற்றாலும், 2012 ஆம் ஆண்டு உலகத் தரவரிசையில் 131 ஆவது இடத்தில் இருந்த ஐஸ்லாந்து இப்படி எழுச்சி பெறும் என்று யார் நம்பினார்கள்? அதன் சிறந்த காலம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

தந்தையைப் போல் மகன்

1998, ஜுன் 24 ஆம் திகதி டென்மார்க் கோல்காப்பாளர் பீட்டர் ஸ்ச்மைகல் வலைக்கு முன்னால் பெரும் அரணாக நின்றிருந்தார். எதிரே பிரான்ஸின் யூரி ஜோர்கைப் அந்த பெனால்டி வாய்ப்பை கொண்டு பிரான்ஸை முன்னிலை பெறச் செய்ய எதிர்பார்த்தார். தனது எதிராளியை விடவும் ஸ்ச்மைகல் உயரமாக இருந்தார்.

என்றாலும் ஜோர்கைப் வேகமாக உதைக்க பந்து ஸ்ச்மைகலை மீறி வலைக்குள் சென்றது. அப்போது உலக சம்பியனான பிரான்ஸ் கடைசி குழுநிலை போட்டியில் 1-0 என முன்னிலை பெற்றது. அந்தப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என வென்றது.

 

வேகமாக முன்னோக்கி வந்ததால் 2018, ஜூலை முதலாம் திகதி மற்றொரு மத்தியகள வீரர் பெனால்டி உதை ஒன்றுக்கு காத்திருந்தார். இப்போது அந்த உதைக்கு தயாரானவர் லூகா மொட்ரிக், டென்மார்க்குடனான 16 அணிகள் மோதும் சுற்று போட்டியின் மேலதிக நேரத்தில் குரோஷியா இந்த தீர்க்கமான தருணத்தை எதிர்கொண்டது. இந்த தருணத்தில் ஸ்ச்மைகல் தனது மகனான டென்மார்க் கோல்காப்பளர் கெஸ்பரை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். மொட்ரிக் பந்தை உதைக்க அவர் இடது பக்கமாக பாய்ந்தார், தடுத்துவிட்டார்.

Peter-Schmeichel.jpeg Image Courtesy – @aakashbhatt97 Twitter Photo

ரசிகர்கள் தன்னிலை மறந்து ஆரவாரித்தார்கள். கஸ்பர் இரண்டு பெனால்டி ஷூட் அவுட்களை தடுத்தபோதும் கடைசியில் குரேஷியா 3-2 என வெற்றியை தன்வசமாக்கியது.

என்ன கூறுவதென்று தெரியவில்லை. எனது நாடு, எனது மகன், அவனது சக அணி வீரர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் தேசிய பயிற்சியாளர் ஏஜ் ஹரெய்ட் பற்றி அதிகம் பெருமை கொள்கிறேன். அனைத்து கண்ணீரும் வற்றிவிட்ட பின் நாம் எத்தனை சிறப்பாக ஆடினோம் என்பதை புரிந்துகொண்டோம்என்கிறார் பீட்டர் ஸ்ச்மைகல்.     

ஹர்வஜே கஸ்டிக் நினைவாக

உலகக் கிண்ணத்தின் 16 அணிகள் சுற்றில் டென்மார்க் மற்றும் குரோஷிய அணிகள் சந்தித்தபோது, நடந்த அளவுக்கு பரபரப்பு தரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. முதல் ஐந்து நிமிடத்திற்குள் 2 கோல்கள் புகுத்தப்பட, மேலதிக நேரத்தின் கடைசி 5 நிமிடங்களில் பெனால்டி தடுக்கப்பட, அனைவரையும் இருக்கை நுணிக்கு எடுத்துச் சென்ற பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

கஸ்பர் ஸ்ச்மைகல் டென்மார்க் அணிக்காக தனது அனைத்து முயற்சிகளையும் செய்தபோதும் அவரையும் மீறி எதிரணி கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று பெனால்டிகளை தடுக்க குரோஷியாவுக்கு 3-2 என வெற்றி உறுதியானது.  

 

33 வயதுடைய சுபசிக் கடைசி பெனால்டி ஷூட் அவுட்டை தடுத்து குரோஷியாவின் வெற்றியை உறுதி செய்தபின் தனது ஜெர்சியை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். உள்ளே அவர் அணிந்திருந்த டீசேர்ட்டில் அறிமுகம் இல்லாத கால்பந்து வீரர் ஒருவரின் புகைப்படம் இருந்தது. அந்த வீரரின் பெயர் ஹர்வஜே கஸ்டிக். அவர் சுபசிக்கின் முன்னாள் சக அணி வீரர். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு சோகமான நிகழ்வில் உயிரிழந்தார்.

2008 மார்ச் 29 ஆம் திகதி என்.கே. சதார் அணி தனது சொந்த மைதானத்தில் எச்.என்.கே. சிபாலியா அணியை எதிர்த்தாடியது. இலக்கு இல்லாமல் வந்த பந்தை பெற்ற சதார் கோல்காப்பாளர் சுபசிக் தனது சக வீரரை நோக்கி நீண்ட தூரம் உதைத்தார்.

Croatia-Goalkeeper-Danijel-Subasic-300x1 Image Curtesy – Getty image

துள்ளி வரும் பந்து கோட்டுக்கு வெளியே செல்வதற்கு முன் அதனை பெறுவதற்கு ஹர்வஜே கஸ்டிக் அதனை நோக்கி ஓடி வந்தார். ஆனால் தடுக்கி விழுந்த அவர் கொன்க்ரீட் சுவரில் தலை பட்டு மைதானத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட்டார். விபத்து நிகழ்ந்து ஐந்து தினங்களில் அவர் உயிரிழந்தார்.  

பத்து ஆண்டுகள் கழித்து அந்த பந்தை உதைத்த நண்பர், உலகக் கிண்ணத்தின் முக்கியமான வெற்றித் தருணத்தில் அவரை நினைவுகூர தவறவில்லை.   

அந்தப் போட்டிக்குப் பின்னர் வெளியேறி விட்டடேன். அமெரிக்கா சென்றபோது உறக்கம் இன்றி தடுமாறினேன், பயணக்களைப்பு வேதனை தந்தது. நான் விழித்தெழும் ஒவ்வொரு நேரமும், இருண்ட பொழுதாக இருக்கும். என்ன நடந்தது என்று ஞாபகத்திற்கு வரும், நான் ஏன் அவனுக்கு பந்தை செலுத்தினேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன், ஏன் நடுவே செலுத்தவில்லை. நான் அப்படி செய்திருந்தால் ஒருவேளை அப்படி ஏற்பட்டிருக்காது. அது நடக்க வேண்டும் என்று விதியா? எனவே, அது தொடக்கம் நான் எப்போதும் எனது மேலாடைக்கு கீழால் அவனது படத்தை அணிந்திருக்க தீர்மானித்தேன். எனது கால்பந்து வாழ்வின் ஒவ்வொரு போட்டியிலும் அதனை செய்வேன். சதாரில் அதனை நான் செய்தேன். ஹஜ்துக் ஸ்பிலிட்டுக்கு, இப்போது சம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக்கில் மொனாகோவுக்கு, தொடர்ந்து ரஷ்யாவிலும் நான் அதனை செய்தேன்என்கிறார் டனிஜல் சுபசிக்.

 

 

கோல்களை தடுத்த நாடோடி

அலிரேசா பெய்ரதன்வாண்ட் ஈரானின் லோரஸ்தான் மாகாணத்தின் லரபியாவில் 1993 ஆம் அண்டு நாடோடி குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தனது மூத்த மகனுக்கு கால்பந்து சரிப்பட்டு வராது என்று நம்பிய அவரது தந்தை கால்பந்தை விட்டுவிட்டு உருப்படியாக வேலைக்குச் செல்லும்படி ஒரே நச்சரிப்பார். குடும்பத்தின் தொந்தரவால் கால்பந்தை விட்ட அலிரேசா நல்ல வாழ்வை தேடி தலைநகர் டெஹ்ரானுக்கு புறப்பட்டு வந்தார்.  

அலிரேசாவுக்கு தலைநகரில் வாழ்வது இலகுவாக இருப்பவில்லை. உண்பதற்குக் கூட வழியில்லாத நிலையில் பெரும்பாலான நேரங்களில் தெருவோரங்களிலும், தான் வேலை பார்க்கும் இடங்களிலுமேயே உறங்க வேண்டி ஏற்பட்டது. அந்த சிறுவன் ஆடைத்தொழிற்சாலை, கார் கழுவும் இடம், வீதியை கூட்டுபவனாகக் கூட இருந்திருக்கிறான்.   

என்றாலும் ஈரானிய கால்பந்து ஆட்டத்தில் படிப்படியாக முன்னேறிய அவர் கடைசியில் 2015 ஆம் ஆண்டு ஈரானின் முதல்நிலை கோல்காப்பளராக மாறிவிட்டார். 12 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்காத அலிரேசா ஈரான் உலகக் கிண்ண போட்டிக்காக ரஷ்யா செல்ல உதவினார்.     

Iran-Goalkeeper-Alireza-Beiranvand-300x1 Image Courtesy – Getty image

அவரது இந்த கதையை மறக்கமுடியாமல் செய்யும் வகையில் போர்த்துக்கல்லுடனான உலகக் கிண்ண குழுநிலை ஆட்டம் இருந்தது. வீடியோ உதவி நடுவர் மூலம் போர்த்துக்கல்லுக்கு பெனால்டி வழங்கப்பட கிறிஸ்டியானோ ரொனால்டோ அதனை உதைக்க தயாரானார்.  

ஏற்கனவே கோல் பெற்றிருந்த ரொனால்டோ மேலும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்தபோதும் அவர் உதைத்த பந்தை அலிரேசா தடுத்து தனது அணியின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டார்.

ஜோன் ஒபி மிகேலின் மன உறுதி

உலகக் கிண்ணம் கடைசி கட்ட குழுநிலை போட்டிகளை எதிர்கொண்டபோது, தமக்கு பாரிய சவால் இருப்பதை நைஜீரியா புரிந்துகொண்டது. 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அந்த அணி லியோனல் மெஸ்ஸி மற்றும் செர்கியோ அகுவேரோ போன்ற வீரர்கள் இருக்கும் அணியை வீழ்த்த வேண்டும்.

 

 

அந்த சவாலில் வெற்றிபெற வேண்டும் என்றால் நைஜீரிய அணியின் தலைவரும் மத்தியகள வீரருமான ஜோன் ஒபி மிகேல் சோபிப்பது அவசியம். ஆர்ஜன்டீன அணியை மெஸ்ஸி முன்னிலை பெறச் செய்ய விக்டர் மோஸஸின் பெனால்டி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மார்கோஸ் ரோஜோவின் கோல் நைஜீரியாவை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் தனது தந்தை கடத்தப்பட்டிருப்பது பற்றி போட்டிக்கு பின்னரே மிகேல் கூறினார். கடத்தல்காரர்கள் மீட்புப் பணம் கேட்டிருப்பதோடு அது பற்றி வெளியே கூறினால் தந்தையை சுட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள்.

அந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தரக்கூடியது, மிகேல் அது பற்றி மௌனமாக இருந்து போட்டிக்கு முன்னர் தனது அணியினருக்கு அழுத்தம் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார். நைஜீரியா அந்தப் போட்டியில் 2-1 என தோற்றபோதும் மிகேலின் தந்தையை நைஜீரிய பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்க முடிந்தது.

John-Obi-Mikel-in-discussion-with-the-re Image Coutesy – Getty image

நான் கலக்கமடைந்திருந்தேன், போட்டியில் ஆடுவதற்கு உளரீதியாக நான் தயாராக இருக்கிறேனா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. நான் குழப்பம் அடைந்திருந்தேன். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, 180 மில்லியன் நைஜீரியர்களை கைவிட முடியாது என்பது எனக்குத் தெரியும். எனது நாட்டை முதன்மைப் படுத்தி சிந்தனையை ஒருநிலைப் படுத்தினேன். முக்கியமான போட்டியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இதுபற்றி பயிற்சியாளருடனும் (கெர்னொட் ரோஹ்ர்) பேசி அணியினரின் நினைப்பை திசை திருப்ப நான் விரும்பவில்லைஎன்றார் ஜோன் ஒபி மிகேல்.       

சர்தார் அகதி முகாமில் இருந்து தங்கப் பந்து வரை

மைதானத்தில் களைப்பில்லாமல் ஆடிய லூகா மொட்ரிச் உலகக் கிண்ணத்தில் தங்கப் பந்து விருதை தட்டிச் சென்றார். டியாமோ சக்ரப்பில் இருந்து ரியல் மெட்ரிட் வந்து தொடர்ச்சியாக மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களுக்குப் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொட்ரிச்சின் பயணம் சர்தாரில் இருக்கும் அகதி முகாமில் இருந்து நெடுந்தூரம் கொண்டது. அவரது பயணம் அந்த அகதி முகாமில் இருந்தே ஆரம்பமானது.  

 

1990களின் ஆரம்பத்தில் குரோஷிய சுதந்திரப் போர் வெடித்தபோது இடம்பெயர்ந்த பல வீரர்களும் குரோஷிய அணியில் உள்ளனர். அவர்களில் இவான் ரகிடிக், மரியோ மொன்ட்சுகிக் மற்றும் டேஜான் லவ்ரேன் போன்ற வீரர்களும் அடங்குகின்றனர். செர்பியப் படை முன்னேறி வந்தபோது ஆபத்தில் இருந்து தப்ப மொட்ரிச்சின் குடும்பம் கூட சர்தார் அகதி முகாமில் அடைக்கலம் பெற்றது. மொட்ரிச்சின் தாத்தா கூட போரில் கொல்லப்பட்டார்.  

Croatia-captain-Luka-Modric-300x169.jpgஉலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிவரை முன்னேறி அதில் தோற்று ஏமாற்றம் கண்டாலும் மொட்ரிச் இத்தனை தூரம் வந்த அவரது பயணம் வேதனைகள் நிரம்பியது.    

 

தொண்டு செய்யும் அதிசய சிறுவன்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் பெற்ற இரண்டாவது பதின்ம வயது வீரர் என்ற சாதனையுடன் கைலியன் ம்பாப்பே தலை நிமிர்ந்தபடியே உலகக் கிண்ணத்தை முடித்தார். இவ்வாறு கோல் புகுத்திய முதலாமவர் பிரேசில் ஜாம்பவான் பீலே என்பது ம்பாப்பேவின் புகழை அதிகரிக்க மற்றொரு காரணம். எதிரணி தற்காப்பு அரணை முறியடித்து பந்தை வேகமாக எடுத்துச் செல்லும் அவரது ஆட்டத்திறமை உலகக் கிண்ணத்தில் அனைவராலும் கவரப்பட்டது.    

 

 

அந்த 19 வயது வீரர் போட்ட கோல் குரோஷியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறை உலகக் கிண்ணத்தை முத்தமிட பெரிதும் உதவியது.  

அவரது ஆட்டத்திறமைக்கு அப்பால் தனது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சக வீரர் நெய்மார் போன்று மைதானத்தில் கீழே விழுந்து நாடகமாடுவது விமர்சனத்திற்கு உள்ளானது.

Kylian-Mbappe-4-300x169.jpgஇந்த விமர்சனங்களுக்கு அப்பால் அந்த பதின்ம வயது வீரர் உலகக் கிண்ணத்தில் தான் சம்பாதித்த பணத்தை பிரிமியர் டி கோர்டீ என்ற தொண்டு அமைப்புக்கு கொடுத்துவிட்டார். இந்த தொண்டு அமைப்பானது நோய்வாய்ப்பட்ட மற்றும் வலது குறைந்த சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி தொண்டு செய்கிறது. அந்த நற்பணியில் ம்பாப்பேவும் 2017 ஜுன் தொடக்கம் ஈடுபட்டு வருகிறார்.    

ம்பாப்பே உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு போட்டியிலும் 22,534 டொலர்களை ஈட்டியதாக கணிக்கப்படுகிறது. இது மேலதிக கொடுப்பனவுகளை தவிர்த்த தொகை மாத்திரமே. பிரான்ஸ் வெற்றிபெற்றதற்காக அவர் மேலும் 351,000 டொலர்களை மேலதிக கொடுப்பனவாக ஈட்டியுள்ளார்.   

ஜப்பானின் முன்மாதிரி

உலகக் கிண்ணத்தில் ஜப்பான் தனது முதல் போட்டியில் கொலம்பியாவை சந்தித்தபோது அந்த போட்டி நெருக்கடி கொண்டதாக இருக்கும் என்று நம்பியபோதும் கொலம்பியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பான் சிறப்பாக ஆடிய போட்டியை வென்றது.

Japanese-supporters-have-cleaned-the-staபோட்டிக்கு பின்னர் அரங்கில் இருந்த ரசிகர்கள் அங்கே இருக்கும் குப்பைகளை அகற்றுவதை பார்க்க முடிந்தது. இது முதல்முறையாக இருக்கவில்லை, குழுநிலை போட்டிகள் முழுவதிலும் இதனை காண முடிந்தது. ஜப்பான் அணி தோற்ற பெல்ஜியத்துடனான ஆடத்திலும் அந்த ரசிகர்கள் தனது பண்பை விட்டுவிடவில்லை.

இது ஜப்பான் ரசிகர்களோடு மாத்திரம் நின்றுவிடவுமில்லை, அந்த அணி வீரர்களும் அந்த பணியை செய்வதை புகைப்படம் காட்டுகிறது. ஜப்பான் நட்சத்திர வீரர்களும் தமது உடைமாற்று அறையை சுத்தமாக்கிவிட்டுச் செல்வதோடு மாத்திரமன்றி தம்மை உபசரிக்கும் ரஷ்யாவுக்கு நன்றி கூறும் குறிப்பை எழுதிவிட்டுச் செல்கிறார்கள்

 

 

தோல்விக்கு பின்னர் வேகமாக அரங்கிலிருந்து வெளியேறினால் ஜப்பானியர்களை யாரும் திட்டமாட்டார்கள். ஆனால் அந்த வீரர்கள் மைதானத்தில் தொடர்ந்து இருந்தார்கள், பலரும் நின்று ஊடகங்களுக்கு பேட்டிகளையும் வழங்கினார்கள்.

கிரிஸ்மனும் உருகுவேயர்களும்

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் அன்டோனியோ கிரிஸ்மன் ஊடக சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் அவர் தனது உடலில் போர்த்தி இருந்த தேசிய கொடி பிரான்ஸ் உடையதாக இருக்கவில்லை.

கிரிஸ்மன் உருகுவேயை விரும்புகிறார் என்பது தெரிந்தது. காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயை சந்தித்தபோது கிரிஸ்மன் இரண்டு கோல்களை போட்டு பிரான்ஸ் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். என்றாலும் அவர் அந்த போட்டியில் அதிகம் உணர்ச்சி பூர்வமாக வெற்றியை கொண்டாடவில்லை.

French-Striker-Antoine-Griezmann-300x172கிரிஸ்மன் 2005இல் ரியல் சொசிடாட் இளையோர் அணிக்கு தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி, 2009இல் தொழில்சார் கால்பந்தில் பங்கேற்று, பின்னர் 2014இல் அட்லடிகோ அணியில் இணைந்தார். உருகுவே நாட்டு பயிற்சியாளர் மார்டின் லசார்ட்டே கிரிஸ்மனின் திறமையைக் கண்டு நேராக முதல்தர அணியில் கார்லோ புயினேவுடன் ஆடச் செய்தார். சொசிடாட் அணியில் இந்த இருவருமே கிரிஸ்மனின் கால்பந்து வாழ்வில் அதிகம் தாக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர்.    

அட்லடிகோவில் கிரிஸ்மனுடன் ஒன்றாக ஆடும் உருகுவேயின் பின்கள வீரர் டியாகோ கொடினை, தனது மகளின் வழிகாட்டியாகவே அவர் கருதுகிறார்

 

 

நான் அதிகம் கொண்டாடவில்லை ஏனென்றால் எனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தது தொடக்கம் கால்பந்தில் நல்லது, கெட்டது பற்றி ஒரு உருகுவே நாட்டவர் தான் எனக்குக் கற்றுத் தந்தார். நான் உருகுவேயர்களை அதிகம் மதிக்கிறேன். நான் நண்பர்களுக்கு எதிராகவும் ஆடியிருக்கிறேன். எனவே, அது சாதாரணமான ஒன்று என்றும், கொண்டாட வேண்டியதல்லை என்றும் நான் நினைக்கிறேன்என்கிறார் அன்டோனியோ கிரிஸ்மன்.

தத்தெடுத்த நாட்டுக்கு எதிரான உதை

உலகக் கிண்ண போட்டிகளில் டெனிஸ் செரிசேவ் என்ற பெயர் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சயம் இருக்காது. ஜூலை 15 ஆம் திகதி வந்தபோது அந்தப் பெயர் அறிமுகமானது, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் எகிப்து அந்தப் பெயரை வேதனையுடன் நினைவில் வைத்திருக்கிறது.   

செரிசேவ் 1990 டிசம்பரில் நிஸ்னி நொவ்கொரோட்டில் பிறந்தார். ரஷ்ய அணியின் மத்தியகள வீரரான அவர் 5 வயதில் ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்தார். அவரின் தந்தை 1996 ஆம் அண்டு ஸ்போடிங் கிஜோன் அணிக்கு ஒப்பந்தமானதே அவர் ஸ்பெயின் செல்லக் காரணம். அது தொடக்கம் அங்கு வாழ்ந்த காலத்தில் செரிசேவ், ரியெல் மெட்ரிட் கால்பந்து அகடமியில் இணைந்து தன்னை பாதி ஸ்பானியனாக மாற்றிக் கொண்டார்.

Denis-Cheryshev-300x168.jpg16 அணிகள் சுற்று வந்தபோது ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது செரிசேவுக்கு உணர்வுபூர்வமானதாக இருந்தது. அந்தப் போட்டியில் 120ஆவது நிமிடத்தில் பெனால்டி ஷூட் அவுட்டுக்காக கோல் கம்பத்திற்கு அருகில் வந்தபோது செரிசேவுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் இருந்திருக்க வேண்டும். எப்படியாவது பந்தை வலைக்குள் புகுத்த வேண்டும் என்பதுவே அவரது இலக்காக இருந்திருக்கும். அவர் அதனைச் செய்து ரஷ்யாவை 4-3 என முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து இயாகோ ஆஸ்பாஸின் உதையை ரஷ்ய கோல்காப்பாளர் தடுத்ததை அடுத்து ரஷ்யா உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.