Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி

Featured Replies

பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி 

 

Online.gif
 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

IMG_20180317_002316.jpg

இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

IMG_20180317_002318.jpg

இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

 

இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை  முகம் சுளிக்க வைத்துள்ளது.

http://www.virakesari.lk/article/31697

  • தொடங்கியவர்

எதுவும் எப்படியும் நடக்கலாம்

 

 

எதுவும் எப்படியும் நடக்கலாம்

 

 
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று (16) இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான படம் ஒன்று.

http://tamil.adaderana.lk/news.php?nid=2717&mode=head

  • தொடங்கியவர்

கொழும்பு வீரர்கள் ஓய்வறை கண்ணாடிக் கதவை உடைத்து நொறுக்கியது வங்கதேச வீரரா? கிளம்பியது புதிய சர்ச்சை

 

 
bangladeshjpg

வங்கதேச வீரர்கள் அறைக்கண்ணாடிக் கதவு சேதம்.   -  படம். | ஏ.எஃப்.பி.

நேற்று கொழும்புவில் இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நடைபெற்ற முத்தரப்பு போட்டி அசிங்கமான நிகழ்வுகளைக் கொண்டதானது, தெரு கிரிக்கெட் போன்ற காட்சிகள் சர்வ சகஜமாக நடந்தேறியது, இதோடு நில்லாமல் கொழும்பு மைதானத்தில் உள்ள வங்கதேச வீரர்கள் ஓய்வறைக் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கிய நிலையிலான புகைப்படமும் தற்போது விவகாரத்தை ஊதிப்பெருக்கியுள்ளது.

நோ-பால் சர்ச்சைப் பெரிதாகி வீரர்களுக்குள் மோதலாகி பிறகு வெற்றி பெற்றவுடன் அசிங்கமான வங்கதேச பாம்பு டான்ஸாகி, குசல் மெண்டிஸ் அதனைக் கண்டு கொதிப்பாகியது போக தற்போது வங்கதேச வீரர்கள் அல்லது வீரர்தான் கொழும்பு வீரர்கள் ஓய்வறைக் கண்ணாடிக் கதவை உடைத்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

ஆட்ட நடுவரான கிறிஸ் பிராட் துப்பறியும் நிபுணராகி சிசிடிவி பதிவை பார்வையிட்டுள்ளார். கேண்டீன் பணியாளர் ஒருவர் இதற்குக் காரணமான வீரர் பெயரை கிறிஸ் பிராடிடம் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கதேச நிர்வாகம் இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

ஆட்டத்தின் போது கடைசி ஓவரில் நடந்த அசிங்கமான சம்பவத்தில் நோ-பால் கொடுக்கவில்லை என்பதற்காக மஹ்முதுல்லா நடுவரிடம் வாக்குவாதம் புரிய குளிர்பானம் எடுத்து வந்த வங்கதேச பதிலி வீரர் இலங்கை வீரர்களிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இலங்கை வீரர் அவரைத் தள்ளினார். மேலும் அவருடன் எல்லைக்கோடு வரை சில இலங்கை வீரர்கள் சென்றனர். இதனால் கொதிப்படைந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நிலைமையை கேப்டனாகச் சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை விடுவது போல் ரிசர்வ் அம்பயருடன் வாக்குவாதம் புரிந்தார். பிறக் ஆட வேண்டாம் வந்துவிடுங்கள் என்பது போல் மஹ்முதுல்லா, ரூபல் ஹுசைனை நோக்கிச் செய்கை செய்தார்.

ஆனால் கலீத் மஹ்மூத் ஆட்டம் தொடர வேண்டும் என்று கூற மஹ்முதுல்லா சிக்ஸருடன் வெற்றி பெற்றா, அத்தோடு முடித்தால் பரவாயில்லை எனலாம், ஆனால் அனைத்து வங்கதேச வீரர்களும் ஒன்று கூடி பாம்பு டான்ஸ் என்று கும்மியடித்தனர், இது குசால் மெண்டிஸின் கோபத்தை கிளற அவர் ஏதோ கத்தியபடியே கையைக் காண்பித்து பேசினார், அவரை தமிம் இக்பால் சமாதானப்படுத்தினார், போதாதென்று வங்கதேச பெஞ்ச் வீரர் நுருல் ஹசன் தன்பங்குக்கு ஏதோ கோபமடைய கடுப்பான மஹ்முதுல்லா அவரை அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினார்.

ஸ்கொயர் லெக் அம்பயர் நோ-பால் என்று செய்கை செய்து பிறகு ஆலோசனை செய்து நோ-பால் முடிவு விலக்கிக் கொள்ளப்பட்டதுதான் இந்த அனைத்து அசிங்கங்களுக்கும் மூலக் காரணமாக அமைந்தது.

http://tamil.thehindu.com/sports/article23278355.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய ஆட்டத்தில் முதலில் "அசிங்கமான" பாம்பு டான்ஸ் ஆடியது " அகில தனஞ்சய".

 

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் அணி மீது விசாரணைகளை ஆரம்பித்தது ஐ.சி.சி

 

 
 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மீது விரிவான விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ban.jpg

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கிய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கள் மோதின.

இப் போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி 2 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெறணே்டிய தருணத்தில் இரு அணி வீரர்களுக்குமிடையில் சிறு வாக்குவாதமேற்பட்டது.

சிறிது நேரத்தில் குறித்த வாக்குவாதம் சமாதானமடைந்த நிலையில், பின்னர் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆறு ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கையடைந்தது.

29249877_10209218283448875_6730939786988

இதையடுத்து பங்களாதேஷ் அணி வீரர்கள் மைதானத்தில் வெற்றிக்களிப்பில் ஈடுட்டனர். 

இதையடுத்து பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகள் நொருக்கப்பட்டன.

29314712_10209218283608879_6795546390157

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் இவ்வாறான செயற்பாடு தற்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31708

  • தொடங்கியவர்

கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்

Untitled-1-100-696x464.jpg
 

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டி, தெரு கிரிக்கெட் போன்ற காட்சிகள் சர்வ சகஜமாக நடந்தேறியதுடன், கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப் பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது. அத்தோடு பிரேமதாஸ மைதானத்தில் உள்ள பங்களாதேஷ் அணியின் ஓய்வறைக் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கிய நிலையிலான புகைப்படமும் தற்போது விவகாரத்தை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளது.

நோ-போல் சர்ச்சை பெரிதாகி வீரர்களுக்குள் மோதலாகி பிறகு வெற்றி பெற்றவுடன் பாம்பு நடனமாடி, குசல் மெண்டிஸ் அதனைக் கண்டு கொதிப்பாகியது போக தற்போது வங்கதேச வீரர்கள் அல்லது வீரர்தான் ஓய்வறைக் கண்ணாடிக் கதவை உடைத்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (16) இடம்பெற்ற தீர்மானமிக்க டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஓவரில் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

இதன்படி, போட்டியின் மத்தியஸ்தராக கடமையாற்றிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ் ப்ரோட் துப்பறியும் நிபுணராகி CCTV பதிவுகளை பார்வையிட்டுள்ளார். இதில் குறித்த அறையில் இருந்த பணியாளர் ஒருவர் இதற்குக் காரணமான வீரரின் பெயரை போட்டி மத்தியஸ்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் 3ஆவது தரப்பினர் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள போட்டி மத்தியஸ்தர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து CCTV பதிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை இன்று மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்பிக்குமாறும் மைதான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, மைதான அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், CCTV காணொளியில் வீரர்களின் ஓய்வறைய சேதப்படுத்தியது தொடர்பில் எந்தவொரு காட்சிகளும் பதிவாகவில்லை எனவும், அதற்கு முன்னரே CCTV கெமரா சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

நேற்றைய இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றிபெற 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இலங்கை அணிசார்பில் பந்து வீசிய இசுறு உதான முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சர் பந்தாக வீசினார். இரண்டாவது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோ-போல் கொடுக்கவில்லை. ஆடுகளத்தில் இருந்த மஹ்மதுல்லா நடுவர்களிடம் நோ-போல் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனால் கொதிப்படைந்த அணித்தலைவர் சகிப் அல் ஹசன் நிலைமையை சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல நான்காவது நடுவரிடம் மோசமான முறையில் வாக்குவாதம் செய்தார். இதனால் போட்டி சற்று தாமதமாகியிருந்தது.

இதன்போது மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அருகில் வந்த பங்களாதேஷ அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் துடுப்பாட்ட வீரர்களை போட்டியின் இடையே மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்படி செய்திருந்தால் அது ஆட்டத்தைக் கைவிட்டதாகக் கருதப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் பங்களாதேஷ் அணியின் முகாமையாளர் காலித் மஹ்மூத், மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு சைகை செய்ய போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.

மறுபுறத்தில் மஹ்மதுல்லா நடுவர்களிடம் நோ-போலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச உதிரி வீரர் குளிர்பானத்துடன் களத்துக்குள் வந்தார், அவர் வேண்டுமென்றே இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை வீரர்கள் அந்த உதிரி வீரரை மைதானத்திலிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

எனினும் இந்த பிரச்சினைகள் முடிய, பங்களாதேஷ் அணி 5ஆவது பந்தில் மஹமதுல்லாவின் சிக்ஸருடன் வெற்றிபெற்றது.

இத்தோடு முடிந்ததா? மஹ்மதுல்லா வென்றவுடன் வங்கதேச வீரர்கள் மைதானத்துக்கு நடுவே ஓடிவந்து குழுமி அதே பாம்பு நடனத்தை ஆவேசமான முறையில் வெளிப்படுத்தியிருந்தனர்.

 

இதனையடுத்து இலங்கை வீரர்கள் அமைதியான முறையில் மைதானத்தை விட்டுச் செல்லும் போது குசல் மெண்டிஸை வங்கதேச வீரரொருவர் வம்புக்கு இழுக்க, அங்கும் பதற்றம் ஏற்பட்டது. இதன்போது குசல் மெண்டிஸ் குறித்த வீரரை நோக்கி கோபமாகச் சைகை செய்ய தமிம் இக்பால் அவரை சமாதானப்படுத்தினார்.

எனினும் மைதானத்திலிருந்து வெளியேறிய பங்களாதேஷ் வீரர்கள் உடைமாற்றும் அறையின் கண்ணாடிகளை உடைத்து, அங்குள்ள உடைமைகளை சேதப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கோபத்தினால் பங்களாதேஷ் வீரர்கள் இவ்வாறு உடமைகளை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், பங்களாதேஷ; வீரர்களினால் சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கான பணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அதுமாத்திரமின்றி, அண்மையில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, முத்தரப்பு ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருந்ததுடன், குறித்த போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் நாகப் பாம்பு படமெடுக்கும் அபிநய நடனத்தை ஆடி இலங்கை வீரர்களை கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நடனத்தை இலங்கையிலும் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் வீரர்கள், ஆவேசத்துடன், பகைமையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமையை காணமுடிந்ததுடன், நேற்று போட்டியை பார்வையிட வந்த இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையில் கலகலப்பு ஏற்படுவதற்கான காரணமாகவும் இது அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பங்களாதேஷ் அணி வீரர்களின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை மாத்திரமல்லாது முழு உலகத்தையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மொத்தத்தில் தெரு கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போன்றுதான் இந்த சம்பவங்கள் பிரதிபலித்திருந்ததுடன், கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில், ”கடைசி கட்டத்தில் உணர்ச்சி வசமாகிவிட்டது. நோ -போல் குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றோம். இந்த சம்பவத்தை வைத்து வேறு எதையும் தவறாக உருவாக்கும் எண்ணம் இல்லை. வெற்றிக்கு பிறகு எங்கள் கோபம் இல்லாமல் போய்விட்டது” என்றார்.

இதேநேரம் அணித்தலைவர் சகிப் அல் ஹசன் கூறும்போது, ”அதிக உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இந்தப் போட்டி அமைந்துவிட்டது. இலங்கைக்கும், எங்களுக்கும் மைதானத்தில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நண்பர்கள். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். ஒரு தலைவராக நான் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த போட்டிகளில் கவனமாக இருப்பேன்” என்றார்.

எனினும், இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறிய பிறகு போட்டி மத்தியஸ்தரின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.சி.சியினால் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் அல் ஹசனுக்கு ஐ.சி.சி கடுமையான தண்டணை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஐ.சி.சி தனது இறுதி முடிவை இன்று அறிவிக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் கொதிப்படைந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நிலைமையை கேப்டனாகச் சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை விடுவது போல்

http://tamil.thehindu.com/sports/article23278355.ece?homepage=true

அணித்தலைவர் சகிப் அல் ஹசன் நிலைமையை சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல

http://www.thepapare.com/

 

இரண்டு ஊடகங்களிலும் ஒரே வசன நடை..... 

  • தொடங்கியவர்

அபராதத்துடன் தப்பித்தார் வங்கதேச கேப்டன்! இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதி!

 

 
shakib81

 

இலங்கை - வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 போட்டியில் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக இரு வங்கதேச வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி.

வங்கதேச இன்னிங்ஸின்போது கடைசி ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசப்பட்டது. இரண்டாவதாக வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் என சிக்னல் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் இதை மற்றொரு நடுவர் அங்கீகரிக்க மறுத்தார். கடைசியில் அந்தப் பந்து நோ பால் அல்ல என முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரிங்ஸ் கொண்டு வந்த வங்கதேச சப் ஃபீல்டர்ஸூக்கும், இலங்கை ஃபீல்டர்ஸூக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பினரையும் நடுவர்கள் சமாதானம் செய்ய முயலும்போது, பவுண்டரி லைன் அருகே கடும் கோபத்தில் இருந்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பெவிலியன் திரும்புமாறு தனது பேட்ஸ்மேன்களை அழைத்தார்.

இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அவர்கள் வெளியேறியிருந்தால் வங்கதேசம் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். எனினும், ஒருவழியாக கேப்டன் ஷாகிப் சமாதானம் ஆனார். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினார்கள். பின்னர் பேட் செய்த மஹ்முதுல்லா பவுண்டரி, சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் வங்கதேச வீரர்களின் ஓய்வறைக் கதவு உடைக்கப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வறையின் கண்ணாடிக் கதவை, வங்கதேச வெற்றிக்குப் பிறகு அந்த அணி வீரர்களில் சிலர் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட், சிசிடிவி வீடீயோக்களின் பதிவைக் கோரியுள்ளார். தங்கள் வீரர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால் அதற்குரிய இழப்பீடை வழங்குவதாக வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

bang1.jpg

நடுவர்களின் தீர்ப்பை மதிக்காமல் வீரர்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி கடுமையான தண்டனை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் நாளை நடக்கும் இறுதிச்சுற்று ஆட்டத்தைத் தவறவிடவும் வாய்ப்பு உண்டு என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் ஷாகிப் அல் ஹசனுக்குக் குறைவான தண்டனையே கிடைத்துள்ளது.

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் சப் ஃபீல்டர் நுருல் ஹசன் ஆகிய இருவருக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா ஒரு அபராதப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற நடத்தையை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவேண்டும் என்கிற பரபரப்பில் இரு அணி வீரர்களும் இருந்தார்கள். ஆனால் இரு வீரர்களின் நடத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர்கள் எல்லையை மீறியுள்ளார்கள். நான்காவது நடுவரும் கள நடுவர்களும் இந்தப் பிரச்னையில் தலையிடாவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும் என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/17/shakib-nurul-fined-for-breaching-code-of-conduct-2882537.html

  • தொடங்கியவர்

கவலை வெளியிட்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

 
 

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடு தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கவலை தெரிவித்துள்ளது.

BCB.jpg

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபை தமது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது எனவும் தமது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31724

பங்களாதேஷ் வீரர்கள் இருவருக்கு எதிராக ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை

 

பங்களாதேஷ் அணியின் தலைவர் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 வீத அபராதத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை விதித்துள்ளதுடன் இருவருக்கும் ஐ.சி.சி தரப்படுத்தல் புள்ளிகளில் ஒவ்வொன்று கழிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. மேலும் குறிப்பிட்டுள்ளது.

bangaladsh.jpg

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையில் 70 ஆவது சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு -20 தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் இடையில் குழப்பநிலை தோன்றியது.

இதையடுத்து குறித்த குழப்பம் தொடர்பில் ஐ.சி.சி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்போது குறித்த இருவரும் ஐ.சி.சி.யின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் சபை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைவர் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோரை ஐ.சி.சி அதிகாரிகள் இன்று காலை சந்தித்த போது குற்றத்தை இருவரும் ஒத்துக்கொண்ட நிலையிலேயே இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டியின் 19.2 ஆவது ஓவரின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை மைதானத்தை விட்டு வருமாறு சைகை காட்டிய குற்றத்திற்காக அணித் தலைவர் ஷகீப் அல் ஹசனிற்கு ஒரு  மறை புள்ளியும் இலங்கை அணித் தலைவர் திஸர பெரேராவுக்கு விரல் நீட்டி பேசிய காரணத்திற்காக நூருல் ஹசனிற்கும் ஒரு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி வெற்றிக்களிப்பில் வீரர்கள் ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடி கதவ நொருக்கி தேதப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகையும் கிரிக்கெட் ஆர்வலர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31721

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.