Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார்

Featured Replies

வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார்
 
 

image_1d421c210d.jpg

புங்குடுதீவில் படுகொலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வித்தியாவின்-சகோதரிக்கு-அரச-பணி-ஜனாதிபதி-வழங்கினார்/175-214882

  • கருத்துக்கள உறவுகள்

 

மாணவி வித்தியாவின் சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!

on: April 24, 2018
மாணவி வித்தியாவின் சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி அவர்கள் வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 Post Views: 727
 

இது அரசியல் விளையாட்டு ஒரு பக்கம் பாதிக்கபட்ட குடும்பம் நன்மை பெறுவது ஆறுதலாக இருந்தாலும் வடகிழக்கில் நேற்றும் கிராமசேவகர் வீட்டுக்குள்ள புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம் பண்ணும் துணிவில் இன்னமும் உள்ளாளவில் அங்கு இயல்பு வாழ்க்கை கேள்வி குறியே ? 

போலிஸ் என்பது வித்தியா குற்றவாளிகளை போன்ற பலரை  தப்பிவிப்பதுக்கு மட்டுமே அங்கு குந்தி இருக்கினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவிகள்,வேலைவாய்ப்புகள் கிடைப்பது சந்தோசமான விடயம்தான். ஆனால் இதற்குள் ஜனாதிபதி ஏன் மூக்கை நுழைத்து பகிரங்கப்படுத்த வேண்டும்? அரசியல் லாபம் தேடுகின்றார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பதவிகள்,வேலைவாய்ப்புகள் கிடைப்பது சந்தோசமான விடயம்தான். ஆனால் இதற்குள் ஜனாதிபதி ஏன் மூக்கை நுழைத்து பகிரங்கப்படுத்த வேண்டும்? அரசியல் லாபம் தேடுகின்றார்களா? 

கொடுத்த  வாக்கை நிறைவேற்றும்நல்ல   ஜனாதிபதி அவர். அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிறார். இதற்கு பதிலாக பத்து சிங்களவர் வேலை நியமனம் பெற்று வடக்கிற்கு வருவார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.