Jump to content

காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி


Recommended Posts

காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் Image captionஉயர்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். 30 நாட்கள் கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ராஜா விசாரித்துவருகிறார். முன்னதாக, இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த சென்னை நகரக் காவல் துறை, "மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம் ஏதாவது ஒன்றில், ஒரே ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்திக்கொள்ளலாம்" என்று கூறியிருந்தது.

இதையடுத்து, இதற்கு முன்பாக சென்னை மெரீனா கடற்கரையில் கடைசியாக போராட்டம் நடத்துவதற்கு எப்போது அனுமதி அளிக்கப்பட்டது என பதில் அளிக்கும்படி காவல் துறையிடம் நீதிபதி கேட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு மெரீனாவில் போராட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்றும் விழிப்புணர்வுப் பேரணிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பிறகு சில சட்டவிரோதமான போராட்டங்கள் மெரீனா கடற்கரையில் நடைபெற்றதால், அங்கு போராட்டங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜா, "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமாகிவிட்டதா? திருவிழா நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்பதால், அந்த விழாக்களை நடத்தக்கூடாது என காவல்துறை சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

மேலும், போராட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவற்றைத் தடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.

இந்த வழக்கில் நாளையோ, நாளை மறுநாளோ தீர்ப்பு வழங்கப்படுமென நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-43879997

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.