Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’

Featured Replies

  • உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE
 

உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE

உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழ்வு 10 மணிக்கு ஈழநாதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.யோகேந்திரநாதன் தலைமையில் ஆரம்பானது. முதலில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமை உரை, வரவேற்புரை என்பன நடைபெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபைகளின் முதல்வர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷரீன் சரூர், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோரின் சிறப்புரைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் சிறப்புரை நடைபெற்றது.

தொடர்ந்து உதயன் குழுமத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் உரையாற்றினார்.

பிற்பகல் 1 மணிக்கு நிகழ்வு நிறைவுற்றது.

 

media-share-0-02-06-42c7add19a6ee2278ca5 உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

media-share-0-02-06-28bd6fb5a721587c5fad நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

 

20180502_111814.jpg யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் உரையாற்றுகின்றார்.

 

media-share-0-02-06-95ab27c53c5d96c21f64 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகின்றார்.

 

media-share-0-02-06-5a4a2a9556469da954a5 உதயன் குழுமத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் உரையாற்றுகின்றார்.

 

media-share-0-02-06-259752749d0e9d2ff019 உதயன் குழுமத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் உரையாற்றுகின்றார்.

 

media-share-0-02-06-6693316fa5ed9c79a548 நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

 

media-share-0-02-06-fd0e095ba3913f47711c நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

http://newuthayan.com/story/89696.html

  • தொடங்கியவர்

யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள்

IMG_4265.jpg?resize=800%2C600
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனம் மீது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நினைவாக இந்நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

 

உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் யோகேந்திரநாதன் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது

இதன்போது ஊடகத்துறை மற்றும் உதயன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலியான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,ஈஸ்வரபாதம் சரவணபவன,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடகநிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

IMG_4215.jpg?resize=800%2C600IMG_4220.jpg?resize=800%2C600IMG_4226.jpg?resize=800%2C600IMG_4230.jpg?resize=800%2C600IMG_4234.jpg?resize=800%2C600IMG_4236.jpg?resize=800%2C600IMG_4243.jpg?resize=800%2C600IMG_4250.jpg?resize=800%2C600IMG_4254.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/77394/

சொன்னாப்போல கேட்க மறந்திட்டேன் இந்த நிகழ்வுக்கு மாநகரசபையிலை உங்களுக்கு வாக்களிச்ச தோழர்மாரை கூப்பிட்டனீங்களோ .??

அவயின்ர கையால உந்த படங்களுக்கு மாலை போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பகலவன் said:

சொன்னாப்போல கேட்க மறந்திட்டேன் இந்த நிகழ்வுக்கு மாநகரசபையிலை உங்களுக்கு வாக்களிச்ச தோழர்மாரை கூப்பிட்டனீங்களோ .??

அவயின்ர கையால உந்த படங்களுக்கு மாலை போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நாங்கள் : ஏன் அவையளை கூப்பிடவில்லை 
இவையள்: அவையள் எங்கன்ட நண்பேன்டா.....தோழேன்டா
நாங்கள் :tw_tounge:tw_sleepy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.