Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணு­வத்­தினர் மீதான முத­ல­மைச்­சரின் குற்­றச்­சாட்டும் யதார்த்த நிலையும்

Featured Replies

இரா­ணு­வத்­தினர் மீதான முத­ல­மைச்­சரின் குற்­றச்­சாட்டும் யதார்த்த நிலையும்

 

வடக்கு கிழக்குப் பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் ஆதிக்கம் தொடர்ந்து வரு­வ­தாக பல்­வேறு தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­ வ­ரு­கின்­றனர். படை­யினர் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டு­வ­தா­கவும் வியா­பார செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

அப்­ப­கு­தியில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான பெரு­ம­ள­வான நிலங்­களில் படை­யினர் தொடர்ந்தும் நிலை கொண்­டுள்­ள­துடன் ஆதிக்கம் செலுத்த முனை­வ­தா­கவும் விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணு­வத்­தி­னரின் இத்­த­கைய செயற்­பாடு தொடர்பில் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார்.

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்கு தமது இருப்பை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக பல்­வேறு தந்­திரோ­பா­யங்­களை கையாள்­கின்­றனர் என்று குற்­றம்­சாட்­டி­யுள்ள முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இரா­ணுவம் இங்கு பாது­காப்­பிற்­காக நிலை­கொண்­டி­ருக்­க­வில்லை. வணி­க­நோக்­கு­ட­னேயே இரா­ணுவம் இயங்­கு­கின்­றது என்­பதே உண்மை. இரா­ணுவம் மட்டு­மல்ல கடற்­படை , விமா­னப்­படை­களும் இவ்­வா­றான வணிக வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளன என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இரா­ணுவம் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணியை வட­மா­கா­ணத்தில் பிடித்து இன்றும் தன் கைவசம் வைத்­தி­ருக்­கி­றது. இது­வரை சிறிது சிறி­தாக கைய­ளித்து வரும் காணிகள் தனி­யா­ருக்கு சொந்­த­மா­ன­வை­யாகும். இவற்றை விட பண்­ணைகள், அரச கட்­ட­ட­ங்கள், சன­ச­மூக நிலை­யங்கள், அரச காணிகள், காடுகள் போன்ற பல­வற்­றையும் படை­யினர் பிடித்து வைத்­துள்­ளனர். காட்­டுப்­பாங்­கான பிர­தே­சங்­களில் எமது வளங்கள் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன. கொழும்பில் வழங்கும் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் குறிப்­பிடும் அள­விற்கு அதி­க­மாக கருங்­கற்கள் வெட்டி எடுக்­கப்­ப­டு­கின்­றன. இவை இரா­ணு­வத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இடம்­பெ­று­கின்­றன. பாரம்­ப­ரிய மீன­வர்­களின் மீன்­பிடி இடங்கள் தெற்கில் இருந்து வந்­த­வர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரி­வித்­துள்ள அவர், சட்ட கோட்­பாட்டு கற்­கை­க­ளுக்­கான தெற்­கா­சிய மையம் என்ற நிறு­வனம் கடந்த மாதம் ஓர் கைநூலை வெளி­யிட்­டுள்­ளது. அந்த கைநூலில் உள்ள விட­யங்­க­ளையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வடக்கு, கிழக்கில் உண­வ­கங்கள், சுற்­றுலா, புக­லி­டங்கள், வர­வேற்பு மண்­ட­பங்கள், சிற்­றுண்­டிச்­சா­லைகள் போன்­ற­வற்றை இரா­ணு­வத்­தினர் நடத்­து­கின்­றனர். சுற்­றுலாப் பய­ணத்­தொ­ழிலில் ஈடு­ப­டுதல், ஓய்வு நேரக் கேளிக்­கை­களை நடத்­துதல், விவ­சாய நிலங்கள், தோட்­டங்கள், பண்­ணை­களை இயக்­குதல், சிவில் பாது­காப்பு என்ற போர்­வையில் தலை­யீ­டு­களை மேற்­கொள்ளல் போன்ற விட­யங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ளனர். சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் கீழ் தமிழ் இளைஞர், யுவ­தி­களை இரா­ணு­வத்­தினர் வேலைக்கு அமர்த்தி விவ­சாயம், கால்­நடை வளர்ப்பு, ஓடு உற்­பத்தி போன்ற பல­வற்றில் ஈடு­ப­டுத்­து­கின்­றனர் என்றும் முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அண்­மைக்­கா­லத்தில் இரா­ணு­வத்­தினர் தமது நட­வ­டிக்­கை­களை தந்­தி­ரோ­பா­ய­மாக முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றனர். வீடு­களை கட்­டிக்­கொ­டுப்­பது, கிணறு வெட்­டிக்­கொடுப்­பது, குளங்கள், கடல் ஓரங்கள் போன்­ற­வற்றை சுத்­தப்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது வாழ்­வா­தா­ரங்­களை வழங்­கு­வது, வெசாக் பண்­டிகை போன்ற தினங்­களில் கௌத­மரின் பெயரைச் சொல்லி களி­யாட்­டங்­க­ளையும் உண­வ­கங்கள் போன்­ற­வற்றை நடத்­து­வதால் மக்­களை தம்பால் திருப்பும் முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது ஒரு ஆபத்­தான நட­வ­டிக்­கை­யாகும். இவற்றை தந்து தந்து எம்மை தம்பால் ஈர்த்­து­வ­ரு­கின்­றார்கள். இதற்கு அவர்கள் எதிர்­பார்க்கும் விலை தம்மை தொடர்ந்து இங்­கி­ருக்க எம்­மக்கள் குரல்­கொ­டுக்­க ­வேண்டும் என்­ப­தே­யாகும். இவ்­வா­றான நிலையில் படை­யி­னரை வெளி­யேற்றாவிட்டால் வடக்கு, கிழக்­கா­கி ­விடும் என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

முத­ல­மைச்­சரின் இந்த கருத்­துக்­க­ளி­லி­ருந்து படை­யினர் வடக்கு, கிழக்கில் சிவில் நிர்­வாக விட­யங்­களில் எவ்­வாறு தலை­யீடு செய்­கின்­றார்கள் என்­பதை அறிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது. உண்­மை­யி­லேயே யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் வடக்கு, கிழக்கில் படை­யி­னரின் தலை­யீ­டுகள் தலை­வி­ரித்­தா­டி­யி­ருந்­தன. எத்­த­கைய முடி­வு­க­ளையும் படைத்­த­ரப்­பி­னரே மேற்­கொண்­டி­ருந்­தனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்­குக் ­கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இத்­த­கைய நிலை­மையில் பெரும் மாற்றம் ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அன்று பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­க­மா­னது தொடர்ச்­சி­யாக வடக்கு, கிழக்கு மக்­களை இரா­ணுவ ஆதிக்­கத்­திற்குள் வைத்­தி­ருக்­கவே விரும்­பி­யது. இடம்­பெ­யர்ந்து மீள்­கு­டி­யேறிய மக்கள் மீதும் புனர்­வாழ்வு பெற்று வெளி­யே­றிய முன்னாள் போரா­ளிகள் மீதும் கண்­கா­ணிப்பு செலுத்­தப்­பட்­டது. படை­யி­னரின் புல­னாய்­வுத்­து­றை­யினர் இவர்­களை மிகத் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வந்­தனர்.

வடக்கு, கிழக்கில் கிரா­மங்­களில் நிகழ்­வொன்று நடத்­தப்­ப­ட­வேண்­டு­மானால் அது குறித்து படை­யி­ன­ருக்கு அறி­வித்து அனு­மதி பெற­வேண்­டிய நிலைமை காணப்­பட்டு வந்­தது. வீட்டில் திரு­மண வைபவம் ஒன்­றினை நடத்­து­வ­தா­னாலோ அல்­லது சிறிய வைபவம் ஒன்றை நடத்­து­வ­தாக இருந்­தாலோ படைத்­தரப்­பி­ன­ருக்கு அறி­விக்­க­வேண்­டிய சூழ்­நிலை காணப்­பட்­டது. இதே­போன்றே இரா­ணு­வத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் சிவில் பாது­காப்பு திணைக்­க­ள­மா­னது முன்னாள் போரா­ளிகள் உட்­பட 3000க்கும் மேற்­பட்ட தமிழ் இளைஞர் யுவ­தி­களை வேலைக்கு அமர்த்­தி­யது. சிறுவர் பள்­ளி­களில் இத்­த­கை­ய­வர்­களை கல்வி கற்­பிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இவ்­வா­றாக அனைத்­தை­யுமே இரா­ணு­வ­மயப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. பொது­மக்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு படை­யினர் தொடர்ந்தும் நிலை­கொண்­டி­ருக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.

இந்த நிலை­யில்தான் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து நிலை­மை­களில் மாற்றம் ஏற்­படும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்து காத்­தி­ருந்­தனர். இரா­ணு­வத்­தி­னரின் ஆதிக்கம் படிப்­ப­டி­யாக குறை­வ­டையும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. வியா­பார, விவ­சாய நட­வ­டிக்­கை­களில் இருந்து படைத்­த­ரப்­பினர் வில­கிக்­கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் படைத்­த­ரப்­பி­னரின் செயற்­பாட்டில் சில முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் இடம்­பெற்­ற­போ­திலும் தமிழ் மக்கள் எதிர்­பார்த்­த­தைப்­போன்று படைத்­த­ரப்­பி­னரின் ஆதிக்கம் குறை­வ­டை­ய­வில்லை. படைத்­த­ரப்­பினர் ஆக்­கிர­மித்­தி­ருந்த பொது­மக்­களின் காணிகள் படிப்­படி­யாக விடு­விக்­கப்­படும் என்று கரு­தப்­பட்­ட­போ­திலும் ஆரம்­பத்தில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் விடு­விக்­கப்­பட்ட போதிலும் தற்­போது அந்த நட­வ­டிக்­கை­களில் மந்­த­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யில்தான் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரா­கவும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் போராட்­டங்­களை ஆரம்­பித்­தனர். தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி புதுக்­கு­டி­யி­ருப்பு, கேப்­பாப்­பு­லவு பகு­தி­யிலும் இர­ணை­தீ­விலும் தொடர்ச்­சி­யான போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த நிலை­யில்தான் வட­மா­காண முத­ல­மைச்­சரும் இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீ­டுகள் தொடர்பில் தனது விச­னத்தை தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டுகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்பல மும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார். வெசாக் பண்­டிகை மூலம் யாழ்ப்­பா­ணத்தை பௌத்த மய­மாக்கும் செயற்­பாட்டில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் குற்­றம் ­சு­மத்­தி­யுள்ளார்.

இதற்கு இரா­ணு­வத்தின் யாழ்.மாவட்ட கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி பதி­ல­ளித்­தி­ருந்­த­துடன் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செயற்­பாட்­டையும் விமர்­சித்­தி­ருந்தார். மாவட்­ட ­கட்­டளைத் தள­ப­தியின் செயற்­பா­டா­னது அர­சியல் கட்­சி­களை விமர்­சிக்கும் விட­ய­மாக உள்­ளது என்று வட­மா­காண சபை உறுப்­பினர் பொ. ஐங்­க­ர­நேசன் குற்றம் சாட்டியிருந்தார்.

 இதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். கட்­டளை தலை­மை­யகம் பதில் அறிக்­கை­யொன்றை விடுத்­தி­ருக்­கின்­றது. இரா­ணு­வத்தின் யாழ்.கட்­ட­ளைத் ­த­ள­பதி எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யையும் விமர்­சிக்­க­வில்லை. மாறாக இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக சில அர­சியல் கட்­சி­களின் பிர­மு­கர்­களால் மக்கள் மத்­தியில் பகி­ரங்­க­மாக முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள விச­மப்­பி­ர­சா­ரங்­க­ளுக்கு பதில் கொடுத்­துள்ளார். இது இரா­ணு­வத்தின் பொறுப்­பு­ வாய்ந்த உயர் அதி­காரி என்ற வகையில் இவரின் கட­மை­யாகும் என்று அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றாக இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீ­டுகள் அர­சியல் செயற்­பா­டு­க­ளிலும் புகுந்­துள்­ள­மையை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டுகள் இவ்­வாறு தொடர்­வது நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் விட­யத்தில் பாத­க­மான செயற்­பா­டாக அமைந்­து­விடும். எனவே இந்த விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது உரிய வகையில் செயற்படவேண்டும். முதலமைச்சரின் குற்றச்­சாட்டுக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமை­யாததாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-08#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.