Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று விமர்சித்த ட்ரம்ப்

Featured Replies

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று விமர்சித்த ட்ரம்ப்

 
trump

அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப்.   -  படம். | நியுயார்க் டைம்ஸ்

புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப் பாதுகாப்பு மற்றும் எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார்.

 

அப்போது அவர் பேசும்போது,  "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில்  இருக்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் விலங்குகள். அவர்களை விரைவில் நாட்டிலிருந்து தூக்கி ஏறிவோம்” என்று கூறினார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜேர்ட் போலிஸ் கூறும்போது,  "புலம் பெயர்ந்தவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் விலங்குகள் அல்ல. குற்றவாளிகள் அல்ல" என்றார்.

கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி ப்ரவுன், "ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் யூதர்கள் மீதான ட்ரம்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக இத்தகைய கருத்தை ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/world/article23911531.ece

  • கருத்துக்கள உறவுகள்

‘குடிபெயர்ந்தவர்கள் மனிதர்களல்ல, மிருகங்கள்’ - ட்ரம்ப்

 

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களுள் சிலரை 'மிருகங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப். கலிபோர்னியாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த குடியரசு கட்சியினருடனான சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

 

blobid1526697267157.jpg

 

எல்லை சுவர், சட்டத்தை அமுல்படுத்துதல் குறித்ததான விவாதத்தின்போது, “நமது நாட்டிற்குள் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களல்ல; மிருகங்கள். நாம் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம்," என்று டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.

 

எல்ஸ்வெடார் நாட்டோடு நெருங்கிய தொடர்புடைய, அமெரிக்காவை மூலமாக கொண்ட எம்எஸ்13 என்ற குழுவினரை ட்ரம்ப் எப்போதும் 'மனிததன்மையற்றவர்கள்', 'கொலைபாதகர்கள்' என்று கூறுவதுண்டு. அடிக்கடி அவர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக, பொதுப்படையாக 'குடிபெயர்ந்தவர்கள்' என்று அவர் கூறிவிடுகிறார்.

 

“ட்ரம்ப்பின் சமீபத்திய உரைகள், யூதர்களுக்கு எதிராக நாஸிக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்போல் காணப்படுகின்றன” என்று ஜனநாயக கட்சியினர் கண்டித்துள்ளனர்,

 

“குடிபெயர்ந்தவர்கள், மிருகங்களல்ல, குற்றவாளிகளல்ல, போதை பொருள் கடத்துபவர்களல்ல, பாலியல் வன்கொடுமை செய்பவர்களல்ல. அவர்கள் மனிதர்கள்தாம்” என்று கொலராடாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜாரட் பொலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

“குடிபுகுதலை குறித்து, குற்றங்களை குறித்து, கலிபோர்னியாவின் சட்டங்களை குறித்து அதிபர் ட்ரம்ப் பொய்யுரைக்கிறார்” என்று கலிபோர்னியா ஆளுநர் ஜெரி பிரௌன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

http://www.thesubeditor.com/news/world/3585/migrants-are-not-humans-they-are-animals--drump

  • கருத்துக்கள உறவுகள்

அது பல நூற்றாண்டு முன்பு வந்து 
ஈவிரக்கமின்றி செவ் இந்தியர்களை கொன்றவர்களை 
பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.