Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும்

Featured Replies

வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும்

 

தென்னிலங்கையில் எதிர்ப்பலை

எம்.சி.நஜி­முதீன்

வடக்கில் நேற்று முன்­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­த­லுக்கு தென்­னி­லங்கை அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வரு­கி­றது. அது குறித்து பலரும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து

வரு­கின்­றனர். மேலும் வடக்கில் நினை­வேந்தல் அனுஷ்­டிப்­பதில் தவ­றில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை அங்கு நினை­வேந்­தலை ஏற்­பா­டு­செய்த வட­மா­காண சபையை உட­ன­டி­யாக கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மற்றும் வட மாகாண கல்­வி­ய­மைச்சர் கந்­தையா சர்­வேஷ்­வரன் ஆகி­யோர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தென் மாகாண சபை உறுப்­பினர் கிரி­ஷாந்த புஷ்­ப­கு­மார தெரி­விக்­கையில்,

பயங்­க­ர­வாத அமைப்­பான விடு­தலைப் புலிகள் உறுப்­பி­னர்­களை நினை­வு­கூர்­வதை எவ­ரா­வது நியா­யப்­ப­டுத்­து­வார்­க­ளாயின் அவர்­களின் புத்­தியை பரி­சீ­லிக்க வேண்டும். மேலும் அர­சி­ய­ல­மைப்பை பாது­காப்­ப­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர், பயங்­க­ர­வாத அமைப்பைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களை நினை­வு­கூர்­வதை நியாப்­ப­டுத்­தி­யி­ருப்­பது அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும்.

வட மாகாண கல்­வி­ய­மைச்சர் பாட­சா­லை­களில் கொடியை அரைக்­கம்­பத்தில் பறக்க விடு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். எனினும் அவ்­வா­றான உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்கு அவ­ருக்கு எவ்­வித உரி­மையும் இல்லை. எனவே உட­ன­டி­யாக வட மாகாண சபையை கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சிறிய குற்றம் இளைத்­த­வர்­களை சிறையில் அடைக்க முடியுமாக இருந்தால், இவ்வாறு அரசியலமைப்பை மீறி பாரிய குற்றம் இளைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-05-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் தொடரும்.. இந்தப் பயங்கரவாத உச்சரிப்புடன் கூடிய சனநாயக விரோத... சிங்கள இனவெறி மேலாதிக்க நோக்கிலான அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒரு நிறுவனப்படுத்திய எதிர்ப்பை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியிலும் வெளிப்படுத்துவதன் ஊடாக..

சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் இலங்கைத் தீவில் நல்லிணக்கம் காண முடியாது என்பதை உறுதிப்படுத்துவதன் வாயிலாக.. தமிழர் தேசம்.. சர்வதேச அனுசரணையுடன் தான் தன் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுவதும்.. உணரப்படுத்தப்படுவதும் தமிழ் மக்களின் நீடித்த அமைதியான நிம்மதியான வாழ்க்கைக்கும் எதிர்கால சந்ததியின் நிம்மதிக்கும் இன்று அவசியமாகிறது.

அரசியல்.. சமூக.. சமய பேதமின்றி தமிழ் மக்கள் அனைவரும்.. இப்படியான சிங்கள அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை உலகின் முன் நிறுத்த.. தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சரியாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு சில அமைப்புக்களுக்கு.. அல்லது நபர்களுக்கு எதிரான செயல் என்று கருதி மெளனித்திருக்கக் கூடிய விடயமே அல்ல. 

இதை இப்படியே மெளனமாகக் கடந்து போக நினைத்தால்.... தமிழர்கள் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்காது.?

  • தொடங்கியவர்

வடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும்

01-231420665dbb10f7449b90e0f8a0e648f234b222.jpg

 

கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை; விக்கினேஸ்வரனின் கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா எனவும் கேள்வி

(ஆர்.யசி)

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா? வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரி­யுள்­ளனர். 

வடக்கின் நிலை­மை­களை எந்த வகை­யி­லேனும் கட்­டு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வட­மா­காண சபையை கலைத்து நாட்டின் அமை­தியை சீர­ழிக்கும், பிரி­வி­னையை தூண்டும் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர்.  

வடக்கில் கடந்த 18ஆம் திகதி இடம்­பெற்ற நினை­வேந்தல் நிழல்­வுகள் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து தமது நிலைப்­பாட்­டினை கூறும் போதே அவர்கள் இதனை தெரி­வித்­தனர்.

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி பார­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன கூறு­கையில்.

வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் - பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா என்­பதை உட­ன­டி­யாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும். வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என அனைத்­துமே அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­றதா என்­ப­தையும் கூற வேண்டும். இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வாய் திறக்­காது அமைதி காத்தால் இந்த நாடு மீண்டும் தீப்­பற்றி எரி­யக்­கூ­டிய நிலைமை ஏற்­படும்.

பயங்­க­ர­வா­தி­களை கொண்­டாடும் , அவர்­க­ளுக்­காக நினை­வேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்­டு­மே­யாகும். உலகில் வேறு எந்­த­வொரு நாட்­டிலும் அவ்­வாறு பயங்­க­ர­வா­திகள் போற்­றப்­ப­டு­வ­தில்லை. பிர­பா­க­ர­னுக்கு மரி­யாதை செலுத்தி யுத்­தத்தை முடித்த மஹிந்த ராஜபக் ஷவை கள்வன் என கூறு­கின்­றனர். அர­சாங்கம் இன்று பிரி­வி­னை­வா­தி­களின் பக்கம் நின்றே தீர்­மானம் எடுக்­கின்­றது. ஆகவே அர­சாங்­கத்தை சாடு­வதில் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை. மக்கள் அடுத்த கட்­ட­மாக என்ன தீர்­மானம் எடுக்­கப்­போ­கின்­றனர் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும். மக்கள் இனியும் இந்த ஆட்­சி­யினை அனு­ம­தித்து நாட்­டினை துண்­டாட இட­ம­ளிக்­கப்­போ­கின்­ற­னரா அல்­லது ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முன்­வ­ரு­வார்­களா என்­பதை நாமும் பார்த்­து­கொண்­டுள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

பீரிஸ் கருத்து

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஜி.எல்.பீரிஸ் கூறு­கையில்,

இன்று நாட்டில் மிகப்­பெ­ரிய இன­வாத சக்­திகள் தலை­தூக்­கி­யுள்­ளன. வடக்கில் தமிழ் பிரி­வி­னை­வாதம், கிழக்கில் முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் என நாட்டின் மக்­களை நாச­மாக்கும் சக்­தி­களை அர­சாங்­கமே உரு­வாக்­கி­யுள்­ளது. வட­மா­காண முத­லை­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் சிவா­ஜி­லிங்கம் போன்றோர் இன்று முன்­வைக்கும் கருத்­துக்கள் மிகவும் பார­தூ­ர­மா­னவை.

வடக்கு கிழக்கு தனி இராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­ப­டு­வது, சர்­வ­தேச தலை­யீ­டுகள், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது போன்ற கருத்­துக்­களை அவர்கள் தைரி­ய­மாக முன்­வைக்கக் கூடிய நிலை­மையை இன்று அர­சாங்கம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. ஒவ்­வொரு ஆண்டும் புலி­களை நினைவு கூரவும் நினை­வுத்­தூபி அமைக்­கவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த செயற்­பா­டுகள் அனைத்­தையும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏனைய அமைச்­சர்­களும் வேடிக்கை பார்த்து வரு­கின்­றனர்.

நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்டில் பாரிய அபி­வி­ருத்தி, மற்றும் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­தினோம். ஆனால் இந்த அர­சாங்கம் கடந்த மூன்று ஆண்­டு­களில் மீண்டும் பழைய நிலை­மை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. மீண்டும் வடக்கில் இன­வாத சக்­திகள் தலை­தூக்கி வடக்கு கிழக்­கினை துண்­டாடும் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளது.

புலிகள் வடக்­கிற்கு தேவை என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக கூறும் நிலைமை வடக்கில் உரு­வா­கி­யுள்­ளது. வட­மா­காண சபையில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டு­கின்­றது, பாட­சா­லை­களில், கடை­களில், வீடு­களில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டுகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிறைவேற்று அதிகாரங்கள் இன்றும் ஜனாதிபதி கைகளில் உள்ளது. எனவே வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகாரங்களை கொண்டு உடனடியாக வடமாகாண சபையை கலைக்க வேண்டும். அத்துடன் நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்கினேஸ்வரன்,மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-21#page-1

சரி அப்புறம்.

நீங்கள் உயிரிழந்த சிங்கள ராணுவத்தை வைத்து அரசியல் நடாத்துங்கோ நாங்கள் உயிரிழந்த புலிகளை வைத்து அரசியல் செய்கிறோம்.

நீங்களும் இந்த கோடு தாண்டி வரக்கூடாது நாங்களும் வரமாட்டோம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.