Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் )

Featured Replies

நேரில் நன்றி கூறிவில்லை என்பதற்காக மக்களை உதாசீனம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் ( காணொளி ஆதாரம் )

 

 
 

யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு,கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட மக்கள் தமது காணிகளை விடுவித்துக்கொடுக்குமாறு மன்றாடடத்துடன் விடுத்த கோரிக்கையைஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சரான மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம் சுவாமிநாதன் பொருட்படுத்தாது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

 

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வொன்று மே மாதம் 26 ஆம்திகதியான இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கலந்துகொண்டிருப்பதை இன்றுடன் 452 ஆவது நாளாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவுகிராம மக்கள், அமைச்சரை நேரில் சந்தித்து, தமது காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடடுவதற்காக கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்திற்குமுன்னால் திரண்டிருந்தனர்.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

கரைத்துரைப்பற்று பிரதேச செயலக கட்டடத்தின் வாசலிலேயேவழிமறித்து நின்ற நிலமீட்பு போராட்ட மக்கள், பல மணி நேரங்கள் அங்கேயேகாத்திருந்ததுடன், நிகழ்வு முடிந்து வெளியல் வந்த தமிழ்தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆ.புவனேஸ்வரன்மற்றும் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை செயலகத்தை விட்டு வெளியேறவிடாதுதடுத்து நிறுத்தினர்.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சர்டி..எம்.சுவாமிநாதனையும், கேப்பாபுலவு நில மீட்புபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் நுழைவாசலில்நின்று வழிமறித்து தமது காணிப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறுகெஞ்சினர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இதன்போது பிரதேச செயலகத்தின் வாயிலில் அமர்ந்திருந்த அரசியல்வாதிகளைகண்ட அமைச்சர் என்ன இங்கேயும் வழிமறிக்கிறீர்களா என்று கேட்டவாறு மக்களுக்கு அருகில்சென்றார்.

இதன்போது, தங்களது காணிகளை இராணுவத்தினரிடம்இருந்து மீட்பது தொடர்பில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என கேப்பாபுலவு மக்கள் கவலையுடன்அமைச்சரிடம் முறையிட்டனர். தொடர்ச்சியாக மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், உங்களுடையமந்திரியை கேக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை காட்டினார்.

எனினும் மக்கள் விடாது தமது அதிருப்தியையும், கோரிக்கைகளையும்அமைச்சரிடம் தொடர்ச்சியாக தெரிவித்தனர். எனினும் மக்களுக்கு சரியான பதில்வழங்கமுடியாத நிலையில் பொலிசார் மற்றும் அமைச்சரின் மெய் பாதுகாலர்களையும்பயன்படுத்தி மக்களை தள்ளிவிட்டு அமைச்சர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்த சம்பவங்களை காணொளியாக பதிவுசெய்துகொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் ஒளிப்பதிவு செய்யவேண்டாம்எனவும் அமைச்சர் பணித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கானதேர்தல் பிரச்சார காலத்தில் முள்ளியவளை பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவாக நில மீட்புப் போராட்டத்திற்குதலைமை தாங்கிவரும் ஒருவரும் முன்வந்து, மக்கள் முன் காணியில் ஒருபகுதிவிடுவிக்கப்பட்டதற்காக நன்றிதெரிவிக்கவில்லை என்பதற்காக இன்று அவர்களை கதைக்க வேண்டாம் என்றும் கடிந்தகொண்டஅமைச்சர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கடும் தொனியில் பணித்தார். அரசாங்கத்தில்பொறுப்புவாய்ந்த அமைச்சராக இருக்கும் டி.எம்.சுவாமிநாதனின் இந்த செயலுக்கு அங்கிருந்தபலரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

http://www.ibctamil.com/politics/80/101154?ref=bre-news

  • கருத்துக்கள உறவுகள்

6_A07_FE6_F-_F89_F-4906-87_BF-_C3_F84_DA

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் முடிந்ததை செய்கின்றார்...அவ்வளவுதான்....

மக்கள் அவருக்கு பச்சை கொடியை காட்டி வரவேற்று பச்சை இலையால் செய்த பூமாலை போட்டு ,நெற்றியில் ஒரு பச்சை பொட்டு வைத்து ,கவி பாமாலை எழுதி வரவேற்றிருக்கலாம்....
மனுசன் காணியை உடனே விடுவித்திருக்கும்....tw_tounge:

ஐக்கியத்தின் நாயகனே
ஐக்கிய லங்காவின் விடிவெள்ளியே
ஐக்கியதேசிய கட்சியின் தூணே
ஐக்கியத்தின் பாதுகாவலனே
ஐக்கிய தமிழரின்  ஆசானே
வருக வருக காணியை தருக தருக.....

  மனிதர்களின் எதிர்பார்ப்பு நன்றி சொல்ல வேணும் என்பது....tw_tounge:

பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கொள்ளையடித்த மக்கள் பணத்திலும், மக்களின் வரிப்பணத்திலும் சொகுசுகளை அனுபவித்தபடி மாதாந்தம் கொடுக்கப்படும்  சம்பளத்துக்குரிய வேலைய செய்ய வக்கில்லாமல் வாழும் பிச்சைக்கார சுவாமிநாதன் தான் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.