Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா?!" கதறும் அற்புதம்மாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

``ப்பா, என்னப்பா நடக்குது? காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா? மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்!''

அற்புதம்மாள்

 27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களில் மீண்டும் அற்புதம்மாளே அழைத்தார். 

மகன் பேரறிவாளனோடு அற்புதம்மாள்

``நான் வெளியூருக்கு வந்திருக்கேன்ப்பா. இங்கே கேபிள் கனெக்‌ஷன் கிடையாது. அதனால், டி.விகூட பார்க்க முடியலை. காலையில்தான் புள்ளைகள் போனில் விஷயத்தைச் சொன்னாங்க. என்ன பதிலுப்பா இது? ஒரு ஜனாதிபதி சொல்லக்கூடிய பதிலா இது? நேத்துவரை என் புள்ளை ஒருநாள் திரும்பி வருவான்னு நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையையும் இந்த அரசு கொன்னுடுச்சே. தப்பு செய்யாத குழந்தையை இந்த அரசாங்கத்துக்கு காவு கொடுத்துட்டு மருகிக்கிட்டுக் கெடக்குறேன். ரெண்டு மாசம் பரோலில் வந்திருந்தப்பவும் அவன் நண்பர்கள் எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்க. 'இது என் பொண்ணுடா. ப்ளஸ் டூ போறா. இவன் என் பையன் காலேஜ் படிக்கிறான்'னு ஒவ்வொருத்தரும் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அப்போ நான் மட்டும் சந்தோஷமா இல்லேப்பா. 'ஏம்மா ஒரு மாதிரி இருக்கே?'னு அறிவு கேட்டான். 'ஒண்ணுமில்லேப்பா. உடம்புக்கு சுகமில்லே'னு சமாளிச்சுட்டேன். 26 வருஷமா மக்க மனுசரோடு பழகாம, திடீர்னு எல்லா மகிழ்ச்சியையும் அனுபவிச்சுட்டு திரும்பவும் ஜெயிலுக்குள்ளே புள்ளை ஏங்குவானேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சு.

பரோல் முடிஞ்சு போகும்போது காவல்துறை அதிகாரிகள், 'இந்த 60 நாளில் எத்தனையோ தலைவர்களும் பொதுமக்களும் வந்து போனங்க. ஆனால், ஒரு சின்னப் பிரச்னைகூட உங்க பையன் மூலமா வரலை. ஒரு கைதியால் சிறையிலும், பரோலில் வந்திருக்கும்போதும் இப்படி பிரச்னை இல்லாமல் இருக்கிறது ரொம்ப ஆச்சர்யம்மா. உங்க பையனை நல்லா வளர்த்துருக்கீங்க'னு சொல்லிட்டுப் போனாங்க. அப்படிப்பட்ட புள்ளையால் இந்த நாட்டுக்கே பிரச்னையாகிடும்னு இந்த அரசாங்கம் பயப்படறது எந்த வகையில் நியாயம்?

என் புள்ளை அவன் இளமை முழுவதையும் இழந்துட்டான். இதுக்கு மேலே இழக்கிறதுக்கு என்ன இருக்கு? அவனால் பிரச்னை வரும். வில்லங்கமாகும்னு. வெளியில் விடமுடியாதுன்னு பயந்தீங்கன்னா, இந்த அரசாங்கத்துக்கிட்ட நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள்ளையைக் கொன்னுடுங்க. மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும். நான் கொஞ்ச நாளைக்குப் புலம்பிட்டிருப்பேன். பைத்தியக்காரி மாதிரி தெருத் தெருவா சுத்திட்டிருப்பேன். அதனால், யாருக்கு என்ன இழப்பு? உங்க அரசாங்கமும் உங்க நாடும் நிம்மதியா இருந்துட்டுப் போகட்டும். இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா” 

தொண்டை அடைக்க வெடித்து அழுகிறார் அற்புதம்மாள். அந்த அழுகுரல் இந்த அரசாங்கத்தையும் ஆள்பவர்களையும் உறக்கத்திலும் மிரட்டும்!  

https://www.vikatan.com/news/politics/127771-instead-they-could-have-hanged-my-son-arputhammal.html

  • கருத்துக்கள உறவுகள்

உன் மனதின் கூக்குரலும் ஓலமும் ஊனை உருக்குதும்மா. உன் உள்ளத்தில் ஒவ்வொரு முறையும் நம்பிக்கை ஒளி ஏற்றி மீண்டும் மீண்டும் அணைத்திடும் இந்தக் கொடுப்பாதக ( சனநாயக ! ) அரசின் கீழ் வாழ்வதே மரண வலியம்மா. நீ எங்கள் ஊருக்கு வந்தபோது உன்னுடன் எடுத்த நிழற்படம் என் நடுவீட்டில் - வாழ்நாள் முழுதும் பிரசவ வலியிலேயே  வாழும் தாயின் சின்னமாய். ராஜீவ்காந்தி கொலைக்குப் பழியேற்று ஏதோ உயிர்தான் சிறையில் இருக்க வேண்டும் என்றால், நீ பெற்ற மகனுக்கு பதிலாய் உற்ற மகனாய் நான் செல்கிறேனம்மா. நான் வாழ்வை அனுபவித்தவன். உன் பிள்ளை இனிதான் பெற்றோரோடும் உற்றோரோடும் வாழ்வைத் தொடங்க வேண்டும். என் போன்று  நிறையப் பிள்ளைகளை சிறைக்கு வெளியே பெற்றவள் நீ. உணர்ச்சியில் நடைமுறைச் சாத்தியமற்றதைப் புலம்பத்தான் முடிகிறது. கையறு நிலையில் வேறு என்னம்மா செய்ய ?

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக் கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள்!

21.jpg

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரிய மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில், பேரறிவாளனைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என அவரது தாயார் அற்புதம்மாள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு அனுப்பிய மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரின் இந்தச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஜூன் 14) செய்தியாளரிடம் பேசிய அவர், “27 ஆண்டுகளைக் கடந்து போராடி வருகிறேன். என் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டனர். இவ்வளவு பெரிய தண்டனைக்கு உரியவர் அல்லர் என் மகன் என்பதைப் பலரும் கூறிவருகின்றனர். அவர் மீது சின்ன குறையைக்கூட எந்தச் சிறை அதிகாரியாலும் சொல்ல முடியாது. நல்லவனாக இருக்கிறான் என் மகன்.

27 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டனர், போதும் என்று ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தியே தெரிவித்துள்ளார். பாஜக அரசாங்கம் ஏன் தண்டிக்க விரும்புகிறது என்பது எனக்குப் புரியவில்லை. ராஜீவ் மரணம் எங்களுக்கும் வருத்தமான ஒன்றுதான். ஆனால், என் மகன் கொலைகாரன் அல்ல. அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ மாறிமாறிப் பேசியது. தற்போது 27 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தண்டனையை அனுபவித்துவிட்டான்.

மத்திய அரசு பதில் சொன்னால், நாங்கள் முடிவெடுக்கத் தயாராக இருக்கிறோம். ஏழு பேர் விடுதலையில் முனைப்பாக இருக்கிறோம் என்று சமீபத்தில்கூடத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

குடியரசுத் தலைவர் இந்த வழக்கில் இப்போது வருவது ஏன்? குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் என அனைத்துமே பாஜக அரசுதானா என நினைக்கத் தோன்றுகிறது. ஏன் இந்த விளையாட்டு? அவர்களின் அரசியலுக்கு நானும் எனது மகனும் பயன்பட்டது போதும். எங்களைக் கொன்றுவிட்டால்? உண்மையில், எங்களுக்கு வாழ விருப்பமில்லை. அடுத்து நான் மனு அளித்தால், எனது மகனைக் கொன்றுவிடுங்கள் என்றுதான் மனு அளிப்பேன்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

இதற்கிடையே, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (ஜூன் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றுக் கடந்த 27 வருடங்களாகச் சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

மாநில அதிமுக அரசு இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய 19.2.2014 அன்றே முடிவு எடுத்து மத்திய அரசின் கருத்தையும் கேட்டிருந்த நிலையில், ஏறக்குறைய நான்கு வருடத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று விடுதலையை நிராகரித்து இருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவு.

குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படி, மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் விசாரிக்கும் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்படவில்லை.

ஆனாலும், தமிழக அரசின் அமைச்சரவை முடிவிற்கு மத்திய அரசு கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் மூலம் மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பது, உள்நோக்கம் கொண்டதாகவும் விடுதலை செய்வதை சிக்கலாக்குவதாகவும் தோன்றுகிறது. பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் பிரச்சினையில், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “தமிழக அரசின் அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றும், “27 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

https://minnambalam.com/k/2018/06/16/21

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உன் மனதின் கூக்குரலும் ஓலமும் ஊனை உருக்குதும்மா. உன் உள்ளத்தில் ஒவ்வொரு முறையும் நம்பிக்கை ஒளி ஏற்றி மீண்டும் மீண்டும் அணைத்திடும் இந்தக் கொடு பாதக ( சனநாயக ! ) அரசின் கீழ் வாழ்வதே மரண வலியம்மா. நீ எங்கள் ஊருக்கு வந்தபோது உன்னுடன் எடுத்த நிழற்படம் என் நடுவீட்டில் - வாழ்நாள் முழுதும் பிரசவ வலியிலேயே  வாழும் தாயின் சின்னமாய். ராஜீவ்காந்தி கொலைக்குப் பழியேற்று ஏதோ உயிர்தான் சிறையில் இருக்க வேண்டும் என்றால், நீ பெற்ற மகனுக்கு பதிலாய் உற்ற மகனாய் நான் செல்கிறேனம்மா. நான் வாழ்வை அனுபவித்தவன். உன் பிள்ளை இனிதான் பெற்றோரோடும் உற்றோரோடும் வாழ்வைத் தொடங்க வேண்டும். என் போன்று  நிறையப் பிள்ளைகளை சிறைக்கு வெளியே பெற்றவள் நீ. உணர்ச்சியில் நடைமுறைச் சாத்தியமற்றதைப் புலம்பத்தான் முடிகிறது.கையறு நிலையில் வேறு என்னம்மா செய் ?

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலயே பேரறிவாளன் தான் பாவியிலும் பாவி ....ஒரு சின்ன தவறினால் அவரது வாழ்க்கையே முடிந்து போய் விட்ட்து

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.