Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்

Featured Replies

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்

 

-சத்­ரியன்

இப்­போது இந்தத் திட்­டமும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்­றி­யி­ருக்­கி­றது.

இந்தச் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருப்­பது இந்­திய அர­சாங்கம். வடக்கு, கிழக்கில் வீடு­களை அமைக்கும் பணி சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இது தான் இந்தச் சர்ச்­சையின் அடிப்படை

 

 வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 40 ஆயிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்கும், அர­சாங்­கத்தின் திட்டம் மீண்டும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது.

முன்­ன­தாக, 65 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை பிரான்ஸின் ஆர்­சிலர் மிட்டல் நிறு­வ­னத்­துடன் செயற்­ப­டுத்­து­வ­தற்கு, அமைச்சர் சுவா­மி­நாதன் எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­தி­ருந்தார்.

உலோக வீடு­களை அமைத்துக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்­தது. இதற்­காக மாதிரி வீடு­களும் யாழ்ப்­பா­ணத்தில் அமைக்­கப்­பட்­டன.

ஆனால், உலோக வீடுகள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்­காது என்றும், அவை அதிக வெப்பம் கொண்ட யாழ்ப்­பா­ணத்தின் சுவாத்­தி­யத்­துக்கு ஏற்­ற­தல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்புத் தெரி­வித்­தது.

அந்த எதிர்ப்­புக்­க­ளையும் மீறி உலோக வீட்டுத் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வதில், அமைச்சர் சுவா­மி­நா­தனும், ஐ.தே.க. அமைச்­சர்­களும் அதீத அக்­கறை காட்­டினர்.

எனினும், கல்­வீ­டுகள் தான் அமைக்க வேண்டும் என்று கூட்­ட­மைப்பு விடாப்­பி­டி­யாக நின்று எதிர்ப்புத் தெரி­வித்­ததால், வேறு­வ­ழி­யின்றி அந்தத் திட்டம் கைவி­டப்­பட்­டது.

இதனால், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 65 ஆயிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்கும் திட்டம் பின்­தள்­ளப்­பட்­டது என்­பதை மறுக்க முடி­யாது.

இப்­போது இந்தத் திட்­டத்தைச் செயற்­ப­டுத்தும் பொறுப்பு சீன ரயில்வே பெய்ஜிங் பொறி­யியல் குழும நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிறு­வனம் தான், மண்­ச­ரி­வினால் மலை­ய­கத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக 10 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை செயற்­ப­டுத்­த­வுள்­ளது.

பது­ளையில் சீன நிறு­வனம், நவீன தொழில்­நுட்­பங்­க­ளுடன் அமைத்த மாதிரி வீட்டைப் பார்­வை­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நான்கு எம்.பிக்­களைக் கொண்ட குழு, அது குறித்து திருப்தி தெரி­வித்­தி­ருந்­தது.

அதை­ய­டுத்து, இந்த திட்­டத்தை செயற்­ப­டுத்­து­மாறு, அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார்.

இந்­த­நி­லையில், இப்­போது இந்தத் திட்­டமும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்­றி­யி­ருக்­கி­றது.

இந்தச் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருப்­பது இந்­திய அர­சாங்கம். வடக்கு, கிழக்கில் வீடு­களை அமைக்கும் பணி சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இது தான் இந்தச் சர்ச்­சையின் அடிப்­படை.

வடக்கு, கிழக்கு பகு­தி­களில் தனக்கு எதி­ரான சக்­திகள் எந்த வகை­யிலும் தலை­யீ­டுகள் செய்­வ­தையோ, பலம் பெறு­வ­தையோ இந்­தியா விரும்­ப­வில்லை.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், யாழ்ப்­பா­ணத்­துக்­கான ஏ-9 நெடுஞ்­சா­லையைப் புன­ர­மைக்கும் பணியை சீன நிறு­வ­னமே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அது இந்­தி­யா­வுக்கு கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பல சந்­தர்ப்­பங்­களில், சீனாவின் மூலம் வடக்கு, கிழக்கில் நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருந்த திட்­டங்­களை இந்­தியா தனது இரா­ஜ­தந்­திர அழுத்­தங்­களின் ஊடாக நிறுத்­தி­யி­ருந்­தது.

ஆனாலும், இந்­தி­யாவின் கையை மீறிச் சென்­றி­ருக்­கி­றது இந்த 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் விவ­காரம்.

சீன நிறு­வ­னத்­துக்கு இந்தத் திட்­டத்தை செயற்­ப­டுத்தும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து இலங்கை அரசின் உயர் அதி­கா­ரி­க­ளிடம் இந்­தியா கவலை தெரி­வித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அந்த செய்­தி­களின் படி, இந்­தியா இதனை பாது­காப்பு ரீதி­யான கரி­ச­னை­யாக முன்­வைக்­க­வில்லை என்று தெரி­கி­றது.

ஆனால், நாசூக்­காக தனது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதா­வது, இலங்­கையில் முன்­னெப்­போதும், வீடு­களை அமைத்­தி­ராத நிறு­வ­னத்­திடம் இந்தத் திட்டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்றும், வடக்கு கிழக்­குக்கு பரிச்­ச­ய­மில்­லாத நிறு­வ­னத்தின் மூலம் இந்தத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்றும் இந்­தியா கரி­சனை தெரி­வித்­துள்­ளது,

கால­நிலை, மண் ஆய்­வுகள் ஏதும் மேற்­கொள்­ளப்­ப­டாமல் கேள்­விப்­பத்­திரம் கோரப்­ப­டாமல் இந்தத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது குறித்தும் இந்­தியா சந்­தேகம் எழுப்­பி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அதை­விட, இந்தத் திட்­டத்­துக்­கான சீனத் தொழி­லா­ளர்கள் அதி­க­ளவில் பயன்­ப­டுத்தக் கூடிய சாத்­தி­யங்கள் இருப்­பதும் இந்­தி­யாவின் கவ­லைக்கு முக்­கி­ய­மான காரணம்.

அண்­மையில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, வெளி­நாட்டுச் செய்­தி­யாளர் சங்­கத்தின் உறுப்­பி­னர்­களைச் சந்­தித்த போது, அவ­ரிடம் பாது­காப்பு அச்­சு­றுத்தல் பற்­றிய கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு அவர், தற்­போது இலங்­கைக்குப் பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏதும் இல்லை என்றும், ஆனால் பாது­காப்புக் கரி­ச­னைகள் பல இருப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

அவர் குறிப்­பிட்ட பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய விட­யங்­களில், இந்­தி­யாவில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான இலங்கை அக­திகள் இருப்­பது முத­லா­வது.

இலங்­கையில் சுமார் 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரை­யான இந்­தி­யர்கள் இருப்­பது இரண்­டா­வது.  இலங்­கையில் 12 ஆயிரம் சீனத் தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­வது மூன்­றா­வ­தாகும். 

அதா­வது, இலங்­கையில் பெரும் எண்­ணிக்­கை­யான சீனத் தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­வ­தையும் ஒரு பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய விட­ய­மா­கவே, பாது­காப்புத் தரப்பு கரு­து­கி­றது. அவர்­களை பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்­க­ளாக கரு­தா­வி­டினும், பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்கை இரா­ணுவத் தள­ப­தியே, சீனத் தொழி­லா­ளர்­களை பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக சுட்­டிக்­காட்டும் போது, இந்­தியா அதனை எவ்­வாறு எடுத்துக் கொள்ளும் என்­பதை ஊகித்துக் கொள்­வது கடி­ன­மல்ல.

வடக்கு, கிழக்கில் அதி­க­ளவு சீனத் தொழி­லா­ளர்கள் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வதை இந்­தியா தனக்­கான பாது­காப்பு அச்­சு­றுத்­த­லா­கவே கருதக் கூடும்.

இது, இந்­தி­யாவின் எதிர்ப்­புக்கு முக்­கிய கார­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், சீன நிறு­வ­னத்­திடம் இந்த திட்டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருப்­பது சரி­யான நட­வ­டிக்­கையே என்று அமைச்சர் சுவா­மி­நாதன் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 165,000 வீடுகள் தேவைப்­ப­டு­கின்­றன. இதனைக் கருத்தில் கொண்டே, 2 ஆண்­டு­களில் வீடு­களை அமைத்துத் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள சீன நிறு­வ­னத்­திடம் இந்தப் பணி ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

சீன நிறு­வ­னங்­களின் மீது இலங்­கையில் பர­வ­லாக ஒரு ஈர்ப்பு தோன்­றி­யி­ருப்­பதை யாரும் நிரா­க­ரிப்­ப­தற்­கில்லை. காரணம், குறு­கிய காலத்­துக்குள் பணி­களை முடித்துக் கொடுப்­பது தான்.

இழுத்­த­டிப்புச் செய்­யாமல் வேலை­களை முடித்துக் கொடுக்கும் சீன நிறு­வ­னங்­களை பொது­வாக கட்­டு­மானப் பணி­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு பலரும் விரும்­பு­கி­றார்கள்.

அந்தக் கார­ணத்தை தான், அமைச்சர் சுவா­மி­நா­தனும் முன்­வைத்­தி­ருக்­கிறார்.

இந்த வீட­மைப்புத் திட்­டத்­தினால் வடக்கு -கிழக்கைச் சேர்ந்­த­வர்கள் 7000 பேருக்கு வேலை­வாய்ப்புக் கிடைக்கும் என்­பதும், அவ­ரது நியா­யங்­களில் ஒன்று.

இந்தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது, சீன நிறு­வ­னத்தைக் கொண்டு, நிறை­வேற்­று­வது என்ற உறு­தியில் அர­சாங்கம் இருக்­கி­றது என்­பதை அமைச்சர் சுவா­மி­நா­தனின் கருத்தில் இருந்து உணர முடி­கி­றது.

ஆனால் இந­தி­யாவோ, இதனை அவ்­வா­றான ஒன்­றாகப் பார்க்­க­வில்லை. வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான ஒரு திட்டம் முறை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கரி­ச­னையும், இந்­தி­யா­வுக்கு இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்த விவ­கா­ரத்தை எப்­படி அணுகப் போகி­றது என்று தெரி­ய­வில்லை.

இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டு­களை எல்லா வழி­க­ளிலும் எதிர்த்து வரு­கி­றது இந்­தியா. அந்த வகையில், இந்த வீட­மைப்புத் திட்­டத்தில் சீனாவின் தலை­யீட்­டையும், இந்­தியா எதிர்க்­கி­றது.

பொது­வாக, இந்­தியா போன்ற நாடுகள் இத்­த­கைய விட­யங்­களை நேர­டி­யா­கவும் கையா­ளு­வது வழக்கம். மறை­மு­க­மா­கவும் கையா­ளு­வது வழக்கம்.

ஆனால் இந்­தியா இந்த விவ­கா­ரத்தை நேர­டி­யாக மாத்­தி­ரமே கையாள வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

ஏனென்றால், இதனை மறைமுகமாக கையாளக் கூடிய தரப்பு ஒன்று ஏற்கனவே அரசாங்கத்தின் கையில் குடுமியைக் கொடுத்து விட்டது. அந்த தரப்புத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவசரப்பட்டு இந்தத் திட்டத்துக்கு பச்சைக் கொடி காண்பித்து விட்டது. 

இப்போது தான், இது சீனாவின் திட்டம் என்பது கூட்டமைப்புக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் சீன நிறுவனத்தைக் கொண்டு இந்த திட்டத்தை செயற்படுத்தப் போவதாக அரசாங்கம், கூட்டமைப்பிடம் கூறவில்லை.

இப்போது, இது சீனாவின் திட்டம் என்றதும் தான், இந்தியாவை எப்படி எதிர்கொள்வது என்ற சிக்கல் கூட்டமைப்புக்கும் தோன்றியிருக்கிறது.

கூட்டமைப்பை வைத்து இந்தத் திட்டத்தை தடுப்பதற்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதால் தான், நேரடியாகவே அது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

அனாலும், சீன நிறுவனத்தை கைவிடுவதில்லை என்பதில் அரசாங்கம் காட்டும் உறுதி, இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுக்கலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-01#page-1

26 minutes ago, நவீனன் said:

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்

சீனாக்காரன் வந்தா ஆதிக்கம் அதே வேலையை  இந்தியாகாரன் செய்ய போவதாக கூறினால் வீரகேசரி எப்படி எழுதும் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா , அப்பாவி ஈழத்து தமிழர்களை அழிப்பதற்கு அமைதி படை வடிவில் ஆரம்பித்து , கேரளா நம்பூதிரி மாபியா மேனனின் மொழியில் சொல்வதனால் முகவரி அற்ற ராஜி காந்தி, தனக்கு முகவரி ஆக்கும் முயடர்ஸியில் ஓர் இனத்தை பணயம் வைத்து ஆடிய ஆட்டத்தில்  அந்த இனத்தில் வந்த தலைவனின் எதிர்ப்பாடத்தை எதிர்கொள்ளமுடியாது, கொல்லப்பட்டபோது அந்த கொலையை செய்தவர்களை தண்டிப்பது என்ற போர்வையிழும் நம்பிக்கையிலும் ஓர் இனப்படுகொலையில் முடித்து வைத்தது.

சீன சொறி சிங்கள லங்காவிடற்கு ஆயுதம் கொடுத்திருக்கலாம், ஆனால் அது முழுவதுமே வியாபாரம். ஒரு போதும் சீன கிந்தியா போன்று குழி பறித்ததில்லை.

கிந்தியவிடம் ஓர் இம்மியளவேனும் அக்கறை இருந்திருந்தால் ஒரு போதும் உலோகத்திலாலான பொருத்து  வீடுகளை தலையில் அரைக்க எண்ணியிருக்காது. அப்போது எங்கே போனது இந்த காலநிலை, மண் மற்றும் மண்ணாங்கட்டி ஆய்வுகள்? இரும்பின் விலை சந்தையில் வீழ்ச்சி அடைய, ஈழத்தமிழரின் பரிதாபத்தை முன்னிறுத்தி கழிவிரக்கம் காட்டுவது போல பாசாங்கு செய்து, ஈழத்தமிழரிடம்  கையகலாத் தன்மையை பயன்படுத்தி, சொறி சிங்கள லிங்காவின் இரும்பு சந்தையை  மிட்டலிற்கு திறந்து விடுவதே கிந்தியக் கள்ள மற்றும் குள்ள நோக்கம். அது நல்லவேளையாக முதலமைச்சர் போன்றவர்களின் உறுதியான (அதாவது கல் வீடுகளே வேண்டும்) நிலைப்பாட்டினால் கிந்தியவிற்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது.    

ஹிந்தியை தனக்கு கான் போனாலும் பறவாயில்லை, ஈழத்தமிழ் தேசத்திற்கு தலையும் போய்  அரசும் இருக்கக்கூடாது என்றே கிந்தியாவின் ஆரம்பத்தில் இருந்தே கிந்தியாவின் நோக்கம்.

கூட்டமைப்புக்கு என்ன கடமை இருக்கிறது கிந்தியவிற்கு?

கூட்டமைப்பு பதில் சொல்ல வேண்டியது இது இலங்கை தீவின் நலனுக்கு மிக உகந்தது ஆகும்.

மின்ஹயாவின் பாதுகாப்பு நலன் கிந்தியாவின் கைகளிலேயே உள்ளது. இப்படி கிந்தியா கேட்குமாகவிருந்தால் கூட்டமைப்பு "ஹிந்தியாவிற்கு இந்திய அரசை ஆள்வதற்க்கு கிந்தியவிடற்கு தகுதி இல்லை." என்று வலியுறுத்தலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.