Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில்

Featured Replies

2022  உலகக்கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில்

 

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் கட்டார் ஜனாதிபதியிடம் இன்று ஒப்படைத்தார்.

football.jpg 

உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது.

இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உலகக்கோப்பை கால்பந்தை பிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கட்டார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புதின், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலகக்கோப்பைக்கான பொறுப்புகளை கட்டாரிடம் ஒப்படைத்த அனுபவம் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk/article/36631

  • தொடங்கியவர்

2022 கட்டார் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் திகதி அறிவிப்பு

Cover-Photo-696x304.jpg
 

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 22ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் பொறுப்பு ரஷ்யாவில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் வைத்து, மத்திய கிழக்கு நாடான கட்டாரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.  

மத்திய கிழக்கு நாடொன்றில் முதல்முறையாக அரங்கேறும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் வழக்கமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

 

விளையாட்டு உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டாக விளங்குகின்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் 21ஆவது அத்தியாயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இரவு ரஷ்யாவில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்னும் நான்கு வருடங்களில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.  

இதுஇவ்வாறிருக்க, மொஸ்கோவின் லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற இம்முறை உலகக் கிண்ணத் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் பொறுப்பை கட்டாரிடம் ஒப்படைக்கும் வைபவம் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.  

இந்த வைபவத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானி, பிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் பங்கேற்றனர்

 

 

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், கட்டாரின் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானியிடம் கால்பந்து ஒன்றை வழங்கி, அடுத்த உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.  

இதன்படி, போட்டியை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளை கட்டார் இனி மேற்கொள்ள உள்ளது. அத்துடன், 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை 12 மைதானங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மைதானங்கள் புதிதாக அமைக்கவும், ஏனைய 4 மைதானங்களை புனர்நிர்மாணிக்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

khalifa-international-stadium-launched-cஅத்துடன், இந்த அனைத்து மைதானங்களும் கட்டாரில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் நிர்மானிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக மாத்திரம் கட்டார் அரசாங்கத்தினால் 5 பில்லியன் பவுண்கள் (கிட்டத்தட்ட 1000 பில்லியன் ரூபா) செலவிடப்படவுள்ளது. அத்துடன், அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் நிர்மாணப் பணிகளையும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

 

இதேநேரம், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடரை கட்டார் நடத்த உள்ளது.

இதுதொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தில் பிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கருத்து வெளியிடுகையில், கோடைக்காலத்தில் கட்டாரில் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவது பொருத்தமாக இருக்காது. இதனால், அங்குள்ள காலநிலையை கருத்திற்கொண்டு குளிர் காலத்தில் போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே, அனைத்து உலக கால்பந்து அமைப்புகளும் தங்களது லீக் போட்டிகளின் திகதிகளை 2022இல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், 2022 உலகக் கிண்ணத்தில் தற்போதுள்ள 32 அணிகளை 48ஆக உயர்த்துவது குறித்து கட்டார் கால்பந்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அணிகளின் பங்கேற்பை 48 ஆக உயர்த்துவதற்கு பிஃபா ஏற்கனவே அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2022 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் கத்தார்

 

 
Lusail_CITY

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக கத்தார் முன்கூட்டியே தயாராகி வருகிறது.
ரஷியாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டிகள் கடந்த 1 மாதமாக கோலாகலமாக நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இதில் பெல்ஜியம், பிரான்ஸ், குரோஷியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வென்று பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ரூ.87 ஆயிரம் கோடி செலவில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் 22-ஆவது உலகக் கோப்பை ஆசிய நாடான கத்தாரில் நடக்கிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கத்தார் போட்டிகள் நடக்கவுள்ளன. முக்கியமாக மைதானத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. 2022 நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
கத்தார் நிதி அமைச்சர் அலி ஷெரிப் கூறுகையில், போட்டி தொடங்குவதற்கு முன்னரே அனைத்து பணிகள் முடிக்கப்பட்டு விடும். ரசிகர்கள் வரும் போது, மைதானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை செய்ய நாங்கள் விரும்பவில்லை என்றார்.
உலகக் கோப்பைக்காக கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டு வரும் 8 மைதானங்களில் காலிபா மைதானம் தயாராக உள்ளது. இங்கு வரும் 2019-இல் உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடக்கின்றன. அல் வக்ரா, அல் பெயட் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்து விடும். தொடக்க மற்றும் இறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ள லுஸாயில் மைதானம் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான நிலையிலும் கத்தார் உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்த முனைப்புடன் உள்ளது. சவுதி, ஐக்கிய அரபு நாடுகள், கூட்டணியுடன் கத்தாருக்கு உறவு சிறப்பாக இல்லை.
மைதான கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டது. எனினும் கத்தார், உடனே சீனா மற்றும் மலேசியாவில் இருந்து பொருள்கள் 
தருவித்துவுள்ளன.
புதிய சாலைகள், அருங்காட்சியகம், ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன. மெட்ரோ ரயில் முறையும் தயாராக உள்ளது. 1.5 கோடி பேர் உலகக் கோப்பையை காண வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல், டென்ட், சொகுசு கப்பல்களில் ரசிகர்கள் தங்க வைக்கப்படுவர். பழமைவாத முஸ்லிம் நாடான கத்தாரில் சில பகுதிகளில் மது அருந்த அனுமதி தரப்படுகிறது. 32-இல் இருந்து 48 ஆக அணிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் எங்கே தங்க வைப்பது என சிக்கல் உள்ளது. ஈரான் தங்கள் தீவான கிஷ் பகுதியில் அணிகளை தங்க வைக்க முன்வந்துள்ளது. பாதுகாப்புக்காக வெளிநாட்டு போலீஸார் ஈடுபடுத்தப்படுவர். போர் விமானங்களையும் அதில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

qatar-kalifa.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/20/2022-உலகக்-கோப்பை-போட்டிக்கு-தயாராகும்-கத்தார்-2963616.html

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கவனித்திர்களோ என்னவோ நான் கவனித்து விட்டேன் அவர் கால்பந்தை மட்டும்தான் கட்டாரிடம் குடுக்கிறார் , காத்தடிக்கிற பம்மை குடுக்கவில்லை.கட்டார் எப்படி போட்டியை நடத்துது என்று பார்ப்பம்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீங்கள் கவனித்திர்களோ என்னவோ நான் கவனித்து விட்டேன் அவர் கால்பந்தை மட்டும்தான் கட்டாரிடம் குடுக்கிறார் , காத்தடிக்கிற பம்மை குடுக்கவில்லை.கட்டார் எப்படி போட்டியை நடத்துது என்று பார்ப்பம்....!  tw_blush:

Colomban அங்கை தானே நிக்கிறார். எப்படியும் நடத்திப்போடுவார்!?

  • தொடங்கியவர்

80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!

 
 

வாய்ப்பு கிடைத்ததிலிருந்து சர்ச்சைக்கும் குறைவில்லை. ஃபிஃபா அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!
 

`உலகக்கோப்பை வரலாற்றில், ரஷ்யா உலகக்கோப்பைதான் சிறந்தது!' என்று ஃபிஃபா அறிவித்துள்ளது. 1962-ம் ஆண்டு பிரேசில் அணிக்குப் பிறகு, எந்த நடப்பு சாம்பியன் அணியாலும் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ரஷ்ய உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றிலேயே முடிந்துபோனது. வித்தியாசமான பல விஷயங்கள் இந்த உலகக்கோப்பையில் அரங்கேறின.

பந்தைத் தக்கவைத்து ஆடும் அணிகளுக்கு, சம்மட்டி அடி இந்த உலகக்கோப்பையில் கிடைத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக 79 சதவிகித அளவுக்குப் பந்தைத் தக்கவைத்து ஆடிய ஸ்பெயின், முடிவில் தோல்வியையே தழுவியது. நேரெதிராக பிரான்ஸ் அணி, பெல்ஜியத்துக்கு எதிரான அரை இறுதியில் 36 சதவிதமும், குரோஷியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 34 சதவிகிதமே பந்தைத் தக்கவைத்திருந்தது.

இந்த இரு ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பந்தைத் தக்கவைப்பதைவிட அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்று பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பையில் உணர்த்தியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதியில் நான்கு ஜாம்பவான் அணிகள் இல்லாமல் நடந்திருக்கிறது. பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய அணிகள்தாம் அவை. இதில், இத்தாலி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.

 

 

Qatar stadium

அடுத்த உலகக்கோப்பை, கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் என்ற குட்டி நாடு, பல இந்திய இளைஞர்களுக்குக் கனவு தேசம். கத்தாருக்கு, உலகக்கோப்பை கால்பந்து தொடரை இங்கு நடத்திவிட வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது. இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற பெரிய நாடுகளுடன் மல்லுக்கட்டி போட்டியை நடத்தும் உரிமையை 2010-ம் ஆண்டு கத்தார் பெற்றது. சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசும் நாடு, கத்தார். இந்த வெப்பத்தில் 90 நிமிடம் ஓடுவது என்பது கால்பந்து வீரர்களின் உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். `மைதானத்துக்கு மேலே, செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட மேகங்களை உருவாக்கி போட்டி நடக்கும் மைதானத்தில் குளுமையை ஏற்படுத்துவோம், மைதானம் முழுக்கக் குளிரூட்டப்படும்'  என்றும் கத்தார் வாக்குறுதி அளித்திருந்தது. இப்படியெல்லாம் பல வித்தைகள் புரிந்து, உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது கத்தார்.  

 

 

வாய்ப்பு கிடைத்ததிலிருந்து சர்ச்சைக்கும் குறைவில்லை. ஃபிஃபா அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்டேடியம் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களில் இதுவரை 4 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சர்ச்சைகளைத் தாண்டி உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்திக்காட்ட, கத்தார் முனைப்பு காட்டிவருகிறது. கத்தாரில், சர்வதேசத் தரத்திலான  ஒன்பது கால்பந்து மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. கலீபா சர்வதேச மைதானம்தான் கத்தாரின் முதல் உலகக்கோப்பை மைதானம். 

வழக்கமாக ஒவ்வோர் உலகக்கோப்பை தொடரும் ஜூன், ஜூலையில்தான் நடத்தப்படும். வெப்ப நாடான கத்தாரில் நவம்பர், டிசம்பரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தார் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று ஃபிஃபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சமயத்தில் கத்தாரில் வெப்பம் குறைவாக நிலவும். உலகக்கோப்பை தொடரை நடத்திய மிகப்பெரிய நாடு ரஷ்யா என்றால், மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கத்தார் பெறும். ஒரு எல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்கு 180 கிலோமீட்டர்தான் தொலைவு. 25 லட்சம்தான் மக்கள்தொகை. இதுவரைக்கும் உலகக்கோப்பைத் தொடரில் கத்தார் விளையாடியதில்லை. போட்டியை நடத்தும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்த்துடன் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பையில் கத்தார் களம் இறங்கும். 

கத்தார்

எண்ணெய் வளமிக்க இந்த நாடு, உலகக்கோப்பையை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை வைத்து மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. கௌரவமிக்க உலகக்கோப்பைத் தொடரை நடத்தப்போகும் முதல் அரபு நாடு, கத்தார். 2021-ம் ஆண்டுக்குள் அனைத்து மைதானங்களும் தயாராகிவிடும். உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் கான்ஃபடரேஷன் கோப்பை 2021-ம் ஆண்டு நடைபெறும். 

 

 

180 கிலோமீட்டருக்குள்தான் அனைத்து மைதானங்களும் இருப்பதால், ரசிகர்கள் எளிதாகச்  சென்று வரலாம். அந்த வகையில் கத்தார் உலகப்போட்டி, ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தைத் தரும். 2026-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை தொடராகவும் கத்தார் தொடர் அமையும்.

அரபு நாடானா கத்தாரில் மதுவுக்குத் தடை உள்ளது. உலகக்கோப்பை சமயத்தில் மதுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும் கத்தார் அரசு ஆலோசித்துவருகிறது.  உலகக்கோப்பை கால்பந்து தொடரை நேரில் பார்க்க ஆசைப்படும் இந்தியர்களுக்கும் கத்தார் போட்டி நல்ல வாய்ப்பாக அமையும். 

https://www.vikatan.com/news/sports/131459-world-cup-2022-will-be-held-in-qatar-and-a-whole-lot-of-problems.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.