Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பா, ஒரு நிமிடம்....

Featured Replies

sakicb3.jpg

நண்பா ஒரு நிமிடம்....

சட்டென திரும்பாதே

வெட்டி விட

வார்த்தைகளை தேடாதே

இன்று மட்டும்

தோல்வி உனக்கே........

குழப்பத்தில் ஆரம்பித்த

நட்பினை..

நேசமாய் நீ மாற்றினாய்..

இல்லை

மறைத்தாய்....

இந்த உறவிற்கு

என்ன பெயர் வைத்தாயோ

அறிந்ததில்லை நான்,

என்ன நினைத்திருந்தாயோ

அதுவும் உணர்ந்ததில்லை...

இப்போது

உன் வார்த்தைகள்

தெளிவுமில்லை..புரியவுமில்லை

ஆனால்

எங்கோ உனக்கு

வலிப்பது புரிகின்றது!

எனக்கும் தான்!

நாடியில் கை வைத்து

அமைதியாய் வாசித்த நீ

நிமிர்ந்து உட்காருவாயே

இப்போது...

ஞாபகங்கள் மீட்கும் பழக்கம்

உனக்கு இருக்கின்றதா?

இல்லாவிடினும்

எனக்காக ஒரு முறை...

முயன்று பார் நண்பா!

அர்த்தமறியாதது போல்

உன்

அன்பின் அர்த்தமறிய

முயன்ற என் வார்த்தைகளை.....

துணைவனாய் நீ

கனவில் வந்ததாய் கூறிய

நொடிகளை.....

உன் வருங்கால துணையை பற்றி

உன்னை விட

ஆர்வமாக கேட்ட

கணங்களை....

உன்னை...உன்

ரசனைகளை...ரசித்து எழுதிய

கவி வரிகளை....

எல்லாவற்றிற்கும் பதிலாக

நீ முள்ளால் கோர்த்து

தந்த மௌன மாலைகளை....

கத்தி கொண்டு

சத்தமிட்டு செய்த

சிரிப்புக்களை...

உன் நினைவிலிருந்தால்

புரியும் என் வலி

உனக்கு...

புரிந்திட்டால்

மன்னிப்புண்டா

உனக்கு?

இல்லையெனில்

மன்னிப்புண்டா

எனக்கு......??

பல காலத்தின் பின் என்னை கவர்ந்த ஒரு கவிதை.

நன்றி

கவிக்கு :lol:

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

அட இதை நீங்க எழுதவில்லையா?இணைப்பிற்கு நன்றி.

அட சீ நானும் நினைத்தேன் என்னை நினைச்சு எழுதியது ஆக்கும் என்று :P :lol:

நல்ல கவிதை பிரிய சகி.

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

"காற்றின்றி பூவுக்கு வாசம் வருமா

நீரின்றி கரும் முகிலுக்கு தூரல் படுமா

மண்ணின்றி மரம் தான் எங்கு போகும்

மொழியற்ற குரல் அது யார் காதில் விழும்

உண்மை அன்பு தான் என்றும் அகிலத்தில் வாழும்"

குழப்பத்தில் ஆரம்பித்த

நட்பினை..

நேசமாய் நீ மாற்றினாய்..

இல்லை

மறைத்தாய்....

இந்த உறவிற்கு

என்ன பெயர் வைத்தாயோ

அறிந்ததில்லை நான்,

என்ன நினைத்திருந்தாயோ

அதுவும் உணர்ந்ததில்லை...

ஞாபகங்கள் மீட்கும் பழக்கம்

உனக்கு இருக்கின்றதா?

இல்லாவிடினும்

எனக்காக ஒரு முறை...

முயன்று பார் நண்பா!

கவிதையில் நட்பை அழகா சொல்லியிருக்கின்றார்... ரொம்ப பீல் பண்ணி எழுதின மாதிரி...வாசிக்கும் போதே தெரிகின்றது. நல்ல நண்பர்கள் கிடைப்பது குறைவு .... ஆனால் சில நல்ல நண்பர்கள் கூட பழகி சில காரணங்களால் பிரிந்தாலோ அல்லது அவர்களுடன் பேசமுடியாமல் போனாலும் கூட பழகின ஞாபகங்கள் நம்ம மனசில் சாகும் வரை இருக்கும். அதன் ஞாபகங்களை மீட்டி பார்க்கும் போது ஒரு சின்ன சந்தோசமும் ...கவலையும் கூட....! :lol:

Edited by அனிதா

கவிதையில் நட்பை அழகா சொல்லியிருக்கின்றார்... ரொம்ப பீல் பண்ணி எழுதின மாதிரி...வாசிக்கும் போதே தெரிகின்றது. நல்ல நண்பர்கள் கிடைப்பது குறைவு .... ஆனால் சில நல்ல நண்பர்கள் கூட பழகி சில காரணங்களால் பிரிந்தாலோ அல்லது அவர்களுடன் பேசமுடியாமல் போனாலும் கூட பழகின ஞாபகங்கள் நம்ம மனசில் சாகும் வரை இருக்கும். அதன் ஞாபகங்களை மீட்டி பார்க்கும் போது ஒரு சின்ன சந்தோசமும் ...கவலையும் கூட....! :lol:

sakicb3.jpg

நண்பா ஒரு நிமிடம்....

சட்டென திரும்பாதே

வெட்டி விட

வார்த்தைகளை தேடாதே

இன்று மட்டும்

தோல்வி உனக்கே........

குழப்பத்தில் ஆரம்பித்த

நட்பினை..

நேசமாய் நீ மாற்றினாய்..

இல்லை

மறைத்தாய்....

இந்த உறவிற்கு

என்ன பெயர் வைத்தாயோ

அறிந்ததில்லை நான்,

என்ன நினைத்திருந்தாயோ

அதுவும் உணர்ந்ததில்லை...

இப்போது

உன் வார்த்தைகள்

தெளிவுமில்லை..புரியவுமில்லை

ஆனால்

எங்கோ உனக்கு

வலிப்பது புரிகின்றது!

எனக்கும் தான்!

நாடியில் கை வைத்து

அமைதியாய் வாசித்த நீ

நிமிர்ந்து உட்காருவாயே

இப்போது...

ஞாபகங்கள் மீட்கும் பழக்கம்

உனக்கு இருக்கின்றதா?

இல்லாவிடினும்

எனக்காக ஒரு முறை...

முயன்று பார் நண்பா!

அர்த்தமறியாதது போல்

உன்

அன்பின் அர்த்தமறிய

முயன்ற என் வார்த்தைகளை.....

துணைவனாய் நீ

கனவில் வந்ததாய் கூறிய

நொடிகளை.....

உன் வருங்கால துணையை பற்றி

உன்னை விட

ஆர்வமாக கேட்ட

கணங்களை....

உன்னை...உன்

ரசனைகளை...ரசித்து எழுதிய

கவி வரிகளை....

எல்லாவற்றிற்கும் பதிலாக

நீ முள்ளால் கோர்த்து

தந்த மௌன மாலைகளை....

கத்தி கொண்டு

சத்தமிட்டு செய்த

சிரிப்புக்களை...

உன் நினைவிலிருந்தால்

புரியும் என் வலி

உனக்கு...

புரிந்திட்டால்

மன்னிப்புண்டா

உனக்கு?

இல்லையெனில்

மன்னிப்புண்டா

எனக்கு......??

பல காலத்தின் பின் என்னை கவர்ந்த ஒரு கவிதை.

நன்றி

கவிக்கு :unsure:

:o:o கவிதை நல்லாதனிருக்கு எழுதியவருக்கு வாழ்த்துக்கள்

கவிதை இணைப்புக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.