Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர்

Featured Replies

ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர்

வெனிசுவேலா அதிபர் நீக்கோலஸ் மதுரோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெனிசுவேலா அதிபர் நீக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் மதுரோவின் உயிரை குறிவைத்து இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சர் ஹோர்கே ரோட்ரிகஸ், இதில் ஏழு வீரர்கள் காயமடைந்ததாக தெரிவித்தார்.

திறந்த வெளியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் அதிபர் நிக்கோலஸ் பேசிக் கொண்டிருந்தார். திடீரென மேலே பார்த்து அவரும், அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

நேரலை தடை செய்யப்படுவதற்கு முன், அங்கிருந்த ராணுவ வீரர்கள் ஓடத் தொடங்கினர்.

அப்போது எடுக்கப்பட்ட காணொளியில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டன.

வெனிசுவேலா அதிகாரிகள் கூறுவது என்ன?

வெனிசுவேலா ராணுவத்தின் 81வது ஆண்டினை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அதிபர் மதுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அமைச்சர் ரோட்ரிகஸ் தெரிவித்தார்.

அதிபர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வெடிகுண்டுகளை தாங்கிய இரண்டு ட்ரோன்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தாக்குதலை நடத்தியது வலதுசாரி எதிர்கட்சி என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெனிசுவேலா அதிகாரிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"வாக்குகள் இழந்த பிறகு, தற்போதும் அவர்கள் தோற்றுவிட்டனர்" என்று ரோட்ரிகஸ் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில், மீண்டும் மதுரோ தேர்வு செய்யப்பட்டதையே அவர் குறிப்பிடுகிறார்.

காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் நிக்கோலஸ், அவரது அமைச்சர்கள் மற்றும் ராணுவ கமாண்டர்களை சந்தித்தார்.

இத்தாக்குதல் முயற்சிக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

https://www.bbc.com/tamil/global-45073640

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சி ஐ ஏ இன் பட்டியலில் பயங்கரவாதமாக தெரியாது. ஏனெனில்.. இதன் பின்னணியே சி ஐ ஏ ஆக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

அதிபர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வெடிகுண்டுகளை தாங்கிய இரண்டு ட்ரோன்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

உலகம் அடுத்த கட்டத்துக்குள் நகர்ந்துவிட்டது  ட்ரோன்கள் தற்கொலை குண்டுதாரிகள் ஆகி விட்டன .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

கொலம்பிய ஜனாதிபதியே என்னை கொல்ல டிரோன்களை அனுப்பினார்- வெனிசூலா ஜனாதிபதி

 

கொலம்பியாவே டிரோன்களை பயன்படுத்தி என்னை கொலை செய்ய முயற்சித்தது என வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.

வெனிசூலா  ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ  டிரோன் வெடிகுண்டு தாக்குதலிலிருந்து  உயிர் தப்பியுள்ளார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர் டிரோன்களை பயன்படுத்தி என்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான முயற்சி குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் இது வலதுசாரி சதி என்பது அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சிக்கு கொலம்பியாவில் உள்ளவர்களும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளவர்களும் காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

vene8.jpg

டிரோன் தாக்குதல் முயற்சி இடம்பெற்ற பின்னர் நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன  என குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பிய ஜனாதிபதி யுவான் மனுவல் சன்டோஸ் இந்த சதி முயற்சியின் பின்னால் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னர் அறியப்படாத ரீசேர்ட்டில் உள்ள படையினரின் தேசிய இயக்கம் என்ற அமைப்பு இந்த தாக்குதல் முயற்சிக்கு உரிமை கோரியுள்ளது.

சமூக ஊடகங்களில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட அமைப்பு தாங்கள் இரு டிரோன்களை பயன்படுத்தியதாகவும் எனினும் சினைப்பர்கள் அவற்றை சுட்டு வீழ்த்திவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

அவர்களின் பலவீனத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் இன்று எங்களிற்கு வெற்றி கிட்டவில்லை ஆனால் விரைவில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/37885

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக உலகில் மிகப்பெரிய எண்ணை வளம்கொண்டநாடு இப்போது உதாரணத்துக்கு ஒரு கம்பேர்க்கர் வி;ஐ தொண்ணூத்து எட்டு யூரோகள் இதை விட இந்த ஜனாதிபதி இறக்கலாம்.

பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த ஒரு செயல்பாடுகளையும் இதுவரை இவர் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Elugnajiru said:

சாதாரணமாக உலகில் மிகப்பெரிய எண்ணை வளம்கொண்டநாடு இப்போது உதாரணத்துக்கு ஒரு கம்பேர்க்கர் வி;ஐ தொண்ணூத்து எட்டு யூரோகள் இதை விட இந்த ஜனாதிபதி இறக்கலாம்.

பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த ஒரு செயல்பாடுகளையும் இதுவரை இவர் செய்யவில்லை.

எமக்கு பக்கதிலை இந்திய சனி போல் அவர்களுக்கு அமேரிக்கா அந்த ஜானதிபதி இறந்தாலும் வேறு ஒரு டம்மி வரும் அந்த இடத்துக்கு அப்படி எதிர்த்தாலும் உள் வீட்டுக்குள் வைத்தே ஆளை முடிசுடுவினம் .காரணம் எதிர்காலத்தில் கிண்டி எடுக்கபோகும் கனிம வளம் அமேசனின் ஆற்றுபடுக்கையின் கிழே  உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Elugnajiru said:

சாதாரணமாக உலகில் மிகப்பெரிய எண்ணை வளம்கொண்டநாடு இப்போது உதாரணத்துக்கு ஒரு கம்பேர்க்கர் வி;ஐ தொண்ணூத்து எட்டு யூரோகள் இதை விட இந்த ஜனாதிபதி இறக்கலாம்.

பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த ஒரு செயல்பாடுகளையும் இதுவரை இவர் செய்யவில்லை.

சவூதி மாதிரி இருக்கவேண்டிய நாடு....வெற்று அரசியலால் சின்னாமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குப் பக்கத்தில் தமிழர் விரோத இந்தியாபோல் அங்கு அமெரிக்க இருப்பதுபோல் கியூபாவுக்குப் பக்கத்திலும் இருக்கு ஆனால் பிடல்கஸ்ரோ எனும் தலைவனாலும் அந்நாட்டின் மக்களாலும் சாதிக்கமுடியுமாகில் அவர்களால் ஏன் சாதிக்கமுடியாது அதுவும் சர்வதேசரீதியாக ராஜீக அங்கீகாரம் உள்ள நாடு. இதுவொன்றும் தீவிரவாதக் கொள்கைகளைக்கொண்ட விடுதலை இயக்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நாடு இல்லையே. 

யாழ் கூடா நாட்டுமக்கள்போல் அங்கு போராடும் மனப்பான்மையில்லாத சோம்பிறிகளை சோம்பேறித்தலைவர்கள் ஆள்வதே இதன் காரணம் 

பொருளாதார முன்னேற்றம் என்பது அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கப்படல்வெண்டும் அதாவது குப்பி விளகுப் படிப்பிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் 

செக்களவு தங்கம் இருந்தாலும் செதுக்கிச் செதுக்கிச் சாப்பிடக் குறைந்தேபோகும். அபரிமிதம் என்பது எப்போதும் ஆபத்தானது காரணம் அதன் பெறுமதிகாரணமாக அதைப்பாதுகாக்கவேண்டும் தவிர ஏமாற்றத்திலிருந்து தவிர்க்கவெண்டும் வெனிசுலாவின் பொருளாதார அபிவிருத்தி எண்ணையில் தங்கியிராத இன்னுமொரு மூலாபாயத்திலிருந்து பெற்றோலிய வருமானத்துக்குச் சமாந்தரமாகப் பயணிக்கவேண்டும். மக்களைச் சோம்பேறியாகவைக்காது அனைவரையும் களத்தில் கொண்டுவரவேண்டும். 

ஒரு ஐந்துவருடம்போதும் இவர்கள் நிமிர சரியான பாதையில் பயணித்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.