Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்

Featured Replies

அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்

 

 

sumanthiran-720x450.jpg

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர்.

இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மைத்திரி அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களை கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். அவ்வாறு வழங்கமுடியுமாக இருந்தால் தற்போது ஏன் வழங்க முடியாதென தினேஸ் குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லையென, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அரசாங்கத்தின்-பங்காளிகள/

  • தொடங்கியவர்

வீரவசனம் பேசும் 70 பேர் ஏன் 23 பேருக்கு அஞ்ச வேண்டும் - அனுரகுமார

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ் ,ஆர்.யசி)

மக்களின் பலத்தை நிரூபித்துள்ளதாக கூறும் 70 பேர் அணி பலத்தை காட்டி ஆட்சியை கைப்பற்றுவதை விடுத்து எதிர்க்கட்சி பதவிக்கு ஏன் போராடுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பதவி குறித்து பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

anura.jpg

எதிர்க்கட்சி தலைவர் பதவி தரக்கோரி பொது எதிரணியினர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர்  ஆரம்பத்தில் 42 உறுப்பினர் இருந்த போதும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்டனர், 54 பேர் இருந்த போதும் எதிர்க்கட்சி பதவியை கேட்டனர், இப்போது 70 பேர் உள்ளபோதும் எதிர்க்கட்சி பதவியை தரக்கோருகின்றனர். ஆனால் இவர்களின் கோரிக்கையில் எந்தவித அடிப்படை நியாயப்பாடுகளும் இல்லை. 

இந்த பாராளுமன்றத்தில் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளில் இருந்தே உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 19 ஆம் திருத்தத்துக்கு அமைய கட்சி தன்மைகளை கைவிட்டு செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிலைமை உருவாகும். 

இப்போதுள்ள நிலைமையில் எதிர்க்கட்சியின் எண்ணிக்கை குறைவுதான், மூன்று கட்சிகளுமாக மொத்தமாக 23 பேர் தான் உள்ளோம். நாம் பலம் குறைந்த எதிர்க்கட்சி தான், அதனை  நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் பலவீனமாகவே நாம் உள்ளோம். ஆனால் பாராளுமன்ற விதிமுறைக்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது என ஒருபோதும் கூற முடியாது. 

பொது எதிரணியினர் தமக்கு தான் மக்கள் பலம் உள்ளதாக கூறுகின்றனர், 70 பேர் எதிர்கட்சியாக உள்ளதாக கூறுகின்றனர், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உள்ளார், அனுபவம் மிக்க  தலைவர்களை தக்கவைதுள்ளதாக கூறுகின்றீர்கள். இவ்வளவு வீர வசனம் பேசும் 70 பேர் ஏன் 23 பேருக்கு அஞ்சி செயற்படவேண்டும். உங்களின் பலத்தை காட்டி அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்கட்சியில் அமைர்ந்துகொண்டு காட்சியை கைப்பற்ற முடியுமே. அதை விடுத்து ஏன் 23 பேர் உள்ள அணியில் தஞ்சம் புகுந்துகொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/38011

  • தொடங்கியவர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: நாளை இறுதி தீர்மானம்

 

 

எதிர்கட்சி தலைவர் தொடர்பிலான அறிவிப்பு அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை நீடித்து வந்த நிலையில் இன்றைய(செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் ஒன்றிணைந்த எதிரணியினருக்கும், அரசாங்க தரப்பினருக்கும், பிரதான எதிர்கட்சியினருக்கும் இடையில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து கூட்டப்பட்ட விசேட கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடவுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/எதிர்க்கட்சித்-தலைவர்-ப-3/

.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன்

 

 

sumanthiran-720x450.jpg

 

http://athavannews.com/அரசாங்கத்தின்-பங்காளிகள/

 

அப்போ இவளவு நாளும் 
யார் இருந்தார் ?

  • தொடங்கியவர்

சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட கோபம் இல்லை - தினேஷ்

 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மீது எமக்கு எந்தவொரு தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆசன அடிப்படையில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவில் ஆசனங்கள் உள்ளன. ஆகவே நீதியான முறையின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே பெற்றுத்தர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான வாக்குவாதத்தின் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

dinesh.jpg

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவிலான ஆசனங்கள் உள்ளன. தற்போது எமது குழுவில்  70 பேர் உள்ளனர். ஆகவே எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே பெற்று தர வேண்டும் என நாம் கோரி எழுத்து மூல கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தோம்.

இதன்போது இன்று தீர்மானத்தை வழங்குவதாக கூறியிருந்தீர்கள். புதிய தீர்மானமொன்றை வழங்குவதாகவே கூறினீர்கள். ஆனால் எங்கே தீர்மானம். எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு பெற்தை் தர வேண்டும். 

சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவருக்கு கீழ் நாம் செயற்பட்டுள்ளோம். ஆகவே சம்பந்தன் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் பாராளுமன்றத்தில் ஜனநாயக உரிமை பாதுகாக்க வேண்டும். சம்பிரதாயத்தை மீறி செயற்பட கூடாது. பாராளுமன்றத்தின் ஜனநாயகம் தற்போது செல்லாக் காசாக மாறிவிட்டது என்றார்.

http://www.virakesari.lk/article/38025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.