Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதவி துறக்குமாறு- வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!!

Featured Replies

பதவி துறக்குமாறு- வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!!

 

 

viki.jpg

வடக்கு மாகாண அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் அதனை முன்னி றுத்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக் கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள தாக அறியமுடிகின்றது.

இதனூடாக மக்களின் அனுதாபங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளபோதும், அந்த யோசனையை இதுவரையில் முதல மைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பால் வடக்கு மாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரை, டெனீஸ்வரனையும் உள்ளடக்கியதாக அமைச்சரவையைப் பரிந்துரைக்கு மாறு ஆளுநர் கேட்டுக் கொண்ட போதும், முதலமைச்சர் இதுவரை அதனைச் செய்யவில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக தன்னால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்று கூறிவருகின்றார்.

இதனால் வடக்கு அமைச்சரவை செயற்பட முடியாத நிலையில், வடக்கு மாகாணத்தின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளன.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்பட மூன்று அமைச்சர்களை மன்றில் தோன்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நெருக்கடி நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளார். இதிலிருந்து தப்பிப்பதற்கு – விடுபடுவதற்கு முதலமைச்சர் பதவியைத்துறப்பதே ஒரே வழி என்று விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு இன்னமும் 70 நாள்களே இருப்பதால், பதவி துறப்பதில் எந்தப் பிரச்சினையும் வராது என்றும், பதவிதுறப்பதன் ஊடாக, மக்களின் அனுதாப அலையைத் திரட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைமை வடக்கு அமைச்சரவை நெருக்கடி குறித்து ஆராய்வதால், பதவி துறக்கும் ஆலோசனையை முதலமைச்சர் தற்போதைய நிலமையில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறியமுடிகின்றது.

http://newuthayan.com/story/13/பதவி-துறக்குமாறு-வடக்கு-முதல்வருக்கு-அழுத்தம்.html

  • கருத்துக்கள உறவுகள்

நீதியே இல்லாத சிறீலங்காவில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது என்னவென்று ஒரு நீதிபதிக்குத் தெரியாமலா போய்விடும்.??

முன்பு ஒரு செய்திபடித்த ஞாபகம்:  ரவூப் கக்கீம் நீதி அமைச்சராக இருந்தபோது... சுவிற்சலாந்து நாட்டின் மீன்வளத்துறை அமைச்சரைப் பார்த்துக் "கடலே இல்லாத நாட்டில் எப்படி மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறீர்கள்" என்று கேட்டாராம். "நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் எப்படி நீதி அமைச்சராக இருக்கிறீர்கள்" என்று அவர் திருப்பிக் கேட்டாராம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் அவலத்துக்குள்ளான மக்களுக்காகப் போராடுபவர், அவர்கள்மீது அனுதாபம் கொண்டவர், அப்படியானவர் மக்களின் அனுதாபத்தைப் பெற்று அரசியல் செய்வதற்கு முன்வருவார் என்பது சாத்தியமில்லை. 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை எப்போதும் தமிழின விரோதமாகவே இயங்கியது என்பது வரலாறு! 

தற்போது கைக்கூலி டெனிஸ்வரன் இந்த பயங்கரவாதக் கும்பலை தனது சுயநலத்துக்கு பயன்படுவது இலகுவானது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.