Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

Featured Replies

நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

 

 

DSC_0263-780x405.jpg

நல்­லூர் கோவில்  திரு­வி­ழாக்­கா­லத்­தில் பின்­வ­ரும் சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தவ­றாது பின்­பற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

1.உற்­சவ காலத்­தில் கோவிற் சுற்­றா­ட­லிலும் கோவி­லுக்­கு­வ­ரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக் கூடிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப் பொருள்­கள் சுகா­தா­ர­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தோடு அது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை 021 222 2645 என் னும் தொலை­பேசி இலக்­கத்­துக்கோ அல்­லது நல்­லூர்ப் பிர­தேச பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­க­ரின் அலை­பேசி இலக்­க­மான 0718628519 என்ற இலக்­கத்­துக்கோ தெரி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­ன்றீர்­கள்.

2. குழந்­தை­கள், சிறு­வர்­கள் விரும்பி உண்­ணும் இனிப்பு வகை­கள், சிற்­றுண்­டி­கள் சுகா­தா­ர­மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்டு அல்­லது விநி­யோ­கிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் உங்­கள் பிள்­ளை­க­ளின் ஆரோக்­கி­யத்­தைக் கருத்­திற்­கொண்டு அவற்றை வாங்­கிக் கொடுப்­ப­தைத் தவிர்ப்­ப­தோடு குறித்த தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தெரி­யப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

3. அதி­க­ள­வான சீனி (சிவப்பு,செம்­மஞ்­சள் ஒட்­டப்­பட்ட குடி­பா­னங்­கள் ) நிற­மூட்­டி­கள், சுவை­யூட்­டி­கள் சேர்க்­கப்­பட்ட ஆரோக்­கி­யத்­தைக் கொடுக்­கும் உண­வு­களை இயன்­ற­ள­வில் தவிர்த்துப் பிள்­ளை­க­ளின் நல­னைப் பாது­காத்­துக் கொள்­ளு­மாறு வேண்­டப்­ப­டு­கி­றீர்­கள்.

4. வீதி­யில் பரப்­பப்­பட்­டி­ருக்­கும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் முக­மாக ஆலய சுற்­றா­ட­லில் வதி­யும் மக்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­களைத் திரு­விழா நாள்­க­ளில் வீதிக்கு வரு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மா­றும், கோவி­லுக்­கு­வ­ரும் அடி­ய­வர்­கள், தம்­மு­டன் தமது வளர்ப்பு நாய்­க­ளை அழைத்து ­வ­ரு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள். அறி­வு­றுத்­தல்­களை மீறும் பட்­சத்­தில் அவை கட்­டாக்­காலி நாய்­க­ளா­கக் கரு­தப்­பட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டும் அல்­லது நாய்­களைப் பதி­வுக்­கட்­ட­ணத்­தின் பிர­கா­ரம் சபை­யால் சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும். அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பூச்சி மருந்தை நாய்­கள் உட்­கொள்­கின்­ற­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

5. கோவில் சுற்­றா­ட­லில் பிளாஸ்­ரிக் மற்­றும் பொலித்­தீன் பொருள்­களை எடுத்­து­வ­ரு­தல் முற்­றா­கத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு ஒத்­து­ளைப்பு வழங்­கு­மா­றும் பொது­மக்­கள் அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

6. அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் மற்­றும் அடி­ய­ளித்­தல் போன்ற நேர்த்­திக் கடன்­களை நிறை­வேற்­றும் அடி­ய­வர்­க­ளின் நன்மை கரு­தி­யும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் வகையிலும் கோவில் சுற்­றா­ட­லில் (வெளி வீதித் தடைக்­குள்) பாத­ணி­கள் அணிந்து செல்­வதை முற்­றா­கத் தவிர்க்­கு­மா­றும் கோவில் வீதி­க­ளில் பரப்­பப்­பட்­டுள்ள மண­லின் மீதி­ருந்து உண­வுப் பொருள்­களை உண்­ப­தைத் தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும் (கச்­சான் கோது போடு­தல், கார உணவு மீதி­கள் படிந்த ரெஜி­போம் மற்­றும் பேப்­பர், பைகள் போடு­தல் போன்­ற­வற்­றைத் தவிர்த்­தல்) கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள். அவற்­றைக் கழி­வுத் தொட்­டி­க­ளில் இட்டு ஒத்­து­ழைப்பு நல்­கு­மா­றும் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

7. ஆல­யச் சூழ­லில் நட­மா­டும்­போது மக்­கள் கழி­வுப் பொருள்­களை வீச­வேண்­டிய சந்­தர்ப்­பங்­க­ளில் அவற்­றைத் தரம்­பி­ரித்து அதற்­கென வைக்­கப்­பட்­டுள்ள கழி­வுப் பொருள்­க­ளில் இடு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

8.திரு­வி­ழாக் காலங்­க­ளில் இயங்­கும் தற்­கா­லிக உணவு கையா­ளும் நிலை­ய­மாக அமை­யும் வியா­பார நிலை­ய­மா­னா­லும் உணவு கையா­ளும் நிலை­யத்­தின் அடிப்­ப­டைத் தன்­மை­கள் பூா்த்தி செய்­யப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­து­டன் உணவு கையாள்­வோர் தற்­கா­லிக அடிப்­ப­டை­யி­லே­னும் அனு­ம­தி­களை வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம். இந்த நடை­முறை இறுக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். என்­ப­தை­யும் வலி­யு­றுத்­திக் கூறு­கி­றோம். மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது தவிர்க்­கப்­பட முடி­யா­தது. அத­னால் நேர காலத்­து­டன் எமது பணி­ம­னையின் தலை­மைப் பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­க­ரைத் தொடர்­பு­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள்.

9.ஆலயச் சுற்­றா­ட­லில் தற்­கா­லிக சுகா­தார நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும் பட்­ச­தி­தல் அவற்­றில் ஒலி­பெ­ருக்­கி­களைச் சத்­த­மாக அலற விடு­வதோ திரைப்­ப­டப் பாடல் இசைப்­ப­தையோ தவிர்த்து ஒத்துழைப்பு நல்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­டு­கி­றீர்­கள்.

10. வீடு­க­ளில் குறித்த தினங்­க­ளில் மட்­டும் தண்­ணீர்ப் பந்­தல் மற்­றும் அன்­ன­தான நிகழ்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­கள் அவற்­றைச் சுகா­தார நடை­மு­றைக்கு அமைய நடத்­து­மா­றும் மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாக நேரி­ட­லாம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.

11. பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளில் டெங்கு நுளம்­பு­கள் பெரு­கா­த­வாறு சுற்­றா­ட­லைப் பேணு­வ­து­டன் திரு­வி­ழாவை முன்­னிட்டு பிற மாவட்­டங்­க­ளில் இருந்து தங்­கள் வீட்­டுக்கு வரு­கை­த­ரும் விருந்­தி­னர்­கள் காய்ச்­ச­லு­டன் வரும் பட்­சத்­தில் உரிய மேல­திக நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு (காய்ச்­ச­லுக்கு உட்­பட்­ட­வரை மருத்­துவ பரி­சோ­தனை செய்­தல், நுளம்பு வகை­களை உப­யோ­கிக்­கச் செய்­தல், நுளம்புக் கடியிலிருந்து ஒவ்­வோ­ரு­வ­ரை­யும் பாது­காத்­தல்,) உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

12. கோவில் சுற்­றா­டலிலும் மாந­கர சபை எல்­லைக்­குள்­ளும் பொது­மக்­கள் தமது வீட்­டுக் கழி­வு­களை வீதி­க­ளில் வீசி ஆல­யத்­துக்­கு­வ­ரும் பக்­தர்­க ­ளுக்கு அசெ­ள­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தாது சுற்­றுப்­பு­றச் சூழ­லில் சுகா­தா­ரம் பேண ஒத்­து­ழைப்பு வழங்குமாறு வேண்­டிக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

13. கோவிலுக்கு அண்­மித்த சூழ­லில் வதி­யும் பொது­மக்­கள் உற்­சவ காலத்­துக்கு முன்­பாக தங்­கள் வீட்­டுக் கிண­று­களை இறைத்­தும் நீர்த் தாங்­கி­க­ளைச் சுத்­தம் செய்­தும் வாராந்­தம் கிணற்­றுக்­குக் குளோ­ரின் இடு­வ­தற்கு சுகா­தார பகு­தி­யி­ன­ரின் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள் – என்­றுள்­ளது.

http://newuthayan.com/story/14/நல்­லூர்த்-திரு­வி­ழாக்-காலத்­தில்-இந்த-நடை­மு­றை­கள்-கட்­டா­யம்.html

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

 

 

DSC_0263-780x405.jpg

கச்­சான் கோது போடு­தல், 

நல்லூர்த் திருவிழாவில் கடலை போட்டு மச்சாளைத் தேடவரும் இளசுகள் கச்சானை உடைக்காமல் எப்படிக் கடலை போடுவது.... இது கொஞ்சம் ஓவர். ? 

  • கருத்துக்கள உறவுகள்

கடலை போட முடியாததால் இளசுகளுக்கு கவலை இருக்கத்தான் செய்யும். ஆனால் வெற்றிலை போட பெரிசுகளுக்கு வசதி இருக்குதுபோலே

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நாங்கள் செய்வதென்றால் ............
முருகன் என்ன செய்கிறார் ? 

நல்லூர் கந்தனுக்கு லொள்ளு கூடிப்போச்சு 

ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் கூடும் இடத்தில் முதலில் ஒழுங்கான கழிவறை வச்திகளை ஏற்படுத்திக் கொடுங்கள்...., மற்றயவை எல்லாம் பின்னர் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.