Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பால் பதனிடும் தொழில்ச்சாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

Featured Replies

 பால் பதனிடும் தொழில்ச்சாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

 

 
 

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் தொழில் தருணர் ஒருவரால் கட்டப்பட்ட முல்லை பால் பதனிடும் தொழில்சாலை திறப்பு நிகழ்வு தொழில்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

vlcsnap-error964.png

அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்த முல்லை வலயக் கல்விப்பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வவுனியா கால்நடை சங்க தலைவர் கந்தசாமி உதவி தொழில் அபிவிருத்தி உத்தியேகத்தர் செ.றஜனிகாந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

vlcsnap-error949.png

நிகழ்வில் முல்லை பால் பதனிடும் தொழில் சாலையின் பெயர்பலகையினை முல்லை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரைநீக்கம் செய்து வைக்க விற்னை நிலையத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார்.

vlcsnap-error601.png

தொடர்ந்து பால் பதனிடும் தொழில் சாலையினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் திறந்துவைத்துள்ளார்.

தொடர்ந்து அங்குள்ள இயந்திரங்களை வடமாகாண முதல்வர்,தமிழரசு கட்சியின் தலைவர்,முல்லைவயலய கல்விப்பணிப்பாளர் மற்றும் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆகியோர் இயக்கிவைத்துள்ளார்கள்.

vlcsnap-error461.png

நிகழ்வில் முதன்மை உரையினை வடமாகாண முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளார்

http://www.virakesari.lk/article/38360

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் பால் பதனிடும் தொழில்சாலையை மேலும் விரிவுபடுத்தி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, எல்லோருக்கும் வளம் சேர்த்து சிறந்தோங்கி வாழ வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

எம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: விக்கி

 

DSC_0084-720x450-1-720x450.jpg

எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.

தெற்கில் 15000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நான் இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.

மேலும் எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும்.

எமது சுற்றுலா மையங்கள் வட.மாகாண சபையின் நேரடிக் கண்காணிப்பில் விருத்தி செய்யப்படல் வேண்டும், இவைகளின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதிகள் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.

ஆனால் அன்றன்றைக்குத் தமக்கு அனுசரணைகள் கிடைத்தால் போதும் என்று எண்ணும் எம்மவர்கள் தூரநோக்கற்று சிந்தித்து வருகின்றார்கள்.

எமது பௌதீகப் பலம் எமது இயற்கைச் சூழலே. அது பறிபோய்விட்டால் நாம் வீழ்ந்து விடுவோம். இதை நாம் மனதில் ஆழமாய்ப் பதித்து வைத்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/எம்மை-அடக்கி-ஆளும்-பெரும/

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Jude said:

தொழில்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் பால் பதனிடும் தொழில்சாலையை மேலும் விரிவுபடுத்தி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, எல்லோருக்கும் வளம் சேர்த்து சிறந்தோங்கி வாழ வாழ்த்துக்கள்.

ஐ வி சி காரர்களும் ஏதோ ஒரு தொழிற்சாலையை நிறுவினதாக படிச்சேன் கடதாசி தொழிற்சாலையோ என்ன??

இன்னும் வட கிழக்கில் மீன்பிடியில் கவனம் செலுத்தினால் இன்னும் தொழில்சாலைகளை நிறுவனால் மீன் ஏற்றுமதியில் வளர்ச்சி காணலாம் இருக்கும் வளத்தை பாவித்தால் இலகுவாக வெற்றியும் வேலை வாய்ப்பும் பெறலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.