Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் எதிர்காலம் இல்லை’

Featured Replies

’சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் எதிர்காலம் இல்லை’
 

அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதெனவும் எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்ததுடன், அவர்கள் அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் என்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது டினவும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் மக்கள் கடந் தகால தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவுக்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கிகாரத்தை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம், இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளதாகவும் ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கையை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவினை எட்டவேண்டுமென வலியுறுத்திய அவர், அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டிற்கு எதிர்காலம் இல்லையெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  தொடர்பில் கருத்து  தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது. ஆகவே இந்த பிரேரணையை முழுமையாக நிறைவேற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதெனத் தெரிவித்தார்.

மேலும் பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளதையும்  எடுத்துக் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சமாதானத்தை-ஏற்படுத்த-தவறும்-பட்சத்தில்-எதிர்காலம்-இல்லை/150-221416

 

 

 

தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் திருப்திகரமான முன்னேற்றமில்லை: சுமந்திரன்

 

 

sumanthiran-1-720x450.jpg

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பில் திருப்திகரமான முன்னேற்றம் இல்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐ.நா.வின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (சனிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவரை எதிர்கட்சித் தலைவர் அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு உரையாடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை என வலியுறுத்தினார்.

மேலும், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அதிகாரப் பகிர்வின் நன்மைகளை அவர்களிடையே எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/தமிழர்-பிரச்சினையை-தீர்ப/

  • தொடங்கியவர்

 

பொறுப்புக்கூறலை உறுதிபடுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே உண்டு: சம்பந்தன்

  • தொடங்கியவர்

தீர்வு மூலம் சமாதானம் நிலைக்காவிடின் எதிர்காலத்தை இழந்துவிடும் இலங்கை! – ஐ.நாவிடம் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

Pic-2-1024x682.jpg“அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை” என்று இன்றைய தினம் தன்னைச் சந்தித்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கரிடம் எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், “முன்னைய அரசோடு ஒப்பிடுகையில் இந்த அரசின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கககளில் மாற்றம் உள்ளது. எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட ப் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி., “காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “காணாமல்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது. மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.

Pic-1-1024x682.jpg

“கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது. அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசமைப்பு அவசியம்” என்றும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

“அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி அது சர்வதேச நியமங்களுக்குட்பட்டது” எனவும் அவர் எடுத்துரைத்தார்.

“தமிழ் மக்கள் கடந்த காலத் தேர்தல்களில் ஒருமித்த – பிரிக்கப்பட முடியாத இலங்கைத் தீவுக்குள் அரசியல் தீர்வை அடைவதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது” எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

“தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாததன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம் இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளன. ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கையைப் பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாக்கியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

“புதிய அரசமைப்பு தொடர்பில் இந்த அரசு பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவை எட்டவேண்டும்” என்று வலியுறுத்திய இரா.சம்பந்தன், “அரசியல் தீர்வின் மூலம் ஒருநிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படுவதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. அவர்களிடையே அதிகாரப் பகிர்வின் நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியதன் அவசியம் உள்ளது” என்றார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “இலங்கை அரசு கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது. ஆகவே, இந்தத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாய பொறுப்பு அரசுக்கு உண்டு” என்று கூறினார்.

மேலும், ஐ.நா. தீர்மானத்தில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவர் எடுத்துரைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும், இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர், “உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்தும் பாரிய பணியில் ஐ.நா. தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும்” என்று உறுதி வழங்கினார்.

pic-3-1024x682.jpg

http://www.newsuthanthiran.com/2018/09/08/தீர்வு-மூலம்-சமாதானம்-நி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.