Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¾à®£à®¾à®®à®²à¯ பà¯à®©à®¾à®°à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯ à®à®¤à®¾à®°à®®à¯

அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி!

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர்.

கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.

அதன்பின் அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதியை சேர்ந்த இவரை சவுதி அரசாங்கமே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது. இதற்கு ஆதாரமாக பல சிசிடிவி காட்சிகளையும் வெளியே விட்டுள்ளது. இவரை 15க்கும் அதிகமான உலக நாடுகள் தேடுகிறது.

இந்த நிலையில் இதில் நிறைய சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், ஜமால் கசோக்கி கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் இதில் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. ஜமால் கசோக்கி அந்த தூதரகத்துக்கு உள்ளே நடந்த எல்லா பிரச்சனைகளையும் தனது ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்துள்ளார். அங்கு நடந்த கொடுமைகளை ரெக்கார்ட் செய்துள்ளார்.

இந்த ஆப்பிள் வாட்ச் அவரது ஆப்பிள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போன் அந்த கட்டிடத்திற்கு வெளியில் நின்ற அவரது காதலியிடம் இருந்துள்ளது. ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்யப்பட்ட விஷயங்கள் இந்த ஆப்பிள் போனுக்கும் வந்து இருக்கிறது. அதன்படி அவர் கொடுமைபடுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆப்பிள் போனிற்கு வந்த ரெக்கார்ட்களில், ஜமால் கசோக்கி அழுவதும், கத்துவதும் பதிவாகி உள்ளது. அவரை சிலர் அடிக்கும் சத்தமும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஜமால் கசோக்கி 90 சதவிகிதம் கொலை செய்யப்பட்டு இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுதான் இந்த கொலையை செய்திருக்கும் என்று உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா சவுதி மீது கடும் கோபத்தில் உள்ளது. இது அமெரிக்காவிற்கும் சவுதிக்கும் இடையில் போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/an-apple-watch-becomes-an-important-evidence-saudi-journo-jamal-khashoggi-missing-331965.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ போன் சம்சுங் ரெலிபோன் பாவிக்கிற ஆக்கள் வலுகவனம் கண்டியளோ. முக்கியமாய் சின்னவீடு வைச்சிருகிற ஆக்கள் இன்னும் கவனம் tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கவுக்கு தெரியும் சவூதி ஆளை போட்டுதள்ளிவிட்டுது என்று அதை வைச்சு சவூதியிடம் மிரட்டல் விட்டு பெரிதாக கறக்க போகினம் ஏற்கனவே ஆயுத டீல் பில்லியன் டொலர்களில்இருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jamal-kashoggi-720x450.jpg

சவுதி ஊடகவியலாளர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி அறிவிப்பு!

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லிலுள்ள தூதரகத்தினுள்ளேயே கொலைசெய்யப்பட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.

அதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரகத்தில் நேற்று (திங்கட்கிழமை) துருக்கி மற்றும் சவுதி அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர்.

தேடுதலின் பிரகாரம், ஜமால் கஷோக்கியை தூதரகத்திற்குள்ளேயே சவுதி முகவர்கள் கொலைசெய்து அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர் என துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கஷோக்கியை கொலைசெய்தவர்கள் முரட்டுத்தனமான கொலையாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். குறித்த கொலைக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்றும் கூறியுள்ளார். சவுதியை தண்டிக்க நேரிடுமென ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கஷோக்கியின் கொலை தவறாக நடந்துவிட்டதென குறிப்பிடுவதற்கு சவுதி அரேபியா தயாராகி வருகின்றதென சீ.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு சவுதி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்ற ஜமால் கஷோக்கி அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகள் சவுதி மீது கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.

http://athavannews.com/சவுதி-ஊடகவியலாளர்-கொலைசெ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சவுதி ஊடகவியலாளர் கொலை? – துருக்கியிடம் ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை!

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு உறுதியான ஆதரங்கள் இருப்பின் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா அரசாங்கம், துருக்கியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டாரென துருக்கி தெரிவித்தமைக்கு காணொளி அல்லது ஏதேனும் உறுதியான ஆதாரங்களை வெளிப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபிய அரசாங்கமே குறித்த கொலையை மேற்கொண்டுள்ளது என துருக்கி உறுதியாக குறிப்பிடுமிடத்து அதற்கான ஆதரங்களை வழங்குவது உவப்பானதென ட்ரம்ப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதம் இரண்டாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி தொடர்பிலும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள ஊடகங்களின் சுதந்திரம் தொடர்பிலும் வெசிங்டனின் செய்தியாளர் கரன் அட்டியாஹ் தனது பத்திரிகையில் எழுதியுள்ளார்.

மேலும், ஜமால் பாதுகாப்பாக மீண்டும் திரும்பி வருவாரென தான் நம்புவதாகவும் செய்திக் கட்டுரையில் கரன் அட்டியாஹ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது உலக நாடுகளின் ஊடகங்களும் துருக்கியும் சுமத்திவரும் குற்றச்சாட்டை சவுதி அரசாங்கம் முற்றாக மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/jamal-khashoggi-disappearance-us-asks-turkey-for-recording-evidence/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.