Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

 

அது தானே?  "நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி ... " புலிகளா குண்டு வீசினார்கள் இல்லையே? 

திரும்பவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் எழுதப்பட்டதை படித்து பாருங்கள் புரிகிறதா என்று பார்க்கலாம்!

எங்கள் மக்களுக்கு சிக்கலான விடயங்களை கொடுத்தால் புரிவதில்லை - அதனால் உடனே கோபம் வருகிறது ...

இலங்கை பிரச்சினையும் சர்வதேச அரசியலும் சிக்கலானவை.  புரிவதற்கு கடினமானவை. எங்கள் மக்கள் இவற்றை ஆராய்ந்து புரிந்து தீர்வு காண ஆற்றல் இல்லாத நிலையில் கோபப்பட்டார்கள். அழிவை கண்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த கருத்தாடலில் இருந்தாவது  சிக்கலான சர்வதேச அரசியலை கொஞ்சம் அவதானமாக புரிந்து கொள்ள பார்க்கலாமே??

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் மக்களை  மேற்கு நாடுகள் குண்டு வீசி கொன்றன.அதற்கான தண்டனையை யார் கொடுப்பது ? 

தமிழ் மக்களின் கோவில்கள், பாடசாலைகள், சொத்துக்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பல லட்சம் மக்களை கொன்ற சிறிலங்கா, இந்தியா போன்ற நாடுகளூக்கான தண்டனையை கொடுப்பது யார்? 

யாரும் த்ண்டனை கொடுக்காத நிலையில்  விடுதலை இயக்கங்கள்  இந்திய சிறிலங்கா போன்ற இனவாதிகளை தாக்கியது  பிழை என வாதிட உங்களால் முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதாக எதனையும் தெரிவிக்காத போதும், மேற்குலகம் மிகவும் பதற்றமான ஒரு நிலையில் காணப்படுவதாக அந்த நாடுகளின் அறிக்கைகளில் மூலம் அறியப்படுகின்றது.

 

 

அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிகவும் ஒரு கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள், பெரும்பாலும் மேற்குலக நாடுகளும் அதன் அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வருமாறு:

 

 

ஐக்கிய நாடுகள் சபை

 

 

un-head-300x201.jpgஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் மிகுந்த கவலையுடன் அவதானித்து வருகின்றார் என ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதன பேச்சாளர் ஸ்ரிபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.

 

 

சிறீலங்கா அரசு ஜனநாயக விழுமியங்களையும் அரசியல் சட்டவிதிகளையும் மதிக்கவேண்டும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பொறுமை காக்கவேண்டும் என்பதுடன், தற்போதைய நிலைக்கு ஒரு தீர்வைக்காணும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 

BAdamsHRWx100.jpg

சிறீலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சா பொறுப்பேற்றுக் கொண்டது, முன்னர் இடம்பெற்றது போன்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிபகத்தின் ஆசியாவிற்கான பிரதிநிதி பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பதவி நீக்கம் தொடர்பான சிறீலங்கா அரச தலைவர் சிறீசேனாவின் நடவடிக்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது அமைச்சரவைக்கோ அறிவிக்காது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

 

 

BAdamsHRWx100.jpgகடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில் ராஜபக்சா மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளதானது இலங்கையின் மனித உரிமை தொடர்பான எதிர்கால நிலை குறித்து அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

 

 

ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் குற்றம் செயதவர்களுக்கான தண்டனையை தற்போதைய அரசு வழங்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

 

 

கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் அழுத்தங்கள் இன்றி செயற்பட்டுவந்த ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் என்பன மீண்டும் ஒரு அச்சமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

 

 

இலங்கையில் மீண்டும் மனித உரிமைகளை மதிக்கும் நிலையை உருவாக்குவதில் பல நாடுகள் முன்னின்று உழைத்திருந்தன அந்த நன்மைகளை நாம் இழந்துவிடக் கூடாது. ரஜபக்சாவின் கட்டுப்பாட்டில் அரச ஊடகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜபக்சாவின் நியமனத்தை ரணில் எதிர்த்ததைக் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அவர்களின் டுவிட்டர் பதிவு

 

un-head-300x201.jpg

Samantha-300x191.jpgசிறீலங்கா அரச தலைவர் சிறீசேனாவின் நடவடிக்கையானது சிறீலங்காவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறீசேன தற்போது போர்க் குற்றம் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றிற்கு காரணமானவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்.

 

 

இதற்கு ஒரு அவசர நடவடிக்கை தேவை, இலங்கை மக்கள் அனைவரும் இந்த விடயத்தை கையில் எடுக்க வேண்டும். முன்னர் பெருமளவு குருதி சிந்தப்பட்டுள்ளதால் மீண்டும் பின்னோக்கி செல்லமுடியாது. ஒரு போர்க்குற்றவாளியை சிறீசேனா மீண்டும் பதவிக்கு கொண்டுவந்துள்ளார்.

 

 

அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம்

 

 

சிறீலங்கா அரசும் அதன் சபாநாயகரும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான பிரிவு தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

சிறீலங்கா அரசு ஜெனிவாவில் எட்டப்பட்ட உடன்பாடுகளை கைப்பிடிக்க வேண்டும், மனித உரிமைகளைப் பேணுதல், விசாரணைகளை மேற்கொள்ளுதல், நீதியை பெற்றுக் கொடுத்தல், மீள்கட்டுமானம் போன்றவை தொடர்பி;ல் ஜெனிவாவில் உடன்பாடு எட்டப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

 

 

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்

 

 

இன்று (30) கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலவரங்கள் வெடிக்கலாம். சிறீலங்கா அரசு மேற்கொண்ட ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளின் விளைவே இதுவாகும்.

 

 

சிறீலங்கா அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரநிதிகளின் கருத்துக்களை அறியவேண்டும் என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

 

ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா அரசு என்பன தமது குடிமக்களுக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிதிருப்பதியையும் வெளியிட்டுள்ளது.

 

 

இதனிடையயே மகிந்தா அரசு தொடர்ந்தால் சிறீலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடையை விதிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ராஜித சேனராத்னா கொழும்பில் தெரிவித்துள்ளார்.

 

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசை தாம் ஏற்கப்போதவில்லை என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், அரசியல் சட்டவிதிகளை மதிக்காது விட்டால் பொருளாதாரத்தடை கொண்டுவரப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

அதாவது இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது இந்தியா தன்னிட்சையாக மேற்குலகத்திற்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. ஆனால் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பல ஆய்வளர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாக தமது ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

அதாவது தமிழ் மக்களை திசை திரும்பும் நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

 

 

http://www.eelamenews.com/?p=122261&fbclid=IwAR1xANncqsMjLehjsazGfGz9Hpa8eviz8QdEOv0nGMhkXw1Yf_lT7_P949E

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 8:52 AM, nunavilan said:

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் மக்களை  மேற்கு நாடுகள் குண்டு வீசி கொன்றன.அதற்கான தண்டனையை யார் கொடுப்பது ? 

தமிழ் மக்களின் கோவில்கள், பாடசாலைகள், சொத்துக்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பல லட்சம் மக்களை கொன்ற சிறிலங்கா, இந்தியா போன்ற நாடுகளூக்கான தண்டனையை கொடுப்பது யார்? 

யாரும் த்ண்டனை கொடுக்காத நிலையில்  விடுதலை இயக்கங்கள்  இந்திய சிறிலங்கா போன்ற இனவாதிகளை தாக்கியது  பிழை என வாதிட உங்களால் முடியுமா? 

நண்பர் நுணவிலான்,

விரிவாக எழுத வேண்டும் என்பதால் நேரம் எடுத்து எழுதுகிறேன்.

தர்மம், நியாயம், கர்மம், தண்டனை

எம்மில் பலரும் மத போதனைகள் மற்றும் எமது கலாச்சார விழுமியங்களை அடிப்படையாக கொண்டு சிந்திப்பது இயல்பானது. உங்கள் தண்டனை பற்றிய சிந்தனையும் குமாரசாமியின் 'நாம் கெடுதல் செய்தால் தான் மற்றவர்கள் எமக்கும் கெடுதல் செய்வார்கள்' என்ற சிந்தனையும் இவ்வாறானதே. இவை தர்மம், நியாயம், கர்மம் போன்ற தத்துவங்களால் உருவான சிந்தனைகள். சர்வதேச அரசியலில் இவை எல்லாம் வெறும் சாட்டு போக்குகள் - இவற்றை நம்பும் மனிதர்களை சமாதானப் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள்.

சர்வதேச அரசியலில், சுயநலம், கூட்டு நலம்

உண்மையில் சர்வதேச அரசியலில், சுயநலம், கூட்டு நலம் தவிர வேறு எதுவும் எந்த நடவடிக்கைக்கும் காரணங்களாக அமைவதில்லை. இந்திய சிறிலங்கா போன்ற நாடுகளை எந்த அமைப்பும் தமது சுயநலம் கருதி தாக்குவது சர்வதேச அரசியலில் சாத்தியமானது. அதை பிழை அல்லது சரி என்று வாதிடுவது சமய அடிப்படியிலான மனிதர்களுக்கு தேவையான சாட்டுப் போக்கு. நாம் சர்வதேச அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் எமது சுயநல தேவைக்கு எதை நாம் செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதற்கு சமய அடிப்படையில் என்ன சாட்டுப் போக்கு சொல்லலாம் என்றும் பார்க்கலாம். ஆனால் முடிவுகளை சாட்டுப் போக்கை அடிப்படியாக வைத்து எடுக்க கூடாது. இன்னும் நேரடியாக சொன்னால் நியாயம், தர்மம், உண்மை, தண்டனை போன்ற காரணங்களை வைத்து சர்வதேச அரசியல் மற்றும் விடுதலை போராட்ட முடிவுகளை எடுக்க கூடாது. சுயநலம் மற்றும் கூட்டு நலம் கருதி மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும்.

குமாரசாமி 'மேற்கு நாடுகள் தமிழ் மக்களை அழிக்க துணை போக காரணமாக தமிழ் மக்கள் மேற்கு நாடுகளுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்' என்று கேட்டு இருந்தார். அதற்கான எனது பதில் மீண்டும் கீழே:

On 10/27/2018 at 6:14 PM, Jude said:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

நான் மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் பாதிக்கப் பட்டவர்கள் தம்மை பாதித்தவர்களுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. இவ்வாறே தமிழ் மக்கள் மேற்கு நாடுகளுக்கு எந்த கெடுதலும் செய்யாவிட்டாலும் மேற்கு நாடுகள் தமிழ் மக்களை பாதிக்கும் முடிவுகளை எடுத்தார்கள், நடவடிக்கைகளை எடுத்தார்கள், இனியும் எடுப்பார்கள் என்பதே எனது வாதமாகும். ஆகவே இவ்வாறான முடிவுகளை மேற்கு நாடுகள் எடுக்காமல் இருக்க செய்வது எமது சுயநலம் கருதி நாம் செய்ய வேண்டியது இல்லையா? ஆகவே என்ன செய்யாலாம்?

இந்து சமுத்திரத்தின் இசுரேலாக தமிழ் ஈழம்

மேற்கு நாடுகளும் சுயநலம் அல்லது கூட்டு நலம் கருதியே எம்மை பாதிக்கும் முடிவுகளை எடுக்கின்றன. இதனை தடுக்க சிறந்த வழி அவ்வாறன முடிவுகள் மேற்கு நாடுகளை மிகவும் பாதிக்க தக்கததாக அமைய செய்வதாகும். இதற்கான ஒரு பாதை எமக்கும் மேற்கு நாடுகளுக்குமான கூட்டு நலன்களை அதிகரிப்பது. உதாரணமாக, இன்று கனேடிய அரசியலிலும் அமெரிக்க வணிகத்திலும் தமிழரின் பங்கு அதிகரித்து வருகிறது. இவற்றில் பங்களிப்பு செய்பவர்கள் தம்மை பாதிக்கும் முடிவுகளை இந்த நாடுகள் எடுக்க விட மாட்டார்கள். இந்த தமிழருடன் நெருங்கிய உறவை பேணி ஈழத்தமிழரின் மேற்கு நாட்டு கூட்டு நலனை அதிகரிப்பது அந்த நாடுகள் ஈழத்தழரை பாதிக்கும் முடிவுகளை எடுப்பதில் இருந்து தடுக்க உதவும். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இலங்கை அரசியலில் இன்று மேற்கு நாடுகளுக்கு நிறைந்த அளவில் சவால்கள் உள்ளன. ஆகவே அங்கிருக்கும் மக்களும் அரசியல்வாதிகளும் விடுதலைபுலிகளும் மேற்கு நாடுளின் சுயநல தேவைகளை கூட்டு நல தேவைகளாக்கி இந்து சமுத்திரத்தின் இசுரேலாக தமிழ் ஈழத்தை மீண்டும் பிறக்க செய்யலாம். காலம் போய்விடவில்லை. சர்வதேச அரசியலும், புவியியலும், மக்களும் இந்த உலகில் இன்னும் சில நூறு ஆண்டுகளாவது வாழ இருக்கின்றன/இருக்கின்றனர்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.