Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்…

November 4, 2018

Namal-new.jpg?zoom=3&resize=335%2C239

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது  ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும் சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் புனர்வாழ்வு குறித்தும் கவனம் செலுத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/101921/

 

யுத்தம் முடிந்த கையோடு தமிழ்மக்களுக்கு உரித்தான உரிமைகளை நீதியான முறையில் அங்கீகரித்து மக்களிடக் நேரடியான வாக்கெடுப்பு மூலம் கூட தீரவு கண்டிருக்கலாம். அதற்கு தாராளமான நேரம் மகிந்த , மைத்தரி,ரணில் ஆகுய மூவருக்கும் இருந்தது . இப்போதுTNA  முடிவைப் பற்றிக்கவலைப்பட வேண்டிய அவசியமே வந்திருக்காது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை விடுதலை செய்ய ராஜபக்சே முடிவு

 
 
ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே, தமிழர்கள், சிறிசேன. Tamil prisoners, Rajapaksa
  • கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் ஆதரவை பெறுவதற்காக, நீண்ட நாட்கள் சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் கூறியுள்ளார். 
 

நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர், மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் உத்தரவிட்டார். மேலும், வரும், 5ம் தேதி கூடுவதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத்தை, 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சிறிசேன. ஆனால், 'பிரதமர் பதவியில் தொடர்கிறேன். என் பலத்தை நிரூபிக்க, பார்லியை உடனடியாககூட்ட வேண்டும்' என, ரணில் கோரி வருகிறார். இந்த அதிரடி நடவடிக்கைகளால், இலங்கையில், மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ரணில் விக்கிரமசிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்துள்ளது. 

 
 
 

ஆதரவளிக்க மறுப்பு


பார்லிமென்ட் அடுத்து கூடும்போது, இந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தம், 225 உறுப்பினர்கள் உடைய பார்லியில், விக்கிரமசிங்கேவுக்கு, 103 பேர் ஆதரவு உள்ளது; ராஜபக்சேவுக்கு, 100 பேரின் ஆதரவு உள்ளது. தமிழர் கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட மீதமுள்ள, 22 எம்.பி.,க்கள், ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக, பார்லியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், தீர்மானத்தை ஆதரிப்போம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ராஜபக்சேவுக்கு தங்களுடைய ஆதரவு இல்லை என, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தக் கட்சியின், 16 எம்.பி.,க்களில், நான்கு பேர், ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

 

பரிசீலனை

இந்நிலையில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது, தேடுதல் வேட்டையில் சிக்கிய பலர் மற்றும் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்கள் இன்னும் சிறையில் தான் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் விதிமுறைகளை மீறி, குற்றச்சாட்டுளை பதிவு செய்யாமல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு மறுத்து வந்தது. இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் ஆதரவை பெறும் வகையில், சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். 
இது தொடர்பாக அவரது மகன் நமல் கூறியதாவது: சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அதிபர் சிறிசேனவும், பிரதமர் ராஜபக்சேவும் முடிவு செய்து அறிவிப்பார்கள் எனக்கூறியுள்ளார்.
 

 

V_f1Qlln_normal.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்.

 

தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள மு/போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி @MaithripalaS மற்றும் பிரதமர் @PresRajapaksa தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அதிபர் சிறிசேனவும், பிரதமர் ராஜபக்சேவும் முடிவு செய்து அறிவிப்பார்கள் எனக்கூறியுள்ளார்.

எப்ப முடிவு எடுப்பீர்கள், எப்ப விடுவிப்பீர்கள் என்பதை வெளியிடாமல் சிண்டு முடிஞ்சு காரியம் சாதிக்க, ம்.....பக்கத்தில இருந்து, பதவிப் பிரமாணம் செய்துவைச்சவர் சாென்னது காதில விளங்கேலயாே, இருக்கட்டும், வெள்ளை வான் எப்பவரும் எண்டதையும் விளக்கமாய் சாெல்லி வைச்சிங்சள் எண்டால் நல்லது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.