Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..

Featured Replies

தமிழகத் திரைப் படப்பாடல்களை வசனங்களை மாற்றி எழுதும் புலிப்பாசறையின் வசனங்கள் நன்றாகவும், ரசிக்கத்தக்கனவையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள் புலிப்பாசறை.

புலி மாமா புலி மாமா இவர் தன்ன பற்றி பாடு எழுதுவதிற்கு இப்படி சொல்லுறார்

:P :icon_mrgreen:

  • Replies 172
  • Views 28.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் யாராவது யாழ் களத்தில் இருந்தால் அந்த அனுபவத்தை சொல்லுங்களேன்..(80ல் நடந்த நிகழ்ச்சியென்ற படியால்) வயதைக் கண்டுபிடிப்போம் என்று பேசாமல் இருக்கவேண்டாம்.. கந்தப்பு, வானவில், சின்னகுட்டி ...

:unsure::lol:

பொன்னி அங்கிள் சின்னகுட்டியும்,கந்தப்புவும

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் யாராவது யாழ் களத்தில் இருந்தால் அந்த அனுபவத்தை சொல்லுங்களேன்..(80ல் நடந்த நிகழ்ச்சியென்ற படியால்) வயதைக் கண்டுபிடிப்போம் என்று பேசாமல் இருக்கவேண்டாம்.. கந்தப்பு, வானவில், சின்னகுட்டி ...

:):o

பொன்னி சத்தியமா நான் பிறக்கவேயில்லை

பொன்னி சத்தியமா நான் பிறக்கவேயில்லை

அது தானே அப்ப அவர் போன பிறப்பில இருந்திருப்பார் பொன்னி

:)

வானுயர்ந்த யாழ் கள சோலையிலே,

வர்ண ஜாலமாய் நீ நடந்த பாதையிலே,

மழைத்துளிகள் போல் உறுப்பினர்கள் விரிந்திருக்கு,

வண்ண மலர்களாய் நீ ஆடி வந்தாய் என்னை பாடவைத்தாய்!

பாடுகின்றேன் உந்தன் பாதைகளை, நீ பவனி வந்த கோலங்களை!

வர்ண நிறன் ஏழு எனறாய், அதினிலிலும் மனிதருக்கும் ஏழு நிறங்கள் என்றாய்.

கோபம் ஒன்றை நீ அறியாய், நானோ அதில் முற்றாய் மூழ்கிவிட்டேன்!

உன் மனதில் தான் எத்தனை வண்ண நிறம், எண்ண எண்ண இனிக்குமே அந்த நிறம்,

ஜானகியை மணம் செய்ய இரானம் வளைத்த வில்லும் நீயோ,

அல்ல போரினை முடிக்கவந்த பார்த்தீபன் தான் இந்த வானவில்லோ!!!.

வணங்குகிறேன் உங்கள் முன்னே,

மறுபிறவி எனக்கில்லை என்று,

என் ஜாதகத்தில் இருந்த துண்டு,

மானிட நாய் பிறந்து விட்டேன் கோபம் என்ற கொடிய புயலில் மீது,

அப்பன் மேல் ஏன் தானோ சத்தியம் வேறு செய்து விட்டேன்,

கோபன் இன்றித்தான் வருவேன் எனி,

இதை மனதிலே வைத்து தான் விலகுகிறேன்.

வாழ்க களம், வளர்க தமிழ் என்று வாழ்த்தியுமே விடை பெறுகின்றேன் சில காலம்.!!! :o

ஆஹா புலி மாமா எண்டா புலி மாமா தான்

அச்சா புலி மாமா :)

தலை புலிமாமா எங்கே ஆளை காணகிடைக்குதில்லை

தலை புலிமாமா எங்கே ஆளை காணகிடைக்குதில்லை

வீட்டில சமைச்சிட்டு இருப்பாரு :)

ஓ அவரா வீட்டில சமைக்கிறது,எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ புலிமாமா

  • கருத்துக்கள உறவுகள்

கல்கியின் கதாநாயகரே! மிகவும் அருமையான இனைப்பு. நன்றிகள். அக்காலத்தில் மிகவும் கலக்கலாக இருந்த பாடல்கள். :lol::lol:

  • தொடங்கியவர்

கல்கியின் கதாநாயகரே! மிகவும் அருமையான இனைப்பு. நன்றிகள். அக்காலத்தில் மிகவும் கலக்கலாக இருந்த பாடல்கள். :lol::lol:

ஆமாம் சுவி.. இப்பாடல்கள் எங்கள் காலத்தில் மிக அபிமானத்துக்குரியவை.

ஒன்றைக் கவனித்தீர்களா?

யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கை சுற்றி யாழ்ப்பாணம் ஸ்ரேடியம், அடுத்து பண்ணைக்கடல்,

இவர்கள் பாடும் பாடல்கள் எதிரொலித்து வருகின்றன. இதைக் கேட்கும்போது அங்கே நிற்கும் உணர்வைப் பெறுகிறோம் ..இல்லையா?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் மலரும் நினைவுகள்.சுகமானதுதான்.

  • தொடங்கியவர்

உண்மைதான் .. பழைய நினைவுகளில் இடை இடையே கலந்து போய் நிகழ்காலத்தை மறந்து போகிறோம்

:lol:

தாத்தா உங்களின்ட இளமைகால பருவத்தை சொல்லுங்கோ,யார் யாரை சைட் அடித்தனீங்கள் என்றும் சொல்லுங்கோ

:P

  • தொடங்கியவர்

தாத்தா உங்களின்ட இளமைகால பருவத்தை சொல்லுங்கோ,யார் யாரை சைட் அடித்தனீங்கள் என்றும் சொல்லுங்கோ

:P

ஆழி அருகே ஓர் அரிவை இடை தழுவி

நாழிக்கணக்காக நன்னிலவில் கண் செலுத்தி

கரை கழுவும் கடல் அருகின் கருகு மணல் மீதினிலே

கைவிரல்கள் கீறியதை காதல் என ஏமாந்தேன்.

சில்லையூர் செல்வராஜனின் இந்த கவிதை வரிகள் எனக்கும் பொருந்தும் ஜமுனா பேர்த்தி

:lol:

ஆழி அருகே ஓர் அரிவை இடை தழுவி

நாழிக்கணக்காக நன்னிலவில் கண் செலுத்தி

கரை கழுவும் கடல் அருகின் கருகு மணல் மீதினிலே

கைவிரல்கள் கீறியதை காதல் என ஏமாந்தேன்.

சில்லையூர் செல்வராஜனின் இந்த கவிதை வரிகள் எனக்கும் பொருந்தும் ஜமுனா பேர்த்தி

:lol:

தாத்தா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்கோ

:lol::lol:

  • தொடங்கியவர்

தாத்தா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்கோ

:lol::lol:

ஒரு கடற்கரையில் ஒரு இளம்பெண்ணின் மெல்லிய இடுப்பில் கைகளால் தழுவிப் பிடித்துகொண்டு, எதுவும் பேசாமல் மெளனமாக ஆகாயத்தில் பவனி வரும் முழுநிலவை மணித்தியாலக்கணக்காக இருவரும் பார்த்துக்கொண்டு, கடல் அலைகள் ஓடிவந்து தொட்டுப்போகும் கரையின் குருகு மணலில் கைவிரல்களால் ஏதோ கீறிக்கொண்டு இருந்தோம். அதை காதல் என்று நினத்து ஏமாந்து போனேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டாள்.

சரியா என் பேர்த்தி.

:lol:

Edited by Ponniyinselvan

ஒரு கடற்கரையில் ஒரு இளம்பெண்ணின் மெல்லிய இடுப்பில் கைகளால் தழுவிப் பிடித்துகொண்டு, எதுவும் பேசாமல் மெளனமாக ஆகாயத்தில் பவனி வரும் முழுநிலவை மணித்தியாலக்கணக்காக இருவரும் பார்த்துக்கொண்டு, கடல் அலைகள் ஓடிவந்து தொட்டுப்போகும் கரையின் குருகு மணலில் கைவிரல்களால் ஏதோ கீறிக்கொண்டு இருந்தோம். அதை காதல் என்று நினத்து ஏமாந்து போனேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டாள்.

சரியா என் பேர்த்தி.

:lol:

இப்ப விளங்குது அப்ப உங்கன்ட காதலி வேற ஒருத்தரை கல்யாணம் கட்டக்க நீங்கள் பார்த்து கொண்டு சும்மா இருந்தனீங்களோ

:lol:

  • தொடங்கியவர்

இப்ப விளங்குது அப்ப உங்கன்ட காதலி வேற ஒருத்தரை கல்யாணம் கட்டக்க நீங்கள் பார்த்து கொண்டு சும்மா இருந்தனீங்களோ

:mellow:

என்னம்மா செய்வது.. அவளுக்கு அவள் குடும்பத்தாரால் நேர்ந்த நெருக்கடி..அந்தக்காலத்தில் நிலைமை அப்படி.. நீயெங்கே..என் நினைவுகள் அங்கே.. என்று பாடிக்கொண்டு இருந்ததுதான்.

கனவாய் பழங்கதையாய் போனதுவே..

:(

என்னம்மா செய்வது.. அவளுக்கு அவள் குடும்பத்தாரால் நேர்ந்த நெருக்கடி..அந்தக்காலத்தில் நிலைமை அப்படி.. நீயெங்கே..என் நினைவுகள் அங்கே.. என்று பாடிக்கொண்டு இருந்ததுதான்.

கனவாய் பழங்கதையாய் போனதுவே..

:(

தாத்தா நீங்க கவலைபடாதயுங்கோ இப்ப கூட ஒரு வார்த்தை சொல்லுங்கோ உங்கள் ஆளை கொண்டு வந்து உங்களுக்கு முன் நிற்பாட்டுறேன்

காதலிக்க கூடாது காதலித்துவிட்டோம் என்றா உயிரை கொடுத்தாவது ஜெயிக்க வேண்டும்

:mellow:

  • தொடங்கியவர்

தாத்தா நீங்க கவலைபடாதயுங்கோ இப்ப கூட ஒரு வார்த்தை சொல்லுங்கோ உங்கள் ஆளை கொண்டு வந்து உங்களுக்கு முன் நிற்பாட்டுறேன்

காதலிக்க கூடாது காதலித்துவிட்டோம் என்றா உயிரை கொடுத்தாவது ஜெயிக்க வேண்டும்

:D

அவ இப்போ பாட்டி.. எனக்கும் அவவை இனிக்கண்டால் அடையாளம் தெரியுமோ தெரியாது. ஆள் நல்ல கறுப்பு. ஆனால் அழகான கறுப்பு.. நாவல் பழம் மாதிரி.. ம்..

:D

அவ இப்போ பாட்டி.. எனக்கும் அவவை இனிக்கண்டால் அடையாளம் தெரியுமோ தெரியாது. ஆள் நல்ல கறுப்பு. ஆனால் அழகான கறுப்பு.. நாவல் பழம் மாதிரி.. ம்..

:(

அப்ப நீங்களும் வேற கல்யாணம் பன்னீட்டீங்களா இல்லாட்டி அவாவை நினைத்து காலத்தை தள்ளுறீங்களா

:(

  • தொடங்கியவர்

அப்ப நீங்களும் வேற கல்யாணம் பன்னீட்டீங்களா இல்லாட்டி அவாவை நினைத்து காலத்தை தள்ளுறீங்களா

:(

அவ இப்போ எங்கள் நாட்டில்..நான் தொலைவில் வாழ்கிறேன்.. எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. பிள்ளைகள், பேரன் என்று வந்துவிட்டார்கள்.

ஜமுனா.. எவருக்கும் முதல் காதல் பவித்திரமானது.. மறக்கமுடியாதது. "ஆட்டோகிறாப்" பார்த்தீர்களா?

:( ..

Edited by Ponniyinselvan

அவ இப்போ எங்கள் நாட்டில்..நான் தொலைவில் வாழ்கிறேன்.. எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. பிள்ளைகள், பேரன் என்று வந்துவிட்டார்கள்.

ஜமுனா.. எவனுக்கும் முதல் காதல் பவித்திரமானது..மறக்கமுடியாதத

  • தொடங்கியவர்

நான் ஆட்டோகிராப் பார்த்தனான் ,ஆனால் காதலித்தா அடைய வேண்டும் இல்லாட்டி அதை பற்றி சிந்திக்கவே கூடாது என்பது என்னுடைய கருத்து அது பற்றி உங்கள் கருத்து என்ன

:rolleyes:

அப்படி வைராக்கியமாக பெண்கள் இருந்து விடுவார்கள். ஆண்களுக்கு அது சாத்தியப்படுவதில்லை. ஒரு பெண் திருமணம் செய்வதற்கு முதல் யாரைக் காதலித்து இருந்தாலும் திருமணம் செய்தபின் அன்றே அதையெல்லாம் மறந்துவிட்டு கணவன், பிள்ளைகள் என்று வாழத்தொடங்கி விடுவாள். அது முழுக்க முழுக்க சரி. ஆனால் ஆண்கள் சாகும் வரைக்கும் தாங்கள் கொண்ட காதலை (அது உண்மையான காதலாக இருந்தால்) மறக்கவே மாட்டார்கள்.என் பேர்த்தியே..

"ஆட்டோக்கிறாப்"பில் அவனது முதல் காதலி அப்படித்தான் நடந்து கொள்கிறாள்.

:lol:

Edited by Ponniyinselvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.