Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி

அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

trump.jpg

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது.

அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி தேர்தல் மூலம் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான அனைத்து 435 ஆசனங்கள் மற்றும் செனட் சபையின் 100 ஆசனங்களின் 35 ஆசனங்கள் என்பவற்றுக்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மேலும் 50 மாநிலங்களில் 36 மாநிலங்களுக்கான ஆளுநர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத் தேர்தலில், ஜனநாயக கட்சி, பிரதிநிகள் சபையைக் கைப்பற்றியுள்ளது என்றும், குடியரசுக் கட்சி, செனட் சபையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் பிரதிநிதிகள் சபையில் தேவையான 23 இடங்களைக் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் விர்ஜினியா, ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, கொலராடோ ஆகிய இடங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 100 பேர் இருக்கும் செனட் சபையில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதாகவும், இண்டியானா மற்றும் வடக்கு டகோடா மாகாணங்களில் ஜனநாயக கட்சியை, குடியரசு கட்சி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. 

எனினும் தென்னஸி மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறியான நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/44009

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி - டிரம்ப்புக்கு பின்னடைவு

 
அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி - டிரம்புக்கு கடும் பின்னடைவுபடத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.

ஆனால், அதே வேளையில் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும்.

 

அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றிபடத்தின் காப்புரிமை Reuters

செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது.

தேர்தல் சக்கரத்தில் பெண்களுக்கான ஆண்டு என்று கூறப்பட்ட நடப்பு ஆண்டில் பெண் வேட்பாளர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இடைக்கால தேர்தல்படத்தின் காப்புரிமை Getty Images

தொடக்கம் முதலே, இந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, இந்த இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.

''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஆதரவை பெற டிரம்ப் கடைசி கட்ட முயற்சிபடத்தின் காப்புரிமை Getty Images

இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.

தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள்.

அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே.

அமெரிக்க இடைக்கால தேர்தல் 2018படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

சிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (Profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்கிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.

பராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முரண்பாடுகள்

அமரிக்க காங்கிரசின் பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்களுக்கு அந்தக் கட்சி முட்டுக்கட்டைகள் போட முடியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் அந்தோனி ஜர்ச்சர்.

முக்கியமான குழுக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும். டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு ரஷ்யா உதவியதான குற்றச்சாட்டு குறித்து அவர்களால் தற்போது விசாரிக்க முடியும். டிரம்பின் தனிப்பட்ட நிதி நிலையும் தற்போது அவர்களது விசாரணைக்குள் வரும் என்கிறார் அந்தோனி.

https://www.bbc.com/tamil/global-46120051

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

45623322_10155634719551822_1986311370970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.